Tuesday, April 10, 2018

சகுல மீன்கள்! - சாந்திபர்வம் பகுதி – 137

Sakula Fishes! | Shanti-Parva-Section-137| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 07)


பதிவின் சுருக்கம் : வரப்போகும் ஆபத்திலிருந்து விடுபடத்தக்க வழிமுறைகளை முன்பே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குச் சகுல மீன்களின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-137
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-137
பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “எதிர்காலத்துக்குத் தேவையானதைக் கொடுப்பவன், விழித்த மனம் {நேரத்திற்கேற்ற நுண்ணறிவை / சமயோசித புத்தியைக்} கொண்டவன் ஆகிய இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனினும், காரிய தாமதம் செய்யும் மனிதன், தொலைந்து போகிறான்.(1) இது தொடர்பானதும், செயல்படும் வழியைத் தீர்மானிக்கும் காரியத்தில் காலதாமதம் செய்யும் ஒரு மனிதனைக் குறித்ததுமான பின்வரும் சிறந்த கதையைக் கவனமாகக் கேட்பாயாக.(2)


வெகு ஆழமில்லாததும், மீன்கள் நிறைந்ததுமான ஒரு தடாகத்தில் {குட்டையில்}, நண்பர்களும், நிலைத்த தோழர்களுமான மூன்று சகுல[1] மீன்கள் வசித்து வந்தன.(3) அந்த மூன்றில் ஒன்று, முன்னறிவு கொண்டதாகவும், வரப்போவதற்கு {எதிர்காலத்திற்குத்} தேவையானதை எப்போதும் தர {செய்ய} விரும்புவதகாவும் இருந்தது. மற்றொன்று பெரும் விழிப்புடைய மனத்தைக் கொண்டிருந்தது. மூன்றாவது {எதிலும்} காலதாமதம் செய்வதாக இருந்தது.(4)

[1] சகுலம் என்பதற்கு ஒருவகை மீன் என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்கிறது. இருப்பினும் இதற்கு உன்னதக் குலம், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் என்று வேறு பொருள்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் “சகுலம்” என்ற இவ்வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. கங்குலியில் போலவே, பிபேக்திப்ராயின் பதிப்பில் சகுலம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அஃது எதைக் குறிக்கிறது என்பதற்கு விளக்கமேதும் இல்லை.

ஒரு நாள் அத்தடாகத்திற்கு வந்த குறிப்பிட்ட மீனவர்கள், பல்வேறு வடிகால்களின் மூலம் அதில் இருந்த நீரை ஒரு தாழ்வான பகுதிக்கு வடியச் செய்தார்கள்.(5) முன்னறிவு கொண்ட மீனானது, தடாகத்தின் நீர் படிப்படியாகக் குறைவதைக் கண்டு, ஆபத்தான அச்சந்தர்ப்பத்தில் தன் தோழர்கள் இருவரிடமும்,(6) “இந்தத் தடாகத்தில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பேராபத்து நேரப்போகிறது. நம் பாதை தடைபடும் முன்னர் வேகமாக நாம் வேறு ஏதாவது இடத்திற்குச் சென்று விடுவோம்.(7) நல்ல கொள்கையின் {நீதியின்} துணையுடன் எதிர்காலத் தீமையைத் தடுப்பவன், பயங்கர ஆபத்துகளுக்கு ஒருபோதும் ஆட்படமாட்டான். என் ஆலோசனைகள் உங்களிடம் மேலோங்கட்டும். நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டுச் செல்வோமாக” என்றது.(8)

அப்போது அந்த மூன்றில் காலத் தாமதம் செய்வது, “நன்றாகச் சொன்னாய். எனினும், இத்தகு அவசரத்திற்கு எந்தத் தேவையுமில்லை. இஃதுவே என் திட்டமான கருத்தாகும்” என்றது[2].(9)

[2] கும்பகோணம் பதிப்பில், “இங்கு நன்கு வஸிக்கலாம். அதற்குள் அவஸரப்பட வேண்டாமென்று எனக்கு நிச்சயமாகத் தோற்றமிருக்கிறது” என்று இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

விழித்த மனம் கொண்டதாகக் குறிப்பிடப்பட்ட மற்றொரு மீனானது, காலதாமதம் செய்யும் தன் தோழனிடம், “எதற்கான நேரமும் வாய்க்கும்போது, கொள்கையின்படி அதற்குரியதைத் தர {நேரத்திற்குத் தகுந்ததைச் செய்ய} நான் ஒருபோதும் தவறியதில்லை” என்றது[3].(10)



[3] கும்பகோணம் பதிப்பில், “ஸமயம் வரும்பொழுது எனக்கு ஒன்றும் நீதியை விட்டுத் தவறாது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “சரியான நேரம் வாய்க்கும்போது, தேவைப்படும் எதையும் செய்வதை நான் தவிர்க்க மாட்டேன்” என்றது. பிபேக்திப்ராயின் பதிப்புத் தெளிவானதாக இருக்கிறது.

முன்னறிவையும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவையும் கொண்டது {மீனானது}, தன் தோழர்கள் இருவரின் பதில்களையும் கேட்டு, ஓர் ஓடையின் {வாய்க்காலின்} வழியாக உடனடியாகப் புறப்பட்டு மற்றொரு ஆழமான தடாகத்தை அடைந்தது.(11)

நீர் வற்றியதைக் கண்ட மீனவர்கள், பல்வேறு வழிமுறைகளின் மூலம் எஞ்சியிருந்த மீன்களை அடைத்தனர்.(12) எஞ்சியிருக்கும் குறைந்த அளவு தண்ணீரை அவர்கள் கலக்கியபோது, காலதாமதம் செய்யும் சகுலம் {மீன்} மற்ற மீன்களுடன் சேர்ந்து {அவர்களிடம்} பிடிபட்டது.(13)

நீண்ட கயிறுகளைக் கொண்டு, தாங்கள் பிடித்த மீன்களை மீனவர்கள் கட்டியபோது, விழித்த மனம் {சமயோசித புத்தி} படைத்த சகுலம், அவ்வாறு கட்டப்பட்டவற்றோடு {மீன்களோடு} தன்னைத் திணித்துக் கொண்டு தான் பிடிபட்டதாகக் காட்டிக் கொள்வதற்காகக் கயிற்றைக் கடித்துக் கொண்டு, அவற்றுக்கு மத்தியில் அமைதியாகக் கிடந்தது. மீனவர்கள், கயிற்றோடு கட்டப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் பிடிபட்டிருப்பதாகக் கருதினர்.(14,15) பிறகு அவர்கள், அவற்றைக் கழுவுவதற்காக ஆழமான நீர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். சரியாக அந்த நேரத்தில், விழித்த மனம் படைத்த சகுலம், கயிற்றை விட்டு விரைவாகத் தப்பிச் சென்றது.(16)

எனினும், காலதாமதம் செய்த மீனானது, மடமை கொண்டதாகவும், அறிவற்றதாகவும், புத்தியற்றதாகவும் இருந்ததால், தப்பிக்க இயலாமல் மரணத்தைச் சந்தித்தது.(17)

இவ்வாறு, அந்தக் காலதாமதம் செய்யும் மீனைப் போலவே புத்தியில்லாத ஒவ்வொருவரும், ஆபத்துக் காலத்தில் தப்பிக்க இயலாமல் அழிவைச் சந்திக்கிறார்கள்.(18) மேலும், எந்த மனிதன் தன்னைப் புத்திசாலியாகக் கருதிக் கொண்டு, சரியான நேரத்தில் தனக்கான நன்மையை நாடவில்லையோ, அவன் {மேலே குறிப்பிடப்பட்ட} விழித்த மனம் கொண்ட சகுலத்தைப் போலவே பேராபத்துக்கு உள்ளாவான் {அப்போது அவன் விழித்த மனத்துடன் இருந்தால் தப்புவான்}.(19) எனவே, முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இருவர் மட்டுமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்வார்கள்.(20)

காஷ்டை, கலை, மாதம், முகூர்த்தம், பகல், இரவு, லவம், மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ஆறு பருவகாலங்கள் {ருது}, கல்பம், வருடம் என்று காலம் பல்வேறு பிரிவுகளாக இருக்கிறது.(21) பூமியின் பிரிவுகளே இடம் என்றழைக்கப்படுகிறது. காலம் கண்ணுக்குத் தெரியாதது. எந்தப் பொருள் அல்லது எந்த நோக்கத்தின் வெற்றியைப் பொறுத்தவரையிலும், மனம் அதைக் குறித்து எவ்வகையில் நினைக்க நிறுவப்பட்டுள்ளதோ, அந்த வகையிலேயே அஃது {வெற்றி} அடையப்படுகிறது, அல்லது அடையப்படாமல் போகிறது.(22) 

முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இந்த இருவரே, அறம் பொருள் விடுதலை {முக்தி / மோட்சம்} குறித்த அனைத்து உடன்பாடுகளிலும் முதன்மையான மனிதர்கள் என்று முனிவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.(23) எனினும், சிந்தித்து, ஆய்வு செய்த பிறகே அனைத்தையும் செய்யும் ஒருவன், அவனுடைய நோக்கங்களை {இன்பங்களை} நிறைவேற்றும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு, எப்போதும் அவற்றை அதிகமாக அடைவதில் வெல்கிறான். மேலும், காலம் மற்றும் இடத்திற்குரிய மதிப்புடன் செயல்படுபவர்களோ, வெறுமனே முன்னறிவும், விழித்த மனமுன் கொண்ட மனிதர்களைவிடச் சிறந்த விளைவுகளை அடைவதில் வெல்வார்கள்” என்றார் {பீஷ்மர்}.(24)

சாந்திபர்வம் பகுதி – 137ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்