Thursday, March 01, 2018

வெற்றிக்கான வழிமுறைகள்! - சாந்திபர்வம் பகுதி – 95

The means for victory! | Shanti-Parva-Section-95 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 95)

பதிவின் சுருக்கம் : வெற்றியடைய விரும்பும் மன்னன் செயல்பட வேண்டிய முறை; போரிடச் செல்லும் க்ஷத்திரியனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்தும், வெற்றி அடையவும், தன் வளங்களை அதிகரிக்கவும் நியாயமான வழிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு க்ஷத்திரியன் மற்றொரு க்ஷத்திரியனைப் போரில் அடக்க விரும்பினால், முன்னவன் வெற்றி குறித்த காரியத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்னால் கேட்கப்படும் நீர் இதற்குப் பதிலளிப்பீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தன் பின்னே படையுடனோ, இல்லாமலோ செல்லும் மன்னன், தான் அடக்கப்போகும் மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்து, அந்த மக்கள் அனைவரிடமும், "நானே உங்கள் மன்னன், நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்.(2) எனக்கு உரிய கப்பத்தைக் கொடுங்கள், அல்லது போரில் என்னோடு மோதுங்கள்" என்று சொல்ல வேண்டும். மக்கள் அவனைத் தங்கள் மன்னனாக ஏற்றால், எந்தப் போருக்குமான அவசியமில்லை.(3) பிறப்பால் க்ஷத்திரியர்களாக இல்லாத அவர்கள், பகைமையின் குறியீடுகளை வெளிப்படுத்தும்போது, அவர்கள் தங்களுக்கு விதிக்கப்படாத நடைமுறைகளை நோற்பதால், அனைத்து வழிமுறைகளிலும் அவர்கள் அடக்கப்பட வேண்டும்.(4) எதிரியிடம் அதிகம் எதிர்பார்ப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதவனும், போரிட ஆயுதமின்றி வருபவனுமான க்ஷத்திரியனைக் கண்டால், பிற வகையைச் சேர்ந்த மக்களும் (படையெடுத்து வருபவனைத் தடுப்பதற்காக) ஆயுதங்களை எடுப்பார்கள்[1]" என்றார் {பீஷ்மர்}.(5)
[1] "மன்னர்கள், அரச வகையைச் சேர்ந்தோருடன் மட்டுமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தாலும், படையெடுப்பாளனைத் தடுப்பதற்காக க்ஷத்திரியர்கள் ஆயுதமெடுக்காமல், வேறு வகையினர் எடுத்தால், அவன் தனக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் அவர்களோடும் போரிடலாம் என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "க்ஷத்திரியர்களல்லாதவர்களான அவர்கள் விரோதஞ்செய்வார்களானால் தமக்குத்தகாத கர்மத்திலிருக்கும் அவர்களை எவ்விதத்திலும் எல்லா உபாயங்களாலும் அடக்க வேண்டும். ஆயுதமில்லாத க்ஷத்திரியனைக் காக்குந்திறமை இல்லாதவனென்றும், அதிகமான எண்ணமுள்ளவனென்றும் அறிந்தால் தாழ்ந்த மனிதனும் ஆயுதமெடுப்பான்" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மற்றொரு க்ஷத்திரிய மன்னனை எதிர்த்து போரிடச் செல்லும் க்ஷத்திரிய மன்னன் ஒருவனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கவசம் பூணாத க்ஷத்திரியனுடன் போரிட அந்த க்ஷத்திரியன் தானும் கவசம் பூணக்கூடாது. ஒருவன் மற்றொருவனோடு போரிட்டு, எதிராளி இயலாமையை அடையும்போது பின்னவனை {எதிராளியைக்} கைவிட வேண்டும்[2].(7) எதிரி கவசம் பூண்டு வந்தால், அவனது எதிராளியும் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். எதிரி ஒரு படையின் பாதுகாப்புடன் முன்னேறி வந்தால், படையின் பாதுகாப்புடன் கூடிய ஒருவன் அவனைப் போருக்கு அறைகூவி அழைக்க வேண்டும்.(8) எதிரி வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால், அவனை வஞ்சகத்தின் உதவியுடனேயே சந்திக்க வேண்டும். மறுபுறம் அவன் நியாயமாகப் போரிட்டால், நியாயமான வழிமுறைகளின்படியே அவன் தடுக்கப்பட வேண்டும்.(9) ஒருவன், ஒரு தேர்வீரனை எதிர்த்து குதிரையின் முதுகில் செல்லக்கூடாது. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனை எதிர்த்தே செல்ல வேண்டும். எதிராளி துயரில் வீழ்ந்தால், அவன் தாக்கப்படக்கூடாது; அச்சத்தில் இருப்பவனும், வெல்லப்பட்டவனும் தாக்கப்படக்கூடாது[3].(10)
[2] "நான் பின்பற்றும் வங்க உரையில் இந்தச் சுலோகம், பம்பாய் உரையில் உள்ளதைவிடச் சிறப்பாக இருக்கிறது. பின்வரும் 8ம் சுலோகத்துடன் வங்க உரையே பொருந்துகிறது. பம்பாய் உரை பின்பற்றப்பட்டால், அதன் மொழிபெயர்ப்பு, "ஒரு க்ஷத்திரியன் போரில் கவசமணியாதவரை அவனோடு ஒருவன் போரிடக்கூடாது. ‘நான் உன்னை நோக்கி {கணையை} ஏவப்போகிறேன்; நீ ஏவுவாயாக" என்ற வார்த்தைகளில் அவனை அறைகூவி அழைத்த பிறகே அவனுடன் ஒருவன் போரிட வேண்டும்" என்றிருக்கும். கே.பி. சின்ஹா இதைக் கணிசமான அளவுக்குச் சரியாகவே மீட்டுத் தந்திருக்கிறார். பர்துவான் பதிப்பு வழக்கம் போலவே தவறாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸன்னகமில்லாமலும், கவசமில்லாமலுமிருக்கும் ஒரு க்ஷத்திரியன் யுத்தத்தில் எதிர்க்கத்தக்கவனல்லன். ஒருவனாயிருந்து ஒருவனாயிருப்பவனை நோக்கி, "நீ அம்பை விடு" என்றும், "நானும் விடுகிறேன்" என்றும் அறிவிக்க வேண்டும். அவன் ஸன்னகத்துடன் வருவானாகில், பிறகு தானும் ஸன்னகத்துடனிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
[3] "இங்கே சுட்டப்படும் துயரம் என்பது குதிரையில் இருந்து வீழ்தல், அல்லது தேர், அல்லது ஆயுதங்களை இழத்தல் போன்றவை" என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நஞ்சு தோய்த்த கணைகளோ, முள்பதித்த கணைகளோ {கர்ணிகளோ} பயன்படுத்தப்படக்கூடாது. இவை தீயவர்களின் ஆயுதங்களாகும். ஒருவன் கோபத்திற்கோ, கொல்லும் விருப்பத்திற்கோ வசப்படாமல் நியாயமான முறையில் போரிட வேண்டும்.(11) பலவீனமானவனோ, காயம்பட்டவனோ கொல்லப்படக்கூடாது. அதேபோலவே மகனற்றவனோ, ஆயுதம் முறிந்தவனோ, துயரில் வீழ்ந்தவனோ, நாண்கயிறு அறுந்தவனோ, தன் வாகனத்தை இழந்தவனோ கொல்லப்படக்கூடாது. காயம்பட்ட எதிரியை, அவனது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும், அல்லது அவன் வெற்றியாளனின் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டால், திறன்மிக்க மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அவனது காயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.(12) நல்ல மன்னர்களுக்கிடையில் சச்சரவு விளையும்போது, ஒரு நல்ல போர்வீரன் துயரில் விழுந்தால் (அவனது காயங்கள் கவனிக்கப்பட்டு) குணமடைந்தபிறகு அவனைச் சுதந்திரமாக விட வேண்டும். இதுவே நித்திய கடமையாகும் {இதுவே ஸனாதன தர்மமாகும்}.(13) தான்தோன்றியின் (பிரம்மனின்) மகனான மனுவே, போர்கள் நியாயமான முறையில் போரிடப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் {க்ஷத்திரியர்கள்} அறத்தை அழிக்காமல் அதைப் பின்பற்ற வேண்டும்.(14)

நியாயமாகப் போரிடுவதைக் கடமையாகக் கொண்ட ஒரு க்ஷத்திரியன், நியாயமற்ற வழிமுறைகளின்படி வெற்றியடைந்தால் அவன் பாவியாகிறான். வஞ்சக நடத்தை கொண்ட அத்தகு மனிதன் தன்னையே கொல்கிறான் எனச் சொல்லப்படுகிறான்.(15) தீயோரின் நடைமுறை இதுவே. தீயோனும் கூட நியாயமான வழிமுறைகளின்படியே அடக்கப்பட வேண்டும். பாவகரமான வழிமுறைகளில் வெற்றியை அடைவதை விட அறம் நோற்று உயிரைவிடுவதே சிறந்தது.(16) ஓ! மன்னா, இழைக்கப்படும் பாவமானது, ஒரு பசுவைப் போலவே உடனடி பலனை உண்டாக்குவதில்லை. அந்தப் பாவம், அஃதை இழைத்தவனின் வேர்களையும், கிளைகளையும் எரித்த பிறகே அவனை மூழ்கச் செய்கிறது.(17) பாவம் நிறைந்த ஒரு மனிதன், பாவம்நிறைந்த வழிமுறைகளில் செல்வத்தை அடைந்து மிகவும் இன்புற்றிருக்கிறான். ஆனால், பாவம் நிறைந்த வழிமுறைகளில் முன்னேற்றத்தை அடைந்த அந்தப் பாவி அந்தப் பாவத்தையே தொடர்வான்.(18) அறம் எந்த உச்சவினையுமாற்றுவதில்லை என்று நினைக்கும் அவன் நன்னடத்தைக் கொண்ட மனிதரை ஏளனம் செய்கிறான். அறத்தை நம்பாத அவன், இறுதியில் அழிவையடைகிறான்.(19)

அவன், வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றில் சிக்கியிருந்தாலும், தன்னை இறவாதவனாகவே கருதுகிறான். காற்றடைக்கப்பட்ட பெரிய தோற்பையைப் போல, அந்தப் பாவி தன்னை அறத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறான். எனினும், விரைவில் அவன் ஆற்றங்கரை மரமானது, வேருடன் சேர்த்து அடித்துச் செல்லப்படுவதைப் போலவே காணாமல் போகிறான்.(20) அப்போது, கல் தரையில் விழுந்து உடைந்த மண்குடத்துக்கு ஒப்பானவனாக அவனைக் காணும் மக்கள், அவனுக்குத் தகுந்தபடியே அவனைக் குறித்துப் பேசுவார்கள். எனவே, மன்னனானவன், வெற்றி மற்றும் தன் வளங்களை அதிகரித்தல் ஆகிய இரண்டிலும் நியாயமான வழிமுறைகளையே நாட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(21)


சாந்திபர்வம் பகுதி – 95ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்