Monday, August 28, 2017

பிராமணரான க்ஷத்திரியர்கள்! - சல்லிய பர்வம் பகுதி – 40

Kshatriyas turned to Brahmanas! | Shalya-Parva-Section-40 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 9)


பதிவின் சுருக்கம் : பிருதூதகத் தீர்த்ததிற்கு வரமருளிய ஆர்ஷ்டிஷேணர்; க்ஷத்திரியர்களான சிந்துத்வீபர், தேவாபி மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிருதூதகத் தீர்த்தில் தவம் செய்து நீராடி பிராமண நிலையை அடைந்தது; அங்கிருந்து பக தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் ஏன் கடுந்தவங்களைச் செய்தார்? சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார்?(1) ஓ! பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தேவாபியும், விஷ்வாமித்திரரும் எவ்வாறு அதே நிலையை அடைந்தனர்? ஓ! போற்றுதலுக்குரியவரே, இவையாவற்றையும் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது" என்று சொன்னான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு சமயம், கிருதயுகத்தில், ஓ! மன்னா, ஆர்ஷ்டிஷேணர் என்றழைக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் ஒருவர் இருந்தார். அவர், தமது ஆசானின் இல்லத்தில் வசித்து, தினமும் பாடங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர் தமது ஆசானின் இல்லத்தில் நெடுங்காலம் வசித்திருந்தாலும், ஓ! ஏகாதிபதி, வேதங்களிலும், அறிவின் எந்தத் துறையிலோ திறன் எதையும் அடைய முடியவில்லை.(4) ஓ! மன்னா, இதனால் பெரும் ஏமாற்றமடைந்த அந்தத் தவசி மிகக் கடுமையான தவங்களைச் செய்தார். அவர் தமது தவத்தின் மூலம் ஒப்புவமையற்ற வேதங்களில் தேர்ச்சி பெற்றார்.(5) பெரும் கல்வியையும், வேதங்களில் தேர்ச்சியையும் அடைந்த அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ஆர்ஷ்டிஷேணர்}, அந்தத் தீர்த்தத்தில்தான் {பிருதூதகத் தீர்த்தத்தில் தான்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார். அந்த இடத்தில் அவர் மூன்று வரங்களை அளித்தார்.(6) அவர், "இன்று முதல், இந்தப் பெரும் நதியின் (சரஸ்வதியின்) இந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வியின் {அஸ்வமேதயாகத்தின்} பெருங்கனியை {பெரும்பலனை} அடைவானாக.(7) இன்று முதல், இந்தத் தீர்த்தத்தில் பாம்புகளினாலோ, காட்டு விலங்குகளாலோ எந்த அச்சமும் ஏற்படாது. {மேலும் இங்கே வந்து தவம் செய்யும்} சிறு முயற்சிகளிலேயே ஒருவன் இந்தப் பெரும் விளைவை இங்கே அடையலாம்" என்று வரமளித்தார் {ஆர்ஷ்டிஷேணர்}.(8) பெரும் சக்தியைக் கொண்ட அந்த முனிவர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றார். இவ்வாறே போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(9)

கிருதயுகத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட சிந்துத்வீபரும், தேவாபியும் கூட உயர்ந்த நிலையான பிராமணத் தன்மையை இந்தத் தீர்த்தத்திலேயே அடைந்தனர். அதே போல, புலன்களை அடக்கிக் கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த குசிகரின் மகனும் {விஷ்வாமித்திரரும்} கூட, நல்ல தவம் பயின்று பிராமணத் தன்மையை அடைந்தார்.(11) காதி என்ற பெயரில் அறியப்பட்டு உலகத்தில் கொண்டாடப்பட்ட பெரும் க்ஷத்திரியர் ஒருவர் இருந்தார். அவருக்கு விஷ்வாமித்திரர் என்ற பெயரில் பேராற்றல் படைத்த மகனொருவர் பிறந்தார்.(12) அந்த மன்னன் கௌசிகர் {காதி} பெரும் தவசியாக ஆனார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தம்முடலைக் கைவிடத் தீர்மானித்து, தமது மகனான விஷ்வாமித்திரரை அரியணையில் நிறுவ விரும்பினார்.(13) அவரது குடிமக்கள் அவரை {காதியை} வணங்கி, "ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பேரசச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. எங்களை விட்டுச் செல்லாதீர்" என்றனர்.(14) இவ்வாறு சொல்லப்பட்ட காதி, தன் குடிகளிடம், "என் மகன் {விஷ்வாமித்திரன்}, இந்தப் பரந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருப்பான்" என்றார்.(15)

இவ்வார்த்தைகளைச் சொன்ன காதி, (விஷ்வாமித்திரரை) அரியணையில் அமர்த்தி, சொர்க்கத்திற்குச் சென்றார், விஷ்வாமித்திரரும் மன்னனானார். இருப்பினும், அவர் சிறப்பாக முயன்றும்கூட அவரால் உலகத்தைக் காக்க முடியவில்லை.(16) அப்போது அந்த மன்னன் {விசுவாமித்திரர்}, (தன் நாட்டில்) ராட்சசர்களால் ஏற்படும் பேரச்சத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார். அவர், தமது நால்வகைப் படைகளுடன் தமது தலைநகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(17) அவர்  {விசுவாமித்திரர்}, தமது வழியில் வெகு தூரம் சென்று வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவரது துருப்புகள் அங்கே அதிக முறைகேடுகளைச் செய்தனர்.(18) போற்றுதலுக்குரிய பிராமணரான வசிஷ்டர், தமது ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தப் பரந்தகாடு அழிக்கப்படுவதைக் கண்டார்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, முனிவர்களில் சிறந்தவரான அந்த வசிஷ்டர், விஷ்வாமித்திரரிடம் கோபம் கொண்டார்.

அவர் {வசிஷ்டர்} தமது (ஹோமப்) பசுவிடம், "பெரும் எண்ணிக்கையிலான சபரர்களை உண்டாக்குவாயாக" என்று ஆணையிட்டார்.(20) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பசு, அச்சந்தரும் முகத்தோற்றங்களையுடைய பெரும் மனிதக்கூட்டத்தை உண்டாக்கியது. அவர்கள் விஷ்வாமித்திரரின் படையுடன் மோதி, எங்கும் பேரழிவை ஏற்படுத்த தொடங்கினர்.(21) இதைக் கண்ட துருப்புகள் அங்கிருந்து தப்பி ஓடின. எனினும், காதியின் மகனான விஷ்வாமித்திரர், துறவும், தவமும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதாகக் கருதி, அவற்றின் மேல் தமது இதயத்தை நிலைநிறுத்தினார்.(22) சரஸ்வதியின் இந்த முதன்மையான தீர்த்தத்தில்தான், ஓ! மன்னா {ஜனமேஜயா} அவர், நோன்புகள் மற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடிய உண்ணாநோன்புகள் ஆகியவற்றால் தமது உடல் மெலியத் தொடங்கினார்.(23) அவர் {விஷ்வாமித்திரர்} நீரையும், காற்றையும், மரங்களின் (மரங்களில் இருந்து விழுந்த) இலைகளையும் தன் உணவாக்கிக் கொண்டார். அவர் வெறுந்தரையில் உறங்கி (தவசிகளுடன் சேர்ந்து) பிற நோன்புகளையும் நோற்றார்.(24)

அவரது நோன்புகள் நோற்பதைத் தடுக்கத் தேவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். எனினும் அவரது இதயம் (தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட) நோன்புகளில் இருந்து பிறழவில்லை.(25) அப்போது, பெரும் அர்ப்பணிப்புடன் பல்வேறு வகையான தவங்களைப் பயின்ற அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்} சூரியனைப் போலப் பிரகாசமிக்கவரானார்.((26) வரமருள்பவனான பெரும்பாட்டன் {பிரம்மன்}, தவத்தகுதி கொண்ட விஷ்வாமித்திரர் வேண்டிய வரத்தை அருளத் தீர்மானித்தான்.(27) விஷ்வாமித்திரர், தாம் ஒரு பிராமணராக அனுமதிக்கபட வேண்டும் என்ற வரத்தை] வேண்டினார். அனைத்து உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், அவரிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னான்[1].(28) தமது கடுந்தவத்தால் பிராமணத்தன்மையை அடைந்த சிறப்புமிக்க விஷ்வாமித்திரர், தன் விருப்பம் நிறைவேறியதும், ஒரு தேவனைப் போல மொத்த உலகிலும் திரிந்து கொண்டிருந்தார்.(29)

[1] கும்பகோணம் பதிப்பில், "அந்த விஸ்வாமித்ரர், "நான் பிராம்மணனாகக் கடவேன்" என்ற வரனை வேண்டினார். எல்லா உலகங்களுக்கும் பிதாமஹரான பிரம்மதேவரும் "அவ்வாறே ஆகுக" என்று சொன்னார்" என இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தாம் ஒரு பிராமணனாக வேண்டும்" என்ற வரத்தைக் கேட்டார். அனைத்துலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மன் அதற்குச் சம்மதித்தான்" என்றிருக்கிறது.

ராமனும் {பலராமனும்}, அந்த முதன்மையான தீர்த்தத்தில் பல்வேறு வகையான செல்வங்களைத் தானமளித்து, பிராமணர்களில் முதன்மையான பலரை முறையாக வழிபட்டு, அவர்களுக்குக் கறவைமாடுகளையும், வாகனங்களையும், படுக்கைகளையும், ஆபரணங்களையும், உணவையும், சிறந்த பானங்களையும் உற்சாகமாகக் கொடுத்தான்.(30,31) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராமன் அங்கிருந்து {பிருதூதகத் தீர்த்தத்தில் இருந்து}அதிக தொலைவில் இல்லாததும், தால்பிய-பகர் கடுந்தவம் பயின்ற இடமுமான பக ஆசிரமத்திற்குச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(32)
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 40 ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்