Saturday, December 23, 2017

பாதுகாப்பின் வழிமுறைகள்! - சாந்திபர்வம் பகுதி – 58

Means of Security! | Shanti-Parva-Section-58 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 58)


பதிவின் சுருக்கம் : நாட்டைப் பாதுகாக்கும் வழிமுறைகள்; முயற்சியின் முக்கியத்துவமும், அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமும்; மன்னனால் சமயத்திற்கேற்றவாறு கபடமும், கபடமற்ற நிலையும் ஏன் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பனவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சூரியன் மறையப்போவதால் தன் ஐயங்களை அடுத்த நாள் கேட்பதாகச் சொன்ன யுதிஷ்டிரன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, குடிமக்களைப் பாதுகாப்பதே அரச கடமைகளில் முக்கியமானது. தெய்வீகமான பிருஹஸ்பதி வேறு எந்தக் கடமையையும் (இந்த ஒன்றைப் போல்) மெச்சவில்லை.(1) அகன்ற கண்களைக் கொண்டவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான கவி (உசனஸ் {சுக்கிரன்}), ஆயிரங்கண் இந்திரன், பிரசேதஸின் மகன் மனு,(2) தெய்வீக பரத்வாஜர், தவசி கௌரசிரஸ் மற்றும் பிரம்மத்தை ஓதி, பிரமத்துக்கு அர்ப்பணிப்புடன் கூடிய அனைவரும் மன்னர்களின் கடமைகளைக் குறித்து உடன்படிக்கைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.(3) ஓ! அறவோரில் முதன்மையானவனே, அவர்கள் அனைவரும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பாதுகாப்பை வழங்கும் கடமையையே புகழ்ந்திருக்கின்றனர். ஓ! தாமரை இதழ்களைப் போன்றதும், தாமிர வண்ணம் கொண்டதுமான கண்களைக் கொண்டவனே, பாதுகாப்பை முயன்றடையும் வழிமுறைகளைக் குறித்துக் கேட்பாயாக.(4)


ஓ! யுதிஷ்டிரா, ஒற்றர்களையும், பணியாட்களையும் பணியமர்த்தல், அலட்சியமில்லாமல் அவர்களுக்குரியதைக் {கூலிகளைக்} கொடுப்பது, பிறர் நலத்தை எண்ணிப்பார்த்து வரிகளைத் தெளிவாக்குவது {அடைவது}, கணிக்க முடியாத அளவுக்கு (குடிமக்களிடம் இருந்து) காரணமில்லாமல் ஒருபோதும் எதையும் கைப்பற்றாமல் இருத்தல்,(5) (நிர்வாகக் காரியங்களைச் செயல்படுத்த) நேர்மையான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தல், வீரம், திறம், (தொழில் பரிவர்த்தனையில்) புத்திக்கூர்மை, உண்மை, மக்களின் நன்மையை நாடுவது, நியாயமான மற்றும் நியாயமற்ற வழிமுறைகளில் எதிரிக்கு மத்தியில் வேறுபாட்டையும், ஒற்றுமையின்மையையும் உண்டாக்குவது,(6) பழைய, அல்லது விழும் நிலையில் உள்ள கட்டடங்களைச் செப்பனிடுவது, சமயத்திற்குத் தகுந்தவாறு ஒழுங்கமைக்கப்பட்ட அபராதங்களையும், உடல்சார்ந்த தண்டனைகளை அளிப்பது,(7) நேர்மையாளர்களைக் கைவிடாதிருப்பது, நற்குடியில் பிறந்தோருக்குப் பணியையும், பாதுகாப்பதையும் அளிப்பது, சேமிக்க வேண்டியதைச் சேமிப்பது, புத்திக்கூர்மை கொண்டோரிடம் தோழமை கொள்வது,(8) படைவீரர்களை நிறைவு செய்வது, குடிமக்களைக் கண்காணிப்பது வணிகப் பரிமாற்றங்களில் நிலைமாறா உறுதியோடு இருப்பது, கருவூலத்தை நிறைப்பது,(9) நகரக் காவலர்களிடம் குருட்டு நம்பிக்கை வைக்காமலிருப்பது, பகை நகரக் குடிமக்களிடம் பற்றுறுதியை {விசுவாசத்தைக்} குலையச் செய்வது, எதிரி நாடுகளுக்கு மத்தியில் வாழும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது,(10) பணியாட்களையும், அரசு அதிகாரிகளையும் கடுமையாகக் கண்காணிப்பது, நகரத்தைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வது, பணியாட்களை நம்பாமல் இருப்பது, உறுதிமொழிகளின் மூலம் எதிரிக்கு ஆறுதலளிப்பது,(11) கொள்கைவிதிகளில் உறுதியோடிருப்பது, செயல்பட ஆயத்தமாக இருப்பது, எந்த எதிரியையும் அலட்சியம் செய்யாதிருப்பது, தீயோரைக் கைவிடுவது ஆகியவையே {பாதுகாப்பை முயன்றடையும்} அந்த வழிமுறைகளாகும்.(12)

முயற்சியில் மன்னர்களின் ஆயத்தமானது அரச கடமைகளின் வேராகும். இது குறித்துப் பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். அவரால் பாடப்பட்ட வரிகளைக் கேட்பாயாக.(13) "முயற்சியாலேயே அமுதம் அடையப்பட்டது; முயற்சியாலேயே அசுரர்கள் கொல்லப்பட்டனர்; முயற்சியாலே இந்திரன் சொர்க்கம் மற்றும் பூமியின் அரசுரிமையை அடைந்தான்.(14) பேச்சில் வீரர்களை விட முயற்சியில் வீரன் மேன்மையானவனாவான். பேச்சில் வீரர்கள், முயற்சியில் வீரர்களை நிறைவு செய்து அவர்களை வழிபடுவார்கள்[1].(15) முயற்சியற்ற மன்னன், நுண்ணறிவைக் கொண்டவனாகவே இருந்தாலும், நஞ்சிழந்த பாம்பைப் போல எதிரிகளால் எப்போதும் வெல்லப்படுவான்.(16) பலங்கொண்ட ஒரு மன்னன், எதிரி எவ்வளவு பலவீனமாக இருப்பினும், அவனை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே ஒரு தீப்பொறியால் காட்டுத்தீயை உண்டாக்க முடியும், ஒரே ஒரு துளி நஞ்சும் கொல்லக்கூடும்.(17) பகைவன் ஒரே ஒரு வகைப் படையுடன் கோட்டைக்குள் இருந்தால், பலமிக்கச் செழிப்பான மன்னனின் மொத்த நாட்டையும் அவனால் பீடிக்க முடியும்.(18)

[1] "சாத்திரங்களைக் கற்றோரான நாநயமிக்கப் பிராமணர்களே இங்கே பேச்சில் வீரர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். பெரும் க்ஷத்திரிய மன்னர்கள் முயற்சியில் வீரர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முயற்சியில் சூரனான மனிதன் பண்டிதர்களுக்கு மேலாயிருக்கிறான். முயற்சியுள்ள வீரர்களைப் பண்டிதர்கள் ஸந்தோஷப்படுத்தி உபாஸிக்கிறார்கள்" என்றிருக்கிறது.

மன்னனின் இரகசியப் பேச்சுகள், வெற்றியை அடைய திரட்டப்படும் துருப்புகள், அவனது இதயத்தில் இருக்கும் கபட நோக்கங்கள், குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உண்டான அதே போன்ற நோக்கங்கள், (19) அவன் செய்யும், அல்லது செய்ய நினைக்கும் தீச்செயல்கள் ஆகியவை கள்ளங்கபடமற்ற தோற்றத்துடனே அவனால் {மன்னனால்} மறைக்கப்பட வேண்டும். தன் மக்களைத் தன் ஆளுகைக்குள் வைப்பதற்கு அவன் நியாயமாகச் செயல்பட வேண்டும்.(20) குறுகிய புத்தி கொண்டோரால் பரந்த பேரரசின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. மென்மையான மன்னனால், உழைப்பைக் கோரும் மேன்மையான தகுதியை அடைய முடியாது.(21) இறைச்சித் துண்டைப் போல அனைவராலும் பேராசை கொள்ளப்படும் நாட்டைக் கள்ளங்கபடமில்லாத, எளிமையான நடத்தையுடன் ஒருபோதும் காக்க முடியாது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ கள்ளங்கபடமில்லாமலும், கபடத்தோடும் என இரு வகைகளிலும் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.(22) குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு மன்னன் ஆபத்தில் விழ நேர்ந்தால் அவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். அதுவே மன்னர்களின் நடத்தையாக இருக்க வேண்டும்.(23) மன்னர்களின் கடமைகளைக் குறித்த ஒரு பகுதியை மட்டும் நான் இப்போது உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஓ! குருக்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ அறிய விரும்புவனவற்றை என்னிடம் சொல்வாயாக" என்றார் {பீஷ்மர்}".(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், "சிறப்புமிக்க வியாசர், தேவஸ்தானர், அஸ்வர், வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிருபர், சாத்யகி, சஞ்சயன் ஆகியோர்(25) முற்றாக மலர்ந்த மலர்களுக்கு ஒப்பான முகங்களுடன் மகிழ்ச்சியால் நிறைந்து, "சிறப்பு! சிறப்பு!"" என்று சொல்லி மனிதர்களில் புலியும், அறவோரில் முதன்மையானவருமான பீஷ்மரைத் துதித்தனர்.(26) அப்போது குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன் உற்சாகமற்ற இதயத்துடனும், கண்ணீரால் குளித்த கண்களுடனும், மென்மையாகப் பீஷ்மரின் பாதங்களைத் தீண்டி,(27) "ஓ! பாட்டா, சூரியன் பூமியிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டு இன்று (இப்போது) மறையப் போகிறான் என்பதால் என் ஐயங்களை நான் நாளை கேட்கிறேன்" என்று சொன்னான்.(28) பிறகு, கேசவன், கிருபர், யுதிஷ்டிரன் மற்றும் பிறர், (அங்கே கூடியிருந்த) பிராமணர்களை வணங்கி, அந்தப் பெரும் ஆற்றின் மைந்தரை வலம் வந்து, உற்சாகமாகத் தங்கள் தேர்களில் ஏறினர்.(29) சிறந்த நோன்புகளை நோற்கும் அவர்கள் அனைவரும் திருஷத்வதியின் ஓடையில் {ஆற்றில்} நீராடினர். தங்கள் முன்னோருக்கு நீர்க்காணிக்கைகள் அளித்த அந்த எதிரிகளை எரிப்பவர்கள், அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதி, வேறு பிற மங்கலச் செயல்களையும் செய்து, மாலை சந்தியை உரிய சடங்குகளுடன் துதித்து, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(30)

சாந்திபர்வம் பகுதி – 58ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்