Saturday, April 07, 2018

பலமும், பாவத்தணிப்பும்! - சாந்திபர்வம் பகுதி – 134

Power and expiation of sinfulness! | Shanti-Parva-Section-134| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 04)


பதிவின் சுருக்கம் : அறத்திற்கும், செல்வத்திற்கும் பலமே வேர் என்றும், அந்தப் பலத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த பாவிகள் தங்கள் பாவத்தைத் தணிக்க வேண்டிய முறைகள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...



Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-134
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நுண்ணறிவும், ஞானமும் மிக்க ஒரு க்ஷத்திரியனுக்கு, அறத்தகுதி (ஈட்டல்), செல்வம் (அடைதல்) ஆகியவை முக்கியக் கடமைகளாகும் எனக் கடமை குறித்து அறிவிக்கும் இந்த உரையைச் சாத்திரங்களை அறிந்தோர் சொல்கின்றனர். கடமை {தர்மம்} குறித்த நுண்ணிய விவாதங்கள், எதிர்கால உலகம் {மறுமை} குறித்த காணாத விளைவுகள் ஆகியவற்றின் நிமித்தமாக இந்த இரு கடமைகளையும் நிறைவேற்றுவதை அவன் தவிர்க்கக்கூடாது.(1) தரையில் உள்ள காற்தடங்களைக் கண்டு, அவை ஓநாயுடையவையா? இல்லையா? என்று விவாதிப்பது வீண் என்பதைப் போல அறம் மற்றும் மறத்தின் இயல்பு குறித்த விவாதங்கள் அனைத்தும் வீணே. அறம் மற்றும் மறத்தின் கனிகளை இவ்வுலகில் எவரும் ஒருபோதும் காண்பதில்லை[1].(2) எனவே, ஒரு க்ஷத்திரியன் அதிகாரத்தை {பலத்தை} அடையவே முயற்சிக்க வேண்டும். எவன் பலவானோ அவனே அனைத்தின் தலைவனாவான். ஒரு படையை அடைய செல்வம் வழிவகுக்கும். பலவோன் நுண்ணறிவுமிக்க ஆலோசகர்களை அடைவான்[2].(3) செல்வம் இல்லாதவன் உண்மையில் வீழ்ந்தவனே. குறைவாக இருக்கும் எதுவும், ஒரு விருந்தில் எஞ்சிய கழிவுக்கு{எச்சிலுக்கு} ஒப்பானதாகக் கருதப்படுகிறது[3]. ஒரு பலமிக்க மனிதன் தீச்செயல்கள் பலவற்றைப் புரிந்தாலும், அச்சத்தின் காரணமாக எவரும் (அவனை நிந்திக்கவோ, தடுக்கவோ செய்யும்) எதையும் சொல்லவோ, செய்யவோ மாட்டார்கள். அறமும், பலமும் உண்மையுடன் தொடர்புடையதாக இருந்தால், அவர்களால் பேராபத்துகளில் இருந்து மக்களைக் காக்க முடியும்.(4) எனினும், இவ்விரண்டையும் ஒப்பிட்டால், பலமே அறத்தைவிட மேன்மையானதாகத் தோன்றும். பலத்திலிருந்தே அறம் எழுகிறது. அசையாத பொருட்கள் அனைத்தும் பூமியில் நிலைத்திருப்பதைப் போலறம் பலத்திலேயே நிலைத்திருக்கிறது.(5)

[1] கும்பகோணம் பதிப்பில், “இது தர்ம் இது அதர்மமென்று, மரத்திலுள்ள கனியைப் போலத் தர்மார்த்தங்களின் பயன்களை எவனும் எக்காலத்திலும் இவ்வுலகில் கண்டதில்லை” என்றிருக்கிறது.

[2] “அஃதாவது, எவன் செல்வத்தையும், படைகளையும் கொண்டிருக்கிறானோ அவன் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] “ஓர் ஏழை இவ்வுலகப் பொருட்கள் அனைத்திலும் குறைவானதையே பெற்றிருப்பான். எனினும் அந்தக் குறைந்த அளவானது, ஒரு பலமிக்கவனின் உணவில் எஞ்சியவற்றைப் போன்றதே என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



புகையானது, (தன் அசைவுக்காக) காற்றைச் சார்ந்திருப்பதைப் போல, அறமும் பலத்தைச் சார்ந்திருக்கிறது. இவ்விரண்டில் பலவீனமான அறம், கொடியானது மரத்தைச் சார்ந்திருப்பதைப் போலப் பலத்தையே சார்ந்திருக்கிறது.(6) மகிழ்ச்சியானவர்களைச் சார்ந்திருக்கும் இன்பத்தைப் போல அறமானது பலமிக்கவர்களைச் சார்ந்திருக்கிறது. பலமிக்க மனிதர்களால் செய்யமுடியாதது ஏதுமில்லை. பலமிக்கவர்களிடம் உள்ள அனைத்தும் தூய்மையானதே.(7) ஒரு பலமற்ற மனிதன் தீச்செயல்களைச் செய்தால் ஒருபோதும் தப்ப முடியாது. அவனது நடதையைக் காணும் மனிதர்கள், ஓநாயைக் கண்டதைப் போல அதிர்ச்சியடைவார்கள்.(8) செல்வநிலையில் இருந்து வீழும் ஒருவன், அவமானமும், கவலையும் நிறைந்த வாழ்வை வாழ்கிறான். அவமானமும் நிந்தனையும் நிறைந்த வாழ்வானது மரணத்தைப் போன்றதாகும்.(9) ஒருவனுடைய பாவ நடத்தையின் விளைவால், அவன் நண்பர்கள் மற்றும் தோழர்களால் கைவிடப்படுகிறான், பிறரின் வார்த்தைக் கணைகளால் அவன் மீண்டும் மீண்டும் துளைக்கப்படுகிறான். அதன் நிமித்தமாக அவன் துயரில் எரிய வேண்டியிருக்கும்.(10)

(பாவத்தால் கறைபடிந்தவனாக இருந்தால் அந்தப்) பாவத்தைத் தணிப்பதற்கு ஒருவன் மூன்று வேதங்களைப் பயின்று, பிராமணர்களை வழிபட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்து,(11) பார்வை, சொல், செயல் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்து, கபடங்கள் அனைத்தையும் கைவிட்டு, உயர்ந்த குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டு,(12) தன் சிறுமைக்கு வருந்தி, பிறர் பெருமைகளை அறிக்கையிட்டு, மந்திரங்களை ஓதி, வழக்கமான நீர்ச்சடங்குகளைச் செய்து, மென்மையான நடத்தையை ஏற்று, அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்து,(13) கடுந்தவங்களைச் செய்து, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் புகலிடத்தை நாட வேண்டும். உண்மையில், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த ஒருவன், மனிதர்களால் சொல்லப்படும் நிந்தனைகளுக்குக் கோபப்படாமல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(14) தன்னை இவ்வழியில் நடத்திக் கொள்வதால், ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உலக மதிப்பை மீண்டும் அடைவான். உண்மையில், அவன் இவ்வுலகில் {இம்மையில்} பெரும் மதிப்பையும், அடுத்த உலகில் {மறுமையில்} பெரும் கௌரவத்தையும் வென்று, இத்தகு நடத்தையைப் பின்பற்றுவதன் மூலமும், தன் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும் அவன் இங்கே {இம்மையில்} பல்வேறு வகையான் இன்பங்களை அனுபவிப்பான்” என்றார் {பீஷ்மர்}.(15)

சாந்திபர்வம் பகுதி – 134ல் உள்ள சுலோகங்கள் : 15

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்