Monday, March 19, 2018

கிருஷ்ணனே நாராயணன்! - சாந்திபர்வம் பகுதி – 110

This Krishna is that Narayana! | Shanti-Parva-Section-110 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 110)


பதிவின் சுருக்கம் : உயிரினங்களால் துன்பங்களை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும், நாராயணனே அனைத்தின் புகலிடம் என்பதையும், கிருஷ்ணனே அந்த நாராயணன் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கிட்டத்தட்ட தொடர்ச்சியாகவே பல்வேறு வழிகளில் உயிரினங்கள் பீடிக்கப்படுவது {துன்புறுவதும்} காணப்படுகிறது. ஓ பாட்டா, அந்தக் கடினமான துன்பங்கள் அனைத்தில் இருந்தும் ஒருவன் விடுபடக்கூடிய வழியென்ன?” என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மறுபிறப்பாள வகையைச் சேர்ந்தோர், அடக்கப்பட்ட ஆன்மாக்களுடனும், பல்வேறு வாழ்வுமுறைகளுக்காக {அசிரமங்களுக்காக} சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகப் பயின்றும் இந்தத் துன்பங்களைக் கடப்பதில் வெல்கின்றனர்.(2) வஞ்சகத்தை ஒருபோதும் பயிலாதவர்களும், வணங்கத்தக்க கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட ஒழுக்கத்தைக் கொண்டவர்களும், உலக ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(3) தீய மொழி பேசப்படும்போது பேசாமல் இருப்பவர்களும், தாக்கப்படும்போதும் பிறரைத் தாக்காதவர்களும், எடுக்காமல் கொடுப்பவர்களும் அனைத்துத் துன்பங்களையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(4) விருந்தினர்களுக்கு விருந்தோம்பலுடன் உறைவிடத்தை எப்போதும் கொடுப்பவர்களும், வன்மத்தில் ஈடுபடாதவர்களும், தொடர்ந்து வேத கல்வியில் ஈடுபடுபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(5) கடமைகளை அறிந்தவர்களும், தங்களைப் பெற்றோரிடம் தகுந்த நடையில் நடந்து கொள்பவர்களும், பகலில் உறங்குவதைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(6) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் எவ்வகைப் பாவத்தையும் செய்யாதவர்களும், எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காதவர்களும் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(7)

ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தில் {மக்களை} ஒடுக்கும் வகையில் வரிகளை விதிக்காதவர்களும், தங்கள் ஆட்சிப்பகுதிகளைக் காப்பவர்களுமான மன்னர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(8) பிற பெண்களின் தோழமையை நாடாமல், தாங்கள் திருமணம் செய்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே தகுந்த காலத்தில் செல்பவர்களும், நேர்மையானவர்களும், தங்கள் அக்னி ஹோத்திரங்களில் கவனமாக இருப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(9) மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, நியாயமான வழிமுறைகளின் மூலம் வெற்றியை அடைய விரும்பி போரில் ஈடுபடும் துணிவுமிக்கோர், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(10) உயிரையே பணயம் வைத்து இவ்வுலகில் எப்போதும் உண்மையைப் பேசி வருபவர்களும், அனைத்து உயிரினங்களுக்கும் முன்மாதிரியான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(11) செயல்களில் ஒருபோதும் வஞ்சிக்காதவர்களும், எப்போதும் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசுபவர்களும், செல்வத்தை எப்போதும் சிறப்புடன் நன்றாகச் செலவழிப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(12)



தகாத வேளைகளில் வேதங்களை ஒருபோதும் கல்லாதவர்களும், அர்ப்பணிப்புடன் தவங்களைப் பயில்பவர்களுமான பிராமணர்கள், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(13) மணமாகா நிலையையும், பிரம்மச்சரியத்தையும் வாழ்வாகக் கொள்பவர்களும், தவங்களைச் செய்பவர்களும், கல்வியால் தூய்மையடைந்தவர்களும், வேத ஞானமும், முறையான நோன்புகளும் கொண்டவர்களுமான பிராமணர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(14) ஆசை {ரஜோ} மற்றும் இருள் {தமோ} குணங்கள் அனைத்தையும் தடுப்பவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களும், நன்மை என்றழைக்கப்படும் பண்புகள் அனைத்தையும் பயில்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(15)

எவர்களைக் கண்டு எந்த உயிரினமும் அச்சப்படாதோ, எவர்கள் எந்த உயிரினத்தையும் கண்டு அஞ்சாதிருக்கிறார்களோ, எவர்கள் அனைத்து உயிரினங்களையும் தம்மைப் போலப் பார்க்கிறார்களோ, அவர்கள் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(16) நல்லோராக இருப்பவர்களும், செழிப்பாக இருக்கும் மக்களைக் கண்டு ஒருபோதும் துயரடையாதவர்களும், உன்னதமற்ற அனைத்து வகைச் செயல்களையும் தவிர்ப்பவர்களுமான மனிதர்களில் காளைகள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(17) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், நம்பிக்கைகளைக் கொண்ட சமயங்களின் கோட்பாடுகள் அனைத்தையும் கேட்பவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[1].(18) தங்களுக்குக் கௌரவங்களை விரும்பாமல், பிறருக்குக் கௌரவங்களைக் கொடுப்பவர்களும், வழிபாட்டுக்குத் தகுந்தோரை வணங்குபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(19) வாரிசுகளை விரும்பி, தூய மனத்துடன் முறையான சந்திர நாட்களில் சிராத்தங்களைச் செய்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[2].(20)

[1] கும்பகோணம் பதிப்பில், “எவர்கள் எல்லாத் தேவர்களையும் நமஸ்கரிப்பவர்களும், எல்லாத் தர்மங்களையும் கேட்பவர்களும், ஸ்ரத்தையுள்ளவர்களும், அடக்கமுள்ளவர்களுமாயிருக்கிறார்களோ அவர்கள் கடினமான துன்பங்களையும் தாண்டுகிறார்கள்” என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், “எவர்கள் பிரஜைகளை விரும்பிக் கொண்டு, மிகவும் சுத்தமான மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் ஸ்ராத்தங்களைச் செய்கிறார்களோ அவர்கள் கடினமான துன்பங்களையும் தாண்டுகிறார்கள்” என்றிருக்கிறது.

தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, பிறரின் கோபத்தைத் தணிப்பவர்களும், எந்த உயிரினத்திடமும் ஒருபோதும் கோபமடையாதவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(21) தேன் {மது}, இறைச்சி, போதையூட்டும் பானங்கள் ஆகியவற்றைப் பிறப்பிலிருந்தே தவிர்ப்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(22) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே உண்பவர்களும், வாரிசுகளுக்காக மட்டுமே பெண்களின் தோழமையை நாடுபவர்களும், உண்மையைப் பேசுவதற்காக மட்டுமே தங்கள் உதடுகளைத் திறப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(23) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனும் {பரமனும்}, அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவனுமான தேவன் நாராயணனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(24) தாமரை போல் கண்கள் சிவந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், நமது நலன் விரும்பியும், சகோதரனும் {உங்கள் மைத்துனனும், நண்பனும், உறவினனுமான இந்தக் கிருஷ்ணனே மங்கா மகிமை கொண்ட அந்த நாராயணனாவான்.(25)

[3] கும்பகோணம் பதிப்பில், “எந்த மனிதர்கள் பிறந்தது முதல் மதுவையும், மாம்ஸத்தையும், பெண்டிர்களையும், கள்ளையும் எப்பொழுதும் விலக்கிறார்களோ அவர்கள் கடினமான துன்பங்களையும் தாண்டுகிறார்கள்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “பிறந்தது முதல் மது, இறைச்சி, சாராயம் ஆகியவற்றைத் தவிர்ப்பவர்கள் துன்பங்கள் அனைத்தையும் கடக்கிறார்கள்” என்றிருக்கிறது. மேலும் அடிக்குறிப்பில், “மது என்ற சொல்லை நான் மொழிபெயர்க்கவில்லை. இந்தச் சொல் பொதுவாகப் போதையூட்டும் பானத்தைக் குறிக்கும், ஆனால் மத்ய என்று சாராயமும் குறிப்பிடப்படுகிறது. மது என்பது தேனாகவோ, புளிக்கவைக்கப்பட்ட பானமாகவோ, வேறு விதமாகவோ இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட வகைச் சிறப்பு மதுபானமாகவும் இருக்கலாம்” எனப் பிபேக்திப்ராய் விளக்குகிறார்.

தோலுறையைப் போல இந்த உலகங்கள் யாவையும் தன் விருப்பம்போல மறைப்பவன் இவனே. நினைத்தற்கரிய ஆன்மா கொண்ட பலமிக்கத் தலைவன் இவனே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கோவிந்தன் இவனே.(26) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணுவுக்கும் {அர்ஜுனனுக்கும்}, உனக்கும் ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவனான இந்தக் கிருஷ்ணனே, தடுக்கப்படமுடியாதவனும், அழிவில்லா புகழின் வசிப்பிடமாக இருப்பவனுமான அவனாவான் {நாராயணனாவான்}.(27) ஹரி என்றும் அழைக்கப்படும் இந்த நாராயணனின் புகலிடத்தை அர்ப்பணிப்புடன் நாடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(28) துன்பங்களைக் கடப்பது குறித்த இந்த வரிகளைப் படிப்பவர்களும், பிறருக்கு உரைப்பவர்களும், பிராமணர்களிடம் சொல்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(29) ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, எச்செயல்களின் மூலம் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் துன்பங்கள் அனைத்தையும் கடப்பார்களோ, அவை அனைத்தையும் இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(30)

சாந்திபர்வம் பகுதி – 110ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்