Tuesday, February 06, 2018

வேள்விகளும், தவங்களும்! - சாந்திபர்வம் பகுதி – 79

Sacrifices and penances! | Shanti-Parva-Section-79 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 79)


பதிவின் சுருக்கம் : ரித்விக்குகளின் நடத்தை மற்றும் பண்புககளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வேள்விகளைக் குறித்தும், தவங்களைக் குறித்தும் சொன்னது; தவத்தின் மேன்மை...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நம் வேள்விகளில் புரோகிதர்களாக {ரித்விக்குகளாக} நியமிக்கப்படும் மனிதர்களின் நடத்தையும், செயல்பாடுகளும் எவ்வாறு இருக்க வேண்டும்? ஓ! மன்னா {பீஷ்மரே}, அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{சாமவேதமான} சாமங்கள் உள்ளிட்ட சந்தங்களையும், சுருதிகளில் சொல்லப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தையும் அறிந்தோரும், மன்னனின் செழிப்புக்கு வழிவகுக்கும் அறச்செயல்கள் அனைத்தையும் செய்யத்தக்கவர்களுமான பிராமணர்களே புரோகிதர்களாக {ரித்விக்குகளாகத்} தகுந்தவர்கள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(2) அவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய மாறா பற்றுறுதியுடன் கூடியவர்களாகவும், மன்னர்களிடம் ஏற்படைய வகையில் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடனும், அனைவரிடமும் சம பார்வையுடனும் இருக்க வேண்டும்.(3) அவர்கள் கொடூரமற்றவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அநியாய வட்டிக்கு விடுபவர்களாக அவர்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவர்கள் எப்போதும் எளிமையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.(4) அமைதி நிறைந்த தன்மை, போலித்தன்மையின்மை, அடக்கம், ஈகைத்தன்மை, தற்கட்டுப்பாடு, நிறைவுடைமை, புத்திக்கூர்மை, உண்மை, நோன்பு நோற்றல், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, காமம் மற்றும் தீய நோக்கம் இல்லாமை, மூன்று சிறந்த குணங்களுடைமை,(5) பொறாமையின்மை, அறிவுடைமை ஆகியவற்றைக் கொண்ட ஒருவன் பிரம்மனின் ஆசனத்திற்கே {பிரம்மனின் பதவிக்கே, அதாவது வேள்விகளின் ரித்விக்காகத்} தகுந்தவனாவான்" என்றார்.(6)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வேள்விகளில் தக்ஷிணைக்கொடையைக் குறித்து வேத உரைகள் இருக்கின்றன. எனினும், எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எந்த விதியும் இல்லை.(7) செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தல் தொடர்புடைய நோக்கங்களில் இருந்து (தக்ஷிணைக் கொடை) இவ்விதி பிறக்கவில்லை. கொடுக்க வேண்டிய விளைவால் எழுந்த இவ்விதியின் ஆணை திறனில்லாதவர்களின் வழக்குகளில் பயங்கரமானதாக இருக்கிறது. அந்த ஆணை வேள்வி செய்பவனின் தகுதியைக் காண்பதில்லை[1].(8) ஒரு மனிதன் அர்ப்பணிப்புடன் ஒரு வேள்வியைச் செய்ய வேண்டும் என்ற இந்தத் திறன்தேர்வானது {விதியானது} வேதங்களில் இருக்கிறது. ஆனால், வேள்வியானது பொய்மையினால் கறைபடியும்போது, அர்ப்பணிப்பினால் என்ன செய்ய முடியும்?"[2] என்று கேட்டான்.

[1] "இதம் சாஸ்த்ரம் பிரதிதானம் ந Idam caastram Pratidhanam na என்பது நீலகண்டரால் இவ்வாறே விளக்கப்படுகிறது. குறிப்பிட்ட தக்ஷிணையைக் கொடுக்கும் திறனில்லாதவர்களின் வழக்குகளில், வேள்வி செய்பவன் தான் கொண்டுள்ள அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று இருக்கிறது. ஒரு வேள்வியை நிறைவு செய்வதற்காகத் தன் செல்வமனைத்தையும் கொடுக்க எவனுக்கு மனம் வரும்? இந்த வழிகாட்டல், அல்லது ஆணையானது நிச்சயம் பயங்கரமானதே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனிதர்களின் சக்தியைச் சிறிதும் கவனியாமல் வெளிவந்த இவ்வேத வசனத்தின் கட்டளையானது மிக்கக் கடுமையாக இருக்கிறது" என்றிருக்கிறது.

[2] "உண்மையில் சொல்லப்பட்டுள்ள தக்ஷிணைகளுக்கு மாற்றைக் கண்டுபிடிப்பதில் பொய்மை இருக்கிறது. அவை உயிருடன் கூடிய ஒரு பசுவுக்குப் பதில் சமைத்த உணவு, துணிக்குப் பதில் தானியப் பருக்கை, தங்கத்திற்குப் பதில் தாமிர நாணயம் போன்றவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வேதங்களை அவமதிப்பதாலோ, வஞ்சகத்தாலோ, பொய்மையினாலோ எந்த மனிதனும் அருளையோ, தகுதியையோ {புண்ணியத்தையோ} அடைய முடியாது. இது மாறானது என்று ஒருபோதும் நினைக்காதே.(10) தக்ஷிணை என்பது வேள்வியின் ஓர் அங்கமாகும்; அது வேதங்களின் ஊட்டத்திற்கு வழிவகுக்கிறது. தக்ஷிணையில்லாத வேள்வியானது ஒருபோதும் முக்திக்கு வழிவகுக்காது.(11) எனினும், ஒரு பூர்ணபாத்திரத்தின்[3] உச்சவினையானது, எவ்வளவு செழிப்பான எந்தத் தக்ஷிணைக்கும் இணையானது[4]. எனவே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, மூன்று வகையைச் சேர்ந்தோரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்[5].(12) சோமமானது பிராமணர்களுக்கு மன்னனைப் போன்றது என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன. இருப்பினும் அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக இல்லையென்றாலும், வேள்விகளைச் செய்வதற்காக அதை விற்கிறார்கள்.(13) நீதிமிக்க நடத்தை கொண்ட முனிவர்கள் அறநெறிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில், சோமவிற்பனையின் மூலம் செய்யப்படும் வேள்வியானது, வேள்விகளை நீட்டிக்கவே உதவுகிறது என்று அறிவிக்கிறார்கள்[6].(14) மனிதன், வேள்வி, சோமம் ஆகிய இம்மூன்றும் நற்பண்புடன் இருக்க வேண்டும். தீய பண்பு கொண்ட மனிதன் இம்மைக்கானவனுமில்லை; மறுமைக்கானவனுமில்லை.(15) அதீத உடலுழைப்பால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு உயர் ஆன்ம பிராமணர்களால் செய்யப்படும் வேள்வியானது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை என்ற திறன்தேர்வையும் நாம் கேள்விப்படுகிறோம்[7].(16)

[3] 256 கைப்பிடி அரிசி {கைப்பிடி என்பது இரண்டு உள்ளங்கைகளும் நிறைந்த அளவாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 256 Handfuls of rice என்றிருக்கிறது}.

[4] கும்பகோணம் பதிப்பில், "பொருளில்லாத மனிதனுக்குப் பூர்ணபாத்திரமே குறைவின்றிப் போதுமான (ஆயிரத்திருநூறு பசுக்களுக்கு ஸமமான) தக்ஷிணையாகும்" என்றிருக்கிறது.

[5] "வேள்வி செய்பவனால் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி தக்ஷிணை கொடுக்க இயலவில்லையென்றாலும், அதற்குப் பதிலாக ஒரு பூர்ணபாத்திரத்தை அர்ப்பணிப்புடன் கொடுப்பத்தே கூடச் செழிப்பான தக்ஷிணைக்கு இணையான பலனைக் கொடுக்கவல்லதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] அஃதாவது, அதுபோன்றதொரு வேள்வியில், அது {சோம விற்பனை} எந்தத் தகுதியும் உண்டாக்காமல் இருப்பதற்குப் பதில், வேள்விகளின் காரணத்தை நீட்டிக்கும் வழிமுறையாகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அத்தகு வேள்வியானது தகுதி நிறைந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸோமம் பிராம்மணர்களுக்கு அரசென்று வேதம் சொல்கிறது. அதை ஜீவனத்திற்காகவன்றி விலை செய்து தர்மப்படி கிடைத்த பொருளால் செய்யப்படும் யாகமும் தர்மமேயாகுமென்று தர்மமறிந்த பெரியோர்கள் உபதேசிக்கிறார்கள்" என்றிருக்கிறது.

[7] கும்பகோணம் பதிப்பில், "புருஷனும், யாகமும், ஸோமலதையும் நீதி தவறாமல் உபயோகப்பட்டால் பயன்படும். அவ்விதமின்றிக் கபடமுதலிய குற்றமுள்ள புருஷன் தன் சரீரத்தின் ஜீவனத்தைக் கருதி அக்னியிற் செய்த யாகங்கள், அந்தப் பிராம்மணன் மஹாத்மாவாயிருந்தாலும் அவனுக்கும் பிறருக்கும் நற்பயனைக் கொடுக்கத்தக்கவையல்லவென்பது வேதத்தினால் கூறப்படுகிறது." என்றிருக்கிறது. இந்த விளக்கமே சரியாகத் தெரிகிறது.

வேள்விகளை விடத் தவங்கள் உயர்வானவை என்று வேதங்களில் ஒரு தீர்மானம் இருக்கிறது. நான் இப்போது உனக்குத் தவங்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! கல்விமானான இளவரசனே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேட்பாயாக.(17) தீங்கிழையாமை, பேச்சில் உண்மை, நல்லுணர்வு, கருணை ஆகியவையே தவங்கள் எனவும், உடல் மெலிவது தவமல்ல எனவும் ஞானிகள் கருதுகின்றனர்.(18) வேதத்தை அவமதிப்பது, சாத்திரவிதிகளுக்குக் கீழ்ப்படியாமை, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை மீறல், ஆகியவை  தன்னழிவை உண்டாக்குபவை.(19) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, நாளின் பத்து வேளைகளில் நெருப்பில் பத்து ஆகுதிகளை ஊற்றுவோர் விதித்தவற்றைக் கேட்பாயாக. தவமெனும் வேள்வியைச் செய்வோருக்கு, அவர்கள் பிரம்மத் திறனுடன் முயலும் யோகமே கரண்டியாகும்; அவர்களது இதயமே தெளிந்த நெய்யாகும்; உயர்ந்த அறிவே பவித்ரமாகும்[8].(20) அனைத்துவகைக் கபடங்களும் மிருத்தியுவாகும், அனைத்து வகை உண்மையும் பிரம்மம் என்றழைக்கப்படுகிறது. இதுவே ஞானத்தை உள்ளடக்கியிருக்கிறது. அமைப்பைக் கட்டுபவர்களின் வீரகாவியங்கள் இதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார் {பீஷ்மர்}[9].(21)

[8] "வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யைத் தெளிக்கப் பயன்படுத்தப்படும் இரு குசப் புற்களால் {வெட்டி வேரால்} ஆனதே பவித்திரமாகும்" எனக் கங்குலி விளக்குங்கிறார்.

[9] கும்பகோணம் பதிப்பில், "தசஹோத்ரு என்னும் மந்திரங்களின் விதி எங்ஙனமென்பதைக் கவனித்துப்பார், "ஞானம் ஸ்ருக்கு, புத்தி நெய்” என்று கூறும் இம்மந்திரங்கள் மிகவுத்தமமான ஆத்ம ஞானத்தைப் பரிசுத்தமென்று கூறுகின்றன. ஞானத்தைப் பற்றிய விஷயம் இவ்வளவே. கபடம் யாவும் மிருத்யுவுக்கு இடமாகும். உண்மையென்பது ப்ரம்மத்தின்பதமாகும். அதிகச் சொல்லால் என்ன பயன்?" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 79ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்