Thursday, November 09, 2017

மன்னன் ஹயக்ரீவன்! - சாந்திபர்வம் பகுதி – 24

King Hayagriva! | Shanti-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : மன்னனின் கடமைகளை யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன வியாசர்; ஹயக்ரீவனின் கதையைச் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் தவசியான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, மீண்டும் குந்தியின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்},(1) "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரா, அபரிமிதமான சக்தி கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான உனது தம்பியர் காடுகளில் வசித்திருந்தபோது பேணி வளர்த்த விருப்பங்களை அடையட்டும். ஓ! பிருதையின் மகனே, நகுஷனின் மகனான (மற்றொரு) யயாதியைப் போல இந்தப் பூமியை நீ ஆட்சி செய்வாயாக.(2,3) முன்பு காட்டில் வசித்துத் தவம் செய்து கொண்டிருந்தபோது பேரிடர் உங்களுடையதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பேரிடர் முடிந்துவிட்டது. எனவே, சிலகாலம் இன்புற்றிருப்பாயாக.(4) ஓ! பாரதா, சிலகாலத்திற்கு, அறத்தகுதி, செல்வம் மற்றும் இன்பத்தை உன் தம்பிகளோடு சேர்ந்து ஈட்டிபிறகு நீ காட்டுக்கு ஓயச் செல்லலாம்.(5)


ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, உன்னிடம் இரந்து கேட்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்கு நீ பட்டிருக்கும் கடனிலிருந்து முதலில் விடுபடுவாயாக. ஓ! குந்தியின் மகனே, பிறகு நீ பிற வாழ்வுமறைகள் அனைத்தையும் பயிலலாம்.(6) ஓ! குருகுலத்தின் மகனே, சர்வமேதம் மற்றும் அஸ்வமேதம் ஆகிய வேள்விகளை நீ செய்வாயாக. ஓ! ஏகாதிபதி, நீ மறுமையில் உயர்ந்த கதியை அடைவாய்.(7) ஓ! பாண்டுவின் மகனே, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடை அளிக்கும் பெரும் வேள்விகளில் உன் தம்பிகளையும் நிறுவச் செய்து பெரும் புகழை அடைவாயாக.(8) ஓ! மனிதர்களில் புலியே, குருக்களில் சிறந்தவனே, ஒரு பழமொழி இருக்கிறது. ஓ! மன்னா, அதன்படி நடந்தால் நீ அறத்தின்கண் பிறழமாட்டாய் என்பதால் அதைக் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, ஓ! மனிதர்களின் மன்னா, போரிட்டு வெற்றியடைந்து நாட்டைப் பெற்றவனுடைய அறத்தை அறமறிந்தோர் தீர்மானித்திருக்கின்றனர்[1].(10)

[1] உண்மையில், கங்குலியின் மொழிபெயர்ப்பின்படி, "ஓ! யுதிஷ்டிரா, கள்வர்களின் நடத்தையைக் கொண்டோர் மட்டுமே, போரிடுமாறு ஒரு மன்னனுக்கு ஆலோசனை வழங்கி, அவனை வெற்றியடையச் செய்கிறார்கள்" என்றிருக்கிறது. இந்த வரியின் அடிக்குறிப்பில், "ஆததானா Adadaana என்பது கள்வன் என்றோ, மற்றவரின் பொருளை பலவந்தமாக அபகரிப்பவன் என்றோ விளக்கப்படுகிறது. சில உரைகளில் நரேஸ்வரன் nareswarah என்று இருக்கிறது. அவ்வாறெனினும் பொருள் மாறாமலே இருக்கும்" எனக் கங்குலி விளக்குகிறார். ஆனால் நரேஸ்வரன் என்றால் மனிதர்களின் தலைவன் என்று பொருள். இதைக் கங்குலி எவ்வாறு கள்வனோடு பொருத்துகிறார் என்பது விளங்கவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இவ்வரி, "யுதிஷ்டிரனே, நரேஸ்வரனே, யுத்தஞ்செய்து ஜயமடைந்து ராஜ்யம் பெற்றவனுக்குரிய தருமத்தை ஒழுங்கான தருமந்தெரிந்தவர்கள் (இங்ஙனம்) உறுதிப்படுத்துகிறார்கள் என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அடுத்தவரின் உடைமையை அபகரிப்பவனுக்கு, அதே அளவு அபராதம் விதிக்கவேண்டும் என்று அறமறிந்தோர் தீர்மானித்திருக்கின்றனர்" என்றிருக்கிறது. இதில் கும்பகோணம் பதிப்பே பின்வரும் சுலோகங்களோடு பொருந்துவதால் இங்கு மட்டும் அதையே கையாண்டிருக்கிறேன்.

ஒரு மன்னன், இடம் மற்றும் நேரம் ஆகிய கருதுகோள்களால் வழிநடத்தப்பட்டு, சாத்திரங்களைச் சார்ந்து ஒரு புரிதலை அடைந்து, பெரும் எண்ணிக்கையிலான கொள்ளையர்களைத் தண்டித்தாலும்கூட அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்[2].(11) எந்த மன்னன், ஆறில் ஒரு பங்கை {16%} வரியாகப் பெற்றும், தன் நாட்டைக் காக்காமல் இருக்கிறானோ, அவன் தன் நாட்டின் {நாட்டு மக்களின்} பாவங்களில் நான்கில் ஒரு பங்கை {25%} அடைகிறான்.(12) எதன் மூலம் ஒரு மன்னன் அறத்தின் கண் பிறழமாட்டேன் என்பதையும் கேட்பாயாக. சாத்திரங்களை மீறுவதால் ஒருவன் பாவமிழைக்கிறான். அதே வேளையில் அதற்குக்கீழ்ப்படிபவன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(13) எந்த மன்னன், சாத்திரங்களின் அடிப்படையிலான அறிவால் வழிநடத்தப்பட்டு, காமம் மற்றும் கோபத்தை அலட்சியம் செய்து, தன் குடிமக்கள் அனைவரிடமும் ஒரு தந்தையைப் போல வேறுபாடில்லாமல் நடந்து கொள்வானோ, அவன் ஒருபோதும் பாவமிழைக்கமாட்டான்.(14) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஒரு மன்னன் விதியால் பீடிக்கப்பட்டு, ஒரு செயலை நிறைவேற்றுவதில் தவறுவானென்றால், அத்தகு தோல்வியானது மீறல் என்று அழைக்கப்படாது.(15)

[2] உண்மையில் கங்குலியில், "ஒரு மன்னன், இடம் மற்றும் நேரம் ஆகிய கருதுகோள்களால் வழிநடத்தப்பட்டு, சாத்திரங்களைச் சார்ந்து ஒரு புரிதலை அடைந்து, பெரும் எண்ணிக்கையிலான கொள்ளையர்களை மன்னித்தாலும்கூட அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்" என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

கும்பகோணம் பதிப்பில், "சாஸ்திரத்தின் கருத்தைத் தெரிந்து அரசன் தேசகாலங்களுக்குத் தக்கபடி குற்றவாளிகளை க்ஷமிப்பானாகில் அவ்வரசனுக்குப் பாவமில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புனித உரைகளைப் பின்பற்றும் ஒரு மன்னன், தன் அறிவின்படி, காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொண்டு, கொள்ளையர்களைத் தண்டிப்பது முறையே" என்றிருக்கிறது. இங்கேயும் கங்குலி பிழை செய்திருக்க வேண்டும். எனவே மேற்கண்ட வரியில் ஒரே ஒரு வார்த்தையில் மட்டும் {தண்டித்தல் / மன்னித்தல்} மாற்றம் செய்திருக்கிறேன்.

பலம், கொள்கை ஆகியவற்றால் அந்த மன்னன் தன் எதிரிகளை அடக்க வேண்டும். அவன் தன் நாட்டில் பாவம் இழைக்க அனுமதிக்காமல், அறம் பயில வழிவகைச் செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, துணிச்சல்மிக்க மனிதர்கள், தங்கள் நடைமுறைகளில் மரியாதைக்குரியவர்களாக இருப்போர், தங்கள் செயல்களில் நல்லோனாக இருப்போர், கல்வியறிவு படைத்தோர், வேத உரைகள் மற்றும் சடங்குகளை அறிந்த பிராமணர்கள், ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும்.(17) பொருத்தமானவற்றைத் தீர்மானிப்பதிலும், அறச்செயல்களை நிறைவேற்றுவதிலும், பெருக் கல்வியறிவு படைத்தோர் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். மதிநுட்பம் நிறைந்த ஒரு மன்னன், எவ்வளவுதான் சாதித்தவனாக இருப்பினும் ஒரே ஒரு தனிமனிதன் மீது ஒரு போதும் நம்பிக்கை வைக்க மாட்டான்.(18) தன் குடிகளைப் பாதுகாக்காதவனும், அடங்காத ஆசைகளைக் கொண்டவனும், போலித் தன்மை நிறைந்தவனும், அகந்தை மற்றும் கெட்ட நோக்கம் கொண்டவனுமான ஒரு மன்னன், பாவம் இழைத்தவனாகக் கொடுங்கோன்மைக்கான நிந்தனையை ஈட்டுகிறான்.(19) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னனின் குடிமக்கள், பாதுகாப்பை அடையாமல், தேவர்களால் பீடிக்கப்பட்டு, கள்வர்களால் வீழ்த்தப்பட்டால், அந்தப் பாவம் அனைத்தும் மன்னனையே களங்கப்படுத்தும்.(20)

ஓ! யுதிஷ்டிரா, ஆழ்ந்து ஆய்வு செய்து, நல்லறிவுரை வழங்கவல்ல மனிதர்களோடு ஆலோசித்த பிறகு, முழு இதயத்தோடு செய்யப்படும் ஒரு செயலில் எந்தப் பாவமும் சேராது.(21) விதியின் மூலமாக நமது பணிகள் தோல்வியோ, வெற்றியோ அடையலாம். எனினும், முயற்சி செய்யும் மன்னனை பாவம் தீண்டாது.(22) ஓ! மன்னர்களில் புலியே, ஹயக்ரீவன் என்ற பெயரில் இருந்த ஒரு பழங்கால மன்னனுக்கு என்ன நடந்தது என்ற கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! பாண்டுவின் மகனே, களங்கமில்லா செயல்பாடுகளைக் கொண்ட வீர ஹயக்ரீவன், போரில் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்ற பிறகு, தன் தரப்பில் ஒரு தொண்டனும் இல்லாத நிலையில் கொல்லப்பட்டு வீழ்ந்த கதையை உனக்குச் சொல்கிறேன்.(24) தன் எதிரிகளைத் தடுக்க என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்து, மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மையான வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய ஹயக்ரீவன், அவன் செய்த போர்களால் பெரும் புகழை அடைந்து இப்போது சொர்க்கத்தில் பேரருளை அடைந்து இன்புற்று இருக்கிறான்.(25)

(மன்னர்களுக்கான) கடமைகளை எப்போதும் கவனமாகச் செய்து வந்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், கள்வர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், அவர்களோடு துணிச்சலாகப் போரிட்டு, போர்க்களத்தில் தன் உயிரை விட்டு, தன் வாழ்வின் நோக்கத்தை அடைந்து இப்போது சொர்க்கத்தின் பேரருளில் இன்புற்றிருக்கிறான்.(26) வில்லே அவனது (வேள்வி) கம்பாகவும் {ஸ்தம்பமாகவும்}, வில்லின் நாண்கயிறே, தனது பலிகளைக் கட்டும் கயிறாகவும் இருந்தன. கணைகள் சிறு கரண்டியாகவும், வாளானது பெரிய கரண்டியாகவும், குருதியே அவன் ஊற்றிய தெளிந்த நெய்யாகவும் இருந்தன. தேரானது வேள்விப்பீடமாகவும், போரில் அவன் உணர்ந்த கோபமே நெருப்பாகவும், அவனது வாகனத்தில் பூட்டப்பட்ட நான்கு முதன்மையான குதிரைகளே, நான்கு ஹோத்ரிகளாகவும் இருந்தன.(27) அந்த வேள்வி நெருப்பில் தன் எதிரிகளைக் காணிக்கையாக ஊற்றிய பிறகு, வேள்வியின் முடிவில் தன் உயிரையே அதில் ஊற்றியவனும், மன்னர்களில் சீற்றமிக்கச் சிங்கமுமான அந்த ஹயக்ரீவன், பாவங்களில் இருந்து விடுபட்டு, இப்போது, தேவர்களின் உலகங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(28) கொள்கையாலும், நுண்ணறிவாலும் தன் நாட்டைப் பாதுகாத்தவனும், செருக்கற்றவனும், பெரும் மனோபலம் கொண்டவனும், வேள்விகளைச் செய்வதைப் பழக்கமாகக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், தன் புகழை உலகமனைத்திலும் நிறைத்து இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(29)

வேள்விகள் செய்வதைச் சார்ந்த தகுதியையும், மனித காரியங்களில் தொடர்புடைய அனைத்து வகைத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைந்த அவன், தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, செருக்கில்லா வீரத்துடன் இந்தப் பூமியை ஆட்சி செய்தான். அதன் காரணமாக, உயர்ந்த நல்லான்மாவான ஹயக்ரீவன் தேவர்களின் உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(30) கல்வியறிவைக் கொண்டவனும், துறவை பயின்றவனும், நம்பிக்கையால் தூண்டப்பட்டவனும், நன்றியுணர்வு நிறைந்தவனும், பல்வேறு வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {ஹயக்ரீவன்}, மனிதர்களின் இவ்வுலகை விட்டு, நல்லோருக்கும் ஞானியருக்கும், ஏற்புடைய பழக்க வழக்கங்களைக் கொண்டோருக்கும், போரில் தங்கள் உயிரைவிடத் தயாராக இருப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிகளை வென்றான்.(31) வேதங்களையும், பிற சாத்திரங்களையும் நன்கு அறிந்து, தன் நாட்டை முறையாக ஆண்டு, நால்வகையினரையும் முறையாகத் தங்கள் கடமைகளை நோற்கச் செய்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன் இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அம்மன்னன், பல போர்களை வென்று, தன் குடிமக்களைப் பேணிக் காத்து, வேள்விகளின் சோமச்சாற்றைப் பருகி, முதன்மையான பிராமணர்களைக் கொடைகளால் நிறைவு செய்து, தன் ஆளுகையின் கீழ் இருந்தோரிடம் தண்டக்கோலை {செங்கோலை} நீதியுடன் செலுத்தி, இறுதியாகப் போரில் தன் உயிரை விட்டு இப்போது சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.(32) அவனது வாழ்வு அனைத்துப் பாராட்டுக்கும் தகுந்ததாகும். அனைத்து பாராட்டுக்கும் தகுந்த அதைக் கல்விமான்களும் நீதிமான்களும் பாராட்டுகின்றனர். சொர்க்கத்தை வென்று, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதிகளை அடைந்த அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி, இவ்வாறே தனது நற்செயல்களால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டான்" என்றார் {வியாசர்}.(33)

சாந்திபர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்