Friday, December 01, 2017

அமைச்சரவை அமைப்பு! - சாந்திபர்வம் பகுதி – 41

Formation of Ministry! | Shanti-Parva-Section-41 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 41)


பதிவின் சுருக்கம் : குடிமக்களுக்கு விடைகொடுத்தனுப்பிய யுதிஷ்டிரன்; பீமன், விதுரன், சஞ்சயன், நகுலன், அர்ஜுனன், தௌமியர், சகாதேவன், யுயுத்சு ஆகியோரை நாட்டின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமானதும், தன் குடிமக்களால் சொல்லப்பட்டதுமான இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், பின்வரும் வார்த்தைகளால் அவர்களுக்குப் பதிலளித்தான்.


{யுதிஷ்டிரன்}, "பாண்டு மகன்களின் தகுதிகள் உண்மையோ, பொய்யோ, இவ்வாறு திரண்டிருக்கும் முதன்மையான பிராமணர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்படுவதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.(2) இத்தகு பண்புகளைக் கொண்டோராக எங்களை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வதால் உங்கள் கருணைக்கு நாங்கள் பாத்திரமாக இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.(3) எனினும், மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்குத் தந்தையும், தேவரும் ஆவார். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் எப்போதும் அவருக்கு ஏற்புடையதைச் செய்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(4) என் உறவினர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நான் அவருக்காக மட்டுமே உயிருடன் வாழ்கிறேன். அனைத்து வகையிலும் விழிப்புணர்வுடன் எப்போதும் அவருக்குத் தொண்டாற்றுவதே என் பெருங்கடமை.(5)

நீங்களும் என் நண்பர்களும் நான் உங்கள் கருணைக்குப் பாத்திரமானவன் என்று கருதினால், திருதராஷ்டிரரிடம் நீங்கள் முன்பு நடந்து கொண்ட அதே நடத்தையுடன் நடந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வேன்.(6) அவர் இந்த உலகத்திற்கும், உங்களுக்கும் எனக்கும் தலைவராவார். பாண்டவர்களுடன் கூடிய மொத்த உலகமும் அவருக்குச் சொந்தமானதாகும்.(7) இந்த என் வார்த்தைகளை நீங்கள் எப்போதும் மனத்தில் தாங்க வேண்டும்" என்று சொன்னான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களை விரும்பிய இடத்திற்குச் செல்லுமாறு விடைகொடுத்தனுப்பினான்.(8)

குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் {யுதிஷ்டிரன்}, குடிமக்கள் மற்றும் மாகாணங்களின் மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் தம்பியான பீமசேனனை யுவராஜாவாக {இளவரசனாக} நியமித்தான்.(9) தன் கலந்துரையாடலில் துணை புரியவும், மாநிலத்தின் ஆறு வகைத் தேவைகளைப் பார்த்துக் கொள்ளவும் கூடிய பொறுப்பில்[1] பெரும் நுண்ணறிவு கொண்ட விதுரனை நியமித்தான்.(10) மேலும் அவன், வயதில் முதிர்ந்தவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான சஞ்சயனை, நிதித்துறையின் கண்காணிப்பாளராகவும், பொது இயக்குனராகவும் நியமித்தான்.(11) மேலும் மன்னன், படைகளின் பதிவேடுகளைப் பராமரிக்கவும், அவர்களுக்கு உணவு மற்றும் கூலி வழங்கவும், படையின் பிற காரியங்களைக் கண்காணிக்கவும் நியமித்தான்.(12) மன்னன் யுதிஷ்டிரன், பகைவரின் படையைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(13) மேலும் அவன், பிராமணர்களைத் தினமும் கவனித்துக் கொள்ளவும், தேவர்களுக்கான சடங்குகள் அனைத்தையும் செய்யவும், அறச் செயல்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளவும் புரோகிதர்களில் முதன்மையான தௌமியரை நியமித்தான்.(14) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மேலும் அம்மன்னன், தான் எப்போதும் சகாதேவனால் காக்கப்பட வேண்டும் என்று எண்ணியதால், அவனை எப்போதும் தன்னருகிலேயே இருக்குமாறு நியமித்தான்.(15) மேலும் அம்மன்னன், வேறு பிற காரியங்களில் அவரவர்க்குத் தகுந்தது எனத் தான் கருதியவற்றில் அவரவரை நியமித்தான்.(16)

[1] "அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்துவது, பிரிவினைகளை விதைப்பது, கூட்டணிகளை நாடுவதன் மூலம் நாட்டைப் பாதுகாப்பது, கோட்டைகள் கட்டுவது ஆகியவையே இவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராய், "பொதுவாக இவை, ஒழுக்கம், அரசுப்பணியாளர்களின் கடமைகள், சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது, அமைச்சர்களின் நடத்தை, தடங்கல்களை அகற்றுதல், வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்ளுதல் ஆகியவையாகும் எனத் தன் அடிக்குறிப்பில் விளக்குகிறார்.

பகைவீரர்களைக் கொல்பவனும், எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனும், அற ஆன்மா கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரன், உயர் ஆன்ம யுயுத்சு ஆகியோரை அழைத்து,(17) "என் அரச தந்தையான திருதராஷ்டிரரின் விருப்பங்கள் அனைத்தையும், எப்போதும் கவனமாகவும், விரைவாகவும் நீங்கள் செய்யுங்கள்.(18) குடிமக்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்பரைப் பொறுத்தவரை என்ன செய்யப்பட வேண்டுமோ அவை அனைத்தும், மன்னரின் {திருதராஷ்டிரரின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு உங்களின் துறைகளின் மூலம் உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும்[2]" என்றான் {யுதிஷ்டிரன்}".(19)

[2] கும்பகோணம் பதிப்பில், "நமது பிதாவான திருதராஷ்டிர ராஜாவின் காரியத்தை நீங்கள் கவனித்துக் கவனித்துச் செய்ய வேண்டும். என் காரியத்தைப் போல அவர் காரியம் யாவற்றையும் ஒரு குறையுமின்றி நீங்கள் தவறாமல் செய்ய வேண்டும். பட்டணங்களிலும், கிராமங்களிலுமுள்ள ஜனங்களுக்குச் செய்யுங்காரியங்கள் யாவற்றையும் எப்பொழுதும் அவரிடம் தெரிவித்துவிட்டுத் தர்மமாகச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 41ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்