Sunday, November 26, 2017

பாவக்கழிப்புக்குத் தகுந்த செயல்கள்! - சாந்திபர்வம் பகுதி – 34

Expiatory acts! | Shanti-Parva-Section-34 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 34)


பதிவின் சுருக்கம் : பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவர்கள் எவர்? மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்கள் யாவை? தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்தாலும் பாவத்தின் கறைபடாத சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன வியாசர்...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "எந்தச் செயல்களைச் செய்த பிறகு ஒரு மனிதன் பாவக்கழிப்பு {பரிகாரம்} செய்யத்தக்கவனாகிறான்? பாவத்தில் இருந்து விடுபட அவன் எந்தச் செயல்களைச் செய்ய வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்து, தடை செய்யப்பட்ட செயல்களைச் செய்து, வஞ்சகம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு மனிதன் பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவனாகிறான்.(2) சூரியன் உதித்த பிறகு தன் படுக்கையில் இருந்து எழுபவன், அல்லது சூரியன் மறையும்போது படுக்கைக்குச் செல்பவன், சொத்தை நகமோ, கருப்பு பல்லோ கொண்டவன்,(3) தனக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருப்பவன், மூத்தவன் திருமணம் செய்து கொள்ளும் முன்பே தான் திருமணம் செய்து கொள்பவன், பிராமணனைக் கொன்ற குற்றவுணர்வு கொண்டவன், பிறரை இழிவாகப் பேசுபவன், {பெண்ணெடுக்கும் இல்லத்தில் உள்ள} மூத்தவள் {தமக்கை} திருமணம் முடிப்பதற்கு முன்பே அவளது தங்கையைத் திருமணம் செய்பவன், தங்கையைத் திருமணம் செய்த பிறகு, அவளது மூத்தவளை {தமக்கையைத்} திருமணம் செய்பவன்,(4) உறுதிமொழி தவறியவன், மறுபிறப்பாள வகைகளில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த ஒருவனைக் கொல்பவன்[1], தகாதவர்களுக்கு வேத அறிவைப் போதிப்பவன், (5) பல உயிர்களை எடுப்பவன், இறைச்சி விற்பவன், தன் (புனித) நெருப்பைக் கைவிட்டவன், வேத அறிவை விற்பவன்[2],(6) தன் ஆசானையோ, ஒரு பெண்ணையோ கொல்பவன், பாவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன், விருப்பத்துடன் ஒரு விலங்கைக் கொல்பவன்[3], குடியிருக்கும் வீட்டுக்கு நெருப்பு வைப்பவன்,(7) வஞ்சகத்தையே வாழ்வாகக் கொண்டவன், தன் ஆசானுக்கு எதிராகச் செயல்படுபவன், ஒப்பந்தத்தை மீறுபவன் ஆகியோர் அனைவரும் பாவக்கழிப்பு {பரிகாரம்} தேவைப்படும் குற்றவாளிகளாவர்.(8)


[1] கும்பகோணம் பதிப்பில், "துவிஜாதிகளென்னும் மூன்று வர்ணத்தாரையும் கொன்றவன்" என்று இருக்கிறது.

[2] "சாத்திரங்களைப் போதிக்க மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பவன் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "வேள்விக்காக அல்லாமல் விலங்குகளைக் கொல்வது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உலகம் மற்றும் வேதங்கள் ஆகிய இரண்டால் மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(9) தன் சமய நம்பிக்கையை மறுப்பது, பிற மக்களின் சமய நம்பிக்கையைப் பயில்வது[4], உதவத் தகாத ஒருவனின் வேள்வி அல்லது அறச்சடங்குகளில் உதவி செய்வது, விலக்கப்பட்ட உணவை உண்பது,(10) பாதுகாப்பை நாடும் ஒருவனைக் கைவிடுபவன், பணியாட்களையும், தன்னை நம்பியிருப்பவர்களையும் பராமரிக்காமல் புறக்கணிப்பது, உப்பு, புளி (மற்றும் அது போன்ற பொருட்களை) விற்பது, பறவைகளையும், விலங்குகளையும் கொல்வது,(11) இயன்றவனானாலும், தன்னிடம் வேண்டும் பெண்ணிடம் பிள்ளையைப் பெற மறுப்பது, (பசுவுக்குக் கைநிறைய புல்லைக் கொடுப்பது போன்ற) தினக்கொடைகள் கொடுப்பதைத் தவிர்ப்பது,(12) தக்ஷிணை கொடுப்பதைத் தவிர்ப்பது, ஒரு பிராமணனை அவமதிப்பது ஆகிய இவை அனைத்தும் யாராலும் செய்யக்கூடாத செயல்கள் எனக் கடமைகளை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(13) ஓ! மனிதர்களில் புலியே, தந்தையுடன் சச்சரவு செய்யும் மகன், தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துபவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் வாரிசை உண்டாக்காமல் புறக்கணிப்பவன் ஆகியோர் பாவம் நிறைந்தவர்களாவர்.(14) பாவக்கழிப்புச் செய்யத் தகுந்த மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படாமை ஆகியவற்றைக் குறித்துச் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்லிவிட்டேன்.(15)

[4] Creed என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையாகவே இங்கே சமயம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  கும்பகோணம் பதிப்பில், "தனக்குரிய தர்மத்தை விடுதல், பிறர் தருமத்தைச் செய்தல்" என்றிருக்கிறது.  அறம் / தர்மம் என்பதே இங்கே சரியாக இருக்க வேண்டும்.

இப்போது, இந்தச் செயல்களைச் செய்தாலும் கூட மனிதர்கள் பாவத்தின் கறைபடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களைச் சொல்லப்போகிறேன்.(16) வேதங்களை நன்கறிந்த ஒரு பிராமணன் உன்னைக் கொல்வதற்காக எதிர்த்துப் போரிட வந்தால், நீயும் அவனது உயிரை எடுக்க அவனை எதிர்க்க வேண்டும். அத்தகு செயலைச் செய்வதால் அவனைக் கொல்பவன், பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வுக்கு ஆளாகமாட்டான்.(17) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} வேதங்களில் உள்ள ஒரு மந்திரத்தில் இது விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களால் அதிகாரத்துடன் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை மட்டுமே நான் உனக்கு அறிவிக்கிறேன்.(18) தன் கடமைகளில் இருந்து வழுவிய பிராமணன், கொலை செய்யும் நோக்குடனும், கையில் ஆயுதத்துடனும் முன்னேறி வருபவன் ஆகியோரைக் கொன்றால், உண்மையில் அது பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} ஆகாது. அப்படிப்பட்ட வழக்கில் கொல்பவனின் கோபமே, கொல்லப்படுபவனின் கோபத்தை எதிர்த்துச் செல்கிறது.(19) அறியாமையாலோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நல்ல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒருவன் ஊக்கம்தரும் மதுபானம் அருந்தினால், அவனது வழக்கில் மீண்டும் மீள்பிறப்புச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்[5].(20)

[5] கும்பகோணம் பதிப்பில், "உயிருக்கபாயம் நேருங்கால் தர்மமறிந்தவர்களின் அனுமதி பெற்று, தெரிந்து ஸுரையை உபயோகிப்பவன், பின்பு, சுத்தி பெறத்தக்கவனாவான்" என்றிருக்கிறது. மேலும் ஸுரை என்பதற்கான அடிக்குறிப்பாக, "ஔபாஸனமென்னும் ஸ்மார்த்தாக்கினியை வைதிகமான மூன்று அக்னிகளாகச்செய்யும் விதி" என்றிருக்கிறது.

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தடுக்கப்பட்ட உணவை உண்பது குறித்து நான் உன்னிடம் சொன்னது அனைத்திலிருந்தும் இத்தகு பாவக்கழிப்பு சடங்குகளின் மூலம் தூய்மையடையலாம்.(21) ஆசானின் ஆணைப்படி ஆசானின் மனைவியுடன் கலப்பது அம்மாணவனைக் களங்கப்படுத்தாது. தவசியான உத்தாலகர், ஒரு சீடனின் மூலமே தன் மகன் ஸ்வேதகேதுவைப் பெற்றார்.(22) துயர் நிறைந்த காலத்தில் தன் ஆசானுக்காகத் திருடுபவன் பாவக்கறை அடைய மாட்டான். எனினும், தன் இன்பங்களுக்காகத் திருடுபவன் பாவத்தால் கறைபட்டவனே ஆவான்.(23) (துயர் நிறைந்த காலத்தில், தன் ஆசானுக்காக) பிராமணர்களைத் தவிர வேறு எவரிடம் திருடுபவனும் கறைபடிந்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் தனக்கென எந்தப் பங்கையும் எடுத்துக் கொள்ளாத ஒருவன் மட்டுமே பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பான்.(24) ஒருவன், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பொய் சொல்லலாம், அல்லது ஒருவனுடைய ஆசானுக்காக, அல்லது ஒரு பெண்ணை நிறைவு செய்வதற்காக, அல்லது திருமணம் செய்வதற்காகப் பொய் சொல்லலாம்.(25) ஈரக்கனவுகளால் ஒருவன் தன் பிரம்மச்சரிய நோன்பை உடைத்தவனாக மாட்டான். அத்தகு வழக்குகளில், சுடர்மிக்க நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக ஊற்றுவதே பாவக்கழிப்பாக விதிக்கப்படுகிறது[6].(26)

[6] "ஸ்வப்னகாலத்தில் சுக்லம் போவதால் திரும்ப உபநயனஞ்செய்ய வேண்டுமென்ற பிராயச்சித்தமில்லை. அக்நியை வளர்த்து அதற்குரிய மந்திரத்துடன் நெய்யை ஓமம் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

மூத்தவன் {அண்ணன்} வீழ்ந்துவிட்டாலோ, உலகைத் துறந்துவிட்டாலோ, இளையவன் {தம்பி} திருமணம் செய்து கொள்வதால், அவன் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான். ஒரு பெண்ணால் வேண்டப்பட்டு, அவளுடன் கலப்பது அறத்திற்கு அழிவைத் தராது.(27) வேள்வியைத் தவிர வேறு எதற்காகவும் ஒருவன் விலங்குகளைக் கொல்லவோ, கொல்லப்படச் செய்யவோ கூடாது. படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியின் படி அவனால் வெளிப்படுத்தப்படும் கருணையால் விலங்குகள் புனிதமடைகின்றன (வேள்விக்குத் தகுந்தவையாகின்றன).(28) தகாத பிராமணருக்கு அறியாமையால் கொடையளிப்பவன் பாவத்துக்கு உள்ளாக மாட்டான். தகுந்தோரிடம் (அறியாமையினால்) தயாளமில்லாமல் நடந்து கொள்ளும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான்.(29) ஒழுக்கங்கெட்ட மனைவியிடம் இருந்து விலகும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான். அப்படி நடத்துவதால் அந்தப் பெண் மாசகற்றப்பட்டவளாவாள், அதேவேளையில் கணவனும் பாவத்தைத் தவிர்ப்பான்[7].(30) சோமச்சாற்றின் உண்மை பயனை அறிந்த ஒருவன், அதை விற்பதால் பாவத்தை அடைய மாட்டான்[8]. தொண்டு செய்ய இயலாத பணியாளை நீக்குவதால் ஒருவன் பாவத்தால் தீண்டப்படமாட்டான்.(31) எவற்றைச் செய்தால் ஒருவன் பாவத்திற்கு உள்ளாக மாட்டானோ அந்தச் செயல்களையே இப்போது நான் உனக்குச் சொன்னேன். இனி பாவக்கழிப்பை {பரிகாரங்களைக்} குறித்து உனக்கு விரிவாகச் சொல்லப்போகிறேன்" என்றார் {வியாசர்}[9].(32)

[7] கும்பகோணம் பதிப்பில், "குற்றமுள்ள ஸ்திரீயை விலக்கி வைப்பது தோஷமாகாது. அவளை அங்ஙனமிருக்கும்படி செய்வித்தல் அவள் பரிசுத்திக்குக் காரணமாகும். அப்படிச் செய்யும் புருஷனுக்குப் பாவமில்லை" என்றிருக்கிறது. மேலும் குற்றமுள்ள ஸ்திரீயை விலக்கி வைப்பது என்பதற்கு அடிக்குறிப்பாக, "குற்றமுள்ள ஸ்திரீக்கு ஆகாரம் வஸ்திரம் முதலியவற்றை மாத்திரம் கொடுத்து உடனுண்ணல் சேர்க்கை முதலியவற்றை நிறுத்துவது" என்றுமிருக்கிறது.

[8] "அஃதாவது, ஒருவன் சோமமென்பது தேவர்களை நிறைவு செய்வதற்காக வேள்விகளில் பயன்படுத்தப்படுவதை என்பதை அறிந்தவனாக இருந்தால், என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[9] கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் சாந்திபர்வத்தின் 34ம் பகுதி இல்லை. 33க்குப் பிறகு 35தே தொடர்கிறது. Sacred texts வலைத்தளத்தில் இந்தப் பதிவையே 34 மற்றும் 35 என்று குறிப்பிட்டிருக்கின்றனர். அதன்படியே நாமும் இந்தப் பகுதியை 34 மற்றும் 35 பகுதிகள் உள்ளடங்கியதாகக் கொள்கிறோம்.

சாந்திபர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்