Saturday, March 17, 2018

தாய், தந்தை, ஆசான்! - சாந்திபர்வம் பகுதி – 108

Mother, Father and Preceptor! | Shanti-Parva-Section-108 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 108)


பதிவின் சுருக்கம் : கடமைகள் அனைத்திலும் முக்கியமானவை எவை என யுதிஷ்டிரன் கேட்பது; தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே முக்கியக் கடமை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷமரிடம்}, "கடமையின் பாதை நீண்டதாகும். ஓ! பாரதரே, மேலும் அது பல கிளைகளைக் கொண்டதாக இருக்கிறது. எனினும், உம்மைப் பொறுத்தவரையில், நடைமுறையில் பின்பற்ற மிகத் தகுந்தவை எவை?(1) உம்மைப் பொறுத்தவரையில், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தகுதியை எனக்கு ஈட்டித் தருபவையும், கடமைகள் அனைத்திலும் மிக முக்கியமானவையுமான செயல்கள் எவை?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “என்னைப் பொறுத்தவரையில் தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே மிக முக்கியமானது. இம்மையில் அக்கடமையைச் செய்யும் மனிதன், பெரும் புகழையும், புகழுலகங்கள் பலவற்றையும் ஈட்டுவதில் வெல்கிறான்.(3) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, அறத்திற்கு இசைவாகவோ, இல்லாமலோ அவர்களால் ஆணையிடப்படும் எதுவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(4) அவர்கள் தடை செய்ததை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவர்கள் எதை ஆணையிடுவார்களோ, அஃது எப்போதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.(5) மூவுலகங்கள் அவர்களே. மூன்று வாழ்வுமுறைகளும் அவர்களே. மூன்று வேதங்களும் அவர்களே. மூன்று புனித நெருப்புகளும் அவர்களே.(6) கார்ஹபத்ய நெருப்பாகத் தந்தை சொல்லப்படுகிறார்; தக்ஷிண நெருப்பாகத் தாய் சொல்லப்படுகிறார்; ஆகுதி ஊற்றப்படும் {ஆஹவநீ} நெருப்பாக ஆசான் சொல்லப்படுகிறார். உண்மையில் இந்த மூன்று நெருப்புகளும் மிக உயர்ந்தவையாகும். இந்த மூன்று நெருப்புகளிலும் நீ கவனத்தோடு இருந்தால், மூவுலகங்களையும் நீ வெல்வாய்.(7)


முறைமையுடன் தந்தைக்குத் தொண்டாற்றினால் ஒருவன் இவ்வுலகைக் கடக்கலாம். அதே வழியில் தாய்க்குத் தொண்டாற்றினால், அவன் மறுமையில் புகழுலகங்களை அடையலாம். முறைமையுடன் ஆசானுக்குத் தொண்டாற்றினால், ஒருவன் பிரம்மலோகத்தையே அடையலாம்.(8) ஓ!பாரதா {யுதிஷ்டிரா}, இந்த மூவரிடமும் முறையாக நடந்து கொண்டால், நீ மூவுலகங்களிலும் புகழையடைவாய், அருளப்பட்டவனாவாய், உன் தகுதியும் {புண்ணியமும்}, வெகுமதியும் பெரியதாக இருக்கும்.(9) எச்செயலையும் ஒருபோதும் அவர்களை மீறிச் செய்யாதே. அவர்கள் உண்பதற்கு முன் நீ உண்ணாதே, அவர்கள் உண்பதைவிடச் சிறந்த எதையும் நீ உண்ணாதே. அவர்களின் மேல் எந்தக் குற்றத்தையும் ஒருபோதும் சுமத்தாதே. ஒருவன் எப்போதும் அவர்களிடம் பணிவுடன் தொண்டாற்ற வேண்டும். அதுவே உயர்ந்த தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும்.(10) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வழியில் செயல்பட்டால், புகழ், தகுதி, கௌரவம், மறுமையில் புகழ் உலகங்கள் ஆகியவற்றை அடைவாய். எவன் இவர்களைக் கௌரவிப்பானோ, அவன் மூவுலகங்களிலும் கௌரவிக்கப்படுவான்.(11)



மறுபுறம், எவன் இவர்களை அவமதிப்பானோ, அவன் செய்யும் எந்தச் செயல்களிலும் எந்தத் தகுதியும் {புண்ணியத்தையும்} அடையமாட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, அத்தகு மனிதன் இம்மையும், மறுமையும் அடைவதில்லை.(12) இந்த மூன்று பெரியோரையும் எவன் எப்போதும் அவமதிப்பானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் புகழை அடையமாட்டான். அவன் மறுமையில் எந்த நன்மையையும் ஒருபோதும் ஈட்டமாட்டான்.(13) இந்த மூவரைக் கௌரவிக்கும் வகையில் நான் கொடுத்த அனைத்தும் அதன் உண்மை அளவைவிட நூறு மடங்காகவோ, ஆயிரம் மடங்காகவோ ஆனது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தகுதியின் விளைவாகவே, நான் என் கண்களால் மூவுலகங்களையும் தெளிவாகக் காண்கிறேன்.(14) ஓர் ஆச்சாரியர் {ஆசிரியர்}, கல்வி கற்ற பத்து பிராமணர்களைவிட மேன்மையானவராவார். ஓர் உபாத்யாயர் {துணையாசிரியர்}, பத்து ஆச்சாரியர்களைவிட மேன்மையானவராவார். தந்தை, பத்து உபாத்யாயர்களைவிட மேன்மையானவராவார். தாயானவள், பத்து தந்தைகளைவிட, முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒருவேளை, மொத்த உலகையும்விட மேன்மையானவளாவாள்.(15,16)

எனினும், ஓர் ஆசான், தந்தையையும், தாயைவிடவும் கூட அதிக மதிப்புக்குத் தகுந்தவர் என்பது என் கருத்து. தந்தையும், தாயும் ஒருவனைப் படைக்கிறார்கள்.(17) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தந்தையும், தாயும் உடலை மட்டுமே உண்டாக்குகிறார்கள். மறுபுறம், தன் ஆசானிடம் இருந்து ஒருவன் பெறும் பிறவியானது தெய்வீகமானதாகும். அந்த வாழ்வானது சிதைவும் {முதுமையும்}, அழிவும் இல்லாததாகும்.(18) தந்தையும், தாயும் எக்குற்றமிழைத்தாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. (தண்டனைக்குத் தகுந்தவர்களாக இருப்பினும்) ஒரு தந்தையையும், ஒரு தாயையும் தண்டிக்காமல் இருப்பதால் ஒருவன் பாவமிழைத்தவன் ஆகமாட்டான். உண்மையில், தண்டனையிலிருந்து தப்பும் அத்தகு மதிப்புக்குரிய மனிதர்கள் மன்னனைக் களங்கப்படுத்துவதில்லை. பாவம் நிறைந்த தந்தையை மதிப்புடன் பேணி வளர்க்க முயலும் மனிதர்களுக்குத் தேவர்களும், முனிவர்களும் தங்கள் உதவிகளை நிறுத்துவதில்லை.(19) உண்மையான கல்வியைக் கொடுப்பது, வேதங்களைச் சொல்வது, அழிவில்லா ஞானத்தைக் கொடுப்பது ஆகிய காரியங்களால் ஒரு மனிதனுக்கு உதவுபவர், தந்தையாகவும், தாயாகவும் கருதப்பட வேண்டும். ஆசானின் செயலை நன்றியுடன் நினைவுகூரும் சீடன், எதற்காகவும் ஒருபோதும் அவருக்கு எத்தீங்கையும் செய்யக்கூடாது.(20)

ஆசான்களிடம் இருந்து கல்வியை அடைந்த பிறகு, எண்ணத்தாலும், செயலாலும் கடமையுணர்வுடன் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களை மதிக்காமல் இருப்போர் கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களைப் போன்ற பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை. ஆசான்கள் எப்போதும் தங்கள் சீடர்களிடம் பெரும் அன்பை வெளிப்படுத்துவார்கள். எனவே, சீடர்களும் ஒப்பிடத்தக்க தங்கள் மரியாதையை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.(21) எனவே, பழங்காலத்தில் இருந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் ஒருவன், தன் ஆசான்களைப் போற்றி வழிபட்டு, அனைத்து இன்பநுகர் பொருட்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(22) தன் தந்தையை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவனிடம் பிரஜாபதி நிறைவுடன் இருக்கிறார். தன் தாயை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவன் பூமாதேவியையே நிறைவுகொள்ளச் செய்கிறான்.(23) எவன் தன் ஆசானை நிறைவுகொள்ளச் செய்கிறானோ, அவன் அச்செயலால் பிரம்மனையே நிறைவுகொள்ளச் செய்கிறான். இதன் காரணமாகவே, ஓர் ஆசான், தந்தையையோ, தாயையோ விடப் பெரும் மதிப்புக்குத் தகுந்தவராக இருக்கிறார்.(24) ஆசான்கள் வழிபடப்பட்டால், முனிவர்களுடனும், தேவர்களுடனும் சேர்ந்த பித்ருக்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். எனவே, ஆசான் என்பவர் உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தவராவார்.(25)

ஆசானானவர், ஒரு சீடனால் எவ்வகையிலும் ஒருபோதும் அலட்சியம் செய்யப் {அவமதிக்கப்} படக்கூடாது. தாயோ, தந்தையோ கூட ஆசானின் அளவுக்கு மதிப்புக்குத் தகுந்தவர்கள் இல்லை.(26) தந்தை, தாய், ஆசான் ஆகியோர் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது. அவர்களுடைய எச்செயலிலும் குற்றம் காணக்கூடாது. எவன் தன் ஆசான்களிடம் மதிப்புடன் நடந்து கொள்கிறானோ, அவனிடம் தேவர்களும், பெரும் முனிவர்களும் நிறைவு கொள்கிறார்கள்.(27) எண்ணத்தாலோ, செயலாலோ ஆசான்கள், அல்லது தந்தைமார், அல்லது தாய்மார் ஆகியோருக்குத் தீங்கிழைப்பவர்கள், ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களுக்கு இணையான பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.(28) தந்தையின் மடியிலும், தாயின் கருவறையிலும் பிறந்த ஒரு மகன், அவர்களால் வளர்க்கப்பட்டு, வயதடையும்போது தன் பங்குக்கு அவர்களை ஆதரிக்காமல் போனால், அவன் ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறான். அவனுக்கு இணையான பாவி இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(29) ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பவன், நன்றியில்லாதவன், ஒரு பெண்ணைக் கொல்பவன், ஓர் ஆசானைக் கொல்பவன் ஆகிய நால்வரும் {பாவங்களில் இருந்து} தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாக நாம் ஒருபோதும் கேள்விப்படுவதில்லை.(30) இவ்வுலகில் ஒரு மனிதன் பொதுவாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லிவிட்டேன். நான் சொன்ன கடமைகளைத் தவிர்த்து, பெரும் புகழை உண்டாக்கக்கூடியவை வேறு {செயல்கள்} எவையும் இல்லை. கடமைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவற்றின் சாரத்தை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(31)

சாந்திபர்வம் பகுதி – 108ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்