Thursday, August 31, 2017

வசிஷ்டாபவாஹத் தீர்த்தம்! - சல்லிய பர்வம் பகுதி – 42

Vasishthapavaha Tirtha! | Shalya-Parva-Section-42 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையிலான பகை; வசிஷ்டரைக் கொல்ல நினைத்த விஷ்வாமித்திரர் சரஸ்வதியை ஏவியது; விஷ்வாமித்திரரை வஞ்சித்த சரஸ்வதி; சரஸ்வதி பெற்ற சாபம்; வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின் பெயர்க்காரணம்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வசிஷ்டாபவாகத்தின் (என்ற பெயரில் அறியப்பட்ட தீர்த்தத்தின்) ஓட்டம் ஏன் பயங்கரமான வேகம் கொண்டதானது? என்ன காரணத்தினால் அந்த முதன்மையான ஆறு வசிஷ்டரைக் கொண்டு {இழுத்துச்} சென்றது?(1) ஓ! தலைவரே {வைசம்பாயனரே}, வசிஷ்டருக்கும், விஷ்வாமித்திரருக்கும் இடையிலான சச்சரவின் காரணம் என்ன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, என்னால் கேட்கப்படும் இவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வீராக. நீர் சொல்வதைக் கேட்டு என்னால் தணிவை அடையமுடியவில்லை" என்று கேட்டான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, கடுந்தவம் குறித்த போட்டாபோட்டியால் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் பெரும் பகை எழுந்தது. வசிஷ்டரின் உயர்ந்த வசிப்பிடம் சரஸ்வதியின் கிழக்குக்கரையில் ஸ்தாணு என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தில் இருந்தது. எதிர்க்கரையில் நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரின் ஆசிரமம் இருந்தது.(4) ஓ! ஏகாதிபதி, அந்தத் தீர்த்தத்தில் ஸ்தாணு (மஹாதேவன்) கடுந்தவம் பயின்றான். தவசிகள் இன்னும் அந்தக் கடுஞ்சாதனைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.(5) அங்கே ஒரு வேள்வியைச் செய்த ஸ்தாணு, அங்கே அந்தத் தீர்த்தத்தை நிறுவி அந்தச் சரஸ்வதி ஆற்றை வழிபட்டான். எனவே, ஓ! தலைவா, அது ஸ்தாணு தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(6) பழங்காலத்தில் தேவர்கள், ஓ! மன்னா, தேவர்களின் எதிரிகளைக் கொல்பவனான ஸ்கந்தனைத் தங்கள் படைத்தலைவனாக அத்தீர்த்தத்தில் வைத்தே நிறுவினர்.(7)

சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், தன் கடுந்தவத்தின் துணையால் வசிஷ்டரைக் கொண்டு {இழுத்து} வந்தார். அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(8) தவசிகளான விஷ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் ஆகியோர் இருவரும், தங்கள் தவங்களின் மேன்மை குறித்த மெய்யுறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(9] பெருமுனிவரான விஷ்வாமித்திரர், வசிஷ்டரின் சக்தியைக் கண்டு (பொறாமையால்) எரிந்து, அந்தக் காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(10) அவர் தன் கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், "இந்தச் சரஸ்வதி, தன் ஓட்டத்தின் சக்தியால் தவசிகளில் முதன்மையான வசிஷ்டரை என் முன் வேகமாகக் கொண்டு {இழுத்து} வர வேண்டும். இங்கே கொண்டுவரப்படும் அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரை {வசிஷ்டரை} நான் கொல்வேன் என்பதில் ஐயமில்லை", என்ற இந்தத் தீர்மானத்தை எட்டினார்.(11,12)

இதைத் தீர்மானித்துக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கப் பெருமுனிவர் விஷ்வாமித்திரர், கண்கள் சிவந்த கோபத்துடன், அந்த ஆறுகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} நினைத்தார்.(13) இவ்வாறு அந்தத் தவசியால் நினைக்கப்பட்டதும் அவள் {சரஸ்வதி} மிகவும் கலக்கமடைந்தாள். எனினும், அந்த அழகான மங்கை {சரஸ்வதி}, பெரும் சக்தியும், பெரும் கோபமும் கொண்ட அம்முனிவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} சென்றாள்.(14) அந்தச் சரஸ்வதி, நிறம் மங்கியவளாக, கூப்பிக் கரங்களுடன் உடல் நடுங்கிக் கொண்டே அந்த முதன்மையான தவசியின் முன் தோன்றினாள்.(15) உண்மையில், துயரால் அதிகம் பீடிக்கப்பட்டிருந்த அந்த மங்கை, வலிமைமிக்கத் தன் தலைவனை இழந்துவிட்ட ஒரு பெண்ணைப் போல இருந்தாள். அவள் அந்தச் சிறந்த முனிவரிடம் {விஸ்வாமித்திரரிடம்}, "நான் உமக்குச் செய்ய வேண்டியது என்ன?" என்று கேட்டாள்.(16) சினம் நிறைந்த அந்தத் தவசி அவளிடம், "வசிஷ்டரை நான் கொல்லும் வகையில், தாமதமில்லாமல் அவரை இங்கே கொண்டு வருவாயாக" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த {சரஸ்வதி} ஆறானவள் மிகவும் கலக்கமடைந்தாள்.(17) தாமரைக் கண்களைக் கொண்ட அந்த மங்கை, காற்றால் அசைக்கப்பட்ட கொடியைப் போலக் கூப்பிய கரங்களுடன், அச்சத்தால் மிகவும் நடுங்கினாள்.(18) அந்தப் பெரும் ஆற்றின் அந்த அவலநிலையைக் கண்ட அந்தத் தவசி {விஷ்வாமித்திரர்}, அவளிடம் {சரஸ்வதியிடம்}, "எந்த ஐயுணர்வுமின்றி வசிஷ்டரை என் முன் கொண்டு வருவாயாக" என்றார்.(19)

அவரது இந்த வார்த்தைகளைக் கேட்டவளும், அவர் {விஷ்வாமித்திரர்} செய்ய நினைக்கும் தீமையை அறிந்தவளுமான அவள் {சரஸ்வதி}, பூமியில் ஒப்பற்றவரான வசிஷ்டரின் ஆற்றலை அறிந்து,(20) அவரிடம் சென்று, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரர் தன்னிடம் சொன்னதைத் தெரிவித்தாள்.(21) அவள், அந்த இருவரின் சாபம் குறித்தும் அஞ்சி மீண்டும் மீண்டும் நடுங்கினாள். உண்மையில், (அவர்களில் எவரேனும் ஒருவர் தனக்கு அளிக்கப்போகும்) துயர் நிறைந்த சாபத்திலேயே அவளது இதயம் நிலைத்திருந்தது. அவள் இருவரிடமும் கொண்ட அச்சத்துடன் நின்று கொண்டிருந்தாள்.(22) அற ஆன்மா கொண்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான அந்த வசிஷ்டர், நிறம் மங்கியவளாகவும், கவலையில் மூழ்கியவளாகவும் அவளைக் கண்டு, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23) வசிஷ்டர் {சரஸ்வதியிடம்}, "ஓ! நதிகளில் முதன்மையானவளே, உன்னைக் காத்துக் கொள்வாயாக. ஓ! வேகமாக ஓடையைக் கொண்டவளே, என்னைக் கொண்டு {இழுத்து} செல்வாயாக, இல்லையெனில் விஷ்வாமித்திரர் உன்னைச் சபிப்பார். எந்த ஐயமும் கொள்ளாதே" என்றார்.(24)

இரக்க குணம் கொண்ட அம்முனிவரின் {வசிஷ்டரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, ஓ! கௌரவ்யா {ஜனமேஜயா}, தான் பின்பற்ற வேண்டிய சிறந்த வழியைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள்.(25) அவள் மனத்தில், "வசிஷ்டர் என்னிடம் பெருங்கருணையை வெளிப்படுத்துகிறார். அவருக்குத் தொண்டாற்றுவதே எனக்கு முறையானது" என்ற எண்ணமே எழுந்தது.(26) அந்தச் சரஸ்வதி, தன் கரையில் மௌனமாக (மந்திரங்களை) ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறந்த முனிவரை {வசிஷ்டரைக்} கண்டும், ஹோமத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குசிகரின் மகனை (விஷ்வாமித்திரரைக்) கண்டும்,(27) "இதுவே எனக்கான வாய்ப்பு {தக்க சமயம் இதுவே}" என்று நினைத்தாள். அப்போது அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதி} தன் கரைகளில் ஒன்றைத் தன் {வேகமான} ஓட்டத்தால் இடித்துத் தள்ளினாள்.(28) அப்படி அந்தக் கரையை இடித்தபடியே அவள் வசிஷ்டரையும் கொண்டு {இழுத்துச்} சென்றாள்.

அப்படிக் கொண்டு செல்லப்படும்போது, ஓ! மன்னா, வசிஷ்டர் அந்த ஆற்றை இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார்:(29) "ஓ! சரஸ்வதி, அந்தப் பெரும்பாட்டனின் (மானஸத்) தடாகத்தில் நீ உதித்தாய். இந்த மொத்த அண்டமும் உன் சிறந்த நீரால் நிறைந்திருக்கிறது.(30) ஓ! தேவி, ஆகாயத்தில் பாய்ந்து மேகங்களுக்கு உனது நீரைப் புகட்டுகிறாய். நீர்கள் அனைத்தும் நீயே. உன் மூலமாகவே நாங்கள் எங்கள் சிந்தனைத் திறன்களைப் பயன்படுத்துகிறோம்.(31) நீயே புஷ்டி, தியுதி {காந்தி}, கீர்த்தி {புகழ்}, சித்தி {வெற்றி}, உமை {பார்வதி}[1] ஆவாய். நீயே பேச்சும், நீயே சுவாஹாவும்[2] ஆவாய். மொத்த அண்டமும் உன்னை நம்பியே இருக்கிறது. அனைத்து உயிரினங்களிலும் நான்கு வடிவங்களில் வசிப்பவள் நீயே" {என்று துதித்தார்}.(32)

[1] "வளர்ச்சி, காந்தி, புகழ் மற்றும் வெற்றியின் பொருத்தமான வடிவங்கள் இவை. இறுதியில் உள்ள உமை என்பது சிவனின் மனைவியான பரமேஸ்வரியைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "பெரும் செயல்திறனைக் கொண்ட ஒரு மந்திரமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வாறு அந்தப் பெருமுனிவரால் புகழப்பட்ட அந்தச் சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பிராமணரை {வசிஷ்டரை} வேகமாக விஷ்வாமித்திரரின் ஆசிரமத்தை நோக்கி கொண்டு {இழுத்துச்} சென்று, முன்னவர் {வசிஷ்டர்} வந்திருப்பதைக் குறித்துப் பின்னவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} மீண்டும் மீண்டும் சொன்னாள்.(33) இவ்வாறு சரஸ்வதியால் தன் முன் கொண்டு வரப்பட்ட வசிஷ்டரைக் கண்ட விஷ்மாத்திரர், சினத்தால் நிறைந்து, அந்தப் பிராமணரைக் {வசிஷ்டரைக்} கொல்வதற்கு ஓர் ஆயுதத்தைத் தேடத் தொடங்கினார்.(34) அவர் கோபத்தால் நிறைந்திருப்பதைக் கண்ட அந்த ஆறானவள், ஒரு பிராமணரின் கொலையின் மீது (கொலை செய்வதைக் காண்பதிலும், அதற்கு உதவுவதிலும்) கொண்ட அச்சத்தால், மீண்டும் வசிஷ்டரைத் தனது கிழக்குக் கரைக்கே வேகமாகக் கொண்டு சென்றாள். இவ்வாறு தன் செயலால் காதியின் மகனை {விஷ்வாமித்திரரை} வஞ்சித்தாலும், அவள், இருவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தவளானாள்.(35)

பழியுணர்ச்சி கொண்ட விஷ்வாமித்திரர், முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர் {மீண்டும்} கொண்டு செல்லப்பட்டதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து சரஸ்வதியிடம்,(36) "ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, நீ என்னை வஞ்சித்துச் சென்றதால், உன் ஓடையானது, ராட்சசர்களுக்கு ஏற்புடைய குருதியாக மாறிப் போகட்டும்" என்றார்.(37) பிறகு, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் சபிக்கப்பட்ட சரஸ்வதி, இரத்தம் கலந்த நீரைச் சுமந்தபடியே ஒரு வருடம் முழுவதும் பாய்ந்து கொண்டிருந்தாள்.(38) தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், அந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்ட சரஸ்வதியைக் கண்டு, பெருங்கவலையில் நிறைந்தனர்.(39) இதன் காரணமாகவே, ஓ! மன்னா, அந்தத் தீர்த்தம், வசிஷ்டாபவாஹம் என்று பூமியில் அழைக்கப்பட்டது. எனினும், அந்த முதன்மையான நதியானவள், மீண்டும் தன் முறையான நிலையை அடைந்தாள்" {என்றார் வைசம்பாயனர்}.(40)
----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 40

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்