Friday, August 25, 2017

சப்தசாரஸ்வதம்! - சல்லிய பர்வம் பகுதி – 38

Sapta-Saraswata! | Shalya-Parva-Section-38 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 7)


பதிவின் சுருக்கம் : சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை என ஏழு வடிவங்களாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தோன்றிய சரஸ்வதி ஆறு; அந்த ஏழு ஆறுகளும் ஒன்று கலந்த சப்தசாரஸ்வதத் தீர்த்தம்; மங்கணகர் வரலாறு; சிவனின் அருள்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஏன் அந்தத் தீர்த்தம் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்டது? யாரந்தத் தவசி மங்கணகர்? எவ்வாறு அந்தப் போற்றுதலுக்குரியவர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார் {எவ்வாறு சித்தரானார்}? அவரது நோன்புகளும், நியமங்களும் என்ன?(1) அவர் யாருடைய குலத்தில் பிறந்தவராவார்? மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான அவர் எந்தெந்த புத்தகங்களைப் படித்தார் {எவற்றை அத்யயனம் செய்தார்}? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இவையாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்த அண்டத்தை ஏழு சரஸ்வதிகள் மறைக்கின்றன. பெரும் சக்தி மிக்க மனிதர்களால் அந்தச் சரஸ்வதி எங்கெல்லாம் அழைக்கப்பட்டாளோ, அங்கெல்லாம் அவள் தோன்றினாள்.(3) சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை ஆகிய இவையே சரஸ்வதியின் ஏழு வடிவங்களாகும்.(4)

ஒரு காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு பெரும் வேள்வியைச் செய்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிலத்தில் அந்த வேள்வி நடந்து கொண்டிருந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாளர்கள் {பிராமணர்களால்} பலர் அங்கே வந்தனர்.(5) அங்கே பாடப்பட்ட புனிதமான பாடல்களும், ஓதப்பட்ட வேதங்களும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அந்த வேள்விச் சடங்குகளில், தேவர்கள் தங்கள் நிதானத்தை இழந்தனர் (அந்த அளவுக்கு ஆயத்தங்கள் நடந்தன).(6) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பெரும்பாட்டன் வேள்வியில் நிறுவப்பட்டு, செல்வத்தையும், அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்ல அந்த மகத்தான விழாவை நடத்திக் கொண்டிருந்தபோது,(7) அறம், பொருள் குறித்த அனைத்தையும் அறிந்த குறிப்பிட்ட சிலர் அங்கே இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் நினைத்தவுடன், அவர்களுக்கு முன்பு அவை உடனே தோன்றின.(8) கந்தர்வர்கள் பாடினர், அப்சரஸ்களில் பல்வேறு இனத்தவர் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் பல்வேறு தெய்வீக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருந்தனர்.(9) அந்த வேள்வியில் கொணரப்பட்ட பொருட்செல்வத்தில் தேவர்களேகூட மனம்நிறைந்தனர். அப்படியிருக்கையில் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வது? தேவர்களே கூட ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10)

ராஜஸ்தானில், ஜெய்பூர்-புஷ்கர் 145கிமீ
அந்த வேள்வி புஷ்கரையில் பெரும்பாட்டனின் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, முனிவர்கள், “ஆறுகளில் முதன்மையான சரஸ்வதி இங்கே காணப்படாமையால், உயர்ந்த தன்மைகளைக் கொண்ட வேள்வியாக இதைச் சொல்ல முடியாது” என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன் உற்சாகமாகச் சரஸ்வதியை நினைத்தான்.(11,12) புஷ்கரையில் வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும்பாட்டனால் {பிரம்மனால்} இவ்வாறு அழைக்கப்பட்ட சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுப்ரபை {ஸுப்ரபை} என்ற பெயரில் அங்கே தோன்றினாள். சரஸ்வதி அந்தப் பெரும்பாட்டனுக்கு விரைவாகச் செலுத்திய அம்மரியாதையைக் கண்ட முனிவர்கள் அந்த வேள்வியை உயர்வாக மதித்தனர்.(14) இவ்வாறே ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, பெரும்பாட்டனின் {பிரம்மனின்} நிமித்தமாகவும், அந்த முனிவர்களை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காகவும் புஷ்கரையில் தோன்றினாள்.(15)

(மற்றொரு நேரத்தில்) ஓ! மன்னா, நைமிசத்தில் பல முனிவர்கள் ஒன்றாகக் கூடி அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். அங்கே வேதங்களைக் குறித்து அவர்களுக்குள் ஆய்வுக்குரிய பல இனிமையான விவாதங்கள் நடந்தன.(16) பல்வேறு சாத்திரங்களை அறிந்தவர்களான அம்முனிவர்கள் வசித்த இடத்தில் அவர்கள் சரஸ்வதியைக் குறித்துச் சிந்தித்தனர்.(17) வேள்வியைச் செய்யும் அம்முனிவர்களால் இவ்வாறு நினைக்கப்பட்டதும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், புனிதமானவளுமான சரஸ்வதி, அவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்றுதிரண்டிருந்த நைமிசத்தில் தோன்றி காஞ்சனாக்ஷி என்று அழைக்கப்பட்டாள்.(18,19) ஓ! பாரதா, இவ்வாறே அனைவராலும் வழிபடப்பட்ட முதன்மையான ஆறான அவள் அங்கே வந்தாள்.

கயாவில் (மன்னன்) கயன் ஒரு பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி அந்தக் கயனின் வேள்வியில் அழைக்கப்பட்டாள் (அவ்வாறே அங்கே தோன்றவும் செய்தாள்). அங்கே இருந்தவர்களான கடும் நோன்புகளை நோற்கும் முனிவர்கள் கயாவில் தோன்றிய அவளது அந்த வடிவத்துக்கு விசாலை என்று பெயரிட்டனர்.(21) அந்த ஆற்றின் வேகமான நீரோட்டம் இமயத்தின் சாரலில் இருந்து பாய்கிறது.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஔத்தாலகர் என்பவரும் ஒரு வேள்வியைச் செய்தார்.(22) உயர் ஆன்ம ஔத்தாலகரின் வேள்வி கோசலத்தின் வட பாகத்தில் உள்ள புனிதமான பகுதியில் நடைபெற்றது.(23) முனிவர்களின் பெருங்கூட்டம் அங்கே திரண்டது. ஔத்தாலகர் தன் வேள்வியைத் தொடங்கும் முன்னர்ச் சரஸ்வதியை நினைத்தார். ஆறுகளில் முதன்மையான அவள், அந்த முனிவர்களின் நிமித்தமாக அந்தப் பகுதிக்கு வந்தாள்.(24) மரவுரிகளையும், மான்தோல்களையும் உடுத்தியிருந்த அம்முனிவர்கள் அனைவராலும் வழிபடப்பட்ட அவள், அம்முனிவர்கள் தங்கள் மனத்தால் அழைத்தபடியே மனோரமை என்ற பெயரில் அறியப்படலானாள்.(25)

மேலும் உயர் ஆன்ம குரு, குருக்ஷேத்திரத்தில் ஒரு வேள்வியைச் செய்தபோது, ஆறுகளில் முதன்மையானவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(26) ஓ! ஏகாதிபதி, (குருவின் வேள்வியில் உதவி செய்து கொண்டிருந்த) உயர் ஆன்ம வசிஷ்டரால் அழைக்கப்பட்டவளும், தெய்வீக நீர் நிரம்பியவளுமான சரஸ்வதி, அந்தக் குருக்ஷேத்திரத்தில் ஓகவதி எனும் பெயரில் தோன்றினாள்.(27)

ஒரு சமயம் தக்ஷன், கங்கை தோன்றும் இடத்தில் {கங்கோத்ரியில்} ஒரு வேள்வியைச் செய்தான். வேகமாகப் பாயும் சுரேணு எனும் பெயரில் சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(28)

பிரம்மன் புனிதமான இமயமலைக் காட்டில் மீண்டும் ஒரு வேள்வியைச் செய்தபோது, (அவனால் {பிரம்மனால்}) அழைக்கப்பட்டவளான போற்றுதலுக்குரிய சரஸ்வதி {விமலோதகை என்ற பெயரில்} அங்கே தோன்றினாள்.(29)

இந்த ஏழு வடிவங்கள் அனைத்தும், பலதேவன் {பலராமன்} வந்திருந்த அந்தத் தீர்த்தத்தில் {சப்த சாரஸ்வத்ததில்} ஒன்று கலந்தது. அவ்விடத்தில் {சரஸ்வதியின்} ஏழு வடிவங்கள் ஒன்று கலந்ததால் அந்தத் தீர்த்தப் இப்பூமியில் சப்தசாரஸ்வதம் என்ற பெயரில் அறியப்படுகிறது.(30) இவ்வாறே ஏழு சரஸ்வதிகளையும், அவர்களின் பெயர் வரிசையில் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். மேலும் நான் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்படும் அந்தப் புனிதமான தீர்த்தம் குறித்தும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(31)

இப்போது இளமையில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வுமுறையை ஏற்று வாழ்ந்த மங்கணகரின் அருஞ்செயலைக் குறித்துக் கேட்பாயாக. அவர், (ஒரு நாள்) ஆற்றில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தபோது,(32) களங்கமற்ற அங்கங்கள் மற்றும் அழகிய புருங்களைக் கொண்ட ஒரு பெண், திறந்த மேனியுடன் அந்நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்முனிவரின் உயிர்நீர் சரஸ்வதியில் {சரஸ்வதி நதியில்} விழுந்தது.(33) அந்தப் பெரும் தவசி அஃதை எடுத்து தனது மண்குடத்திற்குள் வைத்தார். அந்தப் பாத்திரத்திற்குள் வைக்கப்பட்ட அந்த உயிர்நீர் ஏழுபகுதிகளாகப் பிரிந்தது.(34) அந்த ஏழு பகுதிகளில் இருந்து ஏழு முனிவர்கள் பிறந்தனர். அவர்களில் இருந்து (நாற்பத்தொன்பது) மருத்துக்கள் தோன்றினர். அந்த ஏழு முனிவர்களும், வாயுவேகன், வாயுபலன் வாயுஹன், வாயுமண்டலன்,(35) வாயுஜாதன் {வாயுஜ்வாலன்}, வாயுரேதஸ், பெரும் சக்தி கொண்ட வாயுசக்கிரன் எனப் பெயரிடப்பட்டனர். இவ்வாறே பல்வேறு மருத்துக்களின் தந்தைமார் தோன்றினர்.(36)

அந்தப் பெரும் முனிவரின் நடத்தை குறித்ததும், பூமியில் மிக அற்புதமானதும், மூவலங்களாலும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு ஆச்சரியமான காரியத்தை இப்போது கேட்பாயாக.(37) பழங்காலத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த மங்கணகர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், குசப்புல்லால் {தர்ப்பையால்} அவரது கை துளைக்கப்பட்டது. அதன்பேரில் அந்தக் காயத்தில் இருந்து (சிவப்பான இரத்தம் வராமல்) காய்கறிச்சாறு {சாகரசம் - மூலிகைச்சாறு} வந்தது.(38) அந்த மூலிகைச் சாற்றைக் கண்ட அந்த முனிவர், மகிழ்ச்சியால் நிறைந்து, அந்த இடத்தில் நர்த்தனம் {நடனம்} செய்தார். அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், அவர் ஆடுவதைக் கண்டு, அவரது சக்தியால் மயக்கமடைந்து ஆடத் தொடங்கின.(39)

அப்போது பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மகாதேவனிடம் சென்று, ஓ! மன்னா, அந்த (மங்கணக) முனிவரின் செயலைக் குறித்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம் {மகாதேவனிடம்}, "ஓ! தேவா, அம்முனிவரை ஆடுவதிலிருந்து தடுப்பதே உனக்குத் தகும்" என்றனர்.(40) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் அம்முனிவரைக் கண்ட மகாதேவன் {சிவன்}, தேவர்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில், அவரிடம் {மங்கணகரிடம்},(41) "ஓ! பிராமணரே, உமது கடமைகளைக் குறித்த அறிந்த நீர் ஏன் இவ்வாறு நர்த்தனம் செய்கிறீர்? ஓ! தவசியே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அறப்பாதையில் நடப்பவரும், தவசியுமான நீர் இவ்வாறு செயல்படும் அளவிற்கு என்ன முக்கியக் காரணத்தால் இவ்வளவு மகிழ்ச்சியை அடைந்திருக்கிறீர்?" என்று கேட்டான்.(42)

அம்முனிவர் {மங்கணகர்}, "ஓ! பாஹ்மணா {சிவனே}[1] என் காயத்தில் இருந்து மூலிகைச் சாறு பாய்வதை நீ காணவில்லையா? ஓ! தலைவா, இதைக் கண்டே நான் பெரும் மகிழ்ச்சியில் நர்த்தனம் செய்கிறேன்" என்றார்.(43) அந்தத் தேவன், அதிக விருப்பத்தால் மயங்கியிருந்த அந்த முனிவரிடம் சிரித்துக் கொண்டே, "நான் இஃதில் எந்த அதிசயத்தையும் காணவில்லை. என்னைப் பார்ப்பீராக" என்றான்.(44) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான மகாதேவன், அந்த முதன்மையான முனிவரிடம் இதைச் சொல்லி, தன் விரல்களின் நுனியைக் கொண்டு தன் கட்டைவிரலை அடித்தான்.(45) அதன்பேரில், ஓ! மன்னா, அக்காயத்தில் இருந்து சாம்பலும், வெண்பணியும் வெளிவந்தன. ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட அம்முனிவர் நாணமடைந்து, அந்தத் தேவனின் காலில் விழுந்தார்.(46) வந்தது மகாதேவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அவர் அறிந்து கொண்டார்

[1] இங்கே மங்கணகர் சிவனை "பிராமணரே" என்று அழைக்கிறார். கங்குலியின் பதிப்பில் Bhahmana என்றே இருக்கிறது. இருப்பினும், கும்பகோணம் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இது பிராமணரே என்றே இருக்கிறது. ஒரு வேளை சிவன் பிராமண வேடத்தில் வந்திருக்கலாம்.

ஆச்சரியத்தால் நிறைந்த அவர்{மங்கணகர்}, "பெரியவனும், பரம்பொருளுமான ருத்ரனையன்றி நீ வேறு எவனுமில்லை என நான் நினைக்கிறேன்.(47) ஓ! திரிசூலபாணியே, தேவர்களும், அசுரர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் புகலிடம் நீயே. இந்த அண்டத்தைப் படைத்தவன் நீயே என ஞானியர் சொல்கின்றனர்.(48) அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது, மீண்டும் அனைத்தும் உன்னுள் நுழைகின்றன. தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனான உன்னை நான் மற்றும் அவ்வாறு அறிந்து கொள்வேன்?(49) இந்த அண்டத்தில் உள்ள வடிவங்கள் அனைத்தும் உன்னில் தெரிகின்றன. ஓ! பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் வரமருள்பவனான உன்னையே வழிபடுகின்றனர்.(50) அனைத்தும் நீயே. தேவர்களைப் படைத்தவன் நீயே, அவர்கள் படைக்கப்படக் காரணமானவனும் நீயே. தேவர்கள் தங்கள் காலத்தை மகிழ்ச்சியாகவும், முற்றிலும் அச்சமற்ற நிலையிலும் கடத்துவது உன் அருளாலேயே" என்றார். இவ்வாறு அந்த முனிவர் மகாதேவனைத் துதித்து வணங்கினார்.(51)

மேலும், "ஓ! தேவா, நான் வெளிப்படுத்திய இந்த மிக அற்பமான பணிவின்மை என் தவத்தகுதியை அழித்துவிட வேண்டாம். இதற்காக நான் உன்னிடம் வேண்டுகிறேன்" என்று கேட்டார்.(52) அந்தத் தேவன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், மீண்டும் அவரிடம், "ஓ! பிராமணரே, என் அருளால் உமது தவத்தகுதி ஆயிரம் மடங்காக அதிகரிக்கட்டும். நான் எப்போதும் உம்மோடு இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன்.(53) சப்த சாரஸ்வதம் எனும் இந்தத் தீர்த்தத்தில் என்னை வழிபடும் ஒரு மனிதனால், இவ்வுலகிலும் {இம்மையிலும்}, அடுத்தவுலகிலும் {மறுமையிலும்} அடையமுடியாதது எதுவுமில்லை. அப்படிப்பட்ட ஒருவன் இறந்ததும் (சொர்க்கத்தில்) சாரஸ்வதம் என்றழைக்கப்படும் பகுதிக்குச் {சாரஸ்வதலோகத்துக்குச்} செல்வான் என்பதில் ஐயமில்லை" என்றான் {சிவன்}.(54) இதுவே, அபரிமிதமான சக்தி கொண்டவரான மங்கணகரின் வரலாறாகும். அவர் சுகன்யையிடத்தில் காற்றுத் தேவனால் {வாயுவால்} பெறப்பட்ட மகனாவார்" {என்றார் வைசம்பாயனர்}[2].(55)

[2] சரஸ்வதி ஆற்றின் படம் ஜிஜித் நடுமுறி ரவி Jijith Nadumuri Ravi அவர்களால் http://indiafacts.org/yamuna-study-links-sarasvati-findings/ என்ற சுட்டியில் செய்யப்பட்ட ஆய்வை ஒட்டியும், ஆங்கிலத்தில் அவர் கொடுத்திருக்கும் வரைபடங்களை ஒட்டியும் மீண்டும் தமிழில் உத்தேசமாக வரையப்பட்டதாகும்.
----------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள்: 55

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்