Sunday, November 05, 2017

தேவஸ்தானர் அறிவுரை! - சாந்திபர்வம் பகுதி – 21

The counsel of Devasthana! | Shanti-Parva-Section-21 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 02)


பதிவின் சுருக்கம் : ஆட்சியேற்று அறம்பயில வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி யுதிஷ்டிரனை அறிவுறுத்திய முனிவர் தேவஸ்தானர்...


தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக இந்திரனால் கேட்கப்பட்டு, பிருஹஸ்பதியால் அவனுக்கு அளிக்கப்பட்ட உரை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(1) பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "மனநிறைவே உயர்ந்த சொர்க்கம், மனநிறைவே உயர் அருள். மனநிறைவை விட உயர்ந்தது ஏதுமில்லை. மனநிறைவே உயர்ந்த நிலையில் நிற்கிறது.(2) ஆமையானது தனது அங்கங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வதைப் போல ஒருவன் தனது ஆசைகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும்போது, அவனது ஆன்மாவின் இயற்கையான பிரகாசம் வெளிப்படுகிறது.(3)  ஒருவன் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாத போது, எந்த உயிரினமும் அவனிடம் அச்சங்கொள்ளாத போது, அவன் ஆசையையும், வெறுப்பையும் வெல்லும்போது, தனது ஆன்மாவைக் காண்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(4)  செயல், சொல், மனம் ஆகியவற்றால் ஒருவன் எவருக்கும் தீங்கிழைக்க நினைக்காத போது, அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது" என்றார்.(5)


ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு உயிரினங்கள் எந்த அறத்தைப் பின்பற்றினாலும், அவை அதற்குரிய கனிகளை {பலன்களை} அடைகின்றன. ஓ! பாரதா, இதைக் கருத்தில் கொண்டு விழிப்படைவாயாக[1].(6) சிலர் அமைதியைப் புகழ்கின்றனர், சிலர் விடாமுயற்சியையும், சிலர் அமைதி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டையும் புகழ்கின்றனர். சிலர் வேள்வியைப் புகழ்கின்றனர்[2]; வேறு சிலர் துறவைப் புகழ்கின்றனர். சிலர் கொடைகளையும், வேறு சிலர் அதை ஏற்பதையும் புகழ்கின்றனர்.(7,8) சிலர், (எதிரிகளைக்) கொன்று, வெட்டி, துளைத்து அடையப்படும் அரசுரிமையையும், குடிமக்களைப் பேணுவதையும் புகழ்கிறார்கள்.(9) சிலர் தங்கள் நாட்களை ஓய்வில் கழிப்பதைப் புகழ்கிறார்கள். இவையனைத்தையும் கண்காணித்த கல்விமான்கள்,(10) எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும் அறமே நல்லோரால் மெச்சத்தகுந்தது என்று தீர்மானிக்கின்றனர்[3].

[1] "எவன் பிறரை அச்சுறுத்துகிறானோ, அவன் தானே அச்சமடைந்தவனாவான்; எவன் அச்சுறுத்தவில்லையோ, அவன் அச்சமடைவதில்லை என்று சுருதிகள் சொல்கின்றன. ஒரு மனிதன் தன் செயல்பாடுகளின் கனிகளையே வெல்கிறான். எனவே, பற்றில்லாமல், நியாயமாகச் செய்யப்படும் அரசாட்சி, மறுமையில் அவனுக்கு வெற்றி மகுடம் சூட்டும் என்பதால் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள இங்கே யுதிஷ்டிரன் பரிந்துரைக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "நைகம் ந சாபரே Naikam na chaapare என்பது இவ்வாறே நீலகண்டரால் விளக்கப்படுகிறது. உண்மையில் இதன் பொருள், "சிலர் ஏகத்தையோ, மனநிறைவையோ புகழவில்லை என்பதில்லை" என்பதாகும். அதாவது, மனநிறைவையும், தியானத்தையும் புகழ்கிறார்கள் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] கும்பகோணம் பதிப்பில், "சிலர் இன்சொற் சொல்லுதலைக் கொண்டாடுகிறார்கள். மற்ற ஜனங்கள் முயற்சியைக் கொண்டாடுகிறார்கள். இதிலொன்றைச் சிலர் கொண்டாடவில்லை. மற்றொன்றைச் சிலர் கொண்டாடவில்லை. சிலர் இவ்விரண்டையும் கொண்டாடுகிறார்கள். சிலர் யாக முதலிய கர்மத்தைக் கொண்டாடுகிறார்கள். வேறு சிலர் ஸந்யாஸத்தைக் கொண்டாடுகிறார்கள். இவைகளில் ஒன்றைச் சிலரும், மற்றொன்றைச் சிலரும் கொண்டாடுகிறதில்லை. சிலர் இவ்விரண்டையும் முறையே கொண்டாடுகிறார்கள். கொடுப்பதைச் சிலரும் ஏற்பதைச் சிலரும் புகழுகிறார்கள். சிலர் எல்லாவற்றையும் விட்டு மௌனிகளாய்த் தியானஞ்செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர், கொன்றும் அறுத்தும், பிளந்தும் பிராணிகளைப் பாதுகாப்பதாகிய அரசாட்சியைக் கொண்டாடுகிறார்கள். சிலர் ஒன்றுமில்லாவிடத்தில் தியனஞ்செய்கிறார்கள். இவைகளெல்லாம் நன்றாகக் கண்டறிந்த பண்டிதர்களின் நிச்சயமோ, பிராணிகளுக்குத் துரோஹஞ்செய்யாமல் செய்யப்படும் தர்மமே ஸாதுக்களுக்கு ஸம்மதமென்பதுதான்" என்றிருக்கிறது.

தான்தோன்றியான {சுயம்புவான} மனுவால் சொல்லப்படுவது போல, தீங்கிழையாமை, உண்மை நிறைந்த பேச்சு, நீதி, கருணை, தன்னடக்கம்,(11) தன் மனைவியரிடம் (வாரிசுகளை) உண்டாக்கல், இனிமை, பணிவு, பொறுமை ஆகியவற்றைப் பயில்வதே அனைத்து அறங்களிலும் சிறந்ததாகும். எனவே, ஓ! குந்தியின் மகனே, இந்த அறத்தையே நீ கவனமாக நோற்பாயாக.(12) அரசக் கடமைகளின் உண்மைகளை அறிந்த க்ஷத்திரியன் எவனோ, அரசுரிமையே ஏற்று, அனைத்து நேரங்களிலும் தன் ஆன்மாவைக் கட்டுபடுத்தி,  அன்புக்குரியவை, அல்லாதவை ஆகியவற்றைச் சமமாகக் கருதி, வேள்வி விருந்துகளில் எஞ்சியவற்றை உண்டு,(13) தீயோரை அடக்கி, நல்லோரை பேணிக் காத்து, அறத்தின் பாதையில் தன் குடிமக்களை நடைபோடச் செய்து, தானும் அவ்வழியிலேயே நடந்து,(14) தன் மகுடத்தைத் தன் மகனிடம் ஒப்படைத்த பிறகு, காட்டுக்குச் சென்று, காட்டின் பொருட்களை உண்டு, அங்கேயே வாழ்ந்து, வேத விதிகளின்படி சோம்பலனைத்தையும் களைந்த க்ஷத்திரியன் எவனோ,(15) நன்கறியப்பட்ட மன்னர்களின் கடமைகள் அனைத்துக்கும் கீழ்ப்படியும் க்ஷத்திரியன் எவனோ, அவன் இம்மையிலும், மறுமையிலும் அற்புதக் கனிகளை அடைவான் என்பது உறுதியாகும்.

நீ எதைக் குறித்துப் பேசுகிறாயோ அந்த இறுதி விடுதலை {முக்தி} அடைவதற்கரியதாகும். அதைத் தொடர்வதில் பல தடைகள் ஏற்படும்.(16) அத்தகு கடமைகளைப் பின்பற்றி, ஈகையும், தவமும் பயின்று, இரக்க குணத்துடன் கூடி, ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு,(17) நேர்மையாகத் தங்கள் குடிமக்களை ஆட்சி செய்து, பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்காகப் போரிடுபவர்கள் மறுமையில் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(18) ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, இதற்காகவே ருத்திரர்களும், வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யசுகளும், மன்னர்க்கூட்டமும் இவ்வறத்தைப் பின்பற்றுகின்றனர். அறத்தால் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் கடமைகளை எந்த அலட்சியமும் இல்லாமல் பயில்வோர், தங்களுடைய அந்தச் செயல்களின் மூலமே சொர்க்கத்தை அடைகிறார்கள்" என்றார் {தேவஸ்தானர்}.(19)

சாந்திபர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்