Friday, December 15, 2017

பீஷ்மருக்கு வரமளித்த கிருஷ்ணன்! - சாந்திபர்வம் பகுதி – 52

Krishna's boon to Bhishma! | Shanti-Parva-Section-52 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 52)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை மீண்டும் துதித்து, அவன் கேட்டதைச் செய்ய இயலாத தமது பலவீனத்தைச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரின் களைப்பகற்ற அவருக்கு வரமளித்த கிருஷ்ணன்; சூரியன் மறைந்ததும் பீஷ்மரை விட்டகன்று தங்கள் மாளிகைகளுக்கு வந்த பாண்டவர்களும் கிருஷ்ணனும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறம் மற்றும் பொருள் நிறைந்த கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மைந்தர் பீஷ்மர் பின்வரும் வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(1)



பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, ஓ! வலிய கரத்தோனே, ஓ! சிவா, ஓ! நாராயணா, ஓ! மங்கா மகிமை கொண்டோனே, நீ பேசும் வார்த்தைகளைக் கேட்டு நான் இன்பத்தில் நிறைந்திருக்கிறேன்.(2) ஓ! பேச்சின் தலைவனே, உன் முன்னிலையில், அதிலும் குறிப்பாகச் சொல்லத்தக்க அனைத்தும் உன் பேச்சிலேயே அடங்கியிருக்கும்போது, நான் என்ன {போதனைகளை} வார்த்தைகளைச் சொல்ல முடியும்?[1](3) ஓ! தேவா, இம்மையிலும், மறுமையிலும் என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்யப்படுகிறதோ அஃது உன் நுண்ணறிவின் வடிவில் இருந்தே எழுகிறது.(4) தேவர்களின் தலைவனுக்கு முன்னிலையில் சொர்க்கம் குறித்து எந்த மனிதன் பேசத்தகுந்தவனோ, அவனே உன் எதிரில் அறநெறி, இன்பம், பொருள் மற்றும் முக்தி குறித்துப் பேசத் தகுந்தவனாவான்.(5) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என் மனம் கணை தைத்த காயங்களால் உண்டான வலியால் மிகவும் கலக்கமடைந்திருக்கிறது. என் உறுப்புகள் பலவீனமாக இருக்கின்றன. என் புத்தி தெளிவாக இல்லை.(6)

[1] "வேதங்களில் பரம்பொருளின் பேச்சு அடங்கியிருக்கிறது. அறநெறி குறித்த அனைத்தும் அவற்றில் இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான இந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் எனக்கு எதையும் சொல்லும் சக்தியில்லை.(7) என் பலம் என்னைக் கைவிடுகிறது. உன் உயிர்மூச்சு என்னைவிட்டகல விரைகிறது. என் உடலின் முக்கிய அங்கங்கள் எரிகின்றன. என் புத்தி மயக்கமடைகிறது.(8) பலவீனத்தால் என் பேச்சுத் தெளிவற்றதாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு பேசத் துணிவேன்?(9) ஓ! வலிய கரத்தோனே, நான் எதையும் சொல்ல மாட்டேன். (என் விருப்பமின்மைக்காக) என்னை மன்னிப்பாயாக. பேச்சின் தலைவனே (பிருஹஸ்பதியே) உன் எதிரில் பேசத் தயங்குவான்.(10) என்னால் இப்போது பூமியிலிருந்து திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! மதுசூதனா, உன் சக்தியால் மட்டுமே நான் உயிரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.(11) எனவே, விதிகள் அனைத்தையும் விதித்தவன் நீயே என்பதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் நன்மைக்காக நீயே பேசுவாயாக.(12) ஓ! கிருஷ்ணா, அண்டத்தின் அழிவில்லா படைப்பாளனான நீ இருக்கும்போது, ஆசானின் முன்பு பேசும் சீடனைப் போல எவனால் பேச முடியும்" என்று கேட்டார் {பீஷ்மர்}".(13)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, "குரு குலத்தில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், பெரும் ஆன்மா கொண்டவரும், பெரும் பொறுமையும், அனைத்தைக் குறித்த அறிவும் கொண்டவருமான உம்மால் உமக்குத் தகுந்த வார்த்தைகளே பேசப்பட்டன.(14) ஓ! பீஷ்மரே, கணைக் காயங்களால் உண்டான வலி குறித்து நீர் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, கருணையால் நான் உமக்கு அளிக்கும் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வீராக.(15) ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! மங்கா மகிமை கொண்டவரே, சோர்வு, மயக்கம், எரிச்சல், வலி, பசி, தாகம் ஆகியன உமக்கு உண்டாகாதிருக்கட்டும்.(16) ஓ! பாவமற்றவரே, உள்ளுணர்வுகளும், நினைவும் தெளிவு அடையட்டும்[2]. உமது புத்தி உம்மைக் கைவிடாதிருக்கட்டும்.(17) ஓ! பீஷ்மரே, மேகங்களில் இருந்து வெளிப்படும் நிலவைப் போல, உமது மனம் ஆசை {ரஜோகுணம்}, இருள் {தமோகுணம்} ஆகிய பண்புகளில் இருந்து விடுபட்டு, எப்போதும் நற்பண்புடன் {சத்வகுணத்துடன்} இருக்கட்டும்.(18) கடமை, அறநெறி, பொருள் என நீர் நினைப்பனவற்றுக்குத் தொடர்புடைய அனைத்திலும் உமது புத்தி ஊடுருவட்டும்.(19) ஓ! மன்னர்களில் புலியே, ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவரே, தெய்வீகப் பார்வையை அடைந்து, படைப்பின் நால்வகைப் பொருட்களைக் காண்பதில் வெல்வீராக.(20) ஓ! பீஷ்மரே அறிவுக் கண் கொண்ட நீர், தெளிந்த நீரில் உள்ள மீன்களைப் போல, நீர் நினைக்க முயலும் படைப்பின் பொருட்கள் அனைத்தையும் காண்பீராக" என்றான்{கிருஷ்ணன்}".(21)

[2] "அதாவது, ‘நீர் அறிந்த அனைத்தும் உள்ளொளியின் மூலம் உமக்குத் தோன்றும்’ என்பதே சொல்லப்படும் கருத்து" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது வியாசருடன் கூடிய பெரும் முனிவர்கள், ரிக், யஜுர், சாமங்களின் பாடல்களைக் கொண்டு கிருஷ்ணனைத் துதித்தனர்.(22) கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} ஆகியோரோடு அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இருந்த இடத்தில் அனைத்து பருவகாலத்தையும் சேர்ந்த மலர்களின் தெய்வீகமாரி பொழிந்தது.(23) ஆகாயத்தில் அனைத்துவகைத் தெய்வீக இசைக்கருவிகளும் முழங்கின, அப்சரஸ் இனங்கள் பாடத்தொடங்கின. எந்தத் தீமையோ, தீய வகைச் சகுனமோ அங்கே காணப்படவில்லை.(24) அனைத்து வகை நறுமணத்தையும் தாங்கியபடி மங்கலமான, இனிமையான தூய தென்றல் அங்கே வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவையும், அமைதியையும் அடைந்தன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அமைதியாகத் திரியத் தொடங்கின.(25)

விரைவில், பெருங்காட்டின் விளிம்பில் உள்ள நெருப்பைப் போல ஆயிரங்கதிர்களைக் கொண்ட தெய்வீக சூரியன் மேற்கில் இறங்குவது காணப்பட்டது.(26) அப்போது பெரும் முனிவர்கள் எழுந்து நின்று, ஜனார்த்தனன், பீஷ்மர் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனை வணங்கினர்.(27) அதன் பேரில், பாண்டுவின் மகன்கள், சாத்யகி, சஞ்சயன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோருடன் கூடிய கேசவன், பதிலுக்கு மரியாதையுடன் அத்துறவிகளை வணங்கினான்.(28) அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க அந்தத் தவசியர், கேசவனாலும், பிறராலும் இவ்வாறு வணங்கப்பட்டு, "நாளை திரும்புகிறோம்" என்று சொல்லிவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(29) அதன்பிறகு, பீஷ்மரை வணங்கி, அவரை வலம் வந்த கேசவனும், பாண்டவர்களும், தங்கள் அழகிய தேர்களில் ஏறினர்.(30)

தங்கக் கூபரங்களால் அலங்கரிக்கப்பட்ட வேறு பல தேர்கள், மலைகளைப் போலத் தெரிந்த மதங்கொண்ட யானைகள், கருடர்களைப் போன்ற வேகமான குதிரைகள், விற்கள் மற்றும் ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் அந்த வீரர்கள் சென்றனர்.(31) பெரும் வேகத்தில் நகர்ந்த அந்தப் படை, இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, ஒன்று அந்த இளவரசர்களின் முன்பும், மற்றொன்று அவர்களுக்குப் பின்பும் சென்றன. ஓரிடத்தில் குறுக்கே நிற்கும் ரிக்ஷவான் மலைகளால் பிரிக்கப்பட்ட பெரும் ஆறான நர்மதையின் இரண்டு ஓடைகளைக்கு ஒப்பாக அக்காட்சி இருந்தது.(32) அந்தப் பெரும்படையைத் திளைக்கச் செய்யும் வகையில், சூரியனின் வெப்பத்தால் சாறு உறிஞ்சிப்பட்ட மூலிகைகளைத் தன் சக்தியால் ஈரப்பதமடையச் செய்தபடியே அவர்களுக்கு முன்பு சந்திரமாஸ் {சந்திரன்} எழுந்தான்.(33) அப்போது, அந்த யதுகுலக் காளையும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகன்களும், இந்திரனின் நகரத்திற்கு {அமராவதிக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய (குரு) நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்து, தங்கள் குகைகளை நாடும் களைத்த சிங்கங்களைப் போலத் தங்கள் தங்கள் மாளிகைகளுக்குச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(34)

சாந்திபர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்