Thursday, April 05, 2018

அறநெறிக் கோட்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 132

The code of morality! | Shanti-Parva-Section-132| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 02)


பதிவின் சுருக்கம் : துன்ப காலங்களில் மன்னனின் நடைமுறை; ஏன் ஒருவன் அவதூறு பேசக்கூடாது? மன்னன் பின்பற்ற வேண்டிய அறநெறிக் கோட்பாடு ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-132
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-132
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த நெறி நிறைந்தவையும், (அற ஆட்சிக்குரியவையும்) உலகத்திற்கு நன்மையானவையுமான நடைமுறைகள் மறையும் போது, வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் வளங்கள் அனைத்தும் கள்வர்களின் கைகளால் வீழும்போது,(1) உண்மையில், அத்தகு பேரிடர்மிக்கக் காலம் வரும்போது, ஓ! பாட்டா, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பாசத்தால் கைவிட முடியாத நிலையில் இருக்கும் ஒரு பிராமணன், எந்த வழிமுறையில் தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு நேரம் வரும்போது, அந்தப் பிராமணன் தன் அறிவின் உதவியைக் கொண்டு வாழ வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்தும் நல்லோருக்கானதே. தீயோருக்கோ இங்கேதும் இல்லை.(3) எவன் தீயவர்களிடம் இருந்து செல்வத்தை எடுத்து, நல்லோருக்கு அதைக் கொடுக்கிறானோ, அவன் ஆபத்து கால அறநெறியை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(4) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் மன்னன், தன் மக்களைக் கடுஞ்சீற்றமடையவும், கடும் எதிர்ப்பில் ஈடுபடவும் தள்ளாமல், உடைமையாளனால், “இஃது எனது” என்று சொல்லி கொடுக்கப்படாமல் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.(5) வேறு காலங்களில் அறிவால் தூய்மையடைந்தவனும், வலிமை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒரு ஞானமிக்க மனிதன், இத்தகு காலங்களில் நிந்தனைக்குள்ளாகும் வகையில் நடந்து கொண்டால், உண்மையில் அவன் நிந்தனைக்குத் தகுந்தவனல்ல.(6) எப்போதும் தங்கள் வலிமையை வெளிப்படுத்தித் தங்களைத் தாங்கிக் கொள்பவர்கள், ஒருபோதும் வேறு எந்த வழிமுறையைக் கொண்டும் வாழ விரும்பமாட்டார்கள். ஓ! யுதிஷ்டிரா, வலிமை கொண்டவர்கள், தங்கள் ஆற்றலின் உதவியைக் கொண்டே எப்போதும் வாழ்வார்கள்.(7)

(துன்ப காலங்களில்) எந்த வகை விலக்கும் இல்லாத பொதுவான சாத்திரங்களை (அத்தகு காலங்களில்) மன்னன் நடைமுறைப்படுத்த வேண்டும். நுண்ணறிவுமிக்க ஒரு மன்னனோ, அந்தச் சாத்திரங்களைப் பின்பற்றுகையில், மேலும் அதிகமாகச் செய்யலாம்[1].(8) எனினும் மன்னன், கௌரவிக்கப்பட வேண்டியவர்களும், மதிப்புமிக்கவர்களுமான ரித்விஜர்கள், புரோகிதர்கள், ஆசான்கள், பிராமணர்கள் ஆகியோரை அத்தகு நேரங்களிலும் ஒடுக்காமல் இருக்க வேண்டும். அத்தகு காலங்களிலும் அவர்களை ஒடுக்கினால் அவன் பழியையும், பாவத்தையும் இழைத்தவனாவான்.(9) உன்னிடம் நான் சொல்லும் இவை இவ்வுலகில் சட்டத்தோடு ஒட்டிய உரிமையாகக் கருதப்படுகிறது. உண்மையில் இதுவே (துன்ப கால நடைமுறைகளைக் காணக்கூடிய) நித்திய கண்ணாகும். ஒருவன் இந்த உரிமையின்படியே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மன்னனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ அழைக்க இதைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.(10)

[1] “உரையாசிரியர் பின்வரும் வகையில் இதை விளக்குகிறார். துன்ப காலத்திற்காக விதிக்கப்பட்டவையும், எந்த விலக்கும் இல்லாதவையுமான பொதுவான உரைகள், மன்னன் தன் கருவூலத்தை நிறைத்துக் கொள்ள, குடிமக்கள் மீதும், பகை நாடுகளின் மீதும் கனமான தீர்வைகளை விதிக்கலாம் என்று அனுமதிக்கின்றன. சாதாரண மன்னன், அத்தகு நேரங்களில் அவ்வகையிலேயே செயல்படுவான். எனினும், நுண்ணறிவுடன் கூடிய ஒரு மன்னனோ, அத்தகு தீர்வைகளை விதிக்கும்போது, அவற்றைத் தீயோரின் மீதும், தன் குடிமக்களிலும், பிற நாடுகளின் குடிமக்கள் மத்தியிலும் உள்ள தண்டிக்கத்தக்கோர் மீதும் விதித்து, நல்லோருக்குத் தொல்லை கொடுப்பதைத் தவிர்ப்பான்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.



கிராமங்களிலும், நகரங்களிலும் வசிக்கும்பல மனிதர்கள், பொறாமையாலும், கோபத்தாலும் ஊக்கமடைந்து, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதைக் காண முடிகிறது. மன்னன் அவர்களின் வார்த்தைகளைக் கொண்டு ஒருபோதும் எவரையும் கௌரவிக்கவோ, தண்டிக்கவோ கூடாது.(11) ஒருபோதும் அவதூறு பேசப்படக்கூடாது. பேசப்பட்டாலும், அஃது ஒருபோதும் கேட்கப்படக்கூடாது. அவதூறுகள் தொடர்ந்தால், ஒருவன் தன் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும், அல்லது அந்த இடத்தை விட்டு அகல வேண்டும்.(12) அவதூறு பேசுவது தீய மனிதர்களின் பண்பாகும். அஃது ஒழுக்கச் சீர்கேட்டின் குறியீடாகும். மறுபுறம், ஓ! மன்னா, நல்லோரின் சபைகளில் பிற மனிதர்களின் நற்குணங்களைக் குறித்துப் பேசுபவர்களே நல்ல மனிதர்கள்.(13) அடக்கத்தக்கவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும்,, நன்றாக இழுக்கத்தக்கவையுமான இரு காளைகள், நுகத்தில் தங்கள் கழுத்துகளை நுழைத்து விருப்பத்துடன் வண்டியை இழுப்பதைப் போலவே மன்னனும் (துன்ப காலங்களில்) தன் சுமைகளைச் சுமக்க வேண்டும்.(14)

சிலர், ஒரு மன்னன் (அத்தகு காலங்களில்) பெரும் எண்ணிக்கையிலான கூட்டாளிகளை ஈட்டும் வகையில் தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். சிலர் பழைய நடைமுறையே, அறத்தின் உயர்ந்த குறியீடு எனக் கருதுகின்றனர்.(15) சங்கர் மற்றும் லிகிதர் சொல்லும் நடத்தைக்கு ஆதரவாக இருக்கும் வேறு சிலர், இக்கருத்தை ஏற்பதில்லை. அவர்கள் வன்மத்தாலோ, பேராசையாலோ அக்கருத்தை ஏற்கவில்லை[2].(16) தீய நடைமுறைகளுக்கு அடிமையாக இருந்தால் ஆசான்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பெரும் முனிவர்கள் விதித்திருக்கும் எடுத்துக்காட்டுகளும் காணப்படுகின்றன. ஆனால் அத்தகு கருத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட உரிமை ஏதும் இல்லை.(17) அத்தகு மனிதர்கள், வெறுக்கத்தக்க தீய நடைமுறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது, தேவர்களின் தண்டனைக்கு அவர்களை விட வேண்டும்[3]. கபடப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன் கருவூலத்தை நிறைக்கும் மன்னன் நிச்சயம் அறத்திலிருந்து விழுந்தவனாவான்.(18)

[2] “புரோகிதர்களும், பிராமணர்களும் ஒருபோதும் தண்டிக்கப்படவோ, வரிவிதிக்கப்படவோ கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இதுவே நித்திய நடைமுறை. எனவே இதுவே அறநெறியாகும். சங்கர் தன் சகோதரன் லிகிதர் தனக்குச் சொந்தமான ஒரு சில கனிகளைப் பறித்த போது, எவ்வாறு நடந்து கொண்டாரோ, அதை ஆதரிக்கும் வேறு சிலர் வேறு வகைக் கருத்தைக் கொண்டுள்ளனர். இப்படிக் கருதுபவர்களும் முந்தையவர்களைப் போலவே தங்கள் கருத்துக்கு உண்மையானவர் என்று பீஷ்மர் சொல்கிறார். புரோகிதர்களும், பிராமணர்களும் குற்றமிழைத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்வதற்காக அவர்களைப் பழி சொல்வது தகாது என்று பீஷ்மர் சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். சங்கர், லிகிதர் குறித்த கதை சாந்தி பர்வம் பகுதி 23ல் வருகிறது. http://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-23.html

[3] கும்பகோணம் பதிப்பில், “குருவாயிருந்தாலும் தர்ம விரோதமாகச் சென்றவனைச் சிக்ஷிக்க வேண்டுமென்று கூறும் ரிஷிகளின் வசனத்தையும் அறிவிக்கிறார்கள். ரிஷிகளின் வசனத்திற்கு ஒத்ததானப்ரமாணம் ஒன்றும் ஓரிடத்திலும் காணப்படவில்லை. விபரீததர்மத்திலிருக்கும் அதமனான மனிதனைத் தேவர்களும் சிக்ஷிக்கிறார்கள்” என்றிருக்கிறது.

நல்லோரால் அனைத்து வகையிலும் கௌரவிக்கப்படுவதும், வளமையான சூழ்நிலைக்குரியதும், நேர்மையான இதயம் ஒவ்வொன்றாலும் அங்கீகரிக்கப்படுவதுமான அறநெறிக் கோட்பாடே பின்பற்ற வேண்டும்.(19) நான்கு அடித்தளங்களைச் சார்ந்த கடமையை அறிந்தவனே கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். பாம்பின் கால்களைக் கண்டுபிடிப்பது எப்படிக் கடினமானதோ, அப்படியே, கடமைகளைத் தாங்கும் காரணங்களைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாகும்[4].(20) விலங்குகளை வேட்டையாடும் ஒருவன், கணையால் தாக்கப்பட்ட மானின் பாதையைத் தரையில் உள்ள குருதிக் கறைகளைக் கொண்டு கண்டடைவதைப் போலவே, ஒருவன் கடமையின் காரணங்களைக் கண்டுபிடிக்க முயல வேண்டும்.(21) இவ்வாறே ஒரு மனிதன் நல்லோர் நடந்த பாதையில் அடக்கத்துடன் நடக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தைச் சேர்ந்த பெரும் அரச முனிகளின் நடத்தை அவ்வாறானதேயாகும்” என்றார் {பீஷ்மர்}.(22)

[4] “நான்கு அடித்தளங்களைச் சார்ந்த கடமை என்பது, வேதங்களில் விதிக்கப்படும், ஸ்மிருதிகளில் விதிக்கப்படும், பழைய நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்களால் அனுமதிக்கப்படும், ஒருவனின் இதயம் அல்லது மனசாட்சியால் அங்கீகரிக்கப்படும் கடமையாகும்” எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “எல்லா விதத்தாலும் ஆதரிக்கப்படுவதும், மனு முதலி ஸத்புருஷர்களால் ஆதரிக்கப்படுவதும், மஹிமையிற்சிறந்த பெரியோர்களைக் காரணமாகக் கொண்டு ஆதரிக்கப்படுவதும், தன் மனத்திற்குத் திருப்தியுள்ளதுமாயிருப்பது எதுவோ அதைத் தர்மமென்று நிச்சயிக்க வேண்டும். எவன் நான்கு குணங்களுக்கும் ஒத்ததான தர்மத்தை அறிகிறானோ அவன் தர்மத்தை அறிந்தவன். ஸர்ப்பத்தின் அடியைப் போலவே தர்மத்தின் அடியைத் தேடிக் காணுவது கஷ்டம்” என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 132ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்