Tuesday, January 30, 2018

அரசவொழுக்கம்! - சாந்திபர்வம் பகுதி – 75

The conduct of the King! | Shanti-Parva-Section-75 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 75)


பதிவின் சுருக்கம் : அரசன் எவ்வாறான நடத்தைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தன் குடிமக்களை மேன்மையடையச் செய்வதிலும், மறுமையில் புகழுலகங்களை ஈட்டுவதிலும் எந்த மன்னன் வெல்கிறான் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, மன்னன், பரந்த மனம் கொண்டவனாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். அவன் நோன்புகளையும், தவங்களையும் நோற்க வேண்டும், மேலும் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும்.(2) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாக்கும் அவன், அறவோர் வரும்போது எழுந்திருந்து, அவர்களுக்குக் கொடையளித்து அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.(3) மன்னன் நேர்மையை {அறத்தை} மதித்தால், எங்கும் அது {நேர்மை} மதிக்கப்படும். மன்னனால் விரும்பப்படும் செயல்கள் மற்றும் பொருட்களை, அவனது குடிமக்களும் விரும்புவார்கள்.(4)

மன்னன், எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் இருக்கும் காலனைப் போலத் தன் எதிரிகளிடம் நடந்த கொள்ள வேண்டும். அவன் தன் நாட்டில் கள்வர்கள் எங்கிருப்பினும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டும், உறுதியின்மையால் அவன் ஒருபோதும் அவர்களில் எவரையும் மன்னிக்கக்கூடாது. (5) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மன்னன் தன் பாதுகாப்பில் இருக்கும் குடிமக்கள் ஈட்டும் தகுதியின் {புண்ணியத்தின்} நான்கில் ஒரு பகுதியை ஈட்டுகிறான்.(6) கல்வி, கொடைகள், ஆகுதிகள், தேவர்களை வழிபடுதல் ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்கள் அடையும் தகுதியில் நான்கில் ஒரு பகுதியை, அந்தக் குடிமக்களைப் பாதுகாப்பதின் மூலம் மட்டுமே மன்னன் அடைந்துவிடுகிறான்.(7) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் புறக்கணிப்பதால் நாட்டில் எழும் எந்தத் துயரின் விளைவாலும் அவனுடைய குடிமக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியையும் அவன் அடைகிறான்.(8) மன்னன், கொடூரனாகவும், பேச்சில் உண்மை இல்லாதவனாகவும் மாறுவதால் உண்டாகும் எந்தப் பாவத்திலும், அவன் ஒரு பகுதியை ஈட்டுகிறான் என்று ஒரு சிலரும், மொத்த பாவத்தையும் அடைகிறான் என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.(9)

அத்தகு பாவங்களிலிருந்து மன்னன் எவ்வாறு தூய்மையடையலாம் என்ற வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. கள்வர்களால் ஒரு குடிமகனிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீட்பதில் மன்னன் தவறினால், அவன் தன் கருவூலத்திலிருந்தாவது, அல்லது, அஃது இயலாவிட்டாலும், தன்னைச் சார்ந்திருப்பவர்களிடம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டாவது அந்தப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இழப்பீடு தர வேண்டும்.(10) அனைத்து வகையினரும், பிராமணர்களின் உடலையோ, உயிரையோ காக்க வேண்டியதைப் போலவே பிராமணர்களின் செல்வத்தையும் காக்க வேண்டும். பிராமணர்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கும் மனிதன் நாடுகடத்தப்பட வேண்டும்.(11) பிராமணனின் செல்வத்தைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அடையப்படும் பிராமணனின் அருளால் மன்னன் வெற்றிமகுடம் சூட்டுவான்.(12) மேகங்களிடம் இருந்து நிவாரணத்தை நாடும் உயிரினங்களைப் போலவோ, ஒரு பெரிய மரத்திடம் புகலிடத்தை நாடும் பறவைகளைப் போலவோ மனிதர்கள், தகுந்த மன்னனின் பாதுகாப்பை நாடுகிறார்கள்.(13) காமம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், தன் இச்சைகளை நிறைவுசெய்யவே எப்போதும் முனைபவனும், பேராசைக்காரனும், கொடூரனுமான ஒரு மன்னன், தன் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை" என்றார் {பீஷ்மர்}.(14)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அரசுரிமை அளிக்கும் மகிழ்ச்சி, அல்லது தன்னலம் பேணும் அந்த அரசுரிமையையே கூட நான் ஒருக்கணமும் விரும்பவில்லை. எனினும், அதன் மூலம் ஒருவன் அடையும் தகுதிக்காகவே {புண்ணியத்துக்காகவே} அதை நான் விரும்பினேன். எந்தத் தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்} அதனுடன் தொடர்பில்லை என்றே {இப்போது} எனக்குத் தெரிகிறது.(15) எனில், எந்தத் தகுதியும் ஈட்டமுடியாத அரசுரிமைக்கான எந்தத் தேவையும் இல்லை. எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் விருப்பத்தால் நான் காட்டிற்குள் ஓயப் போகிறேன். செங்கோலைப் புறந்தள்ளி, என் புலன்களை அடக்கி, புனிதமான காடுகளுக்குச் சென்று, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் துறவியாகி அறத்தகுதிகளை ஈட்டுவதில் முனையப் போகிறேன்" என்றான்[1].(16,17)

[1] கும்பகோணம் பதிப்பில், "ராஜ்யஸுகத்தில் விருப்பமில்லாத நான் தர்மத்தை வேண்டி ராஜ்யத்தில் விருப்பமுள்ளவனானேன். இதில் தர்மமில்லாததையும், அதர்மம் அதிகமாயிருப்பதையும் கவனிக்கையில் ஒரு க்ஷணமும் இதிலிருக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால், தர்மம் இல்லாத இந்த ராஜ்யம் எனக்கு வேண்டாம். தர்மத்தைச் செய்யும் விருப்பத்துடன் நான் அரண்யமே செல்லுகிறேன். பரிசுத்தமான அரண்யங்களில் தண்டத்தை விலக்கிவிட்டு இந்திரியங்களை ஜயித்தவனும், கிழங்குகனிகளைப் புஜிப்பவனுமான முனியாயிருந்துகொண்டு தர்மத்தை ஆராதிக்கப்போகிறேன்" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா,, உன் இதயத்தின் இயல்பு என்ன என்பதையும், குற்றமில்லாத உன் மனநிலையையும் நான் அறிவேன். எனினும், குற்றமில்லா தன்மையினால் மட்டுமே உன்னால் உன் நாட்டை ஆள முடியாது.(18) உன் இதயம் மென்மையானதாக இருக்கிறது. நீ கருணையுள்ளவனாகவும், அதீத நீதிமானாகவும் இருக்கிறாய். சக்தி இல்லாதவனாகவும், அறவோனாகவும், கருணை நிரம்பியவனாகவும் நீ இருக்கிறாய். எனவே, மக்கள் உன்னை அதிகமாக விரும்புகின்றனர்.(19) நீ உன் தந்தை மற்றும் பாட்டனின் நடத்தையைப் பின்பற்றுவாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தையை மன்னர்கள் ஒருபோதும் பின்பற்றக்கூடாது.(20) (உன் கடமையைச் செய்த பிறகு) இதுபோன்ற கவலையால் தீண்டப்பட்டவனாக ஒருபோதும் இராதே. குற்றமற்ற {புண்படுத்தா} நடத்தையை நீ ஒருபோதும் பின்பற்றாதே.(21) உன் புத்தியாலும், ஞானத்தாலும் தூண்டப்பட்டு, நீ பின்பற்ற விரும்பும் நடத்தையானது உன் தந்தை பாண்டுவின் ஆசிகளுக்கோ, உன் தாய் குந்தி உனக்காக வேண்டி வருவதற்கோ தகுந்ததில்லை.(22) துணிவு, வலிமை, உண்மை ஆகியவற்றையே உன் தந்தை எப்போதும் உனக்காக வேண்டினான். உயர்ந்த மனத்தையும், பெரும் தகைமையையுமே குந்தி எப்போதும் உனக்காக வேண்டினாள். சிராத்தங்கள் மற்றும் வேள்விகளில் ஸ்வாஹா மற்றும் ஸ்வாதாக்களுடன் அளிக்கப்படும் காணிக்கைகளை, பித்ருக்களும், தேவர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து எப்போதும் வேண்டுகின்றனர்.(24)

கொடைகள், கல்வி, வேள்விகள், குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை தகுதியை {புண்ணியத்தைத்} தருபவையாகவோ, பாவம் நிறைந்தவையாகவோ இருப்பினும், அவற்றைப் பயிலவும், நடைமுறைப்படுத்தவுமே நீ பிறந்திருக்கிறாய்.(25) ஓ! குந்தியின் மகனே, மனிதர்கள் தங்கள் மேல் வைக்கப்பட்ட சுமைகளையும், அவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டவற்றையும் சுமப்பதில் தோல்வியுற்றாலும், அவர்களது புகழ் ஒருபோதும் மங்குவதில்லை.(26) ஒரு குதிரை கூட நன்கு பயிற்சியளிக்கப்பட்டால், விழுந்துவிடாமல் சுமையைச் சுமப்பதில் வெல்லும். (அப்படியிருக்கையில் மனிதனாக இருக்கும் உன்னைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?) வெற்றியானது (செயல்களையும், சொற்களையும்} செயல்களைச் சார்ந்ததாகச் சொல்லப்படுவதால், ஒருவனுடைய செயல்களும், வார்த்தைகளும் முறையானவையாக இருந்தால் அவன் ஒருபோதும் நிந்தனைக்குள்ளாக மாட்டான்.(27) இல்லறம் நோற்கும் அறவோனாகவோ, மன்னனாகவோ, பிரம்மச்சாரியாகவோ எவ்வாறானவனாக இருப்பினும் எந்த மனிதனும் இடறாமல் செயல்படுவதில் வென்றதில்லை.(28) செயல்படாமல் இருப்பதே பாவம் நிறைந்தது என்பதால், அனைத்துச் செயல்களில் இருந்தும் விலகாமல், சிறு தகுதியாவது {புண்ணியமாவது} இருக்கும் நன்மையான செயலைச் செய்வதே சிறந்ததாகும்.(29)

நற்பிறவி கொண்டவனும், நீதிமானுமான ஒருவன் செழிப்படைவதில் வெல்கிறான் எனும்போது, மன்னனானவன், தன் காரியங்கள் அனைத்திலும் செழிப்பை அடைவதில் வெல்வான்.(30) ஒரு நாட்டை அடையும் அறம்சார்ந்த மன்னன் ஒருவன், கொடைகளால் {தானத்தால்} சிலரையும், பலத்தால் (தண்டத்தால்) சிலரையும், இனிமையான வார்த்தைகளால் {சாமத்தால்} சிலரையும் அடிபணியச் செய்ய முயல வேண்டும்.(31) நற்பிறவி கொண்டவர்களும், தங்கள் வாழ்வாதார இழப்பை அஞ்சும் கல்விமான்களும் எவனைச் சார்ந்திருக்கிறார்களோ, எவனை நம்பி நிறைவுடன் வாழ்கிறார்களோ, அவனைவிட {அந்த மன்னனைக் காட்டிலும்} அறவோன் வேறு எவனும் இல்லை"[2] என்றார் {பீஷ்மர்}.(32)

[2] கும்பகோணம் பதிப்பில், "நற்குலத்தில் பிறந்தவர்களும், ஜீவனமில்லாத பயத்தால் துன்பப்பட்டவர்களுமான வித்வான்களும் எந்த அரசனை அடைந்து திருப்தியுடன் இருக்கிறார்களோ, அந்த அரசனுக்கு அக்காரியத்தைக் காட்டிலும் மேலான தர்மம் ஒன்றுமில்லை" என்றிருக்கிறது.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ ஐயா, சொர்க்கத்திற்கு உகந்த நடத்தைகள் என்ன? அவற்றில் இருந்து பெறப்படும் பெரும் புகழின் இயல்பு என்ன? அதிலிருந்து அடையப்படும் உயர்ந்த செழிப்பு யாது? நீர் அறிந்தால் இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(33)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அச்சத்திலிருக்கும் ஒருவன் எந்த மனிதனிடம் ஒரு கணமேனும் நிவாரணம் அடைகிறானோ, அவனே நம்மில் சொர்க்கத்திற்கு மிகவும் தகுந்தவனாவான். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(34) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, உற்சாகமாகக் குருக்களின் மன்னன் ஆவாயாக, சொர்க்கத்தை அடைவாயாக, நல்லோரைக் காத்து, தீயோரைக் கொல்வாயாக.(35) மேகங்களின் தலைவனிடம் இருந்து  {வருணபகதேவனிடமிருந்து காக்கப்படும்} அனைத்து உயிரினங்களைப் போலவும், இனிய கனிகளுடன் கூடிய பெருமரத்திடம் இருந்து பறவைகளைப் போலவும், நியாயவான்கள் அனைவருடன் சேர்ந்த உன் நண்பர்கள் யாவரும்  உன்னிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்ளட்டும்.(36) கண்ணியமானவனும், துணிவுமிக்கவனும், தாக்கவல்லவனும், கருணை கொண்டவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்பவனும், தகைமையாளனும், நீதிமானுமான ஒருவனின் பாதுகாப்பையே மனிதர்கள் நாடுகிறார்கள்" என்றார் {பீஷ்மர்}.(37)

சாந்திபர்வம் பகுதி – 75ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்