Thursday, March 15, 2018

அமைதி நிறுவலே உயர்கடமை! - சாந்திபர்வம் பகுதி – 106

Establishment of peace is the highest duty! | Shanti-Parva-Section-106 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 106)


பதிவின் சுருக்கம் : க்ஷேமதர்சினுக்கும், ஜனகனுக்கும் இடையில் நட்பை ஏற்படுத்திய காலகவிருக்ஷீயர்; க்ஷேமதர்சினை மரியாதையுடன் நண்பனாய் ஏற்று அவனுடன் உரையாடிய ஜனகன்; அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும் என்பதை விளக்க இந்தக் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Janaka and Kshemadarcin - Mahabharata  ஜனகன் _ 
க்ஷேமதர்சின்_மகாபாரதம்

மன்னன் {க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, "ஓ! பிராமணரே, வஞ்சகம், அல்லது மோசடியின் மூலம் வாழ்வைத் தாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. செல்வமானது எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும், நியாயமற்ற வழிமுறைகளில் ஈட்டப்படும் செல்வத்தை நான் விரும்பவில்லை.(1) நமது உரையாடலின் தொடக்கத்திலேயே நான் இந்த வழிமுறைகளைத் தவிர்த்தேன். நிந்தனைக்கு வழிவகுக்காதவையும், அனைத்து வகையிலும் எனக்கு நன்மையே செய்பவையும், விளைவுகளில் தீங்கில்லாதவையுமான செயல்களை மட்டுமே செய்து இந்த உலகில் நான் வாழ விரும்புகிறேன். நீர் சுட்டிக்காட்டும் வழிகளைப் பின்பற்ற இயலாதவனாக நான் இருக்கிறேன். உண்மையில், இந்தப் போதனைகள் எனக்குத் தகாது" என்றான்.(2,3)


Kosala - Videha - Mahabharata - கோசலம் -விதேஹம்
தவசி {காலகவிருக்ஷீயர் கோசலநாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்}, "ஓ! க்ஷத்திரியா, நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உன்னை அறவுணர்ச்சிகள் கொண்டவனாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஓ! பெரும் அனுபவம் கொண்டவனே, உண்மையில், மனோநிலையிலும், புத்தியிலும் நீ நீதிமானாக இருக்கிறாய்.(4) உனக்கும், அவனுக்கும் {விதேஹ ஆட்சியாளனான ஜனகனுக்கும்} நல்லது செய்ய நான் முயற்சிப்பேன். அழிவில்லாததும், வஞ்சனையில்லாததுமான ஒற்றுமையை உனக்கும் அந்த மன்னனுக்கும் இடையில் நான் ஏற்படுத்துவேன்.(5) உன்னதக் குலத்தில் பிறந்தவனும், நீதியற்றவையும், கொடூரமானவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், பெரும் கல்வி பயின்றவனும், அரசை நடத்துவது மற்றும் அனைத்து மனிதர்களுக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும் கலைகளை நன்கறிந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனை அமைச்சனாக அடைய விரும்பாதவன் எவன் இருக்கிறான்?(6) ஓ! க்ஷத்திரியா {க்ஷேமதர்சின்}, நாட்டை இழந்து பெருந்துன்பத்தில் மூழ்கியிருப்பவனாக இருப்பினும், நீ நீதிமிக்க நடத்தையைப் பின்பற்றி வாழ விரும்புவதன் காரணமாகவே நான் இதைச் சொல்கிறேன்.(7) உண்மையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, விரைவில் என் வசிப்பிடத்திற்கு வரப்போகிறான். நான் சொல்வதை அவன் நிச்சயமாகச் செய்வான்" என்றார் {காலகவிருக்ஷீயர்}".(8)




பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதன்பிறகு, விதேஹர்களின் ஆட்சியாளனை {ஜனகனை} அழைத்த அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்}, அவனிடம் {ஜனகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார், "இந்த மனிதன் {கோசல இளவரசன் க்ஷேமதர்சின்} அரச குடி பிறந்தவன். இவனது இதயத்தையே நான் அறிவேன்.(9) இவனது ஆன்மாவானது கண்ணாடியின் பரப்பையோ, கூதிர்கால நிலவு வட்டிலையோ போன்று தூய்மையானது. அனைத்து வழியிலும் நான் இவனைச் சோதித்துவிட்டேன். நான் இவனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(10) இவனுக்கும் உனக்கும் இடையில் நட்பு இருக்கட்டும். என்னை நம்புவதைப் போலவே நீ இவனிடமும் நம்பிக்கை கொள்வாயாக. (தகுந்த) அமைச்சன் இல்லாத மன்னனால், தன் நாட்டை மூன்று நாட்களுக்குக் கூட ஆள முடியாது.(11) அமைச்சன், துணிவுமிக்கவனாகவும், பெரும் நுண்ணறிவு கொண்டவனாகவும் இருக்க வேண்டும். இந்த இரு பண்புகளைக் கொண்டே ஒருவனால் இருவுலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்ல முடியும். ஓ! மன்னா {ஜனகனே}, ஒரு நாட்டை ஆள்வதற்கும் இந்த இரு பண்புகளே அவசியம் என்பதைக் காண்பாயாக.(12) நீதிமிக்க மன்னர்களுக்கு, இத்தகு பண்புகளைக் கொண்ட ஓர் அமைச்சனைவிட வேறு எந்தப் புகலிடமும் கிடையாது. இந்த உயர் ஆன்ம மனிதன் அரசகுல வழித்தோன்றலாவான். நீதியின் பாதையிலேயே இவன் {க்ஷேமதர்சின்} நடக்கிறான்.(13) அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்ட இவன் அடைவதற்கு மதிப்புமிக்க ஒருவனாவான். உன்னால் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், இவன் உன் எதிரிகள் அனைவரையும் அடக்குவான்.(14) இவன் உன்னோடு போரிட்டால், ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வான். தன் தந்தைமார் மற்றும் பாட்டன்மாரின் நடத்தையைப் பின்பற்றி உன்னை வெல்ல அவன் போரிட்டால்,(15) எதிராளிகளை வெல்லும் க்ஷத்திரியக் கடமையை நோற்பவனாக நீ அவனோடு போர்புரிவதே உன் கடமையாக இருக்கும். எனினும், என் ஆணையின் பேரில் போரில் ஈடுபடாமல், உனக்கு நன்மை செய்யும் விருப்பத்தோடு இவனை உனக்குக் கீழ் நியமித்துக் கொள்வாயாக.(16) முறையற்ற பேராசையைக் கைவிட்டு அறத்தில் உன் கண்களைச் செலுத்துவாயாக. காமத்தாலோ, போரிடும் விருப்பத்தாலோ, உன் வகைக்கான கடமைகளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(17) ஓ! ஐயா, வெற்றி நிச்சயமானதில்லை. தோல்வியும் நிச்சயமானதில்லை. இதை நினைவில் கொண்டு, எதிரிக்கு உணவையும், பிற இன்ப நுகர் பொருட்களையும் கொடுத்து அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(18) வெற்றியையும், தோல்வியையும் ஒருவன் தன் வழக்கிலேயே காணலாம். ஓர் எதிரியை அழிக்க முனைபவர்கள், சில வேளைகளில் முயலும்போது தாங்களே அழிந்து விடுகிறார்கள்" என்றார் {காலகவிருக்ஷீயர்}.(19)

இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் ஜனகன், அனைத்துக் கௌரவங்களுக்கும் தகுந்தவரான அந்தப் பிராமணர்களில் காளையை {காலகவிருக்ஷீயரை} முறையாக வணங்கிக் கௌரவித்து, அவரிடம்,(20) "பெரும் கல்வியும், பெரும் ஞானமும் கொண்டவர் நீர். எங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் நீர் எதைச் சொன்னீரோ, அது நிச்சயம் எங்கள் இருவருக்கும் பயன் பயக்கக்கூடியதே.(21) அவ்வாறு நடந்து கொள்வதே (எங்களுக்கு) உயர்ந்த நன்மையை அளிக்கும். இதைச் சொல்வதில் எனக்கு எத்தயக்கமும் இல்லை" என்றான் {ஜனகன்}.(22)

பிறகு அந்த விதேஹர்களின் ஆட்சியாளனானவன் {ஜனகன்}, கோசல இளவரசனிடம் {க்ஷேமதர்சினிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், "க்ஷத்திரியக் கடமைகளை நோற்றும், கொள்கையின் உதவியுடனும் நான் இவ்வுலகை வென்றேன்.(23) எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் நற்பண்புகளால் நான் வெல்லப்பட்டேன். அவமான உணர்வேதும் வளர்க்காமல் (என் அருகில் நீ இருந்தால்), ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாய்.(24) உன் நுண்ணறிவை நான் மதிக்கிறேன், உன் ஆற்றலை நான் மதிக்கிறேன். நான் உன்னை வென்றுவிட்டேன் என்று சொல்லி நான் உன்னை அவமதிக்கமாட்டேன். மறுபுறம், ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாயாக.(25) ஓ! மன்னா, என்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு என் வசிப்பிடத்திற்குச் செல்வாயாக" என்றான் {ஜனகன்}.

Kosala - Videha / Mithila -Mahabharata
பிறகு அந்தப் பிராமணரை {காலகவிருக்ஷீயரை} வணங்கிய மன்னர்கள் இருவரும், ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, *மிதிலையின் தலைநகரத்திற்குச் சென்றனர்.(26) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, அந்தக் கோசல இளவரசனை {க்ஷேமதர்சினைத்} தன் வசிப்பிடத்திற்குள் நுழையச் செய்து, அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்த அவனுக்கு, கால்கழுவ நீரையும், தேன் மற்றும் தயிர்க்கடைசல்களையும் {மதுபர்க்கங்களையும்}, மற்றும் வழக்கமான பொருட்களையும் கொடுத்து கௌரவித்தான்.(27)

மேலும் மன்னன் ஜனகன், பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் நகைகளுடன் சேர்த்துத் தன் சொந்த மகளையே அவனுக்கு {க்ஷேமதர்சினுக்கு} அளித்தான் {திருமணம் செய்து கொடுத்தான்}. இதுவே (அமைதியை ஏற்படுத்துவதே) மன்னர்களின் உயர்ந்த கடமையாகும்; வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் நிச்சயமற்றதாகும்" {என்றார் பீஷ்மர்}.(28)

சாந்திபர்வம் பகுதி – 106ல் உள்ள சுலோகங்கள் : 28

*மிதிலையின் தலைநகரத்திற்குச் சென்றனர்.(26)
.....தற்கால பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதி முழுவதும் முற்காலத்தில் ஜனகன் (Janaka) மன்னனால் ஆளப்பட்டதே விதேஹ/விதேக (Videha) நாடாகும். எனவே ஜனகனுக்கு விதேகன் (Videha) என்ற பெயருமுண்டு.

ஜனகரின் மகளே சீதா/சீதை  (Sita). சீதா ஜனகரின் மகளானதால் ஜானகி (Janaki) என்றும் அழைக்கப்பட்டாள்.

ஜனகன் விதேகன் என்று அழைக்கப்பட்டதால் சீதை, வைதேகி (Vaitheki/ Vaithegi/ Vaidehi) என்றும் அழைக்கப்பட்டாள்.


இந்த விதேக நாட்டிற்கு மிதிலா/ மிதிலை (Mithila) என்ற பெயரும் உண்டு.  சீதை மிதிலை நாட்டு இளவரசியாதலால் மைதிலி (Maithili) எனவும் அழைக்கப்பட்டாள். 

இந்த மிதிலையில் வாழும் மக்களின் மொழி மைதிலி (Maithili Language) ஆகும். 

பீகாலிருந்தும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்தும் வடக்கே உள்ள மிதிலை பிரதேசத்தினை தனியே பிரித்து  மிதிலாஞ்சல் மாநிலமாக (Mithilanchal State) ஒரு புதிய மாநிலத்தினை உண்டாக்கும் திட்டமும் மத்திய அரசால் பரிசிலிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விதேஹ அல்லது மிதிலை நாட்டின் தலைநகரம் ஜனகன் ஆட்சி செய்ததால் ஜனகபுரி (Janakpur) என வழங்கப்பட்டது. அந்த ஜனகபுரி தற்போது பீகார் எல்லையை ஒட்டியுள்ள நேபாளம் நாட்டினுள் உள்ள தனுசா மாவட்டத்தின் (Dhanusa District) மாவட்டத் தலைநகரமாகும். நேபாளத்தில் தான் மிதிலை நகரமும் உள்ளது. இந்த மிதிலை நகரம் ஜனகபுரியிலிருந்து 27 கிமீ தொலைவிலேயே உள்ளது.




ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்