Wednesday, November 08, 2017

சங்கர், லிகிதர் மற்றும் சுத்யும்னன்! - சாந்திபர்வம் பகுதி – 23

Sankha, Likhita and Sudyumna! | Shanti-Parva-Section-23 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 23)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அர்ஜுனனின் வார்த்தைகளை ஆதரித்துப் பேசிய வியாசர்; மன்னர்களின் செங்கோலின் சிறப்பைச் சொல்வதற்காகச் சங்கர், லிகிதர் என்ற இரு தவசிகள் மற்றும் மன்னன் சுத்யும்னன் ஆகியோரின் கதையைச் சொன்னது; குற்றத்திற்கான தண்டனை வழங்கும் மன்னன் நன்னிலை அடைவான் என்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சுருட்டை முடி கொண்ட அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குந்திக்குப் பிறந்த அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} பேச்சற்றவனாக அமைதியாக இருந்தான். பிறகு தீவில் பிறந்தவர் (வியாசர்) இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)


வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இனிய யுதிஷ்டிரா, அர்ஜுனனின் வார்த்தைகள் உண்மையானவை. சாத்திரங்கள் தீர்மானிக்கும் உயர்ந்த அறமானது இல்லறக் கடமைகளைச் சார்ந்தே இருக்கிறது. நீ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனாவாய். உனக்காகப் பரிந்துரைக்கப்படும் (இல்லறக்) கடமைகளை முறையாக நோற்பாயாக. இல்லறக் கடமைகளைத் துறந்து காட்டுக்குள் ஓயும் வாழ்வானது உனக்காக விதிக்கப்படவில்லை.(3) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் (தங்கள் வாழ்வாதாரத்தை அடைய) இல்லற வாழ்வை வாழ்வும் மனிதனைச் சார்ந்தே இருக்கின்றனர்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பறவைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஆகியனவும் இல்லற வாழ்வு வாழும் மனிதர்களாலேயே தாங்கப்படுகின்றன. எனவே, அவ்வாழ்வு முறைக்குச் சொந்தமானவனே (பிறர் அனைவரிலும்) மேன்மையானவன் ஆவான்.(5)


நால்வகை வாழ்வு முறைகளிலும், இல்லற வாழ்வே மிகக் கடினமானதாகும். ஓ! பாரத்தா, புலனடக்கம் இல்லா மனிதர்கள் பயில்வதற்குக் கடினமான அந்த வாழ்வு முறையையே நீ நோற்பாயாக.(6) நீ வேதங்கள் அனைத்திலும் நல்ல அறிவைக் கொண்டிருக்கிறாய். பெரும் தவத் தகுதியையும் ஈட்டியிருக்கிறாய். எனவே, உன் மூதாதையரின் நாட்டுச் சுமையை ஓர் எருதைப் போலச் சுமப்பதே உனக்குத் தகுந்ததாகும்.(7) வெற்றியடைவதற்காகத் தவங்கள், வேள்விகள், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கல்வி, துறவு, புலனடக்கம், மனநிறைவு, தனிமையில் வாழ்தல், ஆழ்ந்த தியானம், (பிரம்ம) அறிவு ஆகியற்றை, தங்கள் சிறப்பான முயற்சியால் பிராமணர்களே நோற்க வேண்டும்.(8)

நான் இப்போது உனக்கு க்ஷத்திரியர்களின் கடமைகளைச் சொல்லப் போகிறேன். அவை நீ அறியாதனவல்ல. வேள்வி, கல்வி, முயற்சி {உழைப்பு}, குறிக்கோள்[1],(9) "தண்டக்கோல் {செங்கோல்} தரித்தல், கடுமை, குடிகளைக் காத்தல், வேதங்களில் அறிவு, அனைத்து வகை நோன்புகளையும் பயிலல், நன்னடத்தை, செல்வமீட்டல், தகுந்த மனிதர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை,(10) அரச வகையைச் சேர்ந்தவர்களால் அடையப்பட்டு, நன்றாகச் செய்யப்பட்டால், அவை அவர்களை இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) ஓ! குந்தியின் மகனே, இவற்றில் தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்தலே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. ஒரு க்ஷத்திரியனுக்குள் பலமும், அந்தப் பலத்திற்குள் தண்டமும் எப்போதும் வசித்திருக்க வேண்டும்.(12) ஓ! மன்னா, நான் சொல்லும் இந்தக் கடமைகள் க்ஷத்திரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையும், அவர்களது வெற்றியில் பெரும் பங்காற்றுபவையுமாகும். இது தொடர்பாகப் பிருஹஸ்பதி ஒரு வரியைப் பாடியிருக்கிறார்.(13) "எலியை விழுங்கும் பாம்பைப் போல, அமைதியை விரும்பும் ஒரு மன்னனையும், இல்லறத்தில் மிகுந்த பற்றைக் கொண்ட ஒரு பிராமணனையும் பூமி விழுங்கிவிடும்" என்று பாடியிருக்கிறார்.(14) அரசமுனியான சுத்யும்னன், தண்டக்கோலை {செங்கோலை} மட்டுமே தரித்து, பிரசேதசின் மகனான தக்ஷனைப் போல உயர்ந்த வெற்றியை அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்" என்றார் {வியாசர்}.(15)

[1] கொண்டவற்றில் நிறைவில்லாமை எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! புனிதமானவரே, பூமியின் தலைவனான சுத்யும்னன் எந்தச் செயல்களால் அந்த உயர்ந்த வெற்றியை அடைந்தான்? அம்மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(16)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது. கடும் நோன்புகளை நோற்பவர்களாகச் சங்கன் மற்றும் லிகிதன் என இரு சகோதரர்கள் இருந்தனர்.(17) அந்த இரு சகோதரர்களும், அழகிய இரு வசிப்பிடங்களைத் தனித்தனியே கொண்டிருந்தனர். பாஹுதை என்றழைக்கப்படும் ஓடையின் கரையில் அமைந்திருந்த அந்த வசிப்பிடங்கள், மலர்கள் மற்றும் கனிகளை எப்போதும் சுமந்திருக்கும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) ஒரு சமயம், லிகிதர் என்பவர், தமது சகோதரரான சங்கரின் வசிப்பிடத்திற்கு வந்தார். அந்நேரத்தில் ஏதோ காரியத்திற்காகச் சங்கர் தமது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்.(19) தமது சகோதரரின் ஆசிரமத்திற்கு வந்த லிகிதர் கனிந்த பல கனிகளைப் பறித்தார்.(20) அவற்றை அடைந்த அந்த மறுபிறப்பாள {பிராமண} லிகிதர், மனசாட்சியின் எந்த ஐயவுணர்வும் இன்றி அவற்றை உண்டார். அப்படி அவர் உண்டு கொண்டிருந்தபோது, சங்கர் தமது ஓய்வில்லத்திற்கு வந்தார்.(21)

அவ்வாறு உண்டுகொண்டிருக்கும் தமது சகோதரனைக் கண்ட சங்கர், அவனிடம், "இக்கனிகளை எங்கே நீ அடைந்தாய்? எக்காரணத்திற்காக இவற்றை உண்கிறாய்?" என்று கேட்டார்.(22) தமது அண்ணனை அணுகி, அவரை வணங்கிய லிகிதர், சிரித்துக் கொண்டே அவரிடம், "நான் இவற்றை இந்த ஓய்வில்லத்திலேயே அடைந்தேன்" என்றார்.(23) பெரும் சினத்தில் நிறைந்த சங்கர் அவரிடம், "இக்கனிகளை எடுத்ததால் நீ திருட்டுக் குற்றத்தை இழைத்திருக்கிறாய்.(24) செல்வாயாக, மன்னனிடம் சென்று, நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வாயாக. அவனிடம் {மன்னனிடம்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, எனக்குக் கொடுக்கப்படாததை அடைந்து குற்றத்தை இழைத்துவிட்டேன்.(25) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என்னைக் கள்வனாக அறிந்து கொண்டு, உன் வகைக்கான கடமையை நோற்று, கள்வனுக்கான தண்டனையை எனக்கு வழங்குவாயாக" எனச் சொல்" என்றார் {சங்கர்}.(26)

இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான லிகிதர், தமது அண்ணனின் ஆணையின் பேரில் மன்னன் சுத்யும்னனிடம் சென்றார்.(27) மன்னன் சுத்யும்னன், லிகிதர் வந்திருக்கிறார் என்பதை வாயில்காப்போரிடம் இருந்த கேட்டு, (அந்தத் தவசியை) வரவேற்பதற்காகத் தன் அமைச்சர்களுடன் சென்றான்.(28) அவரைச் சந்தித்த அம்மன்னன், கடைமைகளை அறிந்த மனிர்கள் அனைவரிலும் முதன்மையான அவரிடம், "ஓ! மரியாதைக்குரியவரே, உமது வருகையின் காரணத்தைச் சொல்வீராக. அஃது ஏற்கனவே நிறைவடைந்ததாகக் கருதுவீராக" என்றான்.(29) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள தவசி {லிகிதர்}, அந்தச் சுத்யும்னனிடம், "நீ அதை நிறைவேற்றுவாய் என்று முயலில் உறுதியளிப்பாயாக. நான் சொன்ன பிறகு, அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(30) ஓ! மனிதர்களில் காளையே, என் அண்ணனால் எனக்குக் கொடுக்கப்படாத சில கனிகளை நான் உண்டேன். ஓ! ஏகாதிபதி, அதற்காக எந்தத் தாமதமும் இல்லாமல் என்னைத் தண்டிப்பாயாக" என்றார்.(31)

சுத்யும்னன் {தவசி லிகிதரிடம்}, "மன்னன் தண்டக்கோலைத் தரிக்கத் தகுந்தவன் என்று கருதப்பட்டால், ஓ! பிராமணர்களில் காளையே, மன்னிப்பு வழங்குவதற்கும் அவன் தகுந்தவனே.(32) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது செயலால் தூய்மையடைந்த நீர், மன்னிக்கப்பட்டதாகக் கருதுவீராக. {எனவே}, உமது வேறு விருப்பங்களை இப்போது எனக்குச் சொல்வீராக. அந்த உமது ஆணைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று பதிலுரைத்தான்".(33)


வியாசர் தொடர்ந்தார், "மறுபிறப்பாள தவசியான லிகிதர், அந்த உயர் ஆன்ம மன்னனால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டாலும், வேறு எந்த உதவியையும் அவனிடம் கேட்கவில்லை {தமது கோரிக்கையிலேயே உறுதியாக இருந்தார்}.(34) பிறகு அந்தப் பூமியின் ஆட்சியாளன் {சுத்யும்னன்}, அந்த உயர் ஆன்ம லிகிதரின் இரு கரங்களையும் அறுத்தான். பின்னவர் {லிகிதர்} அந்தத் தண்டனையை ஏற்று, அங்கிருந்து சென்றார்.(35) தமது அண்ணன் சங்கரிடம் திரும்பிய லிகிதர், பெரும் துன்பத்துடன், "(செய்த குற்றத்திற்காக) முறையாகத் தண்டிக்கப்பட்ட இந்த இழிந்தவனை இப்போது மன்னிப்பதே உமக்குத் தகும்" என்றார்.(36)

சங்கர் {லிகிதரிடம்}, "ஓ! கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னிடம் கோபங்கொள்ளவுமில்லை, நீ எனக்குத் தீங்கிழைக்கவும் இல்லை. எனினும், உன் அறம் தவறியது. அந்த அவலநிலையில் இருந்து நான் உன்னை மீட்டேன்.(37) பாஹுதை ஆற்றுக்குத் தாமதமின்றிச் சென்று, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையாக நீர்க்காணிக்கை செலுத்தி {தர்ப்பணஞ்செய்து} அவர்களை நிறைவு கொள்ளச் செய்து, இனி ஒருபோதும் உன் இதயத்தைப் பாவத்தில் நிலைக்கச் செய்யாதிருப்பாயாக[2]" என்றார்.(38)

[2] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, "இனி அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே. அறிந்தவர்கள் ப்ரம்மஹத்தியும், ஸுராபானமும், திருட்டும், குருபத்நிகமனமும் இவை செய்தவர்களுடன் சேர்க்கையுமாகிய இவைகளை மஹாபாதகங்களென்று சொல்லுகிறார்கள். இவைகளிலும் திருட்டுக்கு ஒப்பான பெரும்பாவம் வேறு இல்லை. திருட்டு இவ்வுலகில் பிரம்மஹத்திக்கு ஒப்பாகும். பாதகம் யாவுக்கும் பெரும்பாலும் சரீர தண்டனை கூறப்படுகிறது. திருட்டுக்குச் சரீர தண்டத்தைத் தவிர வேறு தண்டனை விதிக்கப்படவில்லை. பிராம்மணனும் க்ஷத்திரியனும், வைசியனும், சூத்திரனுமாகிய யாவரும் விரும்பிச் செய்த பாவத்திற்குச் சிக்ஷிக்கத் தக்கவர்களென்பதில் ஸந்தேஹமில்லை. பாவஞ்செய்த மனிதர்கள் அரசர்களால் தண்டனை பெற்றால் அந்தப் பாவம் விலகிப் புண்ணியமுள்ள ஸாதுக்கள் போல ஸ்வர்க்கம் அடைகிறார்கள். நீ அரசனால் தண்டனையை அடைந்தபடியால் நமது குலம் உயர்ந்ததாயிற்று" என்று சொன்னதாக இருக்கிறது.

சங்கரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட லிகிதர், அந்தப் புனித ஓடையில் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, நீர்க்கடனைச் செலுத்த தொடங்கினார்.(39) அப்போது, அவரது {லிகிதரின்} தோள்களின் நுனிப்பகுதியில் இரு தாமரைகளுக்கு ஒப்பான இரு கரங்கள் தோன்றின. ஆச்சரியத்தில் நிறைந்த அவர் {லிகிதர்}, தமது தமையனிடம் {சங்கரிடம்} வந்து, தன்னிரு கரங்களையும் அவருக்குக் காட்டினார்.(40) சங்கர் அவரிடம் {லிகிதரிடம்}, "இவையாவும் என் தவங்களின் மூலம் அடையப்பட்டன. இதில் ஆச்சரியங்கொள்ளாதே. முன்னறிவே இங்கே கருவியாக இருக்கிறது" என்றார்.(41)

லிகிதர் {சங்கரிடம்}, "ஓ! பெரும் காந்தி கொண்டவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது தவங்களின் சக்தி இத்தகையதாக இருக்கையில், முதலிலேயே என்னை ஏன் நீர் தூய்மையாக்கவில்லை?" என்று கேட்டார்.(42)

சங்கர் {லிகிதரிடம்}, "நான் வேறு வகையில் செயல்படக்கூடாது. நான் தண்டிப்பவனல்ல. (உன்னைத் தண்டித்த) ஆட்சியாளனும், நீயும், பித்ருக்களுடன் சேர்ந்து தூய்மையடைந்தீர்கள்" என்றார்".(43)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரா}, அம்மன்னன் {சுத்யும்னன்}, தன் செயலால் மேன்மையடைந்து, தலைவன் தக்ஷனைப் போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(44) குடிகளை ஆள்வதே க்ஷத்திரியர்களின் கடமையாகும். ஓ! ஏகாதிபதி, வேறு எதுவும் அவர்களுக்குத் தவறான பாதையாகவே கருதப்படும். உன் இதயத்தைத் துயரில் நிலைகொள்ளச் செய்யாதே.(45) கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, உன் சகோதரனின் இந்த நல்ல வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! மன்னா, தண்டக்கோல் {செங்கோல்} தரிப்பதே மன்னர்களின் கடமையாகும்; தலையை மழித்துக் கொள்வது அவர்களுக்கான கடமையல்ல" {என்றார் வியாசர்}".(46)

சாந்திபர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 46

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்