Wednesday, March 28, 2018

தர்மார்த்தகாமம்! - சாந்திபர்வம் பகுதி – 123

Virtue, Wealth and Pleasure! | Shanti-Parva-Section-123| Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 123)


பதிவின் சுருக்கம் : அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பயன்களையும், அறத்தைக் கைவிட்டவன் செய்யத்தகு கேடுநீக்கும் செயல்முறைகளையும், இவை தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் ஆங்கரிஷ்டனுக்கும் முனிவர் காமந்தகருக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-123
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, அறம் பொருள், இன்பம் குறித்த முடிவான தீர்மானங்களை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றில் எதைச் சார்ந்து வாழ்வின் போக்கு செல்கிறது?(1) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய ஒவ்வொன்றின் வேராகவ இருப்பவை யாவை? மேலும் அம்மூன்றின் விளைவுகள் என்ன? அவை சில சமயங்களில் ஒன்றோடொன்று கலந்தும், சில வேளைகளில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தவையாகவும், சார்பற்றவையாகவும் {வேறுபட்டும்}இருக்கின்றன" என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வுலகின் மனிதர்கள் நல்லிதயங்களுடனும், அறத்தின் துணையுடனும் செல்வத்தை அடைய முயலும்போது, காலம், காரணம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, அறம், பொருள், இன்பம் ஆகியன ஒன்று கலந்த நிலையிலும், ஒன்றோடொன்று உடன் உறைந்த நிலையிலும் காணப்படுகின்றன[1].(3) செல்வமானது அறத்தில் வேர் கொண்டுள்ளது, மேலும் இன்பமோ, அச்செல்வத்தின் கனி {பயன்} என்றே சொல்லப்படுகிறது. மேலும் இந்த மூன்றும் மனவுறுதியிலேயே {சங்கல்பத்திலேயே} தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மனவுறுதியானது, பொருள்கள் {நோக்கங்கள்} தொடர்புடையதாகும்.(4) மேலும் அனைத்துப் பொருட்களும் மொத்தமாக இன்ப விருப்பத்தை நிறைவு செய்யவே இருக்கின்றன. அப்போது, இந்த மூன்று திரட்டுகளும் இவற்றையே {மனவுறுதி மற்றும் நோக்கங்களையே} சார்ந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களில் இருந்து முற்றிலும் பிரிந்து இருப்பதே முக்தியாகும் {மோட்சமாகும்}.(5)

[1] "இந்தச் சுலோகத்தை, அறம் சார்ந்த கணவன் ஒருவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் உரிய காலத்தில் கலவியை நாடும் செயலின் மூலம் உரையாசிரியர் விளக்குகிறார். கர்ப்பதானம் Garbhadhan என்ற பெயரில் அறியப்பட்ட சடங்கைச் செய்வதன் மூலம் அறத்தகுதியை அடையலாம். மேலும் {இரண்டாவதாக} அச்செயலில் அவனுக்கு இன்பமும் இருக்கிறது, மேலும் இறுதியில் கிடைக்கும் மகன் என்ற வகையில் அவன் மூன்றவதாகப் பொருளையும் அடைகிறான். {எனவே இக்காரியத்தின் மூலம் அவன் அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகிய மூன்றையும் அடைகிறான்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகத்தில் மனிதர்கள் பரிசுத்தமான மனமுள்ளவர்களாயிருக்கும்பொழுது, தர்மத்தை முன்னிட்டுப் புத்திரனென்னும் பொருளை அடைய வேண்டுமென்ற நிச்சயமுண்டாகி அதற்குரிய காலமும், அதற்கிடமான பத்நியும் நியாயமான காரியமும் நேர்ந்தால் (அறம்பொருள்இன்பங்களாகிற) மூன்றும் சேர்க்கையடைகின்றன" என்றிருக்கிறது.



உடலைப் பாதுகாக்க அறமும், அறம் ஈட்டுவதற்காகச் செல்வமும் நாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்பமானது புலன்களை நிறைவு செய்வதே ஆகும். எனவே, இம்மூன்றும் ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டிருக்கின்றன[2].(6) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன சொர்க்கத்திற்காகவும், அதுபோன்ற வெகுமதிகளுக்காகவும் நாடப்படும்போது, அவ்வெகுமதிகளே தொலைவில் இருப்பதால் அவை {சொர்க்கமும், அதுபோன்ற வெகுமதிகளும்} தொலைவில் இருப்பவையாகச் சொல்லப்படுகின்றன. எனினும், தன்னறிவின் நிமித்தமாக நாடப்படும்போது, அவை நெருக்கமாவதாகச் சொல்லப்படுகிறது. அவை அத்தகைய பண்பில் இருக்கும்போது, அவற்றை ஒருவன் நாட வேண்டும்[3]. ஒருவன் அவற்றை மனத்தாலும் கைவிடக்கூடாது. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன கைவிடப்பட்டால், தவத்த்துறவுகளின் மூலம் ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்ட பிறகே அவற்றைக் கைவிட வேண்டும்[4].(7) முக்தியை நோக்கியதே இந்த மூன்று திரட்டுகளின் குறிக்கோளாகும். தகுந்த மனிதன் அஃதை அடைவான். ஒருவன் செய்யும் செயல்கள், நுண்ணறிவின் துணையுடன் நிறைவடையவோ, எதிர்பாரா விளைவுகளுக்கு வழிவகுக்கவோ செய்யும். அறத்தை விட (தொண்டு, உழவு போன்ற) வேறு பொருட்களே செல்வத்திற்கு வழிவகுப்பதால், செல்வத்தின் {பொருளின்} வேர் எப்போதும் அறத்தில் {மட்டுமே} இருப்பதில்லை. மேலும் (சிலர் செல்வமானது, வாய்ப்பு, அல்லது பிறப்பு, அல்லது அதுபோன்ற காரணங்களைக் கொண்டு ஈட்டப்படுவதால்) அதில் ஒரு முரண்பட்ட கருத்தும் இருக்கிறது. சில சமயங்களில், அடையப்படும் செல்வம் தீமையையே விளைவிக்கும். மேலும் செல்வத்தைத் தவிர (விரதங்கள், நோன்புகள் போன்ற) பிற பொருட்கள் அறத்தை அடைய வழிவகுக்கின்றன. எனவே, இதைப் பொறுத்தவரையில், அறியாமை கலந்த அறிவைக் கொண்ட மூடன், அறம் மற்றும் செல்வத்தின் {பொருளின்} உயர்ந்த குறிக்கோளான முக்தியை {மோட்சத்தை} அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(9) அறத்தின் கழிவுகள், வெகுமதியடையும் விருப்பத்தில் இருக்கின்றன; செல்வத்தின் {பொருளின்} கழிவுகள், அதை விளம்பரப்படுத்துவதில் இருக்கிறது; இந்தக் கசடுகள் தூய்மையடையும்போது, அவை பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன.(10)

[2] "நன்மை, ஆசை மற்றும் இருள் {நற்பண்பு [சத்வகுணம்], ஆசைப்பண்பு [ரஜோகுணம்], இருள்பண்பு [தமோகுணம்]} என்ற மூன்று குணங்கள், அல்லது பண்புகள் மனிதனினுடைய செயல்களின் பண்புகளை விரித்துரைக்கின்றன. பகவத்கீதையின் இறுதிப் பகுதிகளைக் காண்க. எனவே, அத்தகு {ரஜோ குணம் கொண்ட} அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கங்களல்ல. நற்பண்பை {சத்வகுணத்தைக்} கொண்ட நோக்கங்களே பின்பற்றத்தகுந்தவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "அஃதாவது, ஒருவன் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே அறத்தையும், கனியில் விருப்பமில்லாமல் {பயனில் ஆசையில்லாமல்} செய்யப்படும் செயல்களுக்குச் செலவழிப்பதற்காக மட்டுமே செல்வத்தையும், உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இன்பத்தையும் நாட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] தர்மாதிங்காமானைஷ்திகானம் Dharmadinkamanaishthikan, அதாவது தர்மத்தை {அறத்தை} முதலாகவும், காமத்தை {இன்பத்தை} இறுதியாகவும் கொள்தல், எனவே இவை அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இது தொடர்பாகப் பழங்காலத்தில் காமந்தகர் மற்றும் ஆங்கரிஷ்டன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிடப்படுகிறது.(11) ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மன்னன் ஆங்கரிஷ்டன், சுகமாக அமர்ந்திருந்தவரான முனிவர் காமந்தகரை {அணுகி} வணங்கி, அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டான்.(12)

{ஆங்கரிஷ்டன் காமாந்தகரிடம்}, "ஓ! முனிவரே, ஒரு மன்னன், காமத்தாலோ, மடமையினாலோ உந்தப்பட்டுப் பாவமிழைத்துவிட்டு, பின்பு அதற்காக வருந்தினால், எச்செயல்களைச் செய்வதன் மூலம் {அவனால்} அந்தப் பாவங்களை அழிக்க முடியும்?(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்?" என்று கேட்டான்.(14)

காமந்தகர் {ஆங்கரிஷ்டனிடம்}, "அறம், செல்வம் {பொருள்} ஆகியவற்றைக் கைவிட்டு, இன்பத்தை மட்டுமே பின்தொடரும் மனிதன், அத்தகு நடத்தையின் மூலம் தன் நுண்ணறிவை இழப்பதையே அறுவடை செய்கிறான்.(15) நுண்ணறிவின் {புத்தியின்} அழிவைக் கவனமின்மை {மயக்கம்} பின்தொடர்கிறது. உடனே அறம் மற்றும் செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் அழிவை அடைகின்றன. அத்தகு கவனமின்மையால் {மயக்கத்தால்}, கடும் இறைமறுப்பும் {நாத்திகமும்}, திட்டப்படியான தீயொழுக்கமும் உண்டாகின்றன.(16) பாவம்நிறைந்த ஒழுக்கம் கொண்ட அந்தத் தீய மனிதர்களை மன்னன் அடக்கிவைக்கவில்லையெனில், பாம்பு மறைந்திருக்கும் வீட்டிற்குள் இருக்கும் ஒருனைப் போல நல்ல குடிமக்கள் அனைவரும் அவனிடம் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்.(17) குடிமக்கள் அத்தகைய மன்னனைப் பின்பற்ற மாட்டார்கள். பிராமணர்களும், பக்திமான்களும் {நல்லோரும்} அவ்வாறே செயல்படுவார்கள். விளைவாக, மன்னன் பேராபத்தையும், அழிவையுமே ஈட்டுவான்.(18) புகழ்க்கேட்டையும், அவமதிப்பையும் அடையும் அவன், துன்பகராமன இருப்பிலேயே தன் வாழ்வை நீட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.(19)

சாத்திரங்களைக் கற்ற மனிதர்கள், பாவத்தைத் தடுப்பதற்காகப் பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கின்றனர். மன்னன், மூன்று வேதங்களையும் கற்பதற்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அவன் பிராமணர்களை மதித்து, அவர்களுக்கு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.(20) அவன் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்பவனாக, புனித மந்திரங்களை ஓதுபவனாக இருந்து, தன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்த வேண்டும். அவன், தீய குடிமக்களைத் தன்னிடம் இருந்தும் தன் நாட்டில் இருந்தும் விரட்டி, நல்லோரின் தோழமையை நாட வேண்டும்.(22) அவன், இனிய சொல், அல்லது நற்செயல்களின் மூலம் மனிதர்கள் அனைவரையும் நிறைவு செய்ய வேண்டும். அவன் அனைவரிடமும், "நான் உங்களுடையவன்" என்று சொல்லி, தன் எதிரியின் நற்பண்புகளையும் அறிவிக்கையிட வேண்டும்.(23) இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், அவன் விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உயர்ந்த வெகுமதிகள் அனைத்தையும் வெல்வான். இத்தகையான ஒழுக்கத்தின் மூலம் அவனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் அழிவடையும்.(24) உன்னுடைய பெரியோர்கள் மற்றும் ஆசான்கள் குறிப்பிடும் உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நீ நிறைவேற்ற வேண்டும். உன்னைச் சார்ந்த பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அருளின் மூலமாக உன்னால் நிச்சயம் பெரும்பேற்றை அடைய முடியும்" என்றார் {காமந்தகர்}".(25)

சாந்திபர்வம் பகுதி – 123ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்