Friday, November 24, 2017

சுவர்ணஷ்டீவின்! - சாந்திபர்வம் பகுதி – 31

Suvarnashthivin! | Shanti-Parva-Section-31 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 31)


பதிவின் சுருக்கம் : சிருஞ்சயனுக்கு வரமளித்த பர்வதர்; அவனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற புலி; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன்: சுவர்ணஷ்டீவினை உயிர்மீட்டளித்த நாரதர்; யுதிஷ்டிரனை அரசகனம் ஏற்கும்படி வற்புறுத்தியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், "ஓ! புனிதமானவரே, உடற்கழிவுகளைப் பொன்னாகக் கொண்ட அந்தப் பிள்ளையின் {சுவர்ணஷ்டீவின்} பிறப்பைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கேட்கப்பட்ட தவசி நாரதர், உடற்கழிவைத் தங்கமாகக் கொண்ட அந்தப் பிள்ளை தொடர்பாக நடந்தவை அனைத்தையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(2)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கேசவன் {கிருஷ்ணன்} சொன்னது போலவேதான் நடந்தது. இந்தக் கதையில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கேட்கின்ற உனக்கு இப்போது நான் சொல்லப் போகிறேன்.(3) நானும், என் சகோதரியின் மகனான பெருந்தவசி பர்வதனும், வெற்றியடைந்த மன்னர்கள் அனைவரிலும் முதன்மையான சிருஞ்சயனுடன் வசிப்பதற்காக (ஒரு சந்தர்ப்பத்தில்) அவனிடம் வந்தோம்.(4) முறையான சடங்குகளுடன் அவனால் கௌரவிக்கப்பட்டும், எங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியும் இருந்த நாங்கள், அவனது வசிப்பிடத்தில் தங்கினோம்.(5) மழைக்காலம் சென்ற பிறகு, நாங்கள் செல்வதற்கான நேரம் வந்தபோது, அந்த நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லும் வகையில் பர்வதன் என்னிடம்,(6) "ஓ! பிராமணரே, மன்னனால் உயர்வாகக் கௌரவிக்கப்பட்ட நிலையில் நாம் சிறுது காலம் அவனது வசிப்பிடத்தில் தங்கினோம். நாம் அதற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறோம் என்பதை நினைப்பீராக" என்றான்.(7)


ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போது நான் அருள் தன்மை கொண்ட பர்வதனிடம், "ஓ! மருமகனே, அதற்குத் தகுந்தவன் நீயே, ஓ! பெருஞ்சக்திகொண்டவரே, இவை அனைத்தும் உன்னை நம்பியே இருக்கின்றன.(8) உன் வரங்களின் மூலம் மன்னன் மகிழ்ச்சி அடையட்டும், அவன் தன் விருப்பங்களை அடையட்டும். அல்லது, நீ விரும்பினால் நம் இருவரின் தவத் தகுதிகளின் மூலம் அவன் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்" என்று சொன்னேன்.(9)

அதன் பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, வெற்றியாளர்களில் முதன்மையானவனான மன்னன் சிருஞ்சயனை அழைத்த பர்வதன், அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மன்னா {சிருஞ்சயா}, உண்மையுடனும், விருந்தோம்பலுடனும் கூடிய உனது கவனிப்புகளில் நாங்கள் பெரும் நிறைவடைந்திருக்கிறோம். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, என்ன வரம் வேண்டுவது என எங்கள் அனுமதியுடன் சிந்திப்பாயாக.(11) எனினும், அந்த வரமானது தேவர்களுடன் பகையையோ, மனிதர்களுக்கு அழிவையோ ஏற்படுத்தாதவாறு இருக்கட்டும். ஓ! மன்னா, வரம்பெறத் தகுந்தவன் என உன்னை நாங்கள் கருதுவதால் அஃதை ஏற்பாயாக" என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன்,(12) "நீங்கள் என்னிடம் மனநிறைவு கொண்டால், அதுவே என் நோக்கம் நிறைவேறிய நிலையாகும். அதுவே எனக்குப் பெரிய பேறாகும். என் விருப்பங்கள் அனைத்தின் கனியாக அதையே நான் கருதுகிறேன்" என்றான்.(13)

இவ்வாறு சொன்ன சிருஞ்சயனிடம் மீண்டும் பர்வதன், "ஓ! மன்னா {சிருஞ்சயா}, நீண்ட காலமாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாக்கும் விருப்பத்தின் கனியை வேண்டுவாயாக" என்றான்.(14)

சிருஞ்சயன் {பர்வதரிடம்}, "வீரனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தன் நோன்புகளில் உறுதி மிக்கவனாகவும், நீண்ட வாழ்வு கொண்டவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும், தேவர்களின் தலைவனுக்கு நிகரான காந்தியைக் கொண்டவனாகவும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்" என்றான்.(15)

அதற்குப் பர்வதன் {சிருஞ்சயனிடம்}, "உனது இவ்விருப்பம் நிறைவேறும். எனினும், உன் மகன் தேவர்களின் தலைவனை விஞ்சும் அளவில் இருக்க வேண்டும் என்று நீ விரும்புவதால் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்க மாட்டான்.(16) உன் மகன் சுவர்ணஷ்டீவின் என்ற பெயரால் அறியப்படுவான். தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்ற காந்தி கொண்டவனாக அவன் இருந்தாலும், நீ அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இருந்து அவனை எப்போதும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றான்.(17)

உயர் ஆன்ம பர்வதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன், வேறு வகையில் விதிக்குமாறு அந்தத் தவசியை வேண்டத் தொடங்கினான், {அவன்}, "ஓ! முனிவரே, உமது தவத் தகுதியின் மூலம் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்கட்டும்" என்று கேட்டான். எனினும், பர்வதன், இந்திரனிடம் தான் கொண்ட சார்பு நிலையினால் ஏதும் பேசாதிருந்தான்.(18)

மன்னன் {சிருஞ்சயன்} மிகவும் உற்சாகமற்றிருப்பதைக் கண்ட {நாரதனாகிய} நான், அவனிடம், "ஓ! மன்னா {சிருஞ்சயா}, (உனது துயர் காலத்தில்) நீ என்னை நினைப்பாயாக. உன்னால் அழைக்கப்படும்போது நான் உன்னிடம் வருவேன் என உறுதியளிக்கிறேன். உன் அன்புக்குரிய மகன் {சுவர்ணஷ்டீவின்} இறந்தாலும் கூட, நான் அவனை உயிருடன் கூடியவனாக உனக்குத் தருவேன்" என்றேன். அந்த ஏகாதிபதியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் விரும்பிய இடத்திற்குச் செல்வதற்காக அவனது முன்னிலையில் இருந்து அகன்றோம், சிருஞ்சயனும் அவன் விரும்பியவாறு அவனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(22)

சில காலம் கழிந்ததும், பேராற்றல் கொண்டவனும், சக்தியால் சுடர்விடுபவனுமான ஒரு மகன் அரச முனியான சிருஞ்சயனுக்குப் பிறந்தான்.(23) அந்தப் பிள்ளை தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்ந்து, தன் பெயரைப் போலவே உண்மையிலேயே சுவர்ணஷ்டீவின் ஆனான்.(24) ஓ! குருக்களில் சிறந்தவனே, இயல்புக்கு மிக்க இந்தச் செய்தி வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவியது. தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, இது பர்வதனுடைய வரத்தின் விளைவு என்பதை அறிய வந்தான்.(25) (அந்தப் பிள்ளை வளர்ந்ததும், அவனால் ஏற்படப்போகும்) அவமதிப்புக்கு அஞ்சியவனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனுமான இந்திரன், அந்த இளவரசனின் சிறு குறைகளையும் கவனமாகக் காணத் தொடங்கினான்.(26) அவன் {இந்திரன்}, தன் முன்னே உடல் கொண்டு வந்து நின்ற தன் தெய்வீக ஆயுதமான வஜ்ரத்திடம், "ஓ! பலமிக்கவனே {வஜ்ரனே}, புலியின் வடிவை ஏற்றுச் சென்று இந்த இளவரசனைக் {சுவர்ணஷ்டீவினை} கொல்வாயாக.(27) ஓ! வஜ்ரனே, பர்வதர் சொன்னதைப் போல இந்தப் பிள்ளை வளர்ந்ததும், தனது சாதனைகளால் என்னை அவமதிக்கக்கூடும்" என்றான்.(28) தெய்வீக ஆயுதமும், பகை நகரங்களை அடக்குவதுமான வஜ்ரம், சக்ரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த நாளிலிருந்து அந்த இளவரசனின் குறைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தது.(29)

அதேவேளையில், சிருஞ்சயன், இந்திரனின் காந்திக்கு ஒப்பான பிள்ளையைப் பெற்றதால் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தான். தன் மனைவியரின் துணையோடும், தன் இல்லத்தைச் சேர்ந்த வேறு பெண்களின் துணையோடும், காட்டுக்கு மத்தியில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(30)

ஒருநாள் செவிலியின் துணையுடன் கூடிய அந்தப் பிள்ளை, பாகீரதியின் கரைகளில் அங்கேயும், இங்கேயும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.(31) ஐந்து வயதே ஆனவனாக இருப்பினும் அவனது ஆற்றல் ஒரு வலிமைமிக்க யானைக்கு ஒப்பானதாக இருந்தது. அவ்வாறு அவன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்தப் பிள்ளை ஒரு பலமிக்கப் புலியைச் சந்தித்தான்.(32) அந்தப் புலியால் சிதைக்கப்பட்டபோது, குழந்தையாக இருந்த அந்த இளவரசன் {சுவர்ணஷ்டீவின்} பயங்கரமாக நடுங்கி, விரைவில் உயிரை இழந்து பூமியில் விழுந்தான். இந்தக் காட்சியைக் கண்ட செவிலி, உரத்த குரலில் துன்பத்துடன் அழுதாள்.(33) புலியானது, அந்த இளவரசனைக் கொன்றபிறகு, இந்திரனின் மாயையின் மூலம் அங்கேயே அப்போதே மறைந்து போனது.(34)

அழுது கொண்டிரக்கும் செலவிலியின் குரலைக் கேட்ட மன்னன் {சிருஞ்சயன்} பெருஞ்சோகத்தோடு அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்றான்.(35) அங்கே இரத்தம் குடிக்கப்பட்டு, ஒளியிழந்தவனாக ஆகாயத்திலிருந்து விழுந்த நிலவைப் போலத் தன் மகன் கிடப்பதைக் கண்டான்.(36) குருதியில் மறைந்த சிறுவனைத் தன் மடியில் ஏந்திய மன்னன், துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் பரிதாபகரமாகப் புலம்பத் தொடங்கினான்.(37) அரச மகளிர் துயரால் பீடிக்கப்பட்டு அழுதுகொண்டே மன்னன் சிருஞ்சயன் இருக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றனர்.(38) அந்தச் சூழ்நிலையில் மன்னன் {சிருஞ்சயன்} குவிந்த கவனத்துடன் {நாரதனாகிய} என்னைச் சிந்தித்தான். மன்னன் என்னைக் குறித்துச் சிந்திப்பதை அறிந்து நான் அங்கே சென்றேன்.(39) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, துயரால் பீடிக்கப்பட்டிருந்த அந்த மன்னன்னுக்கு {சிருஞ்சயனுக்கு}, இந்த யதுகுல வீரன் {கிருஷ்ணன்} இப்போது சொன்ன கதைகள் அனைத்தையும் நான் சொன்னேன்.(40) பிறகு இந்திரனின் அனுமதியுடன் நான் சிருஞ்சயனின் பிள்ளையை உயிரோடு மீட்டெடுத்தேன். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேறு வகையில் நடக்க இயலாது.(41)

இதன்பிறகு பெரும் புகழும் சக்தியும் கொண்ட அந்த இளவரசன் சுவர்ணஷ்டீவின் தன் பெற்றோரின் இதயங்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்தான்.(42) பேராற்றலைக் கொண்ட அவன், தன் தந்தை சொர்க்கத்திற்குச் சென்றதும் அரியணை ஏறி, ஆயிரத்து நூறு {1,100} வருடங்கள் ஆட்சி செய்தான்.(43) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகள் பலவற்றில் அவன் தேவர்களை வழிபட்டான். பெருங்காந்தி கொண்ட அவன், தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவுகொள்ளச் செய்தான்.(44) பல மகன்களைப் பெற்று, அவர்கள் மூலம் குலத்தைப் பெருக்கிய அவன் {சுவர்ணஷ்டீவின்} பல வருடங்களுக்குப் பிறகு இயற்கையின் வழியில் சென்றான்[1].(45)

[1] இந்தச் சுவர்ணஷ்டீவின் சிருஞ்சயன் கதை ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 53ல் சொலப்படுகிறது. இங்கே புலியால் அடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சுவர்ணஷ்டீவின் அங்கே கள்வர்களால் கொல்லப்படுகிறான். எனினும், கதையின் சாரம் ஒன்றே. http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-053-054-055.html

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கேசவனும் {கிருஷ்ணனும்}, கடுந்தவங்களைச் செய்த வியாசரும் ஆலோசனை கூறியதைப் போல உன் இதயத்தில் இருக்கும் இந்தத் துயரை அகற்றுவாயாக.(46) ஓ! மன்னா, எழுவாயாக. உன் மூதாதையருடைய நாட்டின் சுமையை ஏற்று, (மறுமையில்) உன்னால் விரும்பப்படும் எந்த உலகத்தையும் அடைய உயர்ந்த பெரும் வேள்விகளைச் செய்வாயாக" என்றார் {நாரதர்}".(47)

சாந்திபர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 47

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்