Saturday, October 28, 2017

நகுலனின் ஞானம்! - சாந்திபர்வம் பகுதி – 12

The wisdom of Nakula! | Shanti-Parva-Section-12 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 12)


பதிவின் சுருக்கம் : துறவைக் காட்டிலும் செயலே மேன்மையானது என யுதிஷ்டிரனிடம் சொன்ன நகுலன்; நான்கு வாழ்வுமுறைகளிலும் இல்லறமே மேன்மையானது எனச் சொன்னது; இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் திரிவதாலேயே ஒருவன் துறவியாகிவிட மாட்டன் என்று சொன்னது; மன்னர்களின் கடமை இல்லறம் நோற்று வேள்விகளை ஆதரிப்பதே என்பதை அழுத்தமாகச் சொன்ன நகுலன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்கள், அகன்ற மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும், அளவாகப் பேசுபவனும், பெரும் ஞானம் கொண்டவனும், தாமிரத்திற்கு ஒப்பான நிறத்தில் முகத்தைக் கொண்டவனுமான நகுலன், அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்டு, நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையான மன்னனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்து, தன் அண்ணனின் இதயத்தை (அறிவால்) முற்றுகையிட்டபடியே இவ்வார்த்தைகளைப் பேசினான்.(1,2)

நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, "விசாகயூபம் என்ற இடத்தில் தேவர்கள் தங்கள் நெருப்புகளை {யாக அக்னிகளை} நிறுவியுள்ளனர். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களே தங்கள் செயல்பாடுகளின் கனிகளைச் சார்ந்தே இருக்கின்றனர் என்பதை அறிவீராக.(3) ஓ! மன்னா, நம்பிக்கையற்றோர் அனைவரின் வாழ்வையும் (மழையால்) ஆதரிக்கும் பித்ருக்கள், (படைப்பாளனால் வேதங்களில் அறிவிக்கப்பட்ட) விதிகளை நோற்றபடியே செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(4) (செயல்களை மனத்தில் ஆழப் பதியச் செய்யும்) வேதங்களின் தீர்மானங்களை மறுப்போரை ஒளிவுமறைவற்ற நாத்திகர்களாக அறிவீராக. ஓ! பாரதரே, வேதங்களைக் கற்ற மனிதன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் அதன் தீர்மானங்களைப் பின்பற்றி,(5) தேவர்களின் வழியில் உயர்ந்த சொர்க்கலோகத்தை அடைகின்றனர். மேலும் இது (இந்த இல்லற வாழ்வானது), வேத உண்மைகளை அறிந்தவர்கள் அனைவராலும் (பிற) வாழ்க்கை முறைகள் அனைத்திலும் மேன்மையானதாகச் சொல்லப்பட்டுள்ளது.(6)


ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீதியுடன் தன்னால் அடையப்பட்ட செல்வத்தை, வேதங்களை நன்கறிந்த பிராமணர்களுக்குத் தானமளிப்பவனே,(7) ஓ! ஏகாதிபதி, தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்திய உண்மையான துறவியாகக் கருதப்படுகிறான்.(8) எனினும், பெரும் இன்பத்தின் ஊற்றை (இல்லற வாழ்வுமுறையை) அலட்சியம் செய்பவன், தன்னையே துறக்கும்[1] அடுத்த வாழ்வுமுறைக்குக் குதித்து, இருளின் தன்மையிலான {தமோகுணத்திலான} துறவையே கைக்கொள்கிறான்.(9) எவன் வீடற்றவனாக இருக்கிறானோ, எவன் இவ்வுலகத்தில் (பிச்சையெடுப்பவனாகத்) திரிகிறானோ, எவன் தன் உறைவிடத்தை மரத்தடியில் கொண்டுள்ளானோ, எவன் எண்ணங்களை வெளியிடாமல் அமைதி காக்கும் பேசா நோன்பை (மௌன விரதத்தை) நோற்கிறானோ, எவன் தன் புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறானோ, அவனே பிச்சாடன {பிச்சையெடுத்து வாழும் துறவு} வாழ்வை நோற்கும் ஒரு துறவியாவான்[2].(10)

[1] "உணவை மறுத்துத் தன் உடலையே வற்றச் செய்வதால் தன்னையே துறப்பவனாகிறான்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ மஹாராஜரே, கிருஹஸ்த தர்மத்திலுள்ள ஸுகபோகங்களைப் பாராமல் அப்படியே (அரண்யத்தில்) உயர்ந்த நிஷ்டையை அடைபவனாகிச் சரீரத்தை விடுகிறவன் எவனோ அவன் தாமஸமனத் தியாகியாவான்" என்றிருக்கிறது.

[2] "அப்படிப்பட்ட ஒரு மனிதனும் உண்மையான துறவி கிடையாது. ஏனெனில், ஒரு க்ஷத்திரியன் அத்தகு வாழ்வுமுறையை நோற்றால் அது பாவம் நிறைந்த வாழ்வாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

எந்தப் பிராமணர், கோபம் மற்றும் இன்பம் ஆகியவற்றையும், குறிப்பாக வஞ்சனையையும் அலட்சியம் செய்து, எப்போதும் தன் நேரத்தை வேத கல்வியில் ஈடுபடுத்திக் கொள்கிறானோ, அவனே பிச்சாடன நோன்பை நோற்கும் ஒரு துறவியாவான்[3].(11) ஒரு காலத்தில் நான்கு வாழ்வு முறைகளும் தராசில் எடைகாண நிறுத்திப் பார்க்கப்பட்டன. ஓ! மன்னா, தராசின் ஒரு பக்கத்தில் இல்லறத்தை வைத்தபோது, அதைச் சரியாக நிறுத்த, மறுபக்கத்தில் மற்ற மூன்று வாழ்வுமுறைகளையும் வைக்க வேண்டியிருந்தது என்று ஞானியர் சொல்கின்றனர்.(12) ஓ! பார்த்தரே, ஓ பாரதரே, மேலும், சொர்க்கமும், இன்பமும் இல்லறத்தில் மட்டுமே இருக்கிறது என்பதைக் கண்டதால், அதுவே {இல்லறமே} பெரும் முனிவர்களும், உலக வழிகளை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக இருப்பவர்களும் நோற்கும் வழியானது.(13) எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த வாழ்வுமுறையில் வாழ்ந்து, அதையே தன் கடமையாக எண்ணி, கனியின் மீது கொண்ட விருப்பம் அனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, அவனே உண்மையான துறவியாவான். இல்லறத்தையும், சுற்றத்தையும் கைவிட்டு மூட புத்தியுடன் காட்டுக்குச் செல்லும் மனிதன் துறவியாகமாட்டான்.(14) மேலும், போலியாக அறப்போர்வைக்குள் இருக்கும் ஒருவன் (காட்டில் வாழ்ந்தாலும்) தன் ஆசைகளை மறக்க முடியாமல், தன் கழுத்தைச் சுற்றி இரக்கமற்றவனான யமனின் பயங்கரத் தளையால் கட்டப்படுகிறான்.(15)

[3] "இந்த வரியின் நோக்கமே, அத்தகு வாழ்வும் ஒரு பிராமணனுக்கேயன்றி ஒரு க்ஷத்திரியனுக்கில்லை என்று நீலகண்டர் நினைக்கிறார். இல்லையெனில், யுதிஷ்டிரன் ஆட்சி செய்யாமல், தன் தம்பிகளில் எவரோ ஒருவரால் ஆட்சி செய்யப்படும் நாட்டில் அமைதியாக வாழ்ந்தாலும் அவன் வென்றதாகவே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பகட்டால் செய்யப்படும் செயல்கள் கனியை விளைவிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, மறுபுறம் துறவெண்ணத்துடன் செய்யப்படும் அந்தச் செயல்கள், அபரிமிதமான கனிகளைக் கொண்டு வருகிறது.(16) அமைதி, தற்கட்டுப்பாடு, மனோவுறுதி, உண்மை, தூய்மை, எளிமை, வேள்விகள், விடாமுயற்சி, நீதி ஆகியவையே எப்போதும் முனிவர்களால் நல்லறங்களாகக் கருதப்படுகின்றன.(17) இல்லறத்தில் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்காகவே செயல்கள் செய்யப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இந்த வாழ்வு முறையில் மட்டுமே மூவகைக் குறிக்கோள்களும் அடையப்படுகின்றன[4].(18) அனைத்துச் செயல்களையும் கட்டுப்பாடில்லாமல் செய்யும் வாழ்வுமுறையைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு துறவி, இம்மையிலோ மறுமையிலோ அழிவைச் சந்திப்பதில்லை.(19) அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவனான அற ஆன்மா {பரமாத்மா}, உயிரினங்கள், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளால் தன்னைத் துதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றை உண்டாக்கினான்.(20)

[4] "மூவகைக் குறிக்கோள்களாவன: அறம், இன்பம் மற்றும் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தூய்மையாக இருக்கும் மரங்கள், செடி, கொடிகள், விலங்குகள் ஆகியனவும், தெளிந்த நெய்யும், வேள்வியின் உட்பொருளாகவே உண்டாக்கப்பட்டன.(21) இல்லறம் நோற்பவன், தடைகள் நிறைந்த வேள்வியைச் செய்ய வேண்டும். இதன் காரணமாகவே, அவ்வாழ்வு முறை மிகக் கடினமானதும், அடைதற்கரியதுமாகும்.(22) ஓ! ஏகாதிபதி, எனவே, செல்வம், தானியம் மற்றும் விலங்குகளைக் கொண்டவர்களும் இல்லறம் நோற்பவர்களுமான மனிதர்கள், வேள்விகளைச் செய்யவில்லையெனில் அழிவில்லா பாவத்தையே ஈட்டுவார்கள்.(23) முனிவர்களில் சிலர் வேத கல்வியையே வேள்வியாகக் கருதுகின்றனர்; சிலர் தங்கள் மனங்களில் செய்யும் தியானத்தையே பெரும் வேள்வியாகக் கருதுகின்றனர்.(24) ஓ! ஏகாதிபதி, குவிந்த மனநிலையைக் கொண்ட இந்தப் பாதையில் நடப்பதன் விளைவால் பிரம்மனுக்கு இணையான நிலையை அடையும் இது போன்ற மறுபிறப்பாள மனிதனின் தோழமையைத் தேவர்களே நாடுகின்றனர்.(25)

உமது எதிரிகளிடம் இருந்து நீர் அடைந்த பல்வேறு வகையான செல்வங்களை வேள்வியில் செலவிட மறுத்தால், நீர் நம்பிக்கையில்லாதவர் என்பதை மட்டுமே வெளிக்காட்டுகிறீர்.(26) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இல்லறம் நோற்கும் ஒரு மன்னன், தன் செல்வத்தை ராஜசூயம், அஸ்வமேதம் மற்றும் பிற வகை வேள்விகளைத் தவிர்த்து வேறு வழியில் தனது செல்வத்தைத் துறப்பதை ஒரு போதும் நான் கண்டதில்லை.(27) ஓ! ஐயா, தேவர்களின் தலைவனான சக்ரனைப் போல, பிராமணர்களால் புகழப்படும் பிற வேள்விகளைச் செய்வீராக.(28) எவனுடைய அலட்சியத்தின் விளைவாகக் கள்வர்களால் குடிமக்கள் கொள்ளையடிக்கப் படுகின்றனரோ, தன்னை ஆட்சி செய்ய அழைப்போருக்கு எவன் பாதுகாப்பை வழங்கவில்லையோ, அந்த மன்னன், கலியின் வடிவமானவன் என்று சொல்லப்படுகிறான்.(29) குதிரைகள், பசுக்கள், பெண் பணியாட்கள், இழைகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், கிராமங்கள், ஊர்கள், களங்கள் வீடுகள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடாமலும், உறவினர்களிடம் நட்புணர்வில்லாமலும் நாம் காட்டுச் சென்றோமானால், நாமும் அரச வகையைச் சேர்ந்த கலிகளே ஆவோம்.(30,31)

(பிறருக்குப்) பாதுகாப்பை வழங்காத, ஈகைபயிலாத அரச வகையினர் பாவத்தையே இழைக்கின்றனர். மறுமையில் அவர்களுக்குத் துயரே அல்லாமல் அருளில்லை.(32) ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, பெரும் வேள்விகளையும், இறந்து போன உமது மூதாதையருக்கான சடங்குகளைச் செய்யாமல், புனித நீர்நிலைகளில் நீராடாமல், காட்டில் திரியும் வாழ்வை நீர் கைக்கொண்டால்,(33) திரளில் இருந்து பிரியும் சிறு மேகமானது காற்றால் அலைக்கழிக்கப்படுவதைப் போல நீரும் அழிவையே அடைவீர். இம்மையிலும், மறுமையிலும் {அறம் வழுவி} வீழ்ந்து, பிசாசங்களின் வகையில் நீர் பிறப்பை எடுக்க வேண்டியிருக்கும்.(34) வெறுமனே இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் வசிப்பதால் மட்டும் அல்ல; அக மற்றும் புறப்பற்றுகள் அனைத்தையும் கைவிடும் மனிதனே உண்மையான துறவியாகிறான்.(35)

எந்தத் தடங்கலும் இல்லாத இந்த விதிமுறைகளை நோற்று வாழும் ஒரு பிராமணன், இம்மையிலோ, மறுமையிலோ வீழ்வதில்லை.(36) பழங்காலத்தவரால் மதிக்கப்படும், மனிதர்களில் சிறந்தோரால் பயிலப்படும் கடமைகளான ஒருவனுடைய சொந்த கடமைகளை நோற்றால், ஓ! பார்த்தரே, தைத்தியப்படையைக் கொன்ற சக்ரனைப் போலச் செழிப்பில் பெருகியவர்களான தன் எதிரிகளைப் போரில் கொன்றபிறகும் எவனாவது வருந்துவானா?(37) க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, உமது ஆற்றலின் துணை கொண்டு உலகத்தை அடக்கிய நீர், ஓ! ஏகாதிபதி, வேதங்களை அறிந்தோருக்கு கொடைகளை அளித்த பிறகு, சொர்க்கத்தை விட உயர்ந்த உலகங்களுக்குச் செல்லலாம். ஓ! பார்த்தரே, வருந்துவது உமக்குத் தகாது" {என்றான் நகுலன்}.(38)

சாந்திபர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்