Thursday, April 26, 2018

ஜனமேஜயன் ஏற்ற உறுதிமொழி! - சாந்திபர்வம் பகுதி – 151

The swearing of Janamejaya! | Shanti-Parva-Section-151 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 21)


பதிவின் சுருக்கம் : தான் செய்த பாவங்களுக்காக வருந்துவதாகவும், தன்னைக் கண்டிப்பது தகுந்ததே என்றும் இந்திரோதரிடம் ஜனமேஜயன் சொல்வது; பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதிமொழியேற்றுக் கொண்டால் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன இந்திரோதர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட ஜனமேஜயன், அந்தத் தவசியிடம் {இந்திரோதரிடம்}, "கண்டிக்கத் தகுந்தவனையே நீர் கண்டிக்கிறீர். பழிக்கத்தக்கவனையே நீர் பழிக்கிறீர்.(1) என்னையும், என் செயல்களையும் நீர் கடிந்துரைக்கிறீர். என்னிடம் கருணை கொள்ளுமாறு நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என் செயல்கள் அனைத்தும் பாவம் நிறைந்தவையே. எனினும், நெருப்புக்கு மத்தியில் இருப்பவனைப் போல நான் வருந்துகிறேன்.(2) என் செயல்களை நினைத்து என் மனம் மிகவும் உற்சாகமிழக்கிறது. உண்மையில் நான் யமனைக் குறித்து அதிகம் அஞ்சுகிறேன்.(3) என் இதயத்தில் இருந்து அந்தக் கணையைப் பிடுங்காமல் என்னால் எவ்வாறு உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்? ஓ! சௌனகரே {சுனகரின் மகனே [இந்திரோதரே]}, உமது கோபத்தை அடக்கி, இப்போது எனக்குப் போதிப்பீராக.(4) முந்தைய காலத்தில் பிராமணர்களிடம் நான் பெரும் மதிப்பைக் காட்டினேன். அவர்களிடம் அதே மதிப்பையே மீண்டும் காட்டுவேன் என நான் உளமாற அறிவிக்கிறேன். என் குலம் அழிய வேண்டாம். நான் பிறந்த குலம் புழுதியில் மூழ்க வேண்டாம்.(5)


பிராமணர்களுக்குத் தீங்கிழைத்தவர்கள், அதன் காரணமாக, வேத ஆணைகளின் விளைவால் உலகம் குறித்த அனைத்து உரிமைகளையும், சக மனிதர்களுடனான சமூகச் சேர்க்கையையும் இழந்தவர்கள், தங்கள் குலங்கள் தொடரத் தங்கள் பெயர்களைத் தாங்கும் எவனையும் கொண்டிருப்பது முறையாகாது.(6) நான் துயரில் மூழ்கியிருக்கிறேன். எனவே, (என் நடத்தையைச் சரி செய்து கொள்வதைக் குறித்த) என் தீர்மானங்களை நான் மீண்டும் சொல்கிறேன். ஏழைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடைகளை ஏற்காத தவசிகளைப் போல என்னைப் பாதுகாக்குமாறு நான் உம்மை வேண்டுகிறேன்.(7) பாவிகளான அற்பர்கள், வேள்விகளைத் தவிர்ப்பதால் ஒருபோதும் சொர்க்கத்தை அடைவதில்லை.[1] (இந்த உலகத்தை விட்டுச்) சென்றதும், புளிந்தர்களையும், காசர்களையும் போல அவர்கள் நரகக் குழிகளிலேயே தங்கள் காலத்தைக் கழிப்பார்கள்[2].(8) கல்விமானான ஓர் ஆசான் தன் சீடனுக்கோ, ஒரு தந்தையானவர் தனது மகனுக்கோ ஞானத்தைக் கொடுப்பதைப் போல அறியாமை கொண்ட எனக்கு நீர் அதை {ஞானத்தைக்} கொடுப்பீராக. ஓ! சௌனகரே, என்னிடம் நிறைவு கொள்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.(9)

[1] "இங்கே (அதஸ் adas என்பதன் குற்றம்சொல்லும்) அமும் amum ஆனது, ’அஃது’ என்பதையே குறிக்கிறது, ’இஃது’ என்பதைக் குறிக்கவில்லை என்பது தெளிவு. எனவே, இது சொர்க்கத்தைக் குறிக்கிறதேயன்றி, இவ்வுலகைக் குறிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் "யஜ்ஞமில்லாதவர்கள் எவ்விதத்திலும் மேலுலகத்தை அடையமாட்டார்கள்" என்றிருக்கிறது.

[2] "இவர்கள் தூய்மையற்ற நடத்தை கொண்ட மிலேச்ச இனங்களாவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புளிந்தர்களென்னும் ஒருவகை மிலேச்சர்கள் போல அவர்கள் தலைகீழாக விழுவார்கள்" என்றிருக்கிறது.

சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்}, "ஞானமில்லாத ஒருவன், பல முறையற்ற செயல்களைச் செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? இஃதை அறிந்த ஒரு ஞானமுள்ள மனிதன், உயிரினங்கள் (மடமையால் செய்யும் குற்றங்களில்) ஒருபோதும் கோபமடைவதில்லை[3].(10) ஞான மாளிகையின் உச்சியில் ஏறிய ஒருவன், பிற மக்களின் துயருக்கான பொருளாகி, அவர்களுககாக வருந்தினால், அவனது சுயம் {ஆன்மா} மிகத் தூய்மையானதாக இருக்க வேண்டும். ஒருவனுடைய ஞானத்தின் விளைவால் அவன் மலையுச்சியில் இருந்து கொண்டு கீழிருக்கும் மக்களை ஆய்வு செய்பவனைப் போல, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் ஆய்வு செய்கிறான்.(11) எவன் நல்லோரின் கடிந்துரைக்குப் பொருளாகிறானோ, எவன் நல்லோரை வெறுப்பானோ, எவன் அவர்களின் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்வானோ அவனால் ஒருபோதும் எந்த அருளையும் அடைவதில் வெல்ல முடியாது, அவன் ஒருபோதும் செயல்களின் முறைமைகளை {ஒழுங்குமுறைகளைப்} புரிந்து கொள்ளவே மாட்டான்[4].(12) வேதம் மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி பிராமணனின் சக்தியையும், உன்னதத்தன்மையையும் நீ அறிவாய். எந்த வழியில் உன் இதயம் அமைதியை அடையமோ அஃதை இப்போதே செய்து, பிராமணர்களையே உன் புகலிடமாக்கிக் கொள்வாயாக.(13) உன் மேலுள்ள கோபத்தைப் பிராமணர்கள் நிறுத்திக் கொண்டால், அதுவே சொர்க்கத்தில் உன் இன்பநிலையை உறுதிசெய்யும். மேலும், பாவத்துக்கு நீ வருந்துவாயானால், உன் பார்வை தெளிவடையும், அறங்காண்பதில் நீ வெல்வாய்" என்றார் {இந்திரோதர்}.(14)

[3] "பம்பாய் பதிப்பில், இந்த வரி வேறு மாதிரியாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறிவிற்சிறந்த பிராம்மணனும் (கோபமடைந்தால்) அயுக்தமான காரியத்தையும் செய்வான். இதில் என்ன ஆச்சரியம்? ஆகையால் இவ்விதமான விவேகமுள்ளவனாயிருந்து எவன் பிராணிகள் விஷயத்தில் கோபமடைவான்?" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில் இது வேறு பாடம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஞானமிக்க ஒருவன் தகுந்த செயல்கள் பலவற்றைச் செய்வதில் ஆச்சரியமேதுமில்லை. எது நடந்ததோ, எது நடக்கபோகிறதோ அது குறித்து ஒரு கல்விமான் கவலைப்படுவதில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அவன் தற்போதைய நிலை குறித்தே கவலைப்படுவான்" என்றிருக்கிறது.

[4] "பம்பாய் பதிப்பில், இந்த வரி வேறு மாதிரியாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லா ஸாதுக்களிடத்திலும் வெறுப்புற்ற மனுமுள்ளவனும், அவர்களைவிட்டு விலகியிருப்பவனும், அவர்களால் நிந்திக்கப்பட்டவனுமாயிருக்கும் ஒருவனும் அறிவை அடையமாட்டான்; ஆச்சரியங்களையும் காணமாட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நிலையற்ற எவனும், ஆன்மத்தரமற்றவனும், நல்லோர் அனைவராலும் நிந்திக்கப்படுபவனும், தன்னை மறைத்துக் கொள்பவனும், செயலின் நடைமுறையைக் காணமாட்டான்" என்றிருக்கிறது.

ஜனமேஜயன், "நான் என் பாவங்களுக்காக வருந்துகிறேன். அறத்தை அழிக்க நான் ஒருபோதும் முயல மாட்டேன். நான் அருளை அடையவே விரும்புகிறேன். என்னிடம் நீர் நிறைவு கொள்வீராக" என்றான்.(15)

சௌனகர் {இந்திரோதர்}, "ஓ! மன்னா, ஆணவத்தையும், செருக்கையும் அகற்றி, நீ என்னிடம் மரியாதை காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்[5]. அறக்கட்டளைகளை எப்போதும் நினைவுகூர்பவனாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் நீ ஈடுபடுவாயாக.(16) அச்சத்தாலோ, குறுகிய மனத்தாலோ, பேராசையாலோ நான் உன்னைக் கண்டிக்கவில்லை. நான் சொல்லப்போகும் உண்மையின் வார்த்தைகளை இங்கிருக்கும் பிராமணர்களோடு சேர்ந்து கேட்பாயாக.(17) நான் எதையும் கேட்கவில்லை. எனினும், அறவழிகளை நான் உனக்குப் போதிப்பேன். (நான் இப்போது செய்யப் போகும் செயலுக்காக) அனைவரும் என்னை நிந்தித்து {தவளைகள் போல், கழுதைகள் போல்) கத்தவும், கதறவும் செய்வார்கள்.(18) அவர்கள் என்னைப் பாவி என்றும் அழைக்கக்கூடும். என் சொந்தங்களும், நண்பர்களும் என்னை விலக்கக்கூடும்[6]. எனினும், என் சொந்தங்களும், நண்பர்களும், நான் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, வாழ்வின் கடினங்களை நிச்சயம் விரைவாகக் கடப்பார்கள்.(19) பெரும் ஞானம் கொண்ட சிலர் (என் நோக்கங்களைச்) சரியாகப் புரிந்து கொள்வார்கள். ஓ! குழந்தாய், ஓ! பாரதா, பிராமணர்களைக் குறித்த என் பார்வைகள் என்ன என்பதை அறிந்து கொள்வாயாக.(20) என் முயற்சிகளின் மூலம் (நான் சொல்வதைக் கேட்ட பிறகு) அவர்கள் அனைத்து அருளையும் அடையும் வகையில் செயல்படுவாயாக. ஓ! மன்னா, பிராமணர்களுக்கு மீண்டும் தீங்கிழைக்கமாட்டேன் என்ற உறுதிமொழியையும் நீ அளிப்பாயாக" என்றார் {இந்திரோதர்}.(21)

[5] "அஃதாவது, என் போதனைகள் வேண்டுமென்றால் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "பிராமணனைக் கொன்றவனிடம் பேசுவது கூடப் பாவமாகக் கருதப்படும் அளவுக்கு வெறுப்புணவு பெரியதாக இருந்திருக்கிறது. அத்தகைய ஒரு மனிதனுக்கு, வேதங்கள் மற்றும் அறநெறிகளின் உண்மைகளைப் போதிப்பது, அறத்தையே களங்கப்படுத்துவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஜனமேஜயன், "எண்ணத்தாலோ, வார்த்தையாலோ, செயலாலோ, நான் இனி ஒருபோதும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்று உமது பாதங்களைத் தீண்டி உறுதிமொழியேற்கிறேன்" என்றான்.(22)

சாந்திபர்வம் பகுதி – 151ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்