Friday, March 23, 2018

பணியாட்கள்! - சாந்திபர்வம் பகுதி – 115

Servants! | Shanti-Parva-Section-115 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 115)


பதிவின் சுருக்கம் : மன்னனால் பணியமற்றத்தப்படும் மனிதர்களின் தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra on his death bed of arrows_ Shanti Parva-115
Bhishma advises Yudhistra on his death bed of arrows_
Shanti Parva-115
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானத்தைக் கொண்டவரே, என்னைக் குழப்பத்தில் பெரும் ஐயம் ஒன்று எனக்கிருக்கிறது. ஓ! மன்னா, நீர் அக்குறை தீர்க்க வேண்டும். நீர் நமது குடும்பத்தை முன்னேற்றமடையச் செய்பவராவீர்.(1) தீய நடத்தையும், தீய ஆன்மாவும் கொண்ட இழிந்தவர்கள் பேசும் அவதூறுகளைக் குறித்து எங்களிடம் உரையாடினீர். எனினும், நாம் உம்மை மேலும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.(2) நாட்டுக்கு எது நன்மையோ, அரச குலத்திற்கு எது மகிழ்ச்சியை உண்டாக்குமோ, எதிர்காலத்திலும், நிகழ்காலத்திலும் எது நன்மையையும் முன்னேற்றத்தையும் உண்டாக்குமோ,(3) உணவு, பானம் மற்றும் இந்த உடல் தொடர்புடையவற்றில் எது நன்மையோ, அதைக்குறித்து நீர் உரையாட வேண்டுமென நான் விரும்புகிறேன்.(4) அரியணையில் அமர்த்தப்பட்டு, நண்பர்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் சூழ அதில் தொடர்ந்திருக்கும் {தொடர்ந்து அமர்ந்திருக்கும்} மன்னன், தன் மக்களை எவ்வாறு நிறைவுகொள்ளச் செய்ய வேண்டும்?(5)

எந்த மன்னன், தன் பற்று மற்றும் சார்புநிலை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டுத் தீய கூட்டாளிகளுடன் அர்ப்பணிப்புள்ளவனாக மாறுவானோ, எவன், தன் உணர்வுகளுக்கு அடிமையாவதன் விளைவால் தீய மனிதர்களிடம் செல்வானோ, அவன்,(6) நல்ல குடி மற்றும் குருதியில் பிறந்த பணியாட்கள் அனைவரும் தன்னிடம் வெறுப்படைந்திருப்பதைக் காண்கிறான். அத்தகைய மன்னன், நல்ல பணியாட்களின் எண்ணிக்கை பலத்தால் அடையத்தக்க எந்த நோக்கத்தின் நிறைவையும் அடைய மாட்டான்.(7) நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கு இணையாவரான உமக்கு, உறுதிசெய்து கொள்ளக் கடினமான மன்னர்களின் கடமைகளைக் குறித்து என்னிடம் உரையாடி, என் ஐயங்களைக் களைவதே தகும். (8) ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நமது குலத்திற்கு நன்மை செய்வதில் நீர் எப்போதும் ஈடுபட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே, ஆட்சித்திறத்தின் கடமைகள் குறித்து நீர் எப்போதும் எங்களிடம் உரையாடுகிறீர். பெரும் ஞானம் கொண்ட க்ஷத்திரியும் (விதுரரும்), மதிப்புமிக்க அறிவுரைகளை எப்போதும் எங்களுக்கு வழங்கி வருகிறார்.(9) நமது குலத்திற்கும், நாட்டுக்கும் நன்மையை உண்டாக்கவல்ல அறிவுரைகளை உம்மிடமிருந்து கேட்டால், இறவாநிலை தரும் அமுதத்தைப் பருகி நிறைவடைந்திருக்கும் மனிதனைப் போல என்னால் என் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்த முடியும். (10) பணியாட்களில் எந்த வர்க்கத்தினர் இழிந்தவர்களாகவும், எவர்கள் அனைத்து சிறப்புகளைக் கொண்டவர்களாகவும் கருதப்பட வேண்டும்? எந்த வர்க்கத்துப் பணியாட்கள், அல்லது எவ்வகைப் பிறப்புக் கொண்ட பணியாட்களின் உதவியுடன், ஆட்சிக் கடமைகளை வெளிப்படுத்துவது பரிந்துரைக்கப்படலாம்?(11) மன்னன் பணியாட்கள் இல்லாமல் தனியாகச் செயல்படுவதைத் தேர்ந்தெடுத்தால், அவனால் ஒருபோதும் தனது மக்களைப் பாதுகாப்பதில் வெல்ல முடியாது. எனினும், உயர்குடி பிறப்பைக் கொண்ட மனிதர்கள் அனைவரும், அரசுரிமையை அடையும் ஆசையுடன் இருக்கின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஒரு மன்னனால் தனியாகத் தன் நாட்டை ஆள முடியாது. அவனுக்கு உதவி செய்யப் பணியாட்கள் இல்லாமல், அவனால் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றுவதில் வெல்ல முடியாது. எந்த நோக்கத்தையாவது அடைவதில் அவன் வென்றாலும், அவனால் (தனியாக) அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.(13) எந்த மன்னனின் பணியாட்கள் அனைவரும், அறிவும், ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்களோ, தங்கள் தலைவனின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்களோ, உயர்குடி பிறப்பையும், அமைதியான மனநிலையும் கொண்டவர்களாக இருப்பார்களோ, அவனே {அந்த மன்னனே} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(14) எந்த மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் நற்குடி பிறப்பு கொண்டவர்களாக, (கையூட்டுகள் மற்றும் பிற ஆதிக்கங்களின் மூலம்) அவனிடம் இருந்து விலகிச் செல்ல முடியாதவர்களாக, எப்போதும் அவனுடனே வாழ்பவர்களாக, தங்கள் தலைவனுக்கு அறிவுரை வழங்குவதில் ஈடுபடுபவர்களாக, ஞானம், நற்பண்பு ஆகியவற்றையும், பொருள்களின் உறவுகள் குறித்த அறிவையும் கொண்டவர்களாக,(15) எதிர்கால மற்றும் எதிர்பாரா நிகழ்வுகளைக் குறித்துச் சொல்பவர்களாக, காலத்தின் தன்மைகளைக் குறித்த நல்லறிவு கொண்டவர்களாக, கடந்து போனவற்றின் நிமித்தம் ஒருபோதும் வருந்தாதவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(16) எந்த மன்னனின் பணியாட்கள், அவனுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்பவர்களாக, அவனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவர்களாக, தங்கள் தலைவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் கவனம் கொண்டவர்களாக, பற்றுறுதிமிக்கவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(17)



எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தவர்களாக, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, எப்போதும் அறவழியில் நடப்பவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(18) எவனுடைய வருமானத்தின் {வரவின்} மூலங்கள் அனைத்தும், நிறைவு கொண்டவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், நிதியைப் பெருகச் செய்யும் வழிமுறைகளை நன்கறிந்தவர்களுமான மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறதோ, அவனே {அந்த மன்னனே} மன்னர்களில் சிறந்தவனாவான்.(19) எந்த மன்னனுடைய பண்டகசாலைகளும், தானியக்களஞ்சியங்களும், கையூட்டு பெறாதவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், ஆசையற்றவர்களும், திரள {பெருகச்} செய்வதில் முனைப்புள்ளவர்களுமான பணியாட்களின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} செழிப்பையும், பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்} அடைவதில் வெல்கிறான்.(20) எந்த மன்னனின் நகரத்தில் நீதியானது, நன்கறியப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் உண்மையற்ற வழக்கைக் கொண்ட வாதி அல்லது பிரதிவாதிக்கு அபராதம் விதிக்கும் வகையிலும், குற்றவியல் வழக்குகளில் சங்கர் மற்றும் லிகிதரின்[1] ஒழங்கிலும் முறையாக நிர்வகிக்கப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(21) எந்த மன்னன் தன் குடிமக்களிடம் அன்பால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறானோ, மன்னர்களின் கடமைகளைஅறிந்தவனாக இருக்கிறானோ, ஆறு தொகுப்புகளை {ஆறு முக்கிய நோக்கங்களைக்} கவனிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(22)

[1] இங்கே குறிப்பிடப்படும் சங்கர் மற்றும் லிகிதரின் கதை சாந்தி பர்வம் பகுதி 23ல் https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-23.html ஏற்கனவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 115ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்