Tuesday, January 23, 2018

வாயு சொன்ன நால்வர்ண தாரதம்மியம்! - சாந்திபர்வம் பகுதி – 72

Comparitive values of four varnas said by Vayu deva! | Shanti-Parva-Section-72 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 72)


பதிவின் சுருக்கம் : புரூரவஸுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; நான்கு வர்ணங்களின் ஓப்பீட்டு மதிப்பையும், புரோகிதராக இருக்கத் தகுந்த பிராமணனின் பண்புகளையும் புரூரவஸுக்கு விளக்கிய வாயு தேவன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "ஓ! மன்னா, எந்த மனிதன் நல்லோரைப் பாதுகாத்துத் தீயோரைத் தண்டிப்பானோ, அவன் மன்னனால் அவனது புரோகிதராக நியமிக்கப்பட வேண்டும்.(1) இது தொடர்பாக, இளையின் மகனான புரூரவஸுக்கும், மாதரிஸ்வானுக்கும் {வாயுவுக்கும்}[2] இடையில் நடந்த உரையாடல் பழங்காலக் கதையில் தென்படுகிறது.(2)


[1] கும்பகோணம் பதிப்பில், " ஓ பிதாமஹரே, அரசனுடைய காரியாகாரியங்களை விசாரிக்கவும், செய்யவும் ஸாமர்த்தியமுள்ள பிராம்மணன் எவ்விதக் குணமுள்ளவனென்பதை எனக்குச் சொல்ல வேண்டுகிறேன்" என்று இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலேயே யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கேட்பதாக வருகிறது. அதன் பிறகே பீஷ்மர் பின்வருவனவற்றைச் சொல்லத் தொடங்குகிறார்.

[2] கும்பகோணம் பதிப்பில் இவன் வாயு தேவன் என்று சுட்டப்படுகிறான். மாத்ரிஸ்வான் என்பது வாயுவைக் குறிக்கும் என்று பிபேக்திப்ராயும் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.

புரூரவஸ் {வாயுதேவனிடம்}, "பிராமணன் எங்கிருந்து உண்டானான்? மூவகையினரும் எங்கிருந்து உண்டானார்கள்? எதன் காரணமாகப் பிராமணன் முதன்மையானவனானான்? இவை யாவற்றையும் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(3)

மாதரிஸ்வான் {வாயுதேவன் புரூரவஸிடம்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவனே {புரூரவஸ்ஸே}, பிராமணன், பிரம்மனின் வாயிலிருந்து உண்டானான். க்ஷத்திரியன், அவரது இரு கரங்களிலிருந்து உண்டானான், வைசியன் அவரது இரு தொடைகளில் இருந்து உண்டானான்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, இந்த மூவகையினருக்காகக் காத்திருப்பதற்காக {பணிவிடை செய்வதற்காக} உயிர்த்தெழுந்தவனும், நான்காவது வகையைச் சேர்ந்தவனுமான சூத்திரன் (பிரம்மனின்) பாதத்தில் இருந்து உண்டானான்.(5) உண்மையில் இவ்வாறு உண்டான பிராமணன், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் பராமரிப்பதற்காக, அனைத்து உயிரினங்களின் தலைவனாகப் பூமியில் பிறப்பை எடுத்தான்[3].(6) பிறகு, பூமியை ஆள்வதற்காகவும், தண்டக்கோலை {செங்கோலைத்} தரிக்கவும், அனைத்து உயிரினங்களையும் காக்கவும், இரண்டாவது வகையைச் சேர்ந்த க்ஷத்திரியன் படைக்கப்பட்டான்.(7) வைசியன், உழவு, வணிகம் மூலம் தன்னையும் தாங்கிக் கொண்டு, இந்த இரு வகையினரையும் ஆதரிப்பதற்காகப் படைக்கப்பட்டான். இறுதியாக, சூத்திரன் இந்த மூன்று வகையினருக்கும் கீழ்ப்படிந்து பணிசெய்ய வேண்டும் என்ற பிரம்மனால் விதிக்கப்பட்டான்" என்றான் {வாயு தேவன்}.(8)

[3] "இங்கே குறிப்பிடப்படும் தர்மகோஷம் Dharmakosha என்பது அனைத்துக் கடமைகளின் களஞ்சியம் {கொள்ளிடம்} என்ற பொருளைக் கொண்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணன் பூமியில் பிறக்கும்போதே எல்லாப்பிராணிகளுக்கும் ஈசனாயும், தர்மமென்னுங் கோசத்தை ரக்ஷிக்க சக்தி பெற்றவனாயும் பிறக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பூமி பிறந்த உடனேயே பிராமணனும் பிறந்தான். தர்மத்தின் கொள்ளிடத்தைப் பாதுகாப்பதற்காகவே அவன் அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருக்கிறான்" என்றிருக்கிறது.

புரூரவஸ் {வாயுதேவனிடம்}, "ஓ! வாயு தேவா, இந்தப் பூமி நியாயமாக யாருக்குச் சொந்தமானதாகும். {இது சொந்தமானது} பிரமணனுக்கா? க்ஷத்திரியனுக்கா?" என்று கேட்டான்.(9)

வாயு தேவன் {புரூரவஸ்ஸிடம்}, "பிறப்பு மற்றும் முன்னிலையின் விளைவால் இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்தும் பிராமணனுக்கே சொந்தமானதாகும். அறநெறியறிந்தோர் இதையே சொல்கின்றனர்.(10) பிராமணன் எதை உண்கிறானோ, அஃது அவனுடையதே. அவன் வசிக்கும் இடம் அவனுடையதே. அவன் கொடுப்பதும் அவனுடையதே. அவன், அனைத்து {பிற மூன்று} வகையினரின் மதிப்புக்கும் தகுந்தவனாவான். அவனே முதலில் பிறந்தவனும், முதன்மையானவனும் ஆவான்.(11) கணவன் இல்லாத போது, ஒரு பெண், அவனுக்குப் பதில் அவனது தம்பியை ஏற்பதைப் போலவே, பூமியானவள், பிராமணனுடைய மறுப்பின் காரணமாக, அவனுக்கு அடுத்துப் பிறந்த க்ஷத்திரியனைத் தன் தலைவனாக ஏற்றாள். இதுவே முதல் விதியாகும். எனினும், இடர் காலங்களில் இதற்கு விதிவிலக்கும் உண்டு.(12) நீ, உன் வகைக்குண்டான கடமைகளை வெளிப்படுத்த முனைந்து, சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைய விரும்பினால், நீ வெல்லும் நிலங்கள் அனைத்தையும்,(13) கல்வியறிவு கொண்டவனும், அறநடத்தை கொண்டவனும், கடமைகளை அறிந்தவனும், தவங்களை நோற்பவனும், தன் வகைக்கான கடமைகளில் நிறைவடைந்தவனும், செல்வத்தில் பேராசையில்லாதவனுமான பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும்.(14) நற்பிறப்பைக் கொண்டவனும், ஞானம் மற்றும் பணிவைக் கொண்டவனுமான

பிராமணன், தன் பெரும் நுண்ணறிவைக் கொண்டு ஒவ்வொரு காரியத்திலும் மன்னனுக்கு வழிகாட்டுகிறான்.(15) நல்லாலோசனைகளின் மூலமாக அவன் அந்த மன்னனைச் செழிப்பீட்டச் செய்கிறான். மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகளை அந்தப் பிராமணன் சுட்டிக் காட்டுகிறான்.(16) தன் வகைக்குரிய கடமைகளைச் செய்பவனும், செருக்கற்றவனும், ஞானம் கொண்டவனுமான ஒரு மன்னன், பிராமணனின் அறிவுரைகளை எவ்வளவு காலம் கேட்பானோ, அவ்வளவு காலம் அவன் மதிக்கப்படுகிறான், அவ்வளவு காலம் அவன் புகழை அனுபவிக்கிறான். எனவே, மன்னன் அடையும் தகுதியில் {புண்ணியத்தில்} அவனது புரோகிதனுக்கும் ஒரு பங்குண்டு.(17) மன்னன் இவ்வாறு நடக்கும்போது, அவனைச் சார்ந்திருக்கும் அவனது குடிமக்கள் அனைவரும், தங்கள் நடத்தையில் அறவோராகவும், தங்கள் கடமைகளில் கவனமுள்ளோராகவும், அனைத்து வகை அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருப்பார்கள்.(18) மன்னன், தன்னால் முறையாகப் பாதுகாக்கப்படும் தன் குடிமக்களால் தன் நாட்டில் செய்யப்படும் அறச் செயல்களின் நான்கில் ஒரு பாகத்தை அடைகிறான்.(19)

தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் தங்களைத் தாங்கிக் கொள்ள வேள்விகளையே சார்ந்திருக்கின்றனர். மன்னன் இல்லாத ஒரு நாட்டில், எந்த வேள்வியும் நடைபெறாது.(20) தேவர்களும், பித்ருக்களும் வேள்விகளும் அளிக்கப்படும் காணிக்கைகளாலேயே வாழ்கின்றனர். எனினும் வேள்வியானது மன்னனைச் சார்ந்திருக்கிறது.(21) கோடை காலத்தில், மனிதர்கள், மரத்தின் நிழல், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த தென்றல் ஆகியவற்றின் ஆறுதலை விரும்புவார்கள். குளிர் காலத்தில் அவர்கள் நெருப்பு, கதகதப்பான துணிகள் மற்றும் சூரியன் ஆகியவற்றில் இருந்து ஆறுதலை அடைகிறார்கள்.(22)

மனிதனின் இதயமானது, ஒலி, தீண்டல், சுவை, காட்சி மற்றும் மணம் ஆகியவற்றில் இன்பத்தைக் கண்டடைகிறது. எனினும், அச்சமடைந்த மனிதன் இவையாவற்றிலும் எந்த இன்பத்தையும் காண்பதில்லை.(23) மனிதர்களின் அச்சத்தை விலக்கும் மனிதன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உயிர்க்கொடையைப் போன்ற வேறொரு கொடை மூன்று உலகங்களிலும் கிடையாது.(24) மன்னனே இந்திரனாவான். மன்னனே யமனாவான். மன்னனே தர்மனும் ஆவான். மன்னன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான். மன்னனே அனைத்தையும் தாக்குப்பிடித்து, அவற்றை ஆதரிக்கிறான்" என்றான் {வாயு தேவன்}".(25)

சாந்திபர்வம் பகுதி – 72ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்