Tuesday, August 22, 2017

பலராமன் வருகை! - சல்லிய பர்வம் பகுதி – 34

The arrival of Valadeva! | Shalya-Parva-Section-34 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 3)


பதிவின் சுருக்கம் : கதாயுத்தம் தொடங்குமுன் அங்கே வந்த பலராமன்; பலராமனை முறையாக வரவேற்ற பாண்டவர்கள்; அனைவரும் அமர்ந்ததும் கதாயுதப் போர் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்த பின்னர், உண்மையில் அந்தக் கடும்போர் தொடங்கப்போகும் தருணத்தில்,(1) பனைமரக் கொடியைக் கொண்டவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்}, தன் சீடர்களான அந்த இரு வீரர்களுக்கிடையில் நடக்கப்போகும் போரைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்தான்.(2) கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள், அவனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை நோக்கி விரைந்து முறையான சடங்குகளுடன் அவனை {பலராமனை} வழிபட்டு வரவேற்றனர்.(3) அவர்களது வழிபாடு முடிந்ததும், ஓ! மன்னா, அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள், "ஓ! ராமரே, உமது சீடர் இருவரின் போர்த்திறன்களைக் காண்பீராக" {என்றனர்}.(4)


அப்போது ராமன் {பலராமன்}, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, அங்கே கதாயுதத்துடன் நின்றிருந்த குருகுலத்து துரியோதனனையும் கண்டு,(5) "நான் வீட்டைவிட்டுச் சென்றதிலிருந்து நாற்பத்திரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன. புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்ட நான் சிரவணத்தில் {திருவோணம்} திரும்பியிருக்கிறேன்[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான், என் சீடர்கள் இருவருக்கிடையிலான மோதலைக் காண விரும்புகிறேன்" என்றான்.(6) அந்நேரத்தில் வீரர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கதாயுதங்களுடன் களத்தில் பிரகாசமாக நின்று கொண்டிருந்தனர்.(7) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனை {பலராமனைத்} தழுவிக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவனது நலத்தை விசாரித்து, அவனை வரவேற்றான்.(8)

[1] வளிமண்டலத்தில் பூசம் நட்சத்திரம் 8ம் நட்சத்திரமாகும், திருவோணம் நட்சத்திரம் 22ம் நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரத்திலிருந்து அடுத்தப் பூசம் நட்சத்திரம் வரை 28 நாட்கள், பூசத்தில் இருந்து திருவோணம் வரை {22-8 =14} 14 நாட்கள். ஆக மொத்தம் 42 நாட்கள்.

இரு பெரும் வில்லாளிகளான அந்தச் சிறப்புமிக்கக் கிருஷ்ணர்கள் {அதாவது கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரனை {பலராமனை} உற்சாகமாக வணங்கி அவனைத் தழுவிக் கொண்டனர்.(9) அதேபோலவே, மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, திரௌபதியின் மகன்கள் ஐவரும், பெரும்பலம் கொண்டவனான அந்த ரோகிணியின்மகனை {பலராமனை} வழிபட்டு, (மரியாதையுடன் ஒரு குறிப்பிட்ட தொலைவில்) நின்றனர்.(10) பெரும் பலத்தைக் கொண்டவனான பீமசேனனும், உமது மகனும் {துரியோதனன்}, (தங்கள் கரங்களில் இருந்த) கதாயுதங்கள் இரண்டையும் உயர்த்தி, அந்தப் பலதேவனை {பலராமனை} வழிபட்டனர்.(11) பிற மன்னர்கள் அனைவரும் ராமனுக்கு {பலராமனுக்கு} மரியாதை செலுத்தி வரவேற்று, அவனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இம்மோதலைக் காண்பீராக" என்றனர். இவ்வாறே அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயர் ஆன்மா கொண்டவனான ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்.(12)

அளவிலா சக்தி கொண்டவனான ராமனும், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சர்களைத் தழுவிக் கொண்டு, (பிற) மன்னர்கள் அனைவரின் நலத்தையும் குறித்து விசாரித்தான். அதேபோலவே, அவனை அணுகிய அவர்கள் {பிற மன்னர்கள்} அனைவரும் அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(13) கலப்பையைக் கொண்ட அந்த வீரன், அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் வயதுக்கேற்ப மரியாதையாக விசாரித்துப் பதிலுக்கு வணங்கி,(14) ஜனார்த்தனனையும், சாத்யகியையும் அன்புடன் தழுவிக் கொண்டான். அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்த அவன், அவர்களது நலனையும் விசாரித்தான்.(15) ஓ! மன்னா, அவர்கள் இருவரும், தேவர்களின் தலைவனான பிரம்மனை வழிபடும் இந்திரனையும், உபேந்திரனையும் போலத் தங்களுக்கு மூத்தவனான அவனை முறையாகப் பதிலுக்கு வழிபட்டனர்.(16)

அப்போது தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனான ரோகிணியின் மகனிடம், "ஓ! ராமா {பலராமா}, இரு சகோதரர்களுக்கிடையில் நடக்கும் இந்த அஞ்சத்தக்க மோதலைக் காண்பாயாக" என்றான்.(17) இவ்வாறு அந்தப் பெரும் தேர்வீரர்களால் வழிபடப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களும், பேரழகும் கொண்ட அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டான்.(18) நீல நிற ஆடை அணிந்தவனும், வெண்ணிற மேனி கொண்டவனுமான ராமன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்தபோது, ஆகாயத்தில் பல்லாயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(19) அப்போது உமது மகன்கள் இருவருக்குமிடையில் {துரியோதனன் மற்றும் பீமனுக்கிடையில்}, (பல வருடங்களாகத் தொடரும்) சச்சரவை முடித்து வைப்பதற்காக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரமான மோதல் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.(20)
------------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 20


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்