Saturday, April 21, 2018

ஞானத்திரட்டு! - சாந்திபர்வம் பகுதி – 142

Collective wisdom! | Shanti-Parva-Section-142 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 12)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் மறுப்பு; பல்வேறு மூலங்களில் இருந்து அடையப்பட வேண்டிய அறிவுத்திரட்டு; சாத்திரங்களைக் குறை சொல்லும் கல்வி வணிகர்களின் போக்கு; க்ஷத்திரியனின் கடமை; அமைச்சர்கள் நியமனம்; கடுமையும், மென்மையும் கையாளப்பட வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Vishwamitra and dog's meat! | Shanti-Parva-Section-142 | Mahabharata

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது பயங்கரமானதோ, எது பொய்மை போல் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படக்கூடாதோ, அதுவே (கடமையாக) குறிப்பிடப்பட்டால், நான் தவிர்க்க வேண்டிய செயல்தான் என்ன? பிறகு, கள்வர்களும் ஏன் மதிக்கப்படக்கூடாது?(1) நான் மயக்கமடைகிறேன். என் இதயம் வலிக்கிறது[1] அறநெறியில் என்னைக் கட்டும் முடிச்சுகள் அனைத்தும் தளர்கின்றன. என் மனத்தை அமைதிப்படுத்தவும், உம்மால் பரிந்துரைக்கப்படும் வழியில் செயல்படத் துணியவும் என்னால் இயலவில்லை" என்றான்.(2)


[1] கும்பகோணம் பதிப்பில், "இந்தக் கோரமான காரியம் செய்யத் துணியப்பட்டதென்பது நம்பத்தகாததும், பொய்போன்றதுமாயிருக்கிறது. எதை இந்த மனிதன் விலக்கவேண்டுமோ அவ்விதமான ஒரு விலக்குத் திருடர்களுக்கிருக்கிறதா? நான் மயக்கமடைகிறேன்; வருத்தப்படுகிறேன்" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கடமை குறித்து வேதங்களில் கேட்டு கற்றவற்றில் இருந்து மட்டுமே நான் உனக்குப் போதிக்கவில்லை. நான் எதைச் சொன்னேனோ, அதை ஞானம் மற்றும் அனுபவத்தின் விளைவால் சொல்லியிருக்கிறேன். இது கல்விமான்களால் திரட்டப்பட்ட தேனாகும் {ஞானத்திரட்டாகும்}.(3) மன்னர்கள் பல்வேறு மூலங்களில் இருந்து ஞானத்தைத் திரட்ட வேண்டும். ஒரு தரப்பிலான அறநெறியின் துணை கொண்டு ஒருவனால் உலகத்தில் நடைபோட முடியாது.(4) புத்தியில் இருந்தே கடமை எழ வேண்டும்; ஓ! குருக்களின் மகனே, நல்லோரின் நடைமுறைகளே எப்போதும் உறுதி செய்யப்பட வேண்டும். என் வார்த்தைகளைக் கவனிப்பாயாக.(5) மேன்மையான புத்தி கொண்ட மன்னர்களால் மட்டுமே, வெற்றியை எதிர்பார்த்து ஆட்சி செய்ய முடியும். புத்தியின் துணையுடனும், பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட அறிவால் வழிநடத்தப்பட்டும் ஒரு மன்னன் அறநெறியை நோற்க வேண்டும்.(6)

ஒரு தரப்பைச் சார்ந்த அறநெறிகளில் பெறப்பட்ட விதிகளைக் கொண்டு ஒருவன் மன்னனுக்குரிய கடமைகளை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. பலவீனமனம் கொண்ட மன்னன், தன் முன்னுள்ள எடுத்துக்காட்டுகளில் இருந்து எந்த ஞானத்தையும் பெறாததன் விளைவால், (தன் கடமைகளை வெளிப்படுத்துவதில்) ஒருபோதும் அவனால் ஞானத்தை வெளிப்படுத்த முடியாது.(7) அறம் {தர்மம்} சில வேளைகளில் மறத்தின் {அதர்மத்தின்} வடிவை ஏற்கிறது. மறமும் சில வேளைகளில் அறத்தின் வடிவை ஏற்கிறது. இஃதை அறியாதவன், அவ்வகையில் எழும் உண்மையான நிகழ்வைச் சந்திக்கும்போது குழப்பமடைவான்.(8) இந்த அறிவை அடைந்த ஒரு ஞானமுள்ள மன்னன், சந்தர்ப்பம் நேரும்போது, தன் மதிப்பீட்டின் துணை கொண்டு அதன்படியே செயல்பட வேண்டும். அத்தகைய நேரத்தில் அவன் செய்யும் செயலானது, சாதாரண மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.(9) சிலர் உண்மை அறிவைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் போலி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வகை அறிவின் இயல்பையும் உண்மையில் உறுதி செய்து கொள்ளும் ஒரு ஞானமிக்க மன்னன், நல்லோராகக் கருதப்படுவோரிடமிருந்து அறிவை அடைகிறான்.(10)

அறநெறிகளை உண்மையில் உடைப்பவர்களே, சாத்திரங்களில் குறை காண்கிறார்கள். செல்வமில்லாதவர்கள், செல்வத்தை அடையும் உடன்படிக்கைகளில் உள்ள முரண்களை அறிவிக்கின்றனர்.(11) தங்களைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே அறிவை அடைய முயல்வோர், ஒருபுறம் அறநெறிக்கு எதிரிகளாக இருந்தாலும், அவர்கள் பாவம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(12) சாத்திரங்களை அறியாதோரால், அறிவின் வழிகாட்டுதலுடன் தங்கள் செயல்கள் அனைத்திலும் இயங்க இயலாததைப் போலவே, முதிரா {பண்படாத} புத்தி கொண்ட தீய மனிதர்களால், ஒருபோதும் உண்மைப் பொருட்களை அறிய முடியாது.(13) அவர்கள், சாத்திரங்களின் குறைகளில் மட்டுமே செலுத்தப்படும் கண்களைக் கொண்டு சாத்திரங்களைக் குறை கூறுகிறார்கள். அவர்கள் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொண்டாலும் கூட, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள தடையாணைகள் நல்லவை அல்ல என்று அறிவிக்கும் தங்கள் வாடிக்கையான பழக்கத்தையே தொடர்வார்கள்.(14) அத்தகைய மனிதர்கள், பிறரின் அறிவை குறைகூறுவதன் மூலம், தங்கள் அறிவின் மேன்மையையே அறிவித்துக் கொள்கிறார்கள். வார்த்தைகளையே தங்கள் கணைகளாகக் கொள்ளும் அவர்கள், தாங்களே அறிவியலின் உண்மையான தலைவர்களைப் போலப் பேசுவார்கள்.(15)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைக் கல்வி வணிகர்களாகவும்[2], மனிதர்களில் ராட்சசர்களாகவும் அறிவாயாக. வெறும் போலிக்காரணங்களின் துணையின் மூலம், நல்லோராலும், ஞானியராலும் நிறுவப்பட்ட அறநெறியை அவர்கள் கைவிடுகிறார்கள் {ஏளனம் செய்வார்கள்}.(16) விவாதம், அல்லது ஒருவனுடைய சொந்த புத்தி ஆகிய இரண்டாலும் அறநெறிகளின் உரைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று நாம் கேள்விப்படுகிறோம். இதுவே பிருஹஸ்பதியின் கருத்தாகும் என இந்திரனே {நேரடியாக என்னிடம்} சொல்லியிருக்கிறான்.(17) எந்தச் சாத்திர உரையும், காரணமில்லாமல் விதிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மேலும் சிலர், சாத்திரங்களை முறையாகப் புரிந்து கொண்டாலும், ஒருபோதும் அதன்படி செயல்படாமல் இருக்கிறார்கள்.(18) ஞானியரில் ஒரு வகையினர், அறநெறியானது, உலக நடைமுறைக்காக அங்கீகரிக்கப்படதேயன்றி வேறெதற்காகவும் இல்லை என்று அறிவிக்கிறார்கள். உண்மை ஞானியானவன், நன்மைக்காக விதிக்கப்பட்ட அறநெறியைத் தானே அறிந்து கொள்ள வேண்டும்.(19) கோபம், அறிவுக் குழப்பம், அறியாமை ஆகியவற்றின் ஆதிக்கத்தில் ஒரு ஞானியே அறநெறி குறித்துப் பேசினாலும், அந்த உரையும் ஒன்றுக்கும் உதவாமலே போகும்[3].(20)

[2] கும்பகோணம் பதிப்பில், "பாரத, ராக்ஷஸர்கள் போன்ற அவர்கள் வித்யாவர்த்தகர்களென்று அறிந்து கொள்" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "பொறாமையாலும், சாஸ்திரத்தில் அவிவேகத்தாலும், அறியாமையாலும் சொல்லவரும் பண்டிதனுடைய சாஸ்திரம் ஸதஸில் தோன்றாததாகும்" என்றிருக்கிறது.

சாத்திரங்களின் உண்மையான எழுத்திலும், உண்மையான தன்மையிலும் இருந்து பெறப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் அறநெறி குறித்துச் செய்யப்படும் உரையாடல்கள் போற்றத்தகுந்தவையே அன்றி வேறெதன் உதவியுடனும் செய்யப்படுபவை அல்ல. அறியாமையில் இருப்பவனின் வார்த்தைகளைக் கேட்டாலும், அறிவு நிறைந்தவனாக இருந்தாலும், அவன் நல்லவனாகவும், ஞானியாகவும் கருதப்படுவான்.(21) பழங்காலத்தில் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, "அறிவுச் சோதனையில் நிற்க முடியாத சாத்திரங்கள் சாத்திரங்களே அல்ல" என்று ஐயங்கள் அனைத்தையும் விலக்கவல்ல இந்த உண்மையைத் தைத்தியர்களுக்குச் சொன்னார்[4].(22) ஐயங்களுடன் கலந்த அறிவுடைமையோ, இல்லாமையோ அதே பொருளைக் கொண்டவையே. வேர்களைக் கிழித்து அத்தகைய {ஐயம் கொண்ட} அறிவை விரட்டுவதே உனக்குத் தகும்.(23) இந்த என வார்த்தைகளைக் கேளாதவன் தவறாக வழியில் செல்ல முனைபவனாகக் கருதப்பட வேண்டும். கடுஞ்செயல்களைச் செய்வதற்காகவே அவை உண்டாக்கப்பட்டன என்பதை நீ காணவில்லையா?(24)

[4] கும்பகோணம் பதிப்பில், "(சாத்திரத்திற்கும், யுக்திக்கும் ஒத்ததைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று) முன்காலத்தில் சுக்ராசாரியர் அஸுரர்களை நோக்கி ஸந்தேகத்தை அறுக்கத்தக்க விஷயத்தை உபதேசித்திருக்கிறார்" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், "பழங்காத்தில் தைத்தியர்களின் ஐயங்களை விலக்குவதற்காக உசனஸ், "புனித உரைகளில் பொருள் இல்லை என்றால், அவை அருவருக்கத்தக்கவையாகும். விளக்கப்பட முடியாத அறிவு என்ற ஏதுமில்லை" என்றார்" என்றிருக்கிறது.

ஓ! அன்புக்குழந்தாய், என் பிறப்பின் வகைக்கான கடமைகளைச் செய்து, எண்ணற்ற க்ஷத்திரியர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிய என்னைப் பார். இதற்காக என்னிடம் மகிழ்ச்சி கொள்ளாத சிலர் இருக்கின்றனர்.(25) ஆடு, குதிரை ஆகியவையும் க்ஷத்திரியனும் அதே போன்ற காரியத்திற்காகவே (அனைவருக்கும் பயன்படுவதற்காக) பிரம்மனால் படைக்கப்பட்டனர். எனவே, ஒரு க்ஷத்திரியன் இடையறாமல் அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியையே நாட வேண்டும்.(26) கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தகுந்தவனைக் கொல்லாமல் விடும் பாவமும் ஒன்றே. நிறுவப்பட்ட காரியங்களின் வரிசை இவ்வாறே இருக்கையில், பலவீன மனம் கொண்ட ஒரு மன்னன் அதை ஒருபோதும் கவனிக்காமல் இருக்கவே நினைக்கிறான்.(27) எனவே ஒரு மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்யக் கடுமையை வெளிப்படுத்த வேண்டும்[5]. இது செய்யப்படவில்லையெனில், அவர்கள் ஒருவரையொருவர் விழுங்க ஓநாய்களைப் போல எந்நோக்கமுமின்றித் திரிவார்கள்.(28) எவனுடைய ஆட்சிப்பகுதிகளில், நீரில் உள்ள சிறு மீன்களை அபகரிக்கும் காகங்களைப் போலக் கள்வர்கள் பிறர் பொருளைக் கொள்ளையிடுவார்களோ, அவன் க்ஷத்திரியர்களில் இழிந்தவனாவான்.(29)

[5] கும்பகோணம் பதிப்பில், "கொல்லத்தகாதவனைக் கொல்லுவதில் எந்தத் தோஷமோ அது கொல்லத்தக்கவனைக் கொல்லாதிருப்பதில் கூறப்படுகிறது. இதுதான் மரியாதையாகும். அதை இவன் விலக்கிக் கொள்ள வேண்டும். ஆகையால், அரசன் கடுமையாக இருந்து பிரஜைகளைத் தம்தர்மத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தக்கவனைக் கொல்லாத பாவமும் ஒன்றே எனப் புனித உரைகள் சொல்கின்றன. இது நிச்சயம் பலவீன மனம் கொண்ட க்ஷத்திரியர்கள் வெறுத்து ஒதுக்கும் விதியாகும். மன்னன் குடிமக்களைத் தங்கள் சுய தர்மத்தில் நிறுவவில்லையெனில், அவர்கள் {குடிமக்கள்} அழிவை அடைவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் உரை தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

நீ, உயர்ந்த பிறப்பையும், வேத அறிவையும் கொண்ட மனிதர்களை உன் அமைச்சர்களாக நியமித்துக் கொண்டு, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பூமியை ஆட்சி செய்வாயாக.(30) நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களையும், திட்டங்களையும் அறியாதவனான ஒரு க்ஷத்திரியன், தன் மக்களுக்கு முறையற்ற வரிகளை விதித்தால், அவன் தன் வகையில் ஆண்மையற்றவனாக {நபும்ஸகனாக / அலியாகக்} கருதப்படுகிறான்.(31) ஒரு மன்னன் கடுமையாகவும் இருக்கக்கூடாது, மென்மையானவனாகவும் இருக்கக்கூடாது. அவன் நீதியுடன் ஆண்டால் புகழத்தகுந்தவனாகிறான். இந்த இரு பண்புகளையும் மன்னன் கைவிடக் கூடாது; மறுபுறம் அவன் (கடுமை தேவைப்படும் சந்தர்ப்பங்களில்) கடுமையாகவும், தேவையான நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும்.(32) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பது வலிநிறைந்ததாகும். நான் உன்னிடம் பெரும் அன்பு கொண்டிருக்கிறேன். நீ கடும் செயல்களைச் செய்ய உண்டாக்கப்பட்டவனாவாய். எனவே, நீ உன் நாட்டை ஆள்வாயாக.(33) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, துன்ப காலங்களில் தீயோரைத் தண்டிப்பதும், நல்லோரைப் பாதுகாப்பதுமே ஒரு மன்னனுடைய பெருங்கடமை என்று சொல்லியிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(34)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "(அரசகடமைகளைப் பொறுத்தவரையில்) எந்தச் சூழ்நிலையிலும் மீறப்படக்கூடாத விதி ஏதும் இருக்கிறதா? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(35)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன், கல்விக்காகவும், அர்ப்பணிப்புள்ள தவங்களுக்காகவும், வேத விதிகளுக்கு இசைவான நடத்தையில் கொண்ட வளத்துக்காகவும் மதிப்புக்குரிய பிராமணர்களை எப்போதும் வழிபட வேண்டும். உண்மையில் இஃது உயர்ந்த மற்றும் புனிதமான கடமையாகும்.(36) தேவர்களிடம் நீ நடந்து கொள்வதைப் போலவே பிராமணர்களுடனான உன் நடத்தையும் இருக்கட்டும். ஓ! மன்னா, பிராமணர்கள் கோபமடைந்தால் பல்வேறு தீமைகளை இழைக்க முடியும்.(37) அவர்கள் நிறைவு செய்யப்பட்டால், உயர்ந்த புகழ் உனது பங்காகும். மாறாக இருந்தால், உன் அச்சம் பெரிதாக இருக்கும். நிறைவுடன் இருந்தால், பிராமணர்கள் அமுதமாவார்கள். கோபமடைந்தால் அவர்களே நஞ்சுமாவார்கள்"[6] என்றார் {பீஷ்மர்}.(38)

[6] 35 முதல் 38 வரை உள்ள சுலோகங்கள் இந்தப் பகுதியோடு சரியாக ஒட்டுவதாகத் தெரியவில்லை.

சாந்திபர்வம் பகுதி – 142ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்