Wednesday, August 30, 2017

யாயாத தீர்த்தம்! - சல்லிய பர்வம் பகுதி – 41

Yayata Tirtha! | Shalya-Parva-Section-41 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 10)


பதிவின் சுருக்கம் : அவாகீர்ணத் தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; முனிவர் பகரின் வரலாறு; பகரை அவமதித்த பாஞ்சால திருதராஷ்டிரன்; பாஞ்சாலத்தின் வீழ்ச்சி; பகரிடம் கருணை வேண்டிய திருதராஷ்டிரன்; யாயாத தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; யாயாத தீர்த்ததில் வேள்வி செய்த யயாதி; வேள்விக்குத் துணை புரிந்தோருக்குச் செல்வத்தைப் பெருக்கிய சரஸ்வதி ஆறு; அடுத்ததாக வசிஷ்டாபவாகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்த யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்}, வேதமோதும் ஒலியை எதிரொலிக்கும் (பக) ஆசிரமத்திற்குச் சென்றான். அங்கே {அவாகீர்ணத் தீர்த்தத்தில் இருந்த பக ஆசிரமத்தில்} தால்பிய பகர் என்ற பெயருடைய பெருமுனிவர் ஒருவர்,(1) விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின் நாட்டை ஆகுதியாக (வேள்வி நெருப்பில்) ஊற்றினார்[1]. அவர் {தால்பியபகர்}, மிகக் கடுமையான தவம் பயின்று தன் உடலை மெலியச் செய்தார். பெரும் சக்தியும் கொண்டவரும், அறவோருமான அந்த முனிவர் பெரும் கோபத்தில் நிறைந்தார் {பெருங்கோபத்தில் நிறைந்து (அச்செயலைச் செய்தார்]}.(2) பழங்காலத்தில் நைமிசவாசிகளான முனிவர்கள் பனிரெண்டு வருடங்களுக்கு நீளும் வேள்வி ஒன்றைச் செய்தனர். அந்த வேள்வி நடந்து கொண்டிருந்த போது, அதிலும் குறிப்பாக விஸ்வஜித் என்றழைக்கப்பட்ட வேள்வியின் நிறைவில், அந்த முனிவர்கள், பாஞ்சாலர்களின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3) அங்கே சென்ற அவர்கள், (தாங்கள் நிறைவு செய்த அந்த வேள்விக்கு) தக்ஷிணையாக, நல்ல வலுவான இருபத்தோரு பசுக் கன்றுகளை {பாஞ்சால} மன்னனிடம் வேண்டிக் கேட்டனர்.(4)


[1] கும்பகோணம் பதிப்பில், "மிக்கப் பெருந்தவமுள்ளவரும், தர்மாத்மாவும், பிரதாபசாலியும், கோபமுள்ளவருமான தால்ப்யரென்னும் பகமஹரிஷி கடுந்தவத்தினால் தன் சரீரத்தைக் கிருசமாகச் செய்து கொண்டு அதிகமாகக் கோபத்தினால் மூடப்பட்டுப் பசுக்களுக்காகப் {பாஞ்சாலராஜனான} திருதராஷ்டருடைய ராஜ்யத்தை ஹோமம் செய்த இடமும், பிராம்மணர்கள் நிறைந்திருப்பதுமாகிய அவாகீர்ணமென்கிற தீர்த்தத்தை யதுந்நதனரான பலராமர் அடைந்தார்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இது பாஞ்சால ராஜன் என்று குறிப்பிடப்பட்டாலும், கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் தெளிவாக விசித்திரவீரியன் மகன் திருதராஷ்டிரன் என்றே இருக்கிறது. இருப்பினும் இங்கே குறிப்பிடப்படுவது பாஞ்சால நாட்டு மன்னன் {திருதராஷ்டிரன்} என்றே தெரிகிறது.

தால்பிய-பகர், (அம்முனிவர்களை அழைத்து) அவர்களிடம், "(என்னுடைய) விலங்குகளை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். (உங்களுக்கு) இவற்றைக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் மன்னனிடம் (இன்னும் சிலவற்றைக்) கேட்கப் போகிறேன்" என்றார்.(5) பெரும் சக்தி கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான {முனிவர்} பகர், அம்முனிவர்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, திருதராஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(6) அந்தத் தால்பியர், மன்னன் திருதராஷ்டிரனின் முன்னிலையை அடைந்தது, தனக்காகச் சில விலங்குகளை இரந்து கேட்டார். எனினும், அந்த மன்னர்களில் சிறந்தவன் {திருதராஷ்டிரன்}, எக்காரணமும் இன்றித் தனது பசுக்களில் சில இறந்ததைக் கண்டு, அவரிடம் கோபத்துடன், "இழிந்த பிராமணரே, நீர் விரும்பினால், (இறந்திருக்கும்) இந்த விலங்குகளை எடுத்துச் செல்வீராக" என்றான்.(7,8) கடமைகளை நன்கறிந்தவரான அந்த முனிவர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, "ஐயோ, சபையில் வைத்து என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் கொடூரமானவையாக இருக்கின்றன" என்று நினைத்தார்.(9) இவ்வாறு நினைத்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், கோபத்தால் நிறைந்து, மன்னன் திருதராஷ்டிரனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்.(10)

இறந்த போன அந்த விலங்குகளின் சதைகளை வெட்டியெடுத்த அந்தத் தவசிகளில் சிறந்தவர், சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் {அவாகீர்ணத் தீர்த்தத்தில்} (வேள்வி) நெருப்பை மூட்டி, மன்னன் திருதராஷ்டிரனுடைய நாட்டின் அழிவுக்காக அந்தச் சதைத் துண்டுகளை ஆகுதியாக ஊற்றினர் {அச்சதைகளைக் கொண்டு ஹோமம் செய்தார்}. கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பெரும் தால்பிய-பகர், அந்த இறைச்சித் துண்டுகளின் உதவியால், திருதராஷ்டிரனின் நாட்டையே அந்நெருப்பில் ஆகுதியாக ஊற்றினார்[2].(11,12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முறையான சடங்குகளுடன் அந்தக் கடும் வேள்வி தொடங்கப்பட்டதும், திருதராஷ்டிரனின் நாடானது அழிவடையத்தொடங்கியது.(13) உண்மையில், ஓ! தலைவா {ஜனமேஜயா}, மனிதர்கள் கோடரியைக் கொண்டு வெட்டுவதால் பெருங்காடு காணாமல் போவதைப் போலவே அந்த ஏகாதிபதியின் நாடும் அழிவடையத் தொடங்கியது. பேரிடரில் மூழ்கிய அந்த நாடு, தனது செழிப்பையும், வாழ்வையும் இழக்கத் தொடங்கியது.(14)

[2] "நெருப்பில் நாட்டை ஊற்றுவது என்பதன் பொருள், அந்த நாட்டின் அழிவுக்காக நெருப்பில் ஆகுதியை ஊற்றுதல் அல்லது ஹோமம் செய்தல் என்பதாகும" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

இவ்வாறு பீடிக்கப்பட்ட தனது நாட்டைக் கண்ட அந்தப் பலமிக்க ஏகாதிபதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, உற்சாகமற்றவனாகச் சிந்தனையில் மூழ்கினான்.(15) பிராணமர்களுடன் ஆலோசித்த அவன், (அத்துன்பத்திலிருந்து) தனது ஆட்சிப்பகுதிகளை விடுவிக்கப் பெருமுயற்சி செய்யத் தொடங்கினான்.(16) மன்னன் தன் உற்சாகத்தை இழந்தான். ஓ! பாவமற்றவனே, பிராமணர்களும் துயரால் நிறைந்தனர். இறுதியாகத் தன் நாட்டைக் காக்க மன்னன் {திருதராஷ்டிரன்} தவறிய நிலையில்,(17) ஓ! ஜனமேஜயா, அவன் தன் அமைச்சர்களிடம் (தீர்வுகளைக் குறித்து) கேட்டான். அந்த அமைச்சர்கள் இறந்த பசுக்களுடன் தொடர்புடைய அந்தத் தீமையை அவனுக்கு நினைவுறுத்தினர்.(18) அவர்கள், "தவசியான பகர், (அவ்விலங்குகளின்) சதையின் மூலம் நெருப்பின் உன் நாட்டை ஆகுதியாக ஊற்றுகிறார். அதனால் தான் எனது நாட்டுக்குப் பேரழிவு ஏற்படுகிறது.(19) இவை தவச்சடங்குகளின் விளைவாலேயே நடைபெறுகின்றன. அதனால்தான் இந்தப் பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஓ! மன்னா, சரஸ்வதியின் கரையில் உள்ள நீர்க்கொள்ளிடத்திற்கு அருகில் இருக்கும் அந்த முனிவரிடம் சென்று அவரை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக" என்றனர்.(20)

பிறகு அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சரஸ்வதியின் கரைக்குச் சொன்று அவரது பாதங்களில் வீழ்ந்து, அவற்றை {பாதங்களைத்} தன் தலையால் தீண்டி, ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, தன் கரங்களைக் கூப்பி இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! புகழத்தக்கவரே, நான் உம்மை மனம் நிறைவுறச் செய்வேன், என் குற்றத்தை மன்னிப்பீராக.(21) பேராசையால் ஈர்க்கப்பட்ட இழிந்தவனான நான் அறிவற்ற மூடனாவேன். நீரே என் புகலிடம், நீரே என் பாதுகாவலர், எனக்கு உமது கருணையைக் காட்டுவதே உமக்குத் தகும்" என்றான்.(22) இவ்வாறு துயரில் மூழ்கி, இதுபோல ஒப்பாரி செய்ய்யும் அவனைக் {மன்னன் திருதராஷ்டிரனைக்} கண்ட பகர், அவனிடம் இரக்கம் கொண்டு, அவனது நாட்டை விடுவித்தார்.(23) அந்த முனிவர், தன் கோப உணர்வை விட்டகன்று, அவனிடம் மனநிறைவு கொண்டார். அவனது நாட்டை விடுவிப்பதற்காக அந்தத் தவசி மீண்டும் நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினார்.(24) அந்நாட்டை (பேரிடரில் இருந்து) விடுவித்து, பல விலங்குகளைக் கொடையாகப் பெற்ற அவர் {முனிவர் பகர்}, இதயம் மகிழ்ந்தவராக மீண்டும் நைமிச வனத்திற்குச் சென்றார்.(24) தயாள மனமும், அற ஆன்மாவும் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உற்சாகமிக்க இதயத்துடன், செழிப்பால் நிறைந்து தன் தலைநகருக்குச் சென்றான்.(26)

அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதியும், அசுரர்களின் அழிவுக்காகவும், சொர்க்கவாசிகளின் செழிப்புக்காகவும்,(27) சதையின் உதவியுடன் வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான். இதன்காரணமாக போரில் நலிவடைந்த அசுரர்களை,  வெற்றியின் மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டிருந்த தேவர்கள் அழித்தனர்.(28) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, குதிரைகள், யானைகள் மற்றும் கோவேறுகழுதைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், பெரும் மதிப்பிலான தங்கம், அதிகச் செல்வம், அதிகத் தானியம் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் பிராமணர்களுக்குக் கொடுத்த ராமன் {பலராமன்} அடுத்ததாக யாயாதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(29,30)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அங்கே நகுஷனின் மைந்தனான உயர் ஆன்ம யயாதி நடத்திய வேள்வியில்தான், சரஸ்வதி பாலையும், தெளிந்த நெய்யையும் பெருக்கினாள்.(31) மனிதர்களில் புலியான மன்னன் யயாதி, அங்கே {யாயாதத் தீர்த்தத்தில்} வேள்வி செய்து, உற்சாகமாகச் சொர்க்கத்திற்குச் சென்று, பல அருள் உலகங்களை அடைந்தான்.(32) அந்தச் சரஸ்வதி ஆறானவள், (அந்த வேள்விக்கு அழைக்கப்பட்ட) பிராணர்களின் பெரும் ஆன்மப் பெருந்தன்மையையும், அவளிடம் அவர்கள் கொண்ட மாற்றமுடியாத அர்ப்பணிப்பையும் கண்டு, அவர்களின் இதயங்கள் விரும்பிய அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தாள்.(33) அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் எங்கிருந்தனரோ, அங்கேயே அவர்களுக்கு வீடுகளையும், படுக்கைகளையும், ஆறு வெவ்வேறு வகைச் சுவைகளைக் கொண்ட உணவையும், பல்வேறு பிற வகைப் பொருட்களையும் அந்த ஆறுகளில் முதன்மையானவள் கொடுத்தாள்.(34) அந்தப் பிராமணர்களோ, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்புமிக்கப் பரிசுகள் அனைத்தையும் மன்னர் கொடுத்ததாகக் கருதிக் கொண்டனர். அவர்கள் அந்த ஏகாதிபதியை உற்சாகமாகப் புகழ்ந்து, அவனுக்குத் தங்கள் மங்கலமான ஆசிகளை வழங்கினர்.(35) தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரும் அவ்வேள்வியில் இருந்த அபரிமிதமான பொருட்களால் மனநிறைவை அடைந்தனர். மனிதர்களைப் பொருத்தவரையில் அந்த அபரிமிதமான பொருட்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(36)

பனைமரக் கொடி கொண்டவனான அந்தச் சிறப்புமிக்கப் பலதேவன், வென்று, கட்டுப்படுத்தித் தூய்மையடைந்த ஆன்மாவுடனும், பேரறத்தின் தனித்தன்மையுடனும், மதிப்புமிக்கப் பொருட்களைத் தானமளித்து, அடுத்ததாக, வேகமான ஊற்றைக் கொண்ட வசிஷ்டாபவாகம் என்ற தீர்த்தத்திற்குச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(37)
----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 41ல் சுலோகங்கள் : 37


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்