Thursday, September 07, 2017

அக்னி, குபேரத் தீர்த்தங்கள்! - சல்லிய பர்வம் பகுதி – 47

Agni and Kuvera Tirthas! | Shalya-Parva-Section-47 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : நீர்நிலைகளின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள்; அக்னி தீர்த்தம் மற்றும் கௌபேர தீர்த்தம் ஆகியவற்றுக்குச் சென்ற பலராமன்; அத்தீர்த்தங்களின் மகிமை...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, முறையான சடங்குகளுடன் ஸ்கந்தன் பட்டமேற்றதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்ட இந்த வரலாறு மிக அற்புதமானதாகும்.(1) ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இந்த விவரிப்பைக் கேட்டதனால் தூய்மையடைந்தவனாக என்னை நான் கருதுகிறேன். என் மனம் மிகவும் உற்சாகமடைவதால், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.(2) குமாரனின் பட்டமேற்பையும், தைத்தியர்களின் அழிவையும் கேட்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், எனக்கு மற்றொரு காரியம் குறித்து மிகுந்த ஆவல் ஏற்படுகிறது.(3) பழங்காலத்தில் நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} எவ்வாறு அந்தத் தீர்த்ததில் வைத்து பட்டமேற்கச் செய்யப்பட்டான்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, பேரறிவையும், உரைப்பதில் திறனையும் கொண்டுள்ள நீர் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, உண்மையில் முந்தைய கல்பத்தில் நடந்தவாறே இந்த அற்புத வரலாற்றைக் கேட்பாயாக. பழங்காலத்தில், கிருத யுகத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வருணனை முறையாக அணுகிய தேவர்கள் அனைவரும், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(5) "தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, அனைத்து அச்சங்களில் இருந்தும் எங்களை எப்போதும் பாதுகாப்பதைப் போல, நீயும் ஆறுகள் அனைத்தின் தலைவனாக இருப்பாயாக.(6) ஓ! தேவா, நீ எப்போதும் மகரங்களின் வீடான பெருங்கடலில் வசிக்கிறாய். ஆறுகளின் தலைவனான இந்தப் பெருங்கடல் உனது ஆட்சிப்பகுதியாகட்டும்.(7) சோமனுடன் சேர்ந்து நீ வளர்ந்து, தேய வேண்டும்" என்றனர். (இவ்வாறு சொல்லப்பட்ட) வருணன், அவர்களிடம், "அப்படியே ஆகட்டும்" என்றான்.(8)

பிறகு, ஒன்றாகச் சேர்ந்த தேவர்கள் அனைவரும், பெருங்கடலையே தன் வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் வருணனை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி, நீர்நிலைகள் அனைத்தின் தலைவனாக நிறுவினார்கள்.(9) நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள், முறையாக அவனை வழிபட்டுத் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(10) தேவர்களால் நிறுவப்பட்டவனான சிறப்புமிக்க வருணன், தேவர்களைக் காக்கும் சக்ரனைப் போலவே, கடல்கள், தடாகங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்க்கொள்ளிடங்களை முறையாகக் காக்கத் தொடங்கினான்.(11) பிரலம்பனைக் கொன்றவனும், பெரும் அறிவைக் கொண்டவனுமான பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்திலும் நீராடி, பல்வேறு வகையான தானங்களைச் செய்து, அடுத்ததாக, தெளிந்த நெய்யை உண்பவனான அக்னி, வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, காட்சிக்குப் புலனாகாதபடி எந்த இடத்தில் மறைந்து போனானோ, அந்த அக்னி தீர்த்தத்திற்குச் சென்றான்.(12) உலகங்கள் அனைத்தின் ஒளியும் இவ்வாறு மறைந்தபோது, ஓ! பாவங்களற்றவனே, தேவர்கள் அண்டத்தின் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(13) அவர்கள், "போற்றுதலுக்குரிய அக்னி மறைந்துவிட்டான். தன் காரணத்தை நாங்கள் அறியவில்லை. அனைத்து உயிரினங்களும் அழிக்கப்படாமல் இருக்கட்டும். ஓ! பலமிக்கத் தேவா, நெருப்பை உண்டாக்குவீராக" என்றனர்".(14)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "எக்காரணத்தினால் உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவனான அக்னி மறைந்து போனான்? மேலும் தேவர்களால் அவன் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டான்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்றான்.(15)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெருஞ்சக்தி கொண்ட அக்னி, பிருகுவின் சாபத்தால் பெரும்பீதியை அடைந்தான். அதனால் வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, அந்தப் போற்றுதலுக்குரிய தவன் காட்சியில் இருந்து மறைந்து போனான்.(16) அக்னி மறைந்ததும், வாசவனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், பெரும் துன்பத்தை அடைந்து, காணாமல் போன அந்தத் தேவனைத் தேடினார்கள்.(17) அவர்கள் அக்னியைக் கண்டுபிடித்த போது, அந்தத் தேவன் வன்னிமரத்திற்குள் கிடப்பதைக் கண்டனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, பிருஹஸ்பதியைத் தங்கள் தலைமையாக் கொண்ட தேவர்கள், அந்தத் தேவனைக் கண்டுபிடிப்பதில் வெற்றியை அடைந்து, வாசவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியை அடைந்தனர்.(19) பிறகு அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடத்திற்கே திரும்பி சென்றனர். அக்னியும், பிருகுவின் சாபத்தினால், பிரம்மத்தை உச்சரிப்பவரான அந்தப் பிருகு சொன்னது போலவே அனைத்தையும் உண்பவனானான்.(20)

நுண்ணறிவு கொண்ட பலராமன், அங்கே நீராடிய பிறகு, உலகங்கள் அனைத்தின் போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்குத் தன் படைப்பு வேலைகளைச் செய்தானோ அந்தப் பிரம்மயோனிக்குச் சென்றான்.(21) பழங்காலத்தில், தலைவன் பிரம்மன், அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து அங்கே நீராடிய பிறகு, முறையான சடங்குகளைச் செய்து தேவர்களுக்காகத் தீர்த்தங்கள் அனைத்தையும் படைத்தான்.(22) பலதேவன் அங்கே நீராடி, பல்வேறு வகைத் தானங்களைச் செய்த பிறகு, ஓ! மன்னா, பலமிக்க ஐலபிலன் {குபேரன்} கடுந்தவங்களைச் செய்து எங்கே பொக்கிஷங்கள் அனைத்தின் தலைமையை அடைந்தானோ அந்தக் கௌபேரம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(23) அவன் {குபேரன்} (தவத்தில் ஈடுபட்டபடி) அங்கே வசித்தபோது அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து விலைமதிப்புமிக்க ரத்தினங்களும் தாமாகவே அவனிடம் வந்தன. பலதேவன், அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அதன் நீரில் நீராடி, பிராமணர்களுக்கு முறையே அதிகச் செல்வத்தைக் கொடுத்தான்.(24)

அந்த இடத்தில் ராமன் {பலராமன்}, குபேரனின் சிறந்த நந்தவனத்தைக் கண்டான். பழங்காலத்தில், யக்ஷர்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரன், அங்கே கடுந்தவங்களைச் செய்து, பல வரங்களை அடைந்தான்.(25) பொக்கிஷங்களின் தலைமைப் பொறுப்பு, அளவிலா சக்தி கொண்ட ருத்ரனிடம் நட்பு, தேவன் என்ற நிலை, குறிப்பிட்ட திசைப் புள்ளியில் (வடக்குத் திசையின்) ஆதிக்கப் பொறுப்பு, நளகுபேரன் என்ற பெயரைக்கொண்ட ஒரு மகன் ஆகியவற்றை அங்கேதான் பெற்றான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவை யாவையும் அங்கேதான் அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} வேகமாக அடைந்தான்.(26) அங்கே வந்த மருத்துக்கள், அவனை (ஆட்சிப்பொறுப்பில்) முறையாக நிறுவினர். மேலும் அவன், தன் வாகனமாக நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், மனோ வேகம் கொண்டதுமான தெய்வீகத் தேர் ஒன்றையும், தேவர்களின் செல்வங்கள் அனைத்தையும் அடைந்தான்.(27) வெண்சந்தனத்தைப் பயன்படுத்துபவனான அந்தப் பலன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, அதிகச் செல்வத்தைத் தானமளித்து, வேகமாக மற்றொரு தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) அனைத்து வகை உயிரினங்களையும் கொண்ட அந்தத் தீர்த்தம் பதரபாசனை என்ற பெயரால் அறியப்படுகிறது. அங்கே ஒவ்வொரு பருவகாலத்தின் கனிகளும் எப்போதும் காணப்படும், மேலும், மலர்களும், அனைத்து வகைக் கனிகளும் எப்போதும் அபரிமிதமாகக் கிடைக்கும்" {என்றார் வைசம்பாயனர்}.(29)
-----------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 47 ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்