Thursday, December 28, 2017

ஆசிரமதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 61

The duties in modes of life! | Shanti-Parva-Section-61 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 61)


பதிவின் சுருக்கம் : நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, நான்கு வாழ்வு முறைகளின் பெயர்களையும், அவை ஒவ்வொன்றின் கடமைகளையும் இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) பிராமணர்களால் பின்பற்றப்படுவது, வானப்ரஸ்தம், பைக்ஷ்யம் {சந்நியாசம்}, பெரும் தகுதியைத் தரும் கார்ஹஸ்த்யம் {இல்லறம்} மற்றும் பிரம்மச்சரியம் ஆகிய நான்கு வாழ்வு முறைகளாகும்.(2) சடாமுடி தரிப்பதைப் பொறுத்தவரையில், தூய்மைச் சடங்கைச் {சௌளம்} செய்து, {உபநயனவிதியைக் கொண்டு} மறுபிறப்புக்கான சடங்கையும் செய்த பிறகு, சில காலம், புனித நெருப்புக்குச் சில சடங்குகளைச் செய்த பிறகு, வேதங்களைக் கற்று,(3) தூய ஆன்மாவுடனும், புலனடக்கத்துடனும், கார்ஹஸ்த்யம் {இல்லறம்} என்றழைக்கப்படும் வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் முதலில் கவனமாகச் செய்த பிறகு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ, வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்ற கானகம் செல்ல வேண்டும்.(4) ஆரண்யகங்கள் என்றழைக்கப்படும் {வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய} சாத்திரங்களைக் கற்றுத் தன் உயிர் நீரை மேலிழுத்து, உலகக் காரியங்கள் அனைத்தில் இருந்தும் ஓய்ந்த அறம் சார்ந்த துறவி ஒருவன், அழிவில்லா நித்திய ஆன்மாவில் ஒன்றிய நிலையை {பிரம்மஸ்வரூபத்தை} அடையலாம்.(5) இவையே தங்கள் உயிர் நீரை மேலிழுத்த முனிவர்களின் குறியீடுகளாகும். ஓ! மன்னா, கல்விமானான ஒரு பிராமணன் முதலில் அவற்றைப் பயன்று, அவற்றில் ஈடுபட வேண்டும்.(6)


ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வீடடைய {முக்தியடைய} விரும்பும் ஒரு பிராமணன், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைக் கடந்தபிறகே பைக்ஷ்ய {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றத்தகுந்தவனாவான் என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(7) கல்விமானான பிராமணன் ஒருவன், (தினமும் தான் திரிகையில்) மாலைவேளை எங்கே ஏற்படுகிறதோ, அந்தச் சூழ்நிலையைச் சிறந்ததாக்க விரும்பாமல் அங்கேயே உறங்கி, {வசிப்பதற்கு} வீடில்லாமல், (ஈகையில்) கிடைக்கும் உணவை உண்டு, தற்கட்டுப்பாட்டுடன் தியானம் பயின்று, ஆசையேதும் இல்லாமல் புலன்களை அடக்கி,(8) அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, எதிலும் மகிழ்ச்சியோ வெறுப்போ அடையாமல் இந்த {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றி அழிவில்லா நித்திய ஆன்மாவுடன் தோய்ந்த ஒன்றிய நிலையை அடைகிறான்.(9)

கார்ஹஸ்த்திய {இல்லற} வாழ்வுமுறையில் வாழும் மனிதன், வேதங்களைக் கற்று, தனக்காக விதிக்கப்பட்ட அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெற்று, இன்பங்களையும், வசதிகளையும் அனுபவிக்க வேண்டும். (மீறல்கள் ஏதுமில்லாமல்) வாழ மிகக் கடினமானதும், தவசிகளால் மெச்சப்படுவதுமான அந்த வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் அவன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.(10) அவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே நிறைவுடன் இருந்து, அவளது பருவ காலமன்றி வேறு காலங்களில் அவளை அணுகாதிருக்க வேண்டும். அவன், தந்திரமாகவோ, வஞ்சகமாகவோ செயல்படாமல் சாத்திரங்களின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவன் உணவில் சிக்கனமாக இருந்து, தேவர்களுக்கு அர்ப்பணிப்புடன், நன்றி நிறைந்தவனாக, மென்மையானவனாக, கொடூரமற்றவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(11) அவன், இதய அமைதி கொண்டவனாக, கட்டுப்படக்கூடியவனாக, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கைகள் அளிப்பவனாக இருக்க வேண்டும். அவன் பிராமணர்களிடம் எப்போதும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்ள வேண்டும். அவன் செருக்கற்றவனாக இருக்க வேண்டும். அவனுடைய ஈகை ஒரு குழுவினருக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது. வேத சடங்குகளைச் செய்வதில் அவன் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.(12)

இது தொடர்பாக, பெரும் தவத்தகுதியைக் கொண்டதும், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், நாராயணனால் பாடப்பட்டதுமான ஒரு வரியை சிறப்புமிக்கப் பெரும் முனிவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைத் திரும்பச் சொல்கிறேன் கேட்பாயாக.(13) "உண்மை, எளிமை, விருந்தினரை வழிபடுவது, அறம் பொருள் அடைதல், தான் மணந்து கொண்ட மனைவியோடு இன்புற்றிருத்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு வகை இன்பங்களை அனுபவிக்க வேண்டும்" {என்று நாராயணன் பாடியிருக்கிறான்}.(14) மகன்களையும், மனைவியரையும் ஆதரித்தல், வேதங்களைக் கற்றல் ஆகியவை இந்த உயர்ந்த {இல்லற} வாழ்வுமுறையை நோற்போரின் கடமைகளாக அமைகின்றன என்று பெருமுனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(15) வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் பிராமணன், இந்த வாழ்வுமுறையை முறையாக வாழ்ந்து, தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து, சொர்க்கத்தில் அருள்வெகுமதிகளை அடைகிறான்.(16) அவனது இறப்புக்குப் பிறகு, அவனால் விரும்பப்பட்ட வெகுமதிகள் இறவாத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. உண்மையில், அவை தலைவனின் உத்தரவைச் செயல்படுத்த எப்போதும் விழிப்புடன் இருக்கும் பணியாட்களைப் போல நித்தியமாக {அழிவில்லாமல்} எப்போதும் அவனுக்காகக் காத்திருக்கின்றன {பணிவிடை செய்கின்றன}.(17)

பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன், எப்போதும் வேதங்களில் ஈடுபாட்டுடன், தன் ஆசானிடம் இருந்து அடைந்த மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டு, தேவர்கள் அனைவரையும் வழிபட்டு, உடலில் புழுதி மற்றும் தூசியுடனும்,(18) கடமையுணர்வுடனும் தன் ஆசானுக்குத் தொண்டாற்றி, புலனடக்கத்துடன், தனக்குக் கிடைக்கும் கல்வியில் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவன், வேதங்களைக் குறித்துச் சிந்தித்து, (தியானம் மற்றும் வெளிப்படையான செயல்கள் ஆகிய) தன் கடமைகள் அனைத்தையும் செய்து, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்காகக் காத்திருந்து, அவரை எப்போதும் வணங்கி வாழ வேண்டும். (பிறரின் வேள்விகளைச் செய்து கொடுத்தல் போன்ற) ஆறு வகை வேலைகளில்[1] ஈடுபடாமை, எந்தச் செயல்பாடுகளிலும் ஒருபோதும் பற்று கொள்ளாமை,(19,20) எவருக்கும் ஆதரவோ, ஆதரவில்லா நிலையையோ ஏற்காமை, தன் எதிரிகளுக்கும் நன்மையைச் செய்தல் ஆகிய இவையே ஒரு பிரம்மச்சாரியின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன" என்றார் {பீஷ்மர்}.(21)

[1] இவை, "பிராணாயாமம், பிரத்யாஹாராம், த்யாநம், தாரணை, தர்க்கம், ஸமாதி" எனக் கும்பகோணம் பதிப்புக் குறிப்பிடுகிறது.

சாந்திபர்வம் பகுதி – 61ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்