Thursday, March 08, 2018

போர்வீரர்களின் அங்கலக்கணம்! - சாந்திபர்வம் பகுதி – 101

The indications of warriors! | Shanti-Parva-Section-101 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 101)


பதிவின் சுருக்கம் : எந்தெந்த நாடுகளைச் சார்ந்தோர், எந்தெந்தப் போர்முறைகளில் வல்லவர்கள் என்பதையும், போர்வீரர்களின் அங்க அடையாளங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "போருக்குத் தகுந்தவர்களாகத் தங்களை வகைப்படுத்திக் கொள்ளப் போராளிகள் என்ன மனநிலையை மற்றும் என்ன நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும்? எவ்வாறு ஆயுதந்தரித்திருக்க வேண்டும்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(போராளிகளில் {அந்தந்த நாடுகளைச் சேர்ந்த} குறிப்பிட்ட குழுவினரின்) பயன்பாட்டில் மிகப் பரிச்சயமாக இருக்கும் ஆயுதங்களையும், வாகனங்களையும் {அவர்கள்} ஏற்றுக்கொள்வதே முறையாகும். துணிச்சல்மிக்கப் படைவீரர்கள், அந்த ஆயுதங்களையும், வாகனங்களையும் ஏற்றுக்கொண்டே போரில் ஈடுபடுகிறார்கள்.(2)

Map of Mahabharatha period- Mahabharatham
காந்தாரர்கள், சிந்துக்கள், சௌவீரர்கள் ஆகியோர் தங்கள் நகங்கள் மற்றும் வேல்களைக் கொண்டு சிறப்பாகப் போரிடுவார்கள். அவர்கள் துணிச்சல்மிக்கவர்களாகவும், பெரும்பலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது படைகள், அனைத்துப் படைகளையும் வெல்லவல்லவையாக இருக்கின்றன.(3)

உசீநரர்கள், பெரும் பலம் கொண்டவர்களாகவும், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

கிழக்கத்தியர்கள், யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடுவதில் திறன்பெற்றவர்களாகவும், நீதியற்ற போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(4)

யவனர்கள், காம்போஜர்கள், மதுராவைச் சுற்றிலும் வசிப்போர் ஆகியோர் வெறுங்கரங்களால் போரிடுவதில் திறன்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[1].

[1] கும்பகோணம் பதிப்பில், "குதிரைச் சண்டையில் ஸமர்த்தர்களாயிருப்பார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் "வெறுங்கைகளால் போரிடுவதில் திறம்பெற்றவர்கள்" என்றே இருக்கிறது.

தெற்கத்தியர்கள் தங்கள் கரங்களில் வாளுடன் போரிடுவதில் திறம்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[2].(5)

[2] இதன்பிறகு, கும்பகோணம் பதிப்பில், "அவந்தியிலுள்ளவர்கள் பெரிய சூரர்களாயிருப்பார்கள். மாளவ தேசத்திலுள்ளவர்கள் தேர், யானை, குதிரை, காலாளென்னும் நான்கு அங்கமுள்ள படையிலும் மிக்கச் சூரர்களாயிருப்பார்கள். (இவர்களில்) ஒருவன் தனியாயிருந்தாலும் யுத்தத்தில் ஆயிரம் பெயரை எதிர்த்து நிற்பான்" என்றிருக்கிறது. பிபேகத்திப்ராயிலும், கங்குலியிலும் இந்தக் குறிப்புகள் இல்லை.

பெரும் பலமும், பெரும் துணிவும் படைத்தோர் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பிறக்கிறார்கள் என்பது நன்கறியப்பட்டது. அவர்களின் அறிகுறிகளை விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)

சிங்கம், அல்லது புலி போன்ற குரலையும், கண்களையும் கொண்டோர், சிங்கம் மற்றும் புலியின் நடையைக் கொண்டோர், பாம்பு அல்லது புறா போன்ற கண்களைக் கொண்டோர் ஆகியோர் அனைவரும், பகைவரின் படையணிகளைக் கலங்கடிக்கவல்லவர்கள் ஆவர்[3].(7). மான் போன்ற குரலும், சிறுத்தை, அல்லது காளை போன்ற கண்களும் கொண்டவர்கள் பெரும் சுறுசுறுப்புக் கொண்டவர்கள் ஆவர். மணியோசைக்கு ஒப்பான குரலைக் கொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும், தீச்செயல் புரியக்கூடியவர்களாகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(8) மேகங்களைப் போன்ற ஆழ்ந்த ஒலியைக் குரலாகக் கொண்டவர்கள், கோபம் நிறைந்த முகங்களைக் கொண்டவர்கள், ஒட்டகங்களைப் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், கோணலான மூக்கும், நாக்கும் கொண்டவர்கள் ஆகியோர் பெரும் வேகத்தைக் கொண்டவர்களாகவும், பெருந்தொலைவுக்குத் தங்கள் ஆயுதங்களை ஏவவோ, வீசவோ கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(9) பூனை போன்று வளையும் உடல்களும், மெலிந்த முடியும், மெலிந்த தோலும் கொண்டவர்கள், பெரும் வேகம் கொண்டவர்களாகவும், ஓய்வறியாதவர்களாகவும், கிட்டத்தட்ட போரில் வெட்டப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.(10)

[3] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் குளிங்கம் Kulinga என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அது பாம்பைக் குறிக்கிறது என நீலகண்டர் நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சிங்கம்புலிகளின் குரலும் கண்களும் போன்ற குரலும் கண்களுமுள்ளவர்களும், சிங்கம்புலிகள் போல நடக்கிறவர்களும், மாடப்புறா ஸர்ப்பம் இவைகளின் கண்போன்ற கண்ணுள்ளவர்களுமாகிய இவர்கள் யாவரும், சூரர்களும், சத்துருக்களை வெல்லத்தக்கவர்களுமாயிருப்பார்கள்" என்றிருக்கிறது.

உடும்பு போன்ற மூடிய கண்களைக் கொண்ட சிலர், மென்மையான மனநிலை கொண்டவர்களாகவும், குதிரையின் வேகமும், குரலும் கொண்டவர்கள், எதிரிகள் அனைவருடனும் போரிடத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(11) கடினமான உடல் படைத்தவர்களாக, அழகானவர்களாக, கட்டுடல் கொண்டவர்களாக, அகன்ற மார்பைக் கொண்டவர்களாக இருப்போர், பகைவனின் பேரிகையையோ, எக்காளத்தையோ கேட்டதும் கோபமடைவோர், அனைத்து வகை அமளிகளிலும் மகிழ்ச்சியில் திளைப்போர்,(12) ஈர்ப்பைக் குறிக்கும் வகையிலான கண்களை, அல்லது வெளியில் பிதுங்கிய கண்களை, அல்லது பச்சை நிறக் கண்களைக்[4] கொண்டோர், நெரிந்த புருவங்களுடன் கருமையடைந்த முகங்களைக் கொண்டோர், கீரிப்பிள்ளையைப் போன்ற கண்களைக் கொண்டோர் ஆகிய அனைவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், போரில் தங்கள் உயிர்களைக் கைவிட வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) கோணலான கண்களும், அகன்ற நெற்றியும், சதைப்பற்றில்லாத கன்னங்களும், வஜ்ரங்களைப் போன்ற உறுதிமிக்கக் கரங்களும், வளையக் குறிகள் கொண்ட விரல்களும், மெலிந்த உடல்களும், புடைத்துத் தெரியும் நரம்புகளும் கொண்டோர்,(14) போர்க்களத்தில் விரைந்து செல்லக்கூடியவர்களாவர். மதங்கொண்ட யானைகளைப் போன்ற அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருகிறார்கள்.(15)

[4] கும்பகோணம் பதிப்பில் மஞ்சள் நிறக் கண்கள் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கடுமையான கண்கள் என்றிருக்கிறது.

பச்சைநிறத்தில்[5] பிளந்து சுருளாக இருக்கும் மயிர் கொண்டவர்கள், பருத்த விலாப்புறங்களுடன் கொளுத்த சதை கொண்டவர்கள், உயர்ந்த தோள்களையும், அகன்ற கழுத்துகளையும் கொண்டவர்கள், அச்சமேற்படுத்தும் முகங்களையும், பருத்த ஆடுதசைகளையும் கொண்டவர்கள்,(16) (வாசுதேவனின் குதிரையான) சுக்ரீவத்தைப் போன்றோ, வினதையின் மகனான கருடனின் வாரிசுகளைப் போன்றோ சீற்றமுடையவர்கள், உருண்ட தலைகள், அகன்ற வாய், பூனைகளைப் போன்ற முகங்கள் ஆகியவற்றைக் கொண்டோர்,(17) கீச்சுக்குரலும், கோபம் நிறைந்த இயல்பும் கொண்டோர், ஆரவாரத்துடன் போரில் விரைவோர், தீய நடத்தையும், நிறைந்த அகந்தையும் கொண்டோர், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டோர், வெளிப்புற மாவட்டங்களில் வாழ்வோர் ஆகிய அனைவரும்,(18) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, போரில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகு துருப்பினரே படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் போரில் தங்கள் எதிரிகளைக் கொன்று, புறமுதுகிடாமல் கொல்லப்படுபவர்களுமாக இருக்கிறார்கள்.(19) தீய நடத்தையும் அந்நிய பழக்க வழக்கங்களும் கொண்டோர், மென்மையான பேச்சைத் தோல்வியின் அறிகுறியாகக் கருதுகிறர்கள். அவர்கள் மென்மையாக நடத்தப்பட்டால், எப்போதும் அரசுக்கு எதிரான கோபத்தையே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்" என்றார் {பீஷ்மர்}.(20)

[5] கும்பகோணம் பதிப்பில் சிவப்பு மயிர் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் ஒளிரும் மயிர்நுனி கொண்டோர் என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 101ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்