Wednesday, January 24, 2018

பிராமண க்ஷத்திரிய ஒற்றுமை! - சாந்திபர்வம் பகுதி – 73

Unity of Brahmana and Kshatriya! | Shanti-Parva-Section-73 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 73)


பதிவின் சுருக்கம் : புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைச் சொன்ன கசியபர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "ஓ! மன்னா, அறத்தகுதி மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் கண் கொண்டவனும், மிகச் சிக்கலான கருத்துகளைக் கொண்டவனுமான மன்னன், கல்வியறிவு பெற்றவரும், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் மிக நெருக்கமாக அறிந்தவருமான ஒரு புரோகிதரைத் தாமதமில்லாமல் நியமித்துக் கொள்ள வேண்டும்.(1) நல்லான்மா கொண்டோரும், கொள்கை அறிந்தவர்களுமான புரோகிதர்களையுடைய மன்னர்கள், தாங்களே அத்தகைய பண்புகளைக் கொண்டோராகி, திசைகள் அனைத்திலும் செழிப்பை அனுபவிப்பார்கள்.(2) மதிக்கத்தக்க பண்புகளைக் கொண்ட புரோகிதர், மற்றும் மன்னன் ஆகிய இருவரும், நோன்புகள் மற்றும் தவங்களை நோற்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடிமக்களையும், தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிள்ளைகளையும் பெருக்கிக் கொள்ள முடியும் {அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த முடியும்}.(3) அவர்கள் ஒரே இதயங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் இடையில் உண்டாகும் அத்தகு நட்பின் விளைவாகக் குடிமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(4) அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவில்லையெனில் மக்களுக்கு அழிவே ஏற்படும். பிராமணனும், க்ஷத்திரியனும் தான் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது.(5) இது தொடர்பாக இளையின் மகனுக்கும் {புரூரவஸுக்கும்}, கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலொன்று பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(6)


[1] கும்பகோணம் பதிப்பில், "ஓ பிதாமஹரே, அரசன் எவ்வித வர்ணமுள்ளவரும், குணமுள்ளவருமான பிராம்மணரைப் புரோஹிதராகச் செய்து கொள்ள வேண்டும் என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும்" என்று இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலேயே யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கேட்பதாக வருகிறது. அதன் பிறகே பீஷ்மர் பின்வருவனவற்றைச் சொல்லத் தொடங்குகிறார்.

இளையின் மகன் {புரூரவஸ் காசியபரிடம்}, "பிராமணன் க்ஷத்திரியனைக் கைவிடும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனைக் கைவிடும்போது, அவர்களில் எவன் மேன்மையானவனாகக் கருதப்பட வேண்டும்? அவர்களில் எவருடைய ஆணைகளைச் சார்ந்து பிற வகையினர்கள் தங்களைப் பராமரித்துக் கொள்ள முடியும்?" என்று கேட்டான்.(7)

கசியபர் {புரூரவஸ்ஸ்டம்}, "பிராமணனும், க்ஷத்திரியனும் ஒருவரோடொருவர் போரிடும்போது, அந்த க்ஷத்திரியனின் நாடு அழிவடைகிறது. குழப்பமே நீடிக்கும் அந்த நாட்டில் கள்வர்கள் பெருகுவார்கள், நல்லோர் அனைவரும் ஆட்சியாளனை மிலேச்சன் என்று கருதுவார்கள்.(8) அவர்களுடைய {நல்லோரின்} எருதுகள் தழைக்காது, அவர்களின் பிள்ளைகளும் தழைக்கமாட்டார்கள். எந்த நாடுகளில் பிராமணர்கள் க்ஷத்திரியர்களைக் கைவிடுகிறார்களோ, அங்கே {பிராமணப்} பிள்ளைகள் வேதங்களைக் கற்க மாட்டார்கள்.(9) அவர்களது வீடுகளில் செல்வம் பெருகாது. அவர்களது பிள்ளைகள் நல்லோராகமாட்டார்கள், சாத்திரங்களைக் கற்கமாட்டார்கள், வேள்விகளையும் செய்யமாட்டார்கள். பிராமணர்களைக் கைவிடும் க்ஷத்திரியர்கள், தங்கள் குருதியில் மாசடைந்து, கள்வர்களின் இயல்பை அடைவார்கள்.(10) பிராமணனும், க்ஷத்திரியனும் இயல்பிலேயே ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களும், ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்பவர்களுமாவர். பிராமணனின் வளர்ச்சிக்கான காரணம் க்ஷத்திரியனே, க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கான காரணம் பிராமணனே.(11) ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளும் போது, அவர்கள் இருவருமே பெருஞ்செழிப்பை அடைவார்கள். பழங்காலத்தில் இருந்து நீடிக்கும் அவர்களது நட்பு உடையுமேயானால், அனைத்திலும் பெருங்குழப்பமே ஏற்படும்.(12)

வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்க விரும்பும் எந்த மனிதனும், கடலின் பரப்பில் மிதக்கும் சின்னஞ்சிறு படகைப் போலத் தன் பணியில் வெற்றியடைவதில்லை. மனிதர்களில் நால்வகையினரும் குழப்பமடைந்து, அனைவருக்கும் அழிவு ஏற்படுகிறது.(13) ஒரு மரத்தைப் போன்றவனான பிராமணன் பாதுகாக்கப்பட்டால், அது பொன்னையும், தேனையும் பொழியச் செய்கிறது. மறுபுறம் அது பாதுகாக்கப்பட வில்லையெனில், அது கண்ணீரையும், பாவத்தையும் பொழியும்.(14) வேதங்களில் இருந்து வீழ்ந்த பிராமணன், (க்ஷத்திரிய ஆட்சியாளன் இல்லாமல்) சாத்திரங்களின் பாதுகாப்பை நாடும்போது, இந்திரன் பருவ காலத்தில் மழை பொழிய மாட்டான், பல்வேறு வகையான இடர்கள் இடையறாமல் நாட்டைப் பீடித்துக் கொண்டிருக்கும்.(15) இழிந்தவனும், பாவியுமான ஒருவன், ஒரு பெண்ணையோ, பிராமணனையும் கொன்றுவிட்டு, சக மனிதர்களின் சபைகளில் மன்னன் மீதான எந்த அச்சமும் இல்லாமல் நிற்க நேர்ந்தால், அந்த க்ஷத்திரிய ஆட்சியாளனை ஆபத்து அச்சுறுத்தும்.(16) பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவாக, அந்நாட்டில் தேவன் ருத்ரன் தோன்றுகிறான். உண்மையில், பாவிகள், பழிதீர்க்கும் தேவனையே தங்கள் பாவங்களின் மூலம் கொண்டுவருகிறார்கள். பிறகு அவன் {ருத்ரன்}, நல்லோர் அல்லோர் ஆகியோர் அனைவரையும் ஒன்றாகவே {எந்தப் பாகுபாடுமின்றி} அழிக்கிறான்" என்றார் {கசியபர்}[2].(17)

[2] கும்பகோணம் பதிப்பில், "பாபியானவன் ஸ்திரீயையும், பிராம்மணனையும் கொன்றுவிட்டு அதை ஸபையிலும் பெருமையாகப் பேசிக் கொள்வான்; அரசன் அருகிலும் பயப்பட மாட்டான். அந்தக் காரணத்தால் அரசனுக்குப் பயம் நேரும். பாபிகள் வரம்பின்றிப் பாபத்தைச் செய்யும்போது இந்த அரசனும் மிகக் கொடியவனாவான். பாபிகள் தமது கெட்ட காரியங்களால் அரசனைக் கொடுஞ்செய்கையுள்ளவனாகச் செய்துவிடுவார்கள், பிறகு, ஸாதுக்கள் அஸாதுக்கள் யாவரையும் அரசன் அடிக்கத் தொடங்குவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே ருத்ரன் என்றே இருக்கிறது.

ஐலன் {இளையின் மகனான புரூரவஸ்}, "ருத்ரன் எங்கிருந்து தோன்றுவான்? அவனுடைய வடிவம் என்ன? உயிரினங்கள் உயிரினங்களாலேயே அழிக்கப்படுவதே காணப்படுகிறது. ஓ! கசியபரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக. ருத்ர தேவன் எங்கிருந்து உண்டாகிறான்?" எனக் கேட்டான்.(18)

கசியபர், "ருத்ரன் மனிதர்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறான். அவன் தானிருக்கும் உடல்களையும், பிறரின் உடல்களையும் அழிக்கிறான். {வாயு போன்ற} வழிமண்டலம் சார்ந்த தேர்வாகச் சொல்லப்படுகிறான், அவனது வடிவம் காற்றுத் தேவர்களைப் போன்றதாகும்" என்றார்.(19)

ஐலன், "காற்று வீசுவதால், அஃது அனைத்து சமயங்களிலும் மனிதர்களை அழிப்பதாகக் காண முடியவில்லை. மேகங்களின் தேவனும் மழைப்பொழிவால் அவ்வாறு அழிப்பதில்லை. மறுபுறம், தங்கள் புலனுணர்வுகளை இழக்கும் மனிதர்களே காமத்தினாலும், வன்மத்தினாலும் கொல்லப்படுகிறார்கள்" என்றான்.(20)

கசியபர், "ஒரு வீட்டில் சுடர்விடும் நெருப்பானது, மொத்த பகுதியையோ, மொத்த கிராமத்தையோ எரிக்கிறது. அதே போல, இந்தத் தேவனும், எவனாவது ஒருவனின் புலன்களைத் திகைக்கச் செய்கிறான், அந்தக் குழப்பம் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தீண்டுகிறது" என்றார்.(21)

ஐலன், "பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவால் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தண்டனை தீண்டுமேயானால், மனிதர்கள் ஏன் நற்செயல்புரிய வேண்டும்? உண்மையில் அவர்கள் ஏன் தீச்செயல்களில் இருந்து விலக வேண்டும்?" என்று கேட்டான்.(22)

கசியபர், "பாவிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாக ஆகிறான். எனினும், அவர்கள் பாவிகளுடன் கலந்திருப்பதால், பாவமற்றவர்களும் தண்டனையால் தீண்டப்படுகிறார்கள். ஈர விறகு, காய்ந்த விறகோடு கலந்திருந்தால், அத்தகு உடனுறைவின் விளைவால் அது நெருப்பால் எரிக்கப்படுகிறது. எனவே, பாவமற்றவர்கள் ஒருபோதும் பாவிகளுடன் கலந்து இருக்கக்கூடாது" என்றார்.(23)

ஐலன், "பூமியானது நேர்மையானவர்களையும், தீயோரையும் தாங்குகிறது. சூரியன், நேர்மையானவர்களையும், தீயோரையும் வெப்பமடையச் செய்கிறது. காற்றும் சமமாகவே அவர்களுக்கு வீசுகிறது. நீரும் சமமாகவே அவர்களைக் கழுவுகிறது" என்றான்.(24)

கசியபர், "ஓ! இளவரசே, உண்மையில் இதுவே உலகின் நடைமுறை. எனினும், மறுமையில் இஃது அவ்வாறில்லை. மறு உலகத்தில், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்களுக்கும் இடையில் சூழ்நிலையிலேயே பெரும் வேறுபாடு இருக்கிறது.(25) தகுதிபடைத்த {புண்ணியம் செய்த} மனிதர்கள், தேர் நிறைந்தவையும், தங்கம், அல்லது தெளிந்த நெய் ஊற்றப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டவையுமான உலகங்களை அடைகின்றனர். அந்த உலகங்கள் அமுதத்தின் இருப்பிடங்களைப் போன்றனவாகும். தகுதி படைத்த மனிதன் அங்கே பெரும் இன்ப நிலையை அனுபவிக்கிறான். மரணம், முதுமை, கவலை ஆகியன அங்கே கிடையாது.(26) பாவிகளுக்கான உலகம் நரகமாகும். இருளும், இடையறாத வலியும் {துன்பமும்} அங்கே இருக்கின்றன, அது துயரம் நிறைந்ததாகும். பாவம் நிறைந்த செயல்களைச் செய்த மனிதன், புகழ்க்கேட்டில் மூழ்கி, அங்கே பல வருடங்கள் வருத்தத்தில் ஈடுபடுகிறான்.(27)

பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையின் விளைவால் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களால் பீடிக்கப்படுகிறார்கள். ஒரு மன்னன் இஃதை அறிந்து கொண்டு, அனுபவமும், பரந்த அறிவும் கொண்ட ஒரு (பிராமணப்) புரோகிதனை நியமித்துக் கொள்ள வேண்டும்.(28) ஒரு மன்னன் முதலில் புரோகிதனைத் தன் அலுவலில் நியமித்த பிறகு, அவன் மணிமுடிசூட்டிக்கொள்ள வேண்டும். இதுவே விதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள், பிராமணனே அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவன் என்று அறிவிக்கின்றன. வேதங்களை அறிந்த மனிதர்கள், பிராமணனே முதலில் உண்டாக்கப்பட்டான் என்று சொல்கின்றனர்.(29) முந்திப் பிறந்ததன் விளைவால் அவனிடம் இவ்வுலகின் நல்ல பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. படைப்பாளன் உண்டாக்கிய சிறந்த பொருட்கள் அனைத்தின் உரிமையாளனான பிராமணன், முந்திப் பிறந்தவனாதலால், அவன் மரியாதைக்குத் தகுந்தவனும், அனைத்து உயிரினங்களின் வழிபாட்டுக்குத் தகுந்தவனுமாவான்.(30) ஒரு மன்னன் பலமிக்கவனாகவே இருந்தாலும், சாத்திரங்களின் ஆணைப்படி, பிற பொருட்களைக் காட்டிலும் தனித்துவமான, புகழ்பெற்ற, சிறந்த பொருட்களைப் பிராமணனுக்கு அளிக்க வேண்டும்.(31) க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கும் பிராமணன் பங்காற்றுகிறான், பிராமணனின் வளர்ச்சிக்கு க்ஷத்திரியன் பங்காற்றுகிறான். எனவே எப்போதும் பிராமணர்கள் மன்னர்களால் சிறப்பாக வழிபடப்பட வேண்டும்"என்றார் {கசியபர்}".(32)

சாந்திபர்வம் பகுதி – 73ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்