Monday, April 09, 2018

அறத்தின் நுட்பம்! - சாந்திபர்வம் பகுதி – 136

Finesse of morality! | Shanti-Parva-Section-136| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 06)


பதிவின் சுருக்கம் : கருவூலத்தைப் பெருகச் செய்யக் கைப்பற்றத்தகுந்த மற்றும் கைப்பற்றத்தகாத பொருட்களைப் பகுத்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-136
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-136
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிறைத்துக் கொள்வது தொடர்பாக, பழங்காலத்துச் சாத்திரங்களை அறிந்தோர், பிரம்மன் பாடிய பின்வரும் வரிகளை {சுலோகங்களைப்} குறிப்பிடுகின்றனர்.(1) - வேள்விகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களின் செல்வம், தேவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்ட செல்வம் ஆகியவை ஒருபோதும் கைப்பற்றப்படக்கூடாது. அறச்சடங்குகள் மற்றும் வேள்விகளை ஒருபோதும் செய்யாதோர் கள்வர்களுக்கு இணையாகக் கருதப்படுவதால், ஒரு க்ஷத்திரியன் அவர்களின் செல்வத்தைக் கைப்பற்றலாம்.(2) -


ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், அரசுரிமை தொடர்புடைய இன்பங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையே. பூமியின் செல்வங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையேயன்றி வேறு எவருக்கும் அல்ல.(3) அந்தச் செல்வத்தை க்ஷத்திரியன், தன் படைகளைப் பராமரிக்கவும், வேள்விகளைச் செய்யவும் பயன்படுத்த வேண்டும். எந்தப் பயனும் இல்லாத செடிகொடிகளைப் பறித்து, உணவாகப் பயன்படக்கூடிய காய்கறிகளைச் சமைப்பதற்காக அவற்றை மனிதர்கள் எரிக்கின்றனர்[1].(4)

[1] “தீயோரைத் தண்டிப்பதன் மூலம் மன்னனும் அதை {மேற்கண்ட உதாரணத்தைப்} போலவே நல்லோரைப் பாதுகாக்க வேண்டும் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “புஜிக்கத்தகாத செடிகளையறுத்து (அவைகளை விறகாகக் கொண்டு) புஜிக்கத் தக்கவைகளையே பாகம் செய்கிறார்கள்” என்றிருக்கிறது.

தெளிந்த நெய் ஆகுதிகளின் மூலம் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் மனிதர்களுக்கு உணவளிக்காதவனின் செல்வம் பயனற்றது என்று கடமைகளை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(5) ஓ! மன்னா, ஓர் அறம்சார்ந்த மன்னன் இத்தகையோரின் செல்வத்தைக் கைப்பற்ற வேண்டும். அந்தச் செல்வத்தைக் கொண்டு பெரும் எண்ணிக்கையிலான நன்மக்களை நிறைவுசெய்ய முடியும். எனினும், அவன் செல்வத்தைத் தன் கருவூலத்தில் பதுக்கி வைக்கக் கூடாது.(6)

தீயோரிடம் இருந்து செல்வத்தை அடைந்தும், பறித்தும் நல்லோருக்குக் கொடுப்பதில் தன்னைக் கருவியாக்கிக் கொள்ளும் ஒருவன், மொத்த அறநெறிகளையும் அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(7) காய்கறிப் பொருட்கள் படிப்படியாக வளர்வது காணப்படுவதைப் போலவே மன்னன் தன் சக்தியின் அளவுக்கேற்ப, தன் படையெடுப்புகளை அடுத்த உலகிற்கும் நீட்டிக்க வேண்டும். போதுமான எந்தக் காரணமுமின்றி எறும்புகள் வளர்வது காணப்படுவதைப் போலவே, வேள்வியும் எந்தப் போதுமான காரணமும் இன்றியே எழுகிறது[2].(8)

[2] “கருவூலத்தில் கிடக்கும் பெரிய அளவிலான பணத்தைவிட உள்ளூர எழும் விருப்பமே வேள்வியைச் செய்ய வைக்கிறது என்பது இங்கே பொருளாக இருப்பதாகத் தெரிகிறது. விருப்பம் இருந்தல், அதை நிறைவேற்ற பணமும் படிப்படியாக வருகிறது. இந்த உவமையின் சக்தியானது, உண்மையில் எறும்புகள் (வெள்ளை எறும்புகள்) மேம்போக்கான காரணம் ஏதும் இன்றிப் பல்கிப் பெரும் உண்மையில் காணலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “பூமியைப் பிளந்து கொண்டு உண்டாகும் பிராணிகளும், வஜ்ரியென்னும் புழுக்களும் எப்படி (மெள்ள வெகுதூரம்) போகின்றனவோ அவ்விதம் அரசன் இயன்றவரையில் பரலோகங்களை ஜயிக்க வேண்டும். அஐகள் எவ்விதம் காரணமின்றி உண்டாகுமோ அவ்விதம் யாகமில்லாதவன் உண்டாவான். ஈக்களையும், கொசுக்களையும், எறும்புகளையும், புழுக்களையும் எவ்விடம் பசுக்களிடமிருந்து வெருட்டுவார்களோ அவ்விதமான செய்கையே யாகமில்லாதவர்களின் இருக்க வேண்டும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இன்னும் வேறு மாதிரியாக இருக்கிறது.

(பால் கறக்கப்படும்போது) பசுக்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உடல்களில் இருந்து ஈக்கள், பூச்சிகள், எறும்புகள் ஆகியன விரட்டப்படுவதைப் போலவே வேள்வி செய்வதில் வெறுப்புள்ள மனிதர்கள் அனைவரும் நாட்டில் இருந்து விரட்டப்பட வேண்டும். இஃது அறநெறிக்கு இசைவானதே.(9) பூமியில் கிடக்கும் புழுதியானது, இரு கற்களுக்கிடையே அரைக்கப்படும்போது, மேலும் மேலும் நுண்ணியதாவதைப் போலவே, அறநெறி குறித்து மேலும் மேலும் சிந்தித்து விவாதிக்கப்படும்போதும் அது மேலும் மேலும் நுட்பமடைகிறது” என்றார் {பீஷ்மர்}.(10)

சாந்திபர்வம் பகுதி – 136ல் உள்ள சுலோகங்கள் : 10

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்