Friday, April 06, 2018

கருவூலமும், களவும்! - சாந்திபர்வம் பகுதி – 133

Treasury and treachery! | Shanti-Parva-Section-133| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 03)


பதிவின் சுருக்கம் : கருவூலத்தின் அவசியம்; அதைப் பாதுகாப்பதன் அவசியம்; களவு; கள்வர்கள்; கள்வர்களைத் தண்டிக்கும் முறை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-133
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன், தன் நாட்டில் இருந்தும், பகைவரின் நாடுகளில் இருந்தும் செல்வத்தைக் கவர்ந்து, தன் கருவூலத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். அந்தக் கருவூலத்தில் இருந்தே அவனது அறத்தகுதி எழுகிறது. ஓ! குந்தியின் மகனே, கருவூலத்தின் விளைவாலேயே அவனுடைய நாட்டின் வேர்கள் விரிவடைகின்றன.(1) இந்தக் காரணங்களால் கருவூலம் நிரப்பப்பட வேண்டும்; நிரப்பப்பட்டதும், (பயனில்லா செலவினங்களை நிறுதி) அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெருக்க வேண்டும். இதுவே நித்திய கடமையாகும்.(2) தூய்மை மற்றும் நியாயமான செயல்பாட்டாலோ, இதயமற்ற கொடூர செயல்பாட்டாலோ கருவூலத்தை நிரப்ப முடியாது. {இவற்றுக்கிடையில் உள்ள} நடுப்பாதையைப் பின்பற்றி அது நிரப்பப்பட வேண்டும்.(3) பலவீனமான மன்னன் எவ்வாறு கருவூலத்தை வைத்துக் கொள்ள முடியும்? பலவீனமான மனிதன் எவ்வாறு ஒரு நாட்டை வைத்துக் கொள்ள முடியும்? நாடில்லாமல் ஒருவன் எங்கிருந்து செழிப்பை அடைவான்?(4) உயர்ந்த அணிவரிசையில் உள்ள ஒரு மனிதனுக்கு ஆபத்து மரணத்தைப் போன்றதாகும். இதன் காரணமாக மன்னன், தன் கருவூலம், படை, கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை எப்போதும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.(5)

வெற்றுக் கருவூலத்தைக் கொண்ட மன்னனை மனிதர்கள் அனைவரும் அலட்சியம் செய்வார்கள். அத்தகு மன்னன் கொடுக்கும் சொற்பமானவற்றால் நிறைவடையாத அவனுடைய பணியாட்கள், ஒருபோதும் அவனுடைய தொழிலில் எந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.(6) மன்னன் தன் செழிப்பின் விளைவாலேயே பெரும் கௌரவங்களை அடைகிறான். உண்மையில், பார்வைக்கு வெளிப்படுத்தக்கூடாத பெண்வடிவ மறைவங்கங்களை மறைக்கும் ஆடைகளைப் போலச் செல்வமானது அவனுடைய பாவங்களை மறைக்கிறது.(7) மன்னன் முன்பு யாரோடெல்லாம் சச்சரவில் ஈடுபட்டிருந்தானோ, அவர்கள் அவனது புதிய செழிப்பைக் கண்டு துயரால் நிறைவார்கள். அவர்கள் அவனைக் கொல்லும் வாய்ப்புக்காக மட்டுமே காத்திருப்பவர்களாக இருப்பினும், நாய்களைப் போல மீண்டும் அவனுக்குப் பணி செய்வார்கள், அவனும் ஏதும் நடக்காததைப் போல அவர்களை ஏற்றுக் கொள்வான்.(8) ஓ! மன்னா, அத்தகு மன்னனால் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? மன்னன் எப்போதும் பெருமையை அடையவே முயற்சிக்க வேண்டும்.(9) அவன் ஒருபோதும் பணிவாக வணங்கியிருக்கக்கூடாது. உழைப்பே {முயற்சியே} ஆண்மையாகும். சாதகமற்ற தருணத்தில் அவன் எவருக்கும் முன் வளைவதைவிட உடைந்தே போகலாம். அதற்குப் பதில் அவன் காட்டுக்குச் சென்று காட்டு விலங்குகளுடன் வாழலாம்.(10)



ஆனால் அவன், கள்வர்களைப் போல அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் வாழவே கூடாது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, காட்டைச் சார்ந்த கள்வர்களே கூடக் கடுஞ்செயல்களை நிறைவேற்ற பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களைக் கொடுக்கலாம்.(11) நலன்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மன்னனே மீறினால், மக்கள் அனைவரும் அச்சத்தால் நிறைவார்கள். கருணையே அறியாத கள்வர்களே கூட இத்தகு மன்னனைக் கண்டு அஞ்சுவார்கள்[1].(12) இதன் காரணமாக, மன்னன் தன் மக்களின் இதயங்களை மகிழ்வுறச் செய்வதற்காக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நிறுவவேண்டும். சின்னஞ்சிறு காரியங்களுக்கு விதிக்கப்படும் விதிகளைக்கூட மக்கள் மகிழ்ச்சியுடன் போற்றுவார்கள்.(13) இந்த உலகம் ஒன்றுமில்லாதது, எதிர்காலமும் தொன்மமே {இம்மையும், மறுமையும் கட்டுக்கதை} என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். அத்தகையவன் ரகசிய அச்சங்களால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனாக இருப்பினும், இவ்வகை நாத்திகனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது[2].(14) காட்டில் உள்ள கள்வர்கள், பிற அறங்களைப் பின்பற்றி, உடைமகளை மட்டும் களவு செய்பவர்களாக இருந்தால், அந்தக் கொள்ளைகளைத் தீங்கற்றவையாகக் கருதலாம். கள்வர்கள் அத்தகு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் விளைவால் பல்லாயிரம் உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.(15)

[1] “இலக்கண ரீதியில் பார்த்தால், இந்தக் கடைசி வரியானது, ‘கருணையற்ற மன்னனைக் கண்டு கள்வர்களே கூட அஞ்சுவார்கள்’ என்றும் பொருள் கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “அரண்யஞ்சென்று மிருகக் கூட்டங்களுடன் சேர்ந்து ஸஞ்சரித்துக் கொண்டும் இருக்கலாம். மர்யாதையை விட்டவர்களும், திருடர்கள் போன்றவர்களுமான மந்திரிகளுடன் சேர்ந்து ஸஞ்சரிக்கவே கூடாது. ஓ பாரத! திருதர்களுக்குக் கொடுமையான கார்யங்களைச் செய்யச் சேனை கிடைப்பது எளிது. மர்யாதையற்ற மனிதனிடமிருந்து எல்லா ஜனங்களும் நிச்சயம் நடுக்கமடைவார்கள். தயையின்றிச் செய்யும் திருடர்களும் மர்யாதையற்றவனிடம் ஸந்தேகப்படுவார்கள்” என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், “சிறிதாயிருப்பினும் கார்யங்களிலுள்ள மரியாதை உலகத்தில் பூஜிக்கப்படுவதாகும். ‘இவ்வுலகமுமில்லை; மேலுலகமுமில்லை’ என்ற எண்ணமுள்ள விவேகமில்லாத உலகமானது நாஸ்திகத் தன்மையாலும் பயத்தாலும் ஸந்தேகத்தாலும் நம்பிக்கையடையத் தக்கதாயிராது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “சிறு கட்டுப்பாடும் மக்களால் மதிக்கப்படுகிறது. இம்மையும், மறுமையும் இல்லை என்று சில மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஒருவன் இத்தகு நாத்திகனை நம்பக்கூடாது. அவன் ஐயத்தாலும், அச்சத்தாலும் செலுத்தப்படுகிறான்.

போரில் இருந்து தப்பி ஓடும் எதிரியைக் கொல்வது, {பிறன்} மனைவியரைக் கற்பழிப்பது, நன்றியின்மை, ஒரு பிராமணனின் உடைமையைச் சூறையாடுவது, ஒரு மனிதனின் மொத்த உடைமைகளையும் பறிப்பது,(16) கன்னியரைக் கெடுத்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களின் சட்டப்பூர்வமான தலைவர்களாகத் தொடர்ந்து நீடித்தல், பிறன் மனைவியருடன் ஒழுங்கங்கெட்ட கலவி ஆகியவற்றைக் கள்வர்களே கூடத் தீச்செயல்களாகக் கருதுகிறார்கள். கள்வர்கள் அவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.(17) மேலும் மன்னர்கள், ({கள்வர்களுடன்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்) கள்வர்களுடைய இதயங்களில் நம்பிக்கை ஏற்படுத்த முயன்று, அவர்களுடைய போக்குவரத்துகள் அனைத்தையும் கண்காணித்த பிறகு, அவர்களை அழிப்பதில் வெல்வார்கள் என்பது நிச்சயம்.(18) இந்தக் காரணத்தால், கள்வர்களைக் கையாளும் காரியத்தில் அவர்களை உடனே {ஒரேயடியாக} அழிக்கும் தேவையில்லை[3]. அவர்களை மன்னனின் ஆளுகைக்குள் கொண்டு வர முயல வேண்டும். மன்னன், தானே அவர்களைவிடப் பலமிக்கவன் என்று கருதிக் கொண்டு, அவர்களிடம் ஒருபோதும் கொடுமையாக நடந்து கொள்ளக் கூடாது.(19) அவர்களை ஒரேயடியாக அழிக்காத மன்னர்களுக்குத் தாங்கள் அழிந்து விடுவோம் என்ற அச்சமில்லை. எனினும், அவர்களை {கள்வர்களை} அழித்தவர்கள், அந்தச் செயலின் விளைவால் எப்போதும் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்” என்றார் {பீஷ்மர்}[4].(20)

[3] “அஃதாவது, அவர்களுடைய மனைவியர், பிள்ளைகள் காக்கப்பட வேண்டும். அவர்களுடைய வசிப்பிடங்களும், உடைகளும், வீட்டுக்குரிய பொருட்களும் அழிக்கப்படக்கூடாது என்று பொருள் கொள்ள வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] கங்குலியில் சுலோகம் 18 முதல் 20 வரை உள்ள பகுதிகள் கும்பகோணம் பதிப்பில், “ஆகையால் திருடன் இவைகளை விலக்க வேண்டும். ஓ பாரதா, மிச்சமின்றித் திருடினால், இந்தத் திருடனை அடுத்துக் கொல்ல வேண்டி (இவனுக்கு ஸ்நேஹமுண்டாகும்படி செய்துகொள்ள)க் கருதுகிறார்கள். பிறகு, இவனுடைய இடமுதலியவற்றைத் தெரிந்து கொண்டு இவனுடைய பொருளையும் மிச்சமில்லாமல் செய்துவிடுவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் திருடர்கள் தம்மிஷ்டப்படி செய்யத்தக்க பொருளையும் மிச்சமுள்ளதாகச் செய்ய வேண்டும். “நான் பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்று தீங்குகளைச் செய்யக்கூடாது. மிச்சமுள்ளதாகச் செய்யுந்திருடர்கள் எல்லாவிதத்தாலும் (தமக்கும்) மிச்சமிருப்பதைக் காண்பார்கள். மிச்சமின்றிச் செய்பவனுக்கு எப்பொழுதும் மிச்சமின்றிச் செய்வதால் பயமுண்டு” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ பாரதக் குலத்தோனே, அவர்கள் இவற்றை {சில தீமைகளைத்} தவிர்ப்பதால், ஒருவன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டால், அவர்களை அவன் முற்றாக அழிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்டதாகும். அவர்களை முற்றாக அழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவன் பலவானாக இருந்தால், அவன் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஓ மகனே, அவர்களை அழிப்பவர்கள், தங்கள் அழிவையே அனைத்துத் திசையிலும் காண்பார்கள். அழிப்பவர்கள் எப்போதும், அழித்த அச்செயலின் விளைவால் அச்சத்துடன் வாழ வேண்டும்” என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 133ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்