Saturday, November 25, 2017

பாவங்கழி! - சாந்திபர்வம் பகுதி – 32

Perform expiation! | Shanti-Parva-Section-32 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 32)


பதிவின் சுருக்கம் : கடமைகள், அறநெறி ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; தன்னை எரிக்கும் காரணங்களைச் சொன்ன யுதிஷ்டிரன்; செயல்களில் பரம்பொருள் மற்றும் மனிதனின் பொறுப்பு, பாவங்கழிக்கும் பிராயச்சித்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்...


வைசம்பாயனர் சொன்னார், "தீவில் பிறந்தவரும், அறவுண்மைகள் அறிந்த பெரும் தவசியுமான வியாசர், பேச்சற்றவனாகவும், துயரில் மூழ்கியவனாகவும் நீடித்திருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, குடிமக்களைப் பாதுகாப்பதும் மன்னர்களின் கடமையாகும். எப்போதும் கடமையை நோற்கும் மனிதர்கள், கடமையே அனைத்திலும் சக்திமிக்கது எனக் கருதுகின்றனர்.(2) எனவே, ஓ! மன்னா, உன் முன்னோர்களின் பாதச்சுவடுகளில் நீ நடப்பாயாக. பிராமணர்களுக்குத் தவங்களே கடமையாகும். இதுவே வேதங்களில் உள்ள நித்திய விதியாகும்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தவங்களே பிராமணர்களின் நித்திய கடமையாகிறது. மக்கள் அனைவரையும் காப்பதே ஒரு க்ஷத்திரியனின் கடமையாகும்[1].(4) பூமிசார்ந்த உடைமைகளுக்கு அடிமையாகி, கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவனும், சமூக இணக்கத்திற்கு எதிரான குற்றவாளியுமான ஒரு மனிதன் வலிய கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.(5)


[1] "ஒரு க்ஷத்திரியன், பிராமணனை அவனது தவங்களிலும், ஒரு வைசியனை அவனது வகைக்கான கடமைகளை நோற்கும்போதும் பாதுகாக்க வேண்டும். ஒரு பிராமணனோ, வைசியனோ தன் கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் தடைகள், ஒரு க்ஷத்திரியனால் அகற்றப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதத்தால் நிச்சயிக்கப்பட்டுப் பிராம்மணர்களிடம் நிலைபெற்றிருக்கும் தர்மம் யாவும் பிரமாணங்களுள் சாஸ்வதமான பிரமாணமாகும். அந்தத் தர்மத்தையெலாம் ரக்ஷிக்கக் கடமைப்பட்டவன் க்ஷத்திரியனே" என்றிருக்கிறது.

அதிகாரத்தை மீறும் உணர்வற்ற மனிதன், தன் பணியாளாகவோ, மகனாகவோ, தவசியாகவோ இருந்தாலும் கூட, பாவம் நிறைந்த அத்தகு இயல்புடைய மனிதர்கள் அனைவரும் அனைத்து வழிகளிலும் தண்டிக்கப்படவோ, கொல்லப்படவோ வேண்டும். வேறுவகையில் நடந்து கொள்ளும் மன்னன் பாவமிழைத்தவனாவான்.(6,7) அறநெறி அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பாதுகாக்காதவனும் அறநெறியை மீறியவனே ஆவான். கௌரவர்கள் அறநெறியை மீறியவர்களாவர். அவர்களும், அவர்களுடைய தொண்டர்களும் உன்னால் கொல்லப்பட்டனர்.(8) நீ உன் வகைக்கான கடமையை நோற்றிருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே, பிறகு ஏன் நீ இத்தகு துயரத்தில் ஈடுபடுகிறாய்? ஒரு மன்னன், சாகத் தகுந்தவர்களைக் கொல்லவும், ஈகைக்குத் தகுந்தோருக்குக் கொடைகள் அளிக்கவும்ம், தன் குடிமக்களை விதிப்படி பாதுகாக்கவும் வேண்டும்" என்றார் {வியாசர்}.(9)

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பெரும் தவத்தகுதி கொண்டவரே, உமது உதடுகளில் இருந்து உதிரும் வார்த்தைகளில் நான் ஐயங்கொள்ளமாட்டேன். ஓ! அறநெறி மற்றும் கடமை குறித்து அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, அறநெறி மற்றும் கடமை தொடர்பான அனைத்தும் உம்மால் அறியப்பட்டிருக்கிறது.(10) எனினும், நாட்டின் நிமித்தமாக நான் பல மனிதர்களைக் கொல்லச் செய்துவிட்டேன். ஓ! பிராமணரே {வியாசரே}, அந்தச் செயல்களே என்னை எரித்து உட்கொள்கின்றன" என்றான்.(11)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, செயல்படுவது பரம்பொருளா? {பரமாத்மாவா?} மனிதனா? இவ்வுலகில் அனைத்தும் வாய்ப்பின் விளைவுகளா? அல்லது (முந்தைய) செயல்பாடுகளின் விளைவுகளால் உண்டான இன்ப துன்பங்களின் கனிகளா?(12) ஓ! பாரதா, ஒரு மனிதன், பரம்பொருளால் உந்தப்பட்டு நன்மையோ, தீமையோவான அனைத்து செயல்களையும் செய்தால், அந்தச் செயல்களின் கனிகள் அந்தப் பரம்பொருளையே பற்ற வேண்டும்.(13) ஒரு மனிதன் காட்டில் உள்ள ஒரு மரத்தைக் கோடரியால் வெட்டினால், அந்த மனிதன் பாவமிழைக்கிறானேயன்றி, எவ்வழியிலும் அந்தக் கோடரி பாவமிழைக்கவில்லை.(14) அல்லது அந்தக் கோடரி பொருட்காரணமாக மட்டுமே இருக்கிறது, (வெட்டிய) அந்தச் செயலின் விளைவு, (அசையாத {தானாகச் செயல்படாத} கருவியை அல்லாமல்) அசையும் {தானாகச் செயல்படும்} செயலியையே பற்ற வேண்டும் என்று சொன்னால், அந்தப் பாவம் அந்தக் கோடரியைச் செய்த மனிதனையே சாரும். எனினும் இஃது ஒருக்காலும் உண்மையாக முடியாது.(15) மற்றவனால் செய்யப்பட்ட செயலின் விளைவு வேறொரு மனிதனைப் பற்றுவது அறிவார்ந்ததாக இல்லையெனில், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதனால் வழிகாட்டப்படும் நீ பொறுப்புகள் அனைத்தையும் பரம்பொருளிடமே விட்டுவிட வேண்டும்[2].(16) மேலும், நல்ல மற்றும் பாவச் செயல்கள் அனைத்தையும் செய்பவன் மனிதனேயென்றால் பரம்பொருளேதும் இல்லை என்றாகிறது, எனவே, நீ செய்த அனைத்தும், உனக்குத் தீய விளைவுகளை உண்டாக்க முடியாது.(17)

[2] "அதாவது, பரமாத்மாவே நம் அனைவரையும் தூண்டுவதலால், அனைத்துச் செயல்களின் விளைவுகளும் பரமாத்மாவையே பற்ற வேண்டும் என்று நீ நினைக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, விதிக்கப்பட்டதில் இருந்து எவனாலும் ஒருபோதும் விலக முடியாது. மேலும், முந்தைய வாழ்வு {முற்பிறவிச்} செயல்களின் விளைவுகளே விதி என்றால், மரத்தை வெட்டுவதால் உண்டாகும் பாவம், கோடரியைச் செய்தவனைத் தீண்டாததைப் போலவே, இவ்வாழ்வில் ஒருவனை எந்தப் பாவமும் பற்றாது.(18) வாய்ப்பு மட்டுமே உலகில் செயல்படுகிறது என்று நீ நினைத்தால், அப்போது அத்தகு அழிவுச் செயல் ஒரு போதும் நடைபெற முடியாது, அல்லது ஒரு போதும் நடக்காது.(19) உலகில் எது நன்மை, எது தீமை என்று உறுதி செய்யும் அவசியம் இருந்தால், சாத்திரங்களைக் கவனிப்பாயாக. அந்தச் சாத்திரங்களில், மன்னர்கள், தங்கள் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் நிற்க வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(20)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்ல மற்றும் தீய செயல்கள் சக்கரம் போல் தொடர்ந்து சுழல்கின்றன என்றும், தாங்கள் செய்யும் அந்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனிகளையே மனிதர்கள் அடைகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.(21) பாவம் நிறைந்த ஒரு செயல் மற்றொன்றில் {மற்றொரு பாவத்தில்} இருந்தே விளைகிறது. எனவே, ஓ! மன்னர்களில் புலியே, தீச்செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பாயாக. மேலும் உன் இதயத்தை இவ்வாறான துயரில் நிலைக்கச் செய்யாதே.(22) ஓ! பாரதா, உன் வகைக்குரிய கடமைகள் நிந்திக்கத்தக்கவையே ஆனாலும் அவற்றைப் பின்பற்றுவாயாக. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தத் தன்னழிவு {உடலைத் துறக்கும் தற்கொலை} உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை.(23) ஓ! மன்னா, (தீய) செயல்களுக்கான பாவக்கழிவுகளும் {பிராயச்சித்தங்களும்} விதிக்கப்பட்டிருக்கின்றன. உயிரோடிருப்பவனால் அவற்றைச் செய்ய முடியும், இறந்தவன் அதைச் செய்யத் தவறுகிறான்.(24) எனவே, ஓ! மன்னா, உன் உயிரை விடாமல், அந்தப் பாவம் கழிக்கும் செயல்களை {பிராயச்சித்தங்களைச்} செய்வாயாக. நீ அவற்றைச் செய்யவில்லையெனில், அடுத்த உலகில் {மறுமையில்} நீ வருந்த வேண்டியிருக்கும்" என்றார் {வியாசர்}".(25)

சாந்திபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்