Monday, April 09, 2018

கள்வன் காயவ்யன்! - சாந்திபர்வம் பகுதி – 135

Kayavya, a robber! | Shanti-Parva-Section-135| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 05)


பதிவின் சுருக்கம் : சாத்திர விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன் கள்வனாகயிருப்பினும், முக்தியை அடைவான் என்பதை விளக்க காயவ்யனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, இவ்வுலகில் {இம்மையில்} கட்டுப்பாடுகளை நோற்று, அடுத்த உலகில் {மறுமையில்} அழிவை அடையாத ஒரு கள்வனின் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) காயவ்யன் {காபச்யன் / காபவ்யன்} என்ற பெயரில், ஒரு க்ஷத்திரிய தந்தைக்கும், ஒரு நிஷாதத் தாய்க்கும் பிறந்த ஒரு கள்வனிருந்தான். காயவ்யன் க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவனாகவே இருந்தான். தாக்கவல்லவனும், நுண்ணறிவையும், துணிவையும் கொண்டவனும், பெரியோர் மற்றும் ஆசான்களை வழிபடுபவனாகவும் இருந்த அவன் {காயவ்யன்}, தவசிகளின் நடைமுறைகளைப் பின்பற்றுவோரைக் காத்து வந்தான். அவன் கள்வனாகவே இருப்பினும், சொர்க்கத்தில் புகழை வென்றான்.(2,3) காலையிலும், மாலையிலும் மான்களை விரட்டி அவற்றின் கோபத்தைத் தூண்டுபவனாக இருந்தான். நிஷாதர்கள் மற்றும் காட்டில் வாழும் விலங்குகளின் நடைமுறைகள் அனைத்தையும் நன்கறிந்தவனாக அவன் இருந்தான்.(4) காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நன்கறிந்த அவன், மலைகளின் மீது உலாவி வந்தான். விலங்குகள் அனைத்தின் பழக்கவழக்கங்களை அறிந்திருந்தவனான அவனுடைய கணைகள் இலக்கை ஒருபோதும் தவறாதவையாகவும், அவனுடைய ஆயுதங்கள் பலமானவையாகவும் இருந்தன.(5)


தனியொருவனாகவே பல நூற்றக்கணக்கான துருப்புகளை வெல்லவல்லவனாகவும் அவன் இருந்தான். வயது முதிர்ந்தவர்களும், கண்பார்வையற்றவர்களும், செவிகேள்வியற்றவர்களுமாக இருந்த அவனது பெற்றோரைத் தினமும் காட்டில் வழிபட்டுவந்தான்.(6) கௌரவிக்கத் தகுந்த மனிதர்கள் அனைவரையும், தேன், இறைச்சி, கனிகள், கிழங்குகள், பிற வகைச் சிறந்த உணவுகள் ஆகியவற்றைக் கொண்டு விருந்தோம்பலுடன் மகிழ்வித்து, அவர்களுக்குப் பல நல்ல அலுவல்களையும் {பணிகளையும்} செய்து கொடுத்தான்.(7) உலகில் இருந்து ஓய்ந்து காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட பிராமணர்களிடம் அவன் பெரும் மரியாதையை வெளிப்படுத்தினான்.(8) அவன் செய்த தொழிலின் நிமித்தமாகவும், பிறர் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாகவும், அவனிடம் இருந்து கொடைகளைப் பெற விருப்பமில்லாமல் இருந்தவர்களைப் பொறுத்தவரையில், பொழுது விடிவதற்கு முன்பே அவர்களுடைய வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களின் வாசல்களில் இறைச்சியை விட்டு வருவான்[1].(9) ஒரு நாள், பண்பில் கருணையற்றவர்களும், கட்டுப்பாடுகளை அனைத்தையும் அலட்சியம் செய்பவர்களுமான பல்லாயிரம் கள்வர்கள், அவனைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுக்க விரும்பினர்.(10)

[1] “கேள்விக்குரிய பண்புகளைக் கொண்ட மனிதர்களிடம் இருந்து கொடைகளை ஏற்பது எப்போதும் நிந்திக்கத்தக்கதாகவே இருந்து வந்துள்ளது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “அரண்யத்திலுள்ள ஸந்யாஸம் பெற்ற பிராம்மணர்களை ரக்ஷித்துக் கொண்டு எப்பொழுதும் வனத்திலுள்ள மிருகங்களை அடித்து அவர்களின் பொருட்டு அனுப்பி வந்தான். திருடனுடைய போஜனமென்ற சங்கையால் அவனிடமிருந்து எவர்கள் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுடைய வீடுகளில் அவன் காலையிலேயே (மாம்ஸங்களை) வைத்துவிட்டுச் செல்லுவான்” என்றிருக்கிறது.

அந்தக் கள்வர்கள், “காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நீ அறிந்திருக்கிறாய். விவேகத்தையும், துணிவையும் கொண்டவனாகவும் இருக்கிறாய். நீ மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் நீ கொண்ட உறுதி பெரியதாக இருக்கிறது. எங்கள் அனைவராலும் மதிக்கப்படும் நீ, எங்கள் தலைவர்களில் முதன்மையானவனாக இருப்பாயாக. நீ வழிநடத்துவதைப் போலவே நாங்கள் செயல்படுவோம். ஒரு தந்தை, அல்லது தாயைப் போல நீ எங்களை முறையாகக் காப்பாயாக” என்றனர்.(12)



காயவ்யன், “பெண்களையோ, அச்சத்தால் சச்சரவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களையோ, குழந்தையையோ, தவசியையோ ஒருபோதும் கொல்லாதீர்கள். போரிடுவதைத் தவிர்க்கும் எந்த ஒருவனும் {உங்களால்} ஒருபோதும் கொல்லப்படக்கூடாது, அதே போல எந்தப் பெண்ணும் கைப்பற்றப்படவோ, பலவந்தமாகக் கடத்தப்படவோ கூடாது.(13) பிராமணர்கள் அருளப்பட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் எப்போதும் போரிட வேண்டும்.(14) உண்மை ஒருபோதும் தியாகம் செய்யப்படக்கூடாது. மனிதர்களின் திருமணங்கள் ஒருபோதும் தடுக்கப்படக்கூடாது. தேவர்களும், பித்ருக்களும், விருந்தினர்களும் வழிபடப்படும் வீடுகளுக்கு {உங்களால்} எந்தத் தீங்கும் இழைக்கப்படக்கூடாது.(15) உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்கள், உங்கள் கொள்ளைப்பவனியில் உங்களால் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாவர். உங்களுடையவை அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் அவர்களை வழிபட வேண்டும்.(16) எவன் பிராமணர்களின் கோபத்தைத் தூண்டுவானோ, எவனுடைய தோல்வியை அவர்கள் {பிராமணர்கள்} விரும்புவார்களோ, அவன் மூவுலகங்களிலும் ஒரு மீட்பனைக் காணத் தவறுவான்.(17) எவன் பிராமணர்களை இழிவாகப் பேசி, அவர்களுடைய அழிவை விரும்புவானோ, அவன், சூரியன் எழும்போதான இருளைப் போலவே அழிவை அடைவான்.(18) இங்கே வசித்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வீரத்தின் கடிகளை அடையலாம். உங்களுக்கு உரியதைக் கொடுக்க மறுப்பவர்களுக்கு எதிராகத் துருப்புகள் அனுப்பப்படும்.(19) தண்டக்கோலானது தீயவர்களுக்காகவே திட்டமிடப்பட்டதாகும். தன்வளர்ச்சிக்காக அது திட்டமிடப்பட்டதில்லை. நல்லோரை ஒடுக்குபவர்கள் கொல்லப்படத் தகுந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.(20) தீவினைக்கஞ்சாத வழிகளால் நாடுகளைப் பீடிப்பதன் மூலம் தங்கள் நற்பேற்றை வளர்த்துக் கொள்ள முனைவோர், வெகுவிரைவில் சடலத்தில் முளைத்த புழுக்களாகக் கருதப்படுவார்கள்.(21) சாத்திரங்களில் உள்ள கட்டுப்பாடுகளான இவற்றுக்கு உடன்பட்டுத் தங்களை நடத்திக் கொள்ளும் கள்வர்கள், கொள்ளையிடும் வாழ்வை வாழ்ந்தாலும்கூட வெகுவிரைவில் விடுதலையை {முக்தியை} அடைவார்கள்” என்றான் {காயவ்யன்}”.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கள்வர்கள், காயவ்யனின் கட்டளைகள் அனைத்துக்குக் கீழ்ப்படிந்த நடந்தார்கள். பாவத்தைத் தவிர்த்த அவர்கள் பெருஞ்செழிப்பையும் அடைந்தார்கள்.(23) இத்தகு வழியில் நடந்து கொண்டு, நேர்மையானவர்களுக்கு இவ்வாறு நன்மை செய்து, அதன் மூலம் கள்வர்களிடம் உள்ள தீய நடைமுறைகளை இவ்வாறு கட்டுப்படுத்திய காயவ்யன், (மறுமையில்) பெரும் வெற்றியை அடைந்தான்.(24) காயவ்யனின் இந்தக் கதையை எப்போதும் நினைக்கும் ஒருவன், எந்தக் காட்டுவாசிகளிடமிருந்தும் {காட்டு விலங்குகளிடம் இருந்தும்}, பூமி சார்ந்த எந்த உயிரினிடமிருந்தும் எந்த அச்சத்தையும் அடையமாட்டான்.(25) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இத்தகு மனிதனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சம் இருக்காது. தீய மனிதர்களிடமும் அவன் எந்த அச்சத்தையும் அடைய மாட்டான். {காயவ்யனின் கதை கேட்ட} இத்தகு மனிதன் காட்டுக்குச் சென்றால், ஒரு மன்னனுக்கான பாதுகாப்போடு அவனால் அங்கே வாழ முடியும்[2]” என்றார் {பீஷ்மர்}.(26)

[2] கும்பகோணம் பதிப்பில், “எவன் காபச்யனுடைய இந்தக் கதையை எப்பொழுதும் சிந்திக்கிறானோ அவன் அரண்யத்திலுள்ள பிராணிகளிடமிருந்தும் எவ்விதத்திலும் பயமடையமாட்டான். அவனுக்கு மனுஷ்யர்களிமிருந்தும் பயமில்லை; எவ்விதத்திலும் தேவர்களிடமிருந்துமில்லை; ஸாதுக்களிடமிருந்துமில்லை; அஸாதுக்களிடமிருந்துமிலை. அரசனே! அவன் காடுகளில் பசுக்களுக்குப் பதியாயிருப்பான்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “எவன் காபவ்யனின் இந்த நடத்தையை அடிக்கடி நினைத்துப் பார்க்கிறானோ, அவன் காட்டில் வசிப்போர் அல்லது எந்த உயிரினத்திடம் இருந்தும் எந்த அச்சத்தாலும் ஒருபோதும் பீடிக்கப்பட மாட்டான். தேவர்கள், அல்லது மனிதர்களிடமிருந்தும், அறவோரிடம், அல்லது தீயவர்களிடமிருந்தும் எந்த அச்சமும் அவனுக்கு இருக்காது. ஓ மன்னா, அவன் காட்டில் ஒரு தலைவனைப் போல வாழ்வான்” என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 135ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்