Thursday, March 22, 2018

வசையும், அவதூறும்! - சாந்திபர்வம் பகுதி – 114

Reproaches and Slanders! | Shanti-Parva-Section-114 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 114)


பதிவின் சுருக்கம் : சபைகளில் அற்பர்களால் வசைமாரி பொழியப்படும்போதும், அவதூறு செய்யப்படும் போதும், அதைப் பொறுத்துக் கொள்ளும் நல்லோன் அடையும் பயனைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows_Shanti Parva-114
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இறுமாப்பில் பெருகியவனும், அறியாமை கொண்டவனுமான ஒரு மனிதனால், சபைகளுக்கு மத்தியில் வைத்து கடுஞ்சொற்களால் தாக்கப்படும்போது, அடக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல்விமான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் சிறு மதி கொண்டோரின் வசைமொழிகளை, நல்லான்மா கொண்ட ஒருவன் எவ்வாறு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து (சாத்திரங்களில்) எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கேட்பாயாக.(2) ஒரு மனிதன் மற்றொருவனால் நிந்திக்கப்படும்போது, கோபவசப்படாமல் இருந்தால், அவன் நிந்திப்பவனின் {வசைபாடுபவனின்} நற்செயல்கள் அனைத்தையும் (அவை அனைத்தின் தகுதியையும் {புண்ணியத்தையும்}) எடுத்துக் கொள்வான். அத்தகு வழக்கில் {அந்த வசையைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்பவன், தன் தீச்செயல்களுடைய குற்றங்கள் அனைத்தையும் {அவற்றால் விளையும் பாவங்கள் அனைத்தையும்} கோபவசப்பட்டு நிந்தனையில் ஈடுபடும் {வசைமாரி பொழியும்} மனிதனுக்குக் கொடுக்கிறான்.(3) நுண்ணறிவுமிக்க ஒரு மனிதன், பொருந்தாக் கூச்சலிடும் அற்பமான ஒரு தித்திபத்துக்கு {நீர்க்கோழிக்கு} ஒப்பாக வசைமொழி பேசும் ஒருவனை அலட்சியம் செய்ய வேண்டும். வெறுப்பின் வசப்படுபவன் வீணாக வாழ்கிறான் எனச் சொல்லப்படுகிறது. “அத்தகு மரியாதைக்குரிய மனிதனை, அத்தகு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வைத்து, இத்தகு வார்த்தைகளைச் சொல்லி நான் பேசினேன்” என்று ஒரு மூடன் சொல்வதையும், அந்தத் தீச்செயலைக் குறித்து அவன் தற்பெருமை பேசிக் கொள்வதையும் நாம் அடிக்கடி கேட்கிறோம்(4,5). மேலும் அவன், “என்னால் நிந்திக்கப்பட்ட அந்த மனிதன், செத்தவனைப் போல வெட்கத்துடன் அமைதியாக இருந்தான்” என்றும் சேர்த்துச் சொல்வான். இவ்வாறே, எவனும் பீற்றிக் கொள்ளக்கூடாத ஒரு செயலைக் குறித்துச் சொல்லி ஒரு வெட்கங்கெட்ட மனிதன் தற்புகழ்ச்சி செய்து கொள்வான்.(6) மனிதர்களில் இழிந்தவனான இத்தகையவன் கவனமாக அலட்சியம் செய்யப்பட வேண்டும். சிறு மதி கொண்ட இத்தகையவன் சொல்லக்கூடிய அனைத்தையும் ஞானம் கொண்ட ஒரு மனிதன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(7)



ஒரு மதிக்கத்தகாத {மதிப்பில்லாத} நபரால் செய்யப்படும், தற்புகழ்ச்சியாலோ, பழிச் சொல்லாலோ என்ன செய்து விட முடியும்? கானகங்களில் பயனில்லாமல் கரையும் ஒரு காகத்தைப் போன்றவனே அவன்.(8) தங்கள் வார்த்தைகளால் மட்டுமே பிறரை குற்றஞ்சாட்டுபவர்கள், தகுந்த வழிமுறைகளின் மூலம் அந்தக் குற்றச்சாட்டுகளை நிறுவினால், அவர்களுடைய வார்த்தைகள் சற்றே {சிறிது} மதிக்கப்படலாம். எனினும் உண்மையென்னவெனில், யாரிடம் சச்சரவு செய்கிறார்களோ அவர்களுக்கு மரணத்தை இருப்புக்கு அழைக்கும் மூடர்களுடைய வார்த்தைகளின் அளவுக்கே அவர்களுடைய வார்த்தைகள் திறன் கொண்டவை[1].(9) இத்தகு நடத்தை {செயல்} மற்றும் வார்த்தைகளில் ஈடுபடும் மனிதன், தன் தகாவழிப் பிறப்பையே அறிவித்துக் கொள்கிறான். உண்மையில் அவன், எப்போதும் மறைக்கப்பட வேண்டிய உடலின் பகுதியைக் காட்டிக் கொண்டு ஆடும் ஒரு மயிலைப் போன்றவனாவான்[2].(10) தூய நடத்தை கொண்ட ஒருவன், எதையும் சொல்லவோ, செய்யவோ ஐயுணர்வு கொள்ளாதவனும், பாவம் நிறைந்தவனுமான இழிந்தவனிடம் ஒருபோதும் பேசக்கூடாது.(11)

[1] “இந்தியாவில், அறியாமை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் பொதுவாகப் புழங்கும் வசைமொழியானது, “உனக்கு மரணம் வரட்டும்”, அல்லது “யமனின் வீட்டுக்குச் செல்” என்பதாகும். தீய மனிதர்களின் வசைமொழிகள் முற்றிலும் பயனற்றவையாக இருப்பதைப் போலவே அத்தகு வார்த்தைகளும் வீணானவையே எனப் பீஷ்மர் சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] கும்பகோணம் பதிப்பில், “நிந்தை செய்யும் மனிதன் தன் செய்கையாலும், சொல்லாலும் தன் தாயிடம் பிறன் புணர்ச்சி செய்ததைச் சொல்லிக் கொள்ளுகிறவனாகிறான். ரஹஸ்யாங்கத்தை வெளியிட்டுக் கொண்டு கூத்தாடும் மயில்போல அவன் ஸந்தோஷப்படுகிறான்” என்றிருக்கிறது.

ஒருவனுடைய பார்வை தன் மேல் இருக்கும்போது, அவனுடைய தகுதிகளைப் பேசுபவனும், அவனுடைய பார்வை தன்னிடம் இருந்து விலகும்போது அவனைக் குறித்து இழிவாகப் பேசுபவனுமான மனிதன், உண்மையில் ஒரு நாயைப் போன்றவனாவான். அத்தகு மனிதன் சொர்க்கத்தில் தனக்கான பகுதிகள் அனைத்தையும், தான் கொண்ட எந்த அறிவு மற்றும் பண்பின் பலன்கள் அனைத்தையும் மொத்தமாக இழக்கிறான்.(12) ஒருவனுடைய பார்வை தன் மேல் இல்லாத போது, அவனைக் குறித்து இழிவாகப் பேசும் மனிதன், நெருப்பிலிட்ட தன் ஆகுதிகள் {காணிக்கைகள்} அனைத்தின் கனிகளையும், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு அவன் அளித்திருக்கும் கொடைகளின் பலன்களையும் தாமதமில்லாமல் இழக்கிறான்.(13) எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், நேர்மையான மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்படத் தகுந்த இத்தகு பாவம் நிறைந்த இதயம் கொண்டவனை, நாயின் இறைச்சியைத் தவிர்ப்பதுபோலத் தயங்காமல் தவிர்க்க வேண்டும்.(14) ஓர் உயர் ஆன்ம மனிதனின் குற்றங்களை அறிவிக்கும் தீய ஆன்மா கொண்ட இழிந்தவன், (அச்செயலின் மூலம்) பாம்பானது (மற்றவர்கள் தலையிடும்போது) தன் தலையை வெளிக்காட்டுவதைப் போலத் தன் தீய இயல்பையே வெளிப்படுத்துகிறான்.(15) தனக்கு இனிமையான தொழிலிலேயே எப்போதும் ஈடுபடும் இத்தகு புறங்கூறுவோரிடம் எதிரிவினையாற்ற முனையும் உணர்வுள்ள மனிதன், சாம்பற்குவியலில் மூழ்கிய மூடக் கழுதையைப் போலத் துன்பம் நிறைந்த நிலையையே அடைகிறான்.(16)

பிறரின் குற்றங்களைப் பேசுவதில் எப்போதும் ஈடுபடும் மனிதனானவன், வெஞ்சினமிக்கதோர் ஓநாய், அல்லது பித்துப் பிடித்துப் பிளிறும் மதங்கொண்ட ஒரு யானை, அல்லது மூர்க்கமான ஒரு நாயைப் போலத் தவிர்க்கப்பட வேண்டியவனாவான்.(17) மூடப் பாதையில் செல்பவனும், நலம்தரும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்கம் ஆகியவற்றில் இருந்து வீழ்ந்துவிட்டவனும், பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவனும், தன் செழிப்பைக் குறித்துக் கவலையில்லாதவனுமான அந்த இழிந்த பாவிக்கு ஐயோ {அந்த இழிந்த பாவியை வெறுக்க வேண்டும்}.(18) இத்தகு இழிந்தோரால் அவமதிக்கப்படும்போது, அவர்களிடம் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு நேர்மையான மனிதன் விரும்பினால், “துன்பத்தை அனுபவிக்காதே” என்ற இவ்வார்த்தைகளால் அவனுக்கு அறிவுரை கூற வேண்டும். ஓர் உயர்ந்த மனிதனுக்கும், இழிந்த மனிதனுக்கும் இடையிலான வார்த்தை மோதலை அமைதியான மனம் கொண்டோர் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(19) அவதூறு செய்யும் இழிந்தவன், சினங்கொள்ளும்போது, தன் உள்ளங்கையால் அடுத்தவனை அடிக்கவோ, புழுதி, அல்லது உமி வாரி இறைக்கவோ, பற்களைக் காட்டி, அல்லது நறநறவெனக் கடித்து அச்சுறுத்தவோ செய்வான். இவையனைத்தும் நன்கறியப்பட்டதே.(20) தீய ஆன்மா கொண்ட இழிந்தோர் சபைகளில் கூறும் நிந்தனைகளையும், அவதூறுகளையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன், அல்லது இந்த அறிவுரைகளை அடிக்கடி படிக்கும் மனிதன், பேச்சால் நேரும் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(21)

சாந்திபர்வம் பகுதி – 114ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்