Wednesday, March 14, 2018

நன்கு தீட்டப்பட்ட வஞ்சகத் திட்டங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 105

Fraud Schemes well-devised! | Shanti-Parva-Section-105 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 105)


பதிவின் சுருக்கம் : பகைவர்களை வெல்வதற்குப் பின்பற்றக்கூடிய வஞ்சகத் திட்டங்களைக் குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Kshemadarcin and Kalakavrikshiya - Mahabharata  க்ஷேமதர்சின் _ காலவிருக்ஷீயர் -மகாபாரதம்

தவசி {காலகவிருக்ஷீயர் கோசல நாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்} சொன்னார், "ஓ! க்ஷத்திரியா, மறுபுறம், உன் நாட்டை மீட்பதற்கு உனக்கு இன்னும் ஆற்றல் இருப்பதாக நினைத்தால், நீ   பின்பற்ற வேண்டிய கொள்கை வழியைக் குறித்து உன்னோடு உரையாடுவேன்.(1) அந்தக் கொள்கை வழியை நீ பின்பற்றி, முயற்சி செய்ய முனைந்தால், உன்னால் உன் செழிப்பை மீட்க முடியும். விபரமாக நான் உனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் கவனமாகக் கேட்பாயாக. அந்த ஆலோசனைகளின்படி உன்னால் செயல்பட முடிந்தால், அபரிமிதமான செல்வத்தையும், உண்மையில், உனது நாட்டையும், அரசு அதிகாரத்தையும், பெருஞ்செழிப்பையும் நீ அடைவாய்.(3) ஓ! மன்னா, நீ அதை விரும்பினால் எனக்குச் சொல்வாயாக, அப்போது நான் உனக்கு அந்தக் கொள்கையைக் குறித்துச் சொல்வேன்" {என்றார் காலகவிருக்ஷீயர்}.(4)



மன்னன் {க்ஷேமதர்சின் காலவிருக்ஷீயரிடம்}, "ஓ! புனிதமானவரே, நீர் சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வீராக. உமது ஆலோசனைகளைக் கேட்பதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் நான் விரும்புகிறேன். இன்னும் உம்முடனான இந்தச் சந்திப்பு (எனக்கான) விளைவுகளில் பலன்நிறைந்ததாக இருக்கட்டும்" என்றான்.(5)



Videha - Mithila - Mahabharata - விதேஹ நாடு -மிதிலை
தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, "செருக்கு, ஆசை, கோபம், இன்பம், அச்சம் ஆகியைவற்றைக் கைவிட்டு, பணிவுள்ளவனாகவும், கூப்பிய கரங்களுடனும் உன் எதிரிகளுக்காகக் காத்திருப்பாயாக {எதிரிகளுக்குப் பணிவிடை செய்வாயாக}? நல்லவையும், தூயவையுமான செயல்களை எப்போதும் செய்துவரும் மிதிலையின் ஆட்சியாளனான ஜனகனுக்கு நீ பணிவிடை செய்வாயாக. உண்மையில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்த விதேஹ மன்னன் {ஜனகன்}, நிச்சயம் உனக்குப் பெருஞ்செல்வத்தை அளிப்பான்.(7) நீ அந்த மன்னனுக்கு {ஜனகனுக்கு} வலக்கரமாகி, அனைத்து மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவாயாக. அதன் விளைவாக, துணிவு, விடாமுயற்சி, தூய நடத்தை கொண்டவர்களும், முக்கியமான ஏழு குற்றங்களில் இருந்து விடுபட்டவர்களுமான பல கூட்டாளிகளை அடைவதில் நீ வெல்வாய்.(8) அடக்கப்பட்ட ஆன்மாவையும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களையும் கொண்ட ஒரு மனிதன், தன் கடமைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தன்னை உயர்த்திக் கொள்வதிலும், பிறரை இன்புறச் செய்வதிலும் வெல்வான்.(9) நுண்ணறிவையும், செழிப்பையும் கொண்ட ஜனகனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஆட்சியாளனின் வலக்கரமாகி, நிச்சயம் நீ அனைவரின் நம்பிக்கையையும் அடைந்து மகிழ்வாய்.(10)

இவ்வாறு பெரும்படையைத் திரட்டி, நல்ல அமைச்சர்களுடன் ஆலோசித்து, உன் எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி, ஒரு மனிதன் வில்வக்காயைக் கொண்டு மற்றொரு வில்வக்காயைப் பிளப்பதைப் போலவே அவர்களுக்குள் ஒருவரையொருவர் எதிர்க்கச் செய்வாயாக. அல்லது, உன் எதிரியின் எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, அவனது சக்தியை அழிப்பாயாக.(11) பிறகு, எளிதிற்கிடைக்காத நல்ல பொருட்களிலும், அழகிய பெண்களிலும், விலைமதிப்புமிக்கத் துணிமணிகள், படுக்கைகள், இருக்கைகள், மற்றும் வாகனங்களிலும், வீடுகளிலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் விலங்குகளிலும், சாறுகள், நறுமணப்பொருட்கள் மற்றும் கனிகளிலும் உன் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்து, அவனை அழிவடையச் செய்வாயாக[1].(13) ஒருவனுடைய எதிரி இவ்வாறு நிர்வகிக்கப்பட்டால், அல்லது அவனைக் கவனிக்காமல் விட்டால், நல்ல கொள்கையின் படி செயல்பட விரும்பும் ஒருவன், அந்த எதிரி ஒருபோதும் எதையும் அறியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்[2].(14) ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை இன்பங்களிலும் இன்புற்று, நாய், மான், காகம் ஆகியவற்றின் நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரிகளிடம் வெளிப்படையான நட்புடன் நடந்து கொள்வாயாக.(15)

[1] "இந்தப் பொருட்களில் உன் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்வதால், உன் எதிரியின் கருவூலம் தீர்ந்துவிடக்கூடும். இதைச் செய்தால் உன் எதிரி விரைவில் அழிவடைவான் என்ற பொருளை உணர்த்துவதாக இது தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சத்துரு தானே நசிக்கும்படி, அடைய முடியாத நல்ல வஸ்துக்கள், ஸ்திரீகள், போர்வைகள், படுக்கைகள், ஆஸனங்கள், வாஹனங்கள், பெரியவிலைபெற்ற வீடுகள், பக்ஷிகள், மிருகக்கூட்டங்கள், ரஸங்கள், கந்தங்கள், கனிகள் இவைகளில் பற்றுள்ளவனாக அவனைச் செய்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் பற்றுள்ளவனாயிருந்தால் அவனைத் தடுக்க வேண்டிய விஷயத்தில் தடுக்கவும் வேண்டும். உபேக்ஷையாக இருந்தால் தான் சத்துருவென்பது வெளியாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் மேற்கண்ட பொருட்களில் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்து வேண்டும் என்றும், "உனக்கு எதிர்வினையாற்றப்பட்டால், நீ அஃதை அலட்சியம் செய்யக்கூடாது. எனினும், நீ உன் எதிரியைக் கட்டுப்படுத்த விரும்பினால், எதையும் நீ வெளிப்படையாகச் செய்யக்கூடாது" என்றுமிருக்கிறது.

பெரியவையும், நிறைவேற்றக் கடினமானவையுமான சாதனைகளை அவர்களை மேற்கொள்ளச் செய்வாயாக. மேலும் அவர்கள், பலமிக்க எதிரிகளுடன் பகைமையில் ஈடுபடும்படியும் பார்த்துக் கொள்வயாக.(16) இனிமையான நந்தவனங்கள், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகிவற்றில் அவர்களது கவனத்தைத் திருப்பி, அத்தகு இன்ப நுகர் பொருட்களை அளித்து, உன் எதிரிகளின் கருவூலத்தை வற்றச் செய்வாயாக.(17) உன் பகைவனை வேள்விகள் செய்ய வைத்து, கொடைகளை அளிக்க வைத்து, பிராமணர்களை நிறைவு செய்வாயாக. (உன் கரங்களால் அந்தப் பரிசுகளைப் பெற்ற) அவர்கள் {பிராமணர்கள்}, பதிலுக்கு (தவங்களையும், வேதச் சடங்குகளையும் செய்வதன் மூலம்) உனக்கு நன்மையைச் செய்து, ஓநாய்களைப் போல உன் எதிரிகளை விழுங்குவார்கள்.(18) நீதிமிக்கச் செயல்களைச் செய்யும் மனிதன் உயர்ந்த கதியையே அடைவான் என்பதில் ஐயமில்லை. அத்தகு செயல்களின் மூலம் மனிதர்கள், சொர்க்கத்தில் உயர்ந்த புகழ் உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறார்கள்.(19) (நல்ல, அல்லது நியாயமற்ற செயல்களின் மூலம்) உன் எதிரிகளின் கருவூலம் தீர்ந்து போனால், ஓ! கோசல இளவரசே, அவர்கள் ஒவ்வொருவரும் அடக்கப்பட வேண்டும்.(20)

கருவூலமே, சொர்க்கத்தில் புகழுக்கும், பூமியில் வெற்றிக்கும் வேராக இருக்கிறது. எதிரிகள் அவர்களுடைய கருவூலங்களின் விளைவாலேயே அத்தகு மகிழ்ச்சியில் இன்புற்றிருக்கிறார்கள். எனவே, அனைத்து வழிகளிலும் கருவூலமானது வற்றச் செய்யப்பட வேண்டும். உன் எதிரியின் முன்பு உழைப்பை மெச்சாதே, ஆனால் விதியை உயர்வாகப் பேசுவாயாக.(21) தேவர்களின் வழிபாடு சார்ந்த செயல்பாடுகளையே அதிகமாகச் சார்ந்திருக்கும் மனிதன் விரைவில் அழிவடைவான் என்பதில் ஐயமில்லை. நீ உன் எதிரியை விஸ்வஜித் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியைச் செய்ய வைத்து, அவனது உடைமைகளுக்கான வழிமுறைகள் அனைத்தையும் அவனை இழக்கச் செய்வாயாக.(22) இதன் மூலம் உனது நோக்கம் நிறைவேறும். (வற்றிய கருவூலத்தை மீண்டும் நிரப்புவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி {மக்களின் பொருட்களை} மன்னன் அபகரித்து வருவதால்) நாட்டின் சிறந்த மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை உன் எதிரிக்குச் சொல்லி, (உலகம் சார்ந்த உடைமைகளை அனைத்தையும் எதிரியிடம் இருந்து வற்றச் செய்வதற்காக) யோகக் கடமைகளை நன்கறிந்த  உயர்ந்த தவசி எவரையாவது அவனுக்குச் சுட்டிக்காட்டுவாயாக.(23) அப்போது உன் எதிரி துறவைப் பின்பற்றி, முக்தி வேண்டி வனத்திற்குள் ஓய்ந்து போவான். பிறகு, எதிர்பார்க்கும் விளைவைத் தரக்கூடிய உயர்ந்த மூலிகைகள், செடிகள், செயற்கை உப்புகள் ஆகியவற்றைக் கொதிக்கச் செய்வதன் மூலம் உண்டாக்கப்பட்ட மருந்துகளின் உதவியுடன், (உன் எதிரியின் ஆட்சிப் பகுதிகளில் உள்ள) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை அழிப்பாயாக.(24) இவையும், வஞ்சனையுடன் தொடர்புடையவையும், நன்கு தீட்டப்பட்டவையுமான திட்டங்கள் பலவும் இருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வாறே நஞ்சின் மூலம் ஓர் எதிரி நாட்டின் மக்கள் தொகையை அழிக்க முடியும்" என்றார் {காலகவிருக்ஷீயர்}.(25)

சாந்திபர்வம் பகுதி – 105ல் உள்ள சுலோகங்கள் : 25


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்