Saturday, March 03, 2018

வீரம்! - சாந்திபர்வம் பகுதி – 97

Heroism! | Shanti-Parva-Section-97 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 97)


பதிவின் சுருக்கம் : மன்னர்கள் குற்றமற்றவர்களாக ஆகும் வழிமுறைகள்; மன்னன் ஏன் ஒரு வேள்வியின் தன்வடிவமாகச் சொல்லப்படுகிறான்? அச்சத்திலிருப்போரைப் போராதுகாத்தல் மற்றும் அச்சமின்மை ஆகிய வீரர்களின் பண்புகள்; நோய்ப்படுக்கையில் மரணம் மற்றும் வீரமரணம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, க்ஷத்திரியர்களின் நடைமுறைகளைவிடப் பாவம் நிறைந்தவை வேறெவையும் இல்லை. போருக்கு அணிவகுத்துச் செல்லும் போதோ, போரிலோ மன்னன் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொல்கிறான்[1].(1) எந்தச் செயல்பாடுகளின் மூலம் மன்னன் புகழ் உலகங்களை வெல்கிறான்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! கல்விமானே நான் அறிய விரும்பும் இவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)


[1] "நீலகண்டர் மஹாஜனம் mahajanam என்பதைப் படைகளின் துணையும் செல்லும் வைசிய வணிகள் என்று பொருள் கொள்கிறார். அவரைப் பின்பற்றி வட்டார மொழிபெயர்ப்பாளர்களும் அந்தச் சொல்லுக்கான பொருளை அதே வகையில் கொள்கின்றனர். எனினும், இது தவறானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அந்தச் சொல்லுக்கு, "பெரும் எண்ணிக்கையிலான மக்கள்" என்பதே பொருள். க்ஷத்திரிய நடைமுறைகள் பாவம் நிறைந்தவை என்று சொல்வதற்குத் துருப்புகளுக்கு மத்தியில் உள்ள வைசியர்களின் படுகொலை மட்டுமே காரணம் என யுதிஷ்டிரன் ஏன் குறிப்பிட வேண்டும்? அபயாணம் Apayanamஎன்பது "தப்பி ஓடுவது" என்ற பொருளைத் தரும். நான் "அணிவகுப்பு" என்ற பொருளைத் தரும் அரயாணம் Arayana என்ற சொல்லையே விரும்புகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அரசன் விரோதமாக நடத்தும் பொழுதும் யுத்தத்திலும் பல ஜனங்களைக் கொல்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன் போருக்குப் படையெடுத்துச் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொல்கிறான்" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீயோரைத் தண்டித்தல், நல்லோரை இணைத்துக் கொண்டு அவர்களைப் பேணி வளர்த்தல், வேள்விகள் செய்தல் மற்றும் கொடைகள் அளிதல் ஆகியவற்றின் மூலம் மன்னர்கள் குற்றமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகிறார்கள்.(3) வெற்றியடைய விரும்பும் மன்னர்கள் பல உயிரினங்களைப் பீடிக்கிறார்கள் என்பது உண்மையே. இருப்பினும் வெற்றி அடைந்த பிறகு அவர்கள் அவை அனைத்தையும் முன்னேற்றவும், வளர்ச்சியடையச் செய்யவும் உதவுகிறார்கள்.(4) கொடைகள், வேள்விகள், தவங்கள் ஆகியவற்றால் அவர்கள் தங்கள் பாவங்களை அழித்து, உயிரினங்கள் அனைத்திற்கும் செய்யும் நன்மையால் தங்கள் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அதிகரித்துக் கொள்கிறார்கள்.(5)

நிலத்தைச் சீரமைப்பவன், அதைச் சீரமைப்பதற்காக நெற்கதிர்களையும், களைகளையும் எடுக்கிறான். எனினும், அவனது செயல்பாடுகள் நெற்கதிர்களை அழிக்காமல் அவற்றை மேலும் வளமாக வளரச் செய்கின்றன.(6) ஆயுதங்களைத் தரிப்போர், அழிவுக்குத் தகுந்த பலரை அழிக்கிறார்கள். எனினும், அத்தகு பரந்த அழிவானது, எஞ்சியிருப்போரை வளரவும், முன்னேறவும் செய்கிறது.(7) கொள்ளை, கொலை, துன்பம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கும் ஒருவன், இவ்வாறு அவர்களின் வாழ்வைக் கள்வர்களிடம் இருந்து காப்பதன் விளைவால், செல்வம், உயிர் மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடுப்பவனாகக் கருதப்படுகிறான்.(8) எனவே, மன்னன், அனைவரின் அச்சங்களையும் விலக்கும் தக்ஷிணையுடன் கூடிய வேள்வியைச் செய்து தேவர்களைத் துதிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையில் இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்[2].(9)

[2] "குடிமக்களைப் பாதுகாப்பது என்பது அனைத்து வேள்விகளின் தகுதியையும் ஈட்டித் தரும் ஒரு வேள்வியோடு இங்கு ஒப்பிடப்படுகிறு. அவ்வேள்வியில் இறுதிக் கொடையானது அனைவரின் அச்சம் விலகுவதே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிராமணர்களின் நிமித்தமாக எழுந்த போர்களில் எதிரிகளுடன் போரிட்டு உயிரை விடும் மன்னன், அளவிலா கொடைகளுடன் கூடிய ஒரு வேள்வியின் உடல் வடிவமாகவே கருதப்படுகிறான்.(10) ஒரு மன்னன், தன் அம்பறாத்தூணிகள் நிறந்த கணைகளைத் தன் எதிரிகளின் மீது அச்சமில்லாமல் ஏவினால், பூமியில் அவனுக்கும் மேன்மையான எவனையும் தேவர்களும் கூடக் காண்பதில்லை.(11) அவ்வாறிருக்கையில், அவன் தன் எதிரிகளின் உடல்களை எத்தனை கணைகளால் துளைக்கிறானோ, அழிவில்லாதவையும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லவையுமான அத்தனை உலகங்களையும் அவன் {மறுமையில்} அனுபவிக்கிறான்.(12) அத்தருணத்தில் அவனது உடலில் இருந்து வழியும் குருதியானது, அவனது உடல்வலியுடன் சேர்த்து அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறது.(13) ஒரு க்ஷத்திரியின் போரில் அனுபவிக்கும் வலியானது, அவனது தகுதியை {புண்ணியத்தை} மேம்படுத்தச் செயல்படும் தவங்களைப் போல ஆகிறது எனச் சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(14)

அச்சத்திலிருக்கும் நல்லோர், மேகங்களிடம் மழையை வேண்டும் மனிதர்களைப் போலப் போருக்கு விரைந்து சென்றிருக்கும் வீரர்களிடம் உயிரை வேண்டி பின்னால் நிலைக்கிறார்கள்.(15) வீரர்கள், அவ்வாறு வேண்டுவோரை போரின் ஆபத்துகளை அடைய விடாமல், தாங்களே ஆபத்துகளைச் சந்தித்து அவர்களைப் பின்புறம் இருக்கச் செய்தால், அவர்களுடைய தகுதி {புண்ணியம்} மகத்தானதாகிறது.(16) மேலும் அச்சத்திலிருக்கும் அந்த மனிதர்கள், அந்தத் துணிச்சல்மிக்கச் செயலைப் பாராட்டி, தங்களைப் பாதுகாப்போரை எப்போதும் மதித்தால், அவர்கள் முறையானதையும், நீதியானதையும் செய்கிறார்கள். அவர்கள் வேறு வகையில் செயல்பட்டால், அவர்களால் தங்களை அச்சத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது.(17) தோற்றத்தில் இணையான மனிதர்களுக்கிடையிலேயே பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. பயங்கரக் கலவரத்துக்கு மத்தியில் சிலர் பகைவரின் படையணிகளை எதிர்த்து விரைகின்றனர்.(18)

உண்மையில், வீரர்களானவர்கள், சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைப் பின்பற்றி, எதிரிக்கூட்டத்தை எதிர்த்து விரைகிறார்கள். எனினும், கோழைத்தனமான அச்சத்திலிருப்பவன், ஆபத்தில் இருக்கும் தன் தோழர்களைக் கைவிட்டுத் தப்பி ஓடுவதில் பாதுகாப்பை அடைய முனைகிறான்.(19) அதுபோன்ற இழிந்தவர்கள் உன் குலத்தில் பிறக்க வேண்டாம். தங்கள் தோழர்களைப் போரில் கைவிட்டு, காயமில்லா அங்கங்களுடன் வீடு திரும்புவோருக்கு இந்திரனின் தலைமையிலான தேவர்களே பேரிடரை உண்டாக்குவார்கள். எவன் தன் தோழர்களைக் கைவிட்டு தன் உயிர் மூச்சைக் காக்க விரும்புகிறானோ, அவன் தண்டங்களாலோ, கற்களாலோ அடித்துக் கொல்லப்பட வேண்டும், அல்லது காய்ந்த புற்படுக்கையில் உருட்டி தீயிட்டுக் கொல்லப்பட வேண்டும். அத்தகு குற்றமுள்ள நடத்தை கொண்ட க்ஷத்திரியர்கள், விலங்குகளைக் கொல்லும் முறையில் கொல்லப்பட வேண்டும்.(20-22)
இளைப்பாறும் படுக்கையில், மலம் மற்றும் சிறுநீரை வெளியிட்டு, பரிதாபமாகக் கதறி அழுது மரணத்தை அடையும் க்ஷத்திரியன் பாவம் நிறைந்தவனாவான்.(23) சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் உடலில் காயமின்றி ஒரு க்ஷத்திரியன் அடையும் மரணத்தை மெச்சுவதில்லை.(24) ஓ! ஐயா, வீட்டில் மரணத்தை அடையும் க்ஷத்திரியன் புகழுக்குத் தக்கவனன்று. அவர்கள் {க்ஷத்திரியர்கள்} வீரர்களாவர். அவர்களுடைய வீரமில்லா எந்தச் செயலும் பாவம் நிறைந்ததும், மகிமையற்றதுமாகும்.(25)

ஒரு நோயாளி, தன் உடல் மற்றும் துணிகளில் இருந்து நாற்றம் வெளிப்படும் நிலையில், வற்றிய முகத்துடன், "இஃது என்ன துயரம்? இது வலிநிறைந்தது! நான் பெரும் பாவியாவேன்" என்று சொல்லி தன் உறவினர்களைத் துயரில் ஆழ்த்துகிறான்.(26) உடல்நலமிக்கவர்களின் நிலையில் நாட்டங்கொள்ளும் அவன், (தான் அடையும் சித்திரவதைகளுக்கு மத்தியில்) மரணத்தையே திரும்பத் திரும்ப விரும்புகிறான். எவன் கண்ணியமும், செருக்கும் மிக்க வீரனோ, அவன் இத்தகு மகிமையற்ற மரணத்திற்குத் தகுந்தவனல்ல.(27) உறவினர்கள் சூழ போரில் தன் எதிரிகளைக் கொல்லும் க்ஷத்திரியன், கூரிய ஆயுதங்களின் முனையிலேயே இறக்க வேண்டும்.(28) இன்பமடையும் ஆசையில், கோபத்தால் நிறையும் ஒரு வீரன், சீற்றத்துடன் போரிட்டால், எதிரிகளால் தன் உடலில் ஏற்படும் காயங்களின் வலியை உணர மாட்டான்.(29) போரில் மரணத்தை அடையும் அவன், புகழ் நிறைந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்டி, தன் வகைக்கான உலகத்தை எட்டி, இறுதியாக இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்.(30)

போரில் புறமுதுகிடாத வீரன் ஒருவன், தன் உயிரைத் துச்சமாக மதித்து போரின் முன்னணியில் தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் போரிட்டு, இந்திரனின் தோழமையை அடைகிறான்.(31) பகைவர்களுக்கு மத்தியில், உன்னதமற்ற அச்சத்தையோ, உற்சாகமின்மையையோ வெளிப்படுத்தாமல் எந்த வீரன் மரணத்தை அடைகிறானோ, அவன் மறுமையில் அழிவில்லா அருளைக் கொண்ட உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(32)

சாந்திபர்வம் பகுதி – 97ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்