Sunday, March 25, 2018

தக்க நியமனம்! - சாந்திபர்வம் பகுதி – 119

Fit appointment! | Shanti-Parva-Section-119 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 119)


பதிவின் சுருக்கம் : பணியாட்களில் ஒவ்வொருவரையும் அவரவர்க்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும்; தகாதவர்களைத் தகாத நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை மற்றும், தகுந்தவர்களைத் தகுந்த நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-118
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-119
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மன்னன், இந்த நாயின் கதையில் இருந்து பெறப்பட்ட பாடத்தால் வழிகாட்டப்பட்டு, தன் பணியாட்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}. ஒரு நாயானது, அதற்குத் தகுந்த நிலைக்கு மேலே கௌரவத்துடன் அமர்த்தப்படக்கூடாது. ஒரு நாய், அதற்குத் தகுந்த நிலைக்கு மேல் அமர்த்தப்பட்டால், அது செருக்கால் போதையுறும்.(2) தகுந்த அலுவல்களில் நியமிக்கப்படும் அமைச்சர்கள், அந்தந்தத் தொழிலுக்குத் தகுந்த தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தகாத மனிதர்களின் நியமனங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாது.(3) எந்த மன்னன், தன் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த அலுவல்களைக் கொடுக்கிறானோ, அத்தகு தகுதியின் {புண்ணியத்தின்} விளைவால் அவன் {அந்த மன்னன்}, அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}.(4) ஒரு சரபம், சரபத்தின் நிலையை ஏற்க வேண்டும்; ஒரு சிங்கம், சிங்கத்தின் வலிமையால் பெருகியதாக இருக்க வேண்டும்; ஒரு புலியானது, புலியின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்; ஒரு சிறுத்தையானது, சிறுத்தையின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்.(5)

பணியாட்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் விதிப்படி நியமிக்கப்பட வேண்டும். நீ வெற்றியை அடைய விரும்பினால், பணியாட்களுக்குத் தகுந்ததைவிட உயரிய நிலையில் ஒருபோதும் அவர்களை நியமிக்கக்கூடாது.(6) எந்த மூட மன்னன், இந்த எடுத்துக்காட்டை மீறி, தகாத நிலைகளில் பணியாட்களை நியமிப்பானோ, அவன் தன் மக்களை நிறைவடையச் செய்வதில் தவறுவான்.(7) திறன்மிக்கப் பணியாட்களைக் கொள்ள விரும்பும் மன்னன் ஒருவன், நுண்ணறிவற்றவர்களும், இழிந்த மனம் கொண்டவர்களும், ஞானம் இல்லாதவர்களும், தங்கள் புலன்களுக்குத் தலைவர்களாக இல்லாதவர்களும், உயர் குடியில் பிறக்காதவர்களுமான மனிதர்களை ஒருபோதும் {எந்த அலுவலிலும்} நியமித்துக் கொள்ளக்கூடாது.(8) நேர்மையானவர்களும், உயர்குடி பிறப்பைக் கொண்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், கல்விமான்களும், தீயநோக்கமும், பொறாமையும் இல்லாதவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களும், நடத்தையில் தூய்மையானவர்களும், தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலிகளுமான மனிதர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படத் தகுந்தவர்களாவர்.(9) பணிவுடையவர்களும், தங்கள் கடமைகளை ஆற்றத் தயாராக இருப்பவர்களும், அமைதியான மனநிலை கொண்டவர்களும், மனத்தில் தூய்மையானவர்களும், இயல்பான பல்வேறு பிற கொடைகளைக் கொண்டவர்களும், தாங்கள் இருக்கும் அலுவல்களின் தொடர்பான அவதூறுகளுக்கு ஆளாகாதவர்களுமான மனிதர்கள், மன்னனின் அணுக்கமான துணைவர்களாக இருக்க வேண்டும்.(10)



ஒரு சிங்கமானவன், எப்போதும் மற்றொரு சிங்கத்தையே தன் தோழனாகக் கொள்ள வேண்டும். சிங்கமல்லாத ஒருவன், ஒரு சிங்கத்திற்குத் தோழனானால், அவன் அந்தச் சிங்கத்திற்கு உண்டான பயன்கள் அனைத்தையும் ஈட்டுவான்.(11) எனினும் ஒரு சிங்கமானவன், நாய்களின் கூட்டத்தை மட்டுமே தன் துணைவர்களாகக் கொண்டிருந்தால், அவன் சிங்கத்திற்குரிய கடமைகளை ஆற்றும்போது, தன் தோழமையின் விளைவால், அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறுவான்.(12) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஒரு மன்னன், துணிவு, ஞானம், பெரும் கல்வி, உயர்குடி பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களைத் தன் அமைச்சர்களாகக் கொண்டிருந்தால், அவன் மொத்த உலகையும் அடக்குவதில் வெல்வான்.(13) ஓ! அரசத் தலைவர்களில் முதன்மையானவனே, கல்வி, நேர்மை, ஞானம், பெருஞ்செல்வம் ஆகியவையற்ற ஒரு பணியாளனை மன்னர்கள் ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது.(14) தங்கள் தலைவனுக்கான தொண்டுகளில் அர்ப்பணிப்போடு இருக்கும் மனிதர்களை எந்தத் தடைகளாலும் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. மன்னர்கள், தங்கள் தலைவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் பணியாட்களிடம் எப்போதும் ஆறுதலாகவே பேச வேண்டும்.(15)

மன்னர்கள் எப்போதும் பெருங்கவனத்துடன் தங்கள் கருவூலங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மன்னர்கள், தங்கள் கருவூலங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மன்னன் எப்போதும் தன் கருவூலத்தைப் பெருகச் செய்வதில் முனைய வேண்டும்.(16) ஓ! மன்னா, உன் பண்டகசாலைகள் {கிடங்குகள்} தானியங்களால் நிறைக்கப்படட்டும். அதை நேர்மையான பணியாட்கள் கவனித்துக் கொள்ளட்டும். நீ உன் செல்வத்தையும், தானியங்களையும் பெருகச் செய்ய முனைவாயாக.(17) போரில் திறன்பெற்ற உன் பணியாட்கள், அவர்களுடைய கடமைகளைக் கவனமாகச் செய்யட்டும். அவர்கள் குதிரைகளை நிர்வகிப்பதில் திறன்பெற்றவர்களாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தேவைகளைக் கவனிப்பாயாக. நீ நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சூழப்பட்டிருப்பாயாக. உனது நகரத்துக்கான நன்மையை நீ நாடுவாயாக.(19) நாயின் எடுத்துக்காட்டைச் சொன்னதன் மூலம், உன் குடிமக்களிடம் நீ பின்பற்ற வேண்டிய கடமைகளைக் குறித்து உனக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(20)

சாந்திபர்வம் பகுதி – 119ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்