Sunday, April 29, 2018

ஓர் இலவம்! - சாந்திபர்வம் பகுதி – 154

A Salmali - White Silk-cotton tree! | Shanti-Parva-Section-154 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : ஒரு பலவீனமான மன்னன், பலமிக்க ஒருவனின் கோபத்துக்கு ஆளானால், அந்த ஆபத்தான வேளையில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; இந்தக் கேள்விக்கான விடையை விளக்க, ஓர் இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்...


Very Large  Kapok  (White Silk-Cotton) Tree in Lal Bagh gardens in Bangalore (Bangaluru), India
பெஙகளூருவின் லால்பாக் பூங்காவில் உள்ள மிகப் பெரிய இலவ மரம்
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பலவீனமானவனும், பயனற்றவனும், மென்மையான இதயம் கொண்டவனுமான ஒருவன், விவேகமில்லாமலும், தற்புகழ்ச்சிமிக்கப் பேச்சுகளின் மூலமும், மடமையினாலும், (விரும்பினால்) நன்மை செய்ய வல்லவனும், (விரும்பவில்லையெனில்) தண்டிக்கவல்லவனும், எப்போதும் செயல்படத் தயாராக இருப்பவனும், எப்போதும் தன் அருகிலேயே வசிப்பவனுமான பலமிக்க ஓர் எதிரியின் கோபத்தைத் தூண்டிவிட்டால், அந்தப் பலமிக்கவன் கோபத்தோடும், அவனை அழிக்கும் நோக்கோடும் எதிர்த்துப் படையெடுத்து வரும்போது, அந்தப் பலவீனமானவன், தன் பலத்தைச் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும்?[1](1-3)

[1] கும்பகோணம் பதிப்பில், "பலமில்லாதவனும், அல்ப சேனையுள்ளவனும், எளியவனுமான மனிதன், அவிவேகத்தால் தற்புகழ்ச்சிகளோடு மட்டும் கூடியவனாகத் தகாத வார்த்தைகளால், பலமுள்ளவனும், எப்பொழுதும் அருகிலிருப்பவனும் உபகாரஞ்செய்வதிலும், அபகாரஞ்செய்வதிலும் ஸாமர்த்தியமுள்ளவனும், முயற்சியுள்ளவனுமான சத்துருவுக்கு விரோதத்தைச் செய்து, பின் அவன் (சத்ரு) அதிக கோபங்கொண்டு தன்னைக் களைய வேண்டுமென்ற விருப்பத்துடன் வரும்பொழுது தனக்கு உள்ள பலத்தைக் கொண்டு எவ்விதம் இருக்க வேண்டும்" என்று யுதிஷ்டிரனின் கேள்வி அமைகிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, சால்மலிக்கும் {இலவ மரத்திற்கும்}, பவனத்துக்கும் {காற்றுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4) இமய மலையின் உச்சிகளில் ஒன்றில், ஒரு பெரிய (சால்மலி {இலவ}) மரம் இருந்தது. பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த அது, தன் கிளைகளைச் சுற்றிலும் பரப்பி விரிந்திருந்தது. மேலும் அதன் தண்டு பெரியதாகவும், அதன் கிளைகளும், இலைகளும் எண்ணற்றவையாகவும் இருந்தன.(5) உழைப்பால் களைத்தவையும், வியர்வையில் நீராடியவையுமான யானைகளும், பிற வகை விலங்குகள் பலவும் அதன் நிழலின் கீழ் வழக்கமாக இளைப்பாறின.(6) அதன் தண்டின் சுற்றளவு நானூறு முழங்களைக் கொண்டதாக இருந்தது, அதனைக் கிளைகளும், இலைகளும் பரப்பிய நிழல் அடர்த்தியாக இருந்தது. மலர்களும், கனிகளும் நிறைந்ததாக இருந்த அஃது, எண்ணற்ற ஆண், பெண் கிளிகளுக்கு வசிப்பிடமாக இருந்தது.(7) நீண்ட வழியில் பயணம் செய்யும் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களின் சிவிகைளும், காடுகளில் வசிக்கும் தவசிகளும், காட்டின் இனிய ஏகாதிபதியாக இருந்த அதன் நிழலின் கீழ் இளைப்பாறினர்.(8)

இலவம் இலைகள் - Leaves of Kapok tree

ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒருநாள், தவசி நாரதர், அந்த மரத்தின் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளையும், அதன் தண்டின் சுற்றளவையும் கண்டு, அஃதை அணுகி, அதனிடம், "ஓ!, நீ இனிமை நிறைந்திருக்கிறாய். ஓ!, நீ வனப்புடன் இருக்கிறாய். ஓ! மரங்களில் முதன்மையானவனே, ஓ! சால்மலி {இலவ மரமே}, உன்னைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(10) ஓ! அழகான மரமே, பல்வேறு வகைகளைச் சார்ந்த இனிமைநிறைந்த பறவைகளும், யானைகளும், பிற விலங்குகளும் உன் கிளைகளிலும், அவற்றுடைய நிழலின் கீழும் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.(11) ஓ! பரந்த கிளைகளைக் கொண்ட காட்டின் ஏகாதிபதியே, உன் கிளைகளும், உன் தண்டும் பெரியவையாக இருக்கின்றன. காற்றுத் தேவனால் {வாயுவால்} அவற்றில் ஏதும் முறிந்ததை நான் ஒருபோதும் கண்டதில்லை.(12)

ஓ! குழந்தாய் {இலவ மரமே}, பவனன் {வாயு} உன்னிடம் நிறைவடைந்து, உன் நண்பனாக இருப்பதால், இந்தக் காட்டில் உன்னை எப்போதும் பாதுகாக்கிறானா? பெரும் வேகமும், பலமும் கொண்ட சிறப்புமிக்கப் பவனன், நெடிய, பலமான மரங்களையும், ஏன் மலைச்சிகரங்களையே கூட அவற்றின் இடங்களில் இருந்து அசைத்துவிடுகிறான்.(14) நறுமணங்களைச் சுமக்கும் அந்தப் புனிதமானவன், (தான் விரும்பும்போது) வீசி, ஆறுகள், தடாகங்கள், கடல்கள் உள்ளிட்ட பாதாள உலகத்தையும் வற்றச் செய்துவிடுகிறான்.(15) நிச்சயம் நட்பாலேயே பவனன் உன்னைப் பாதுகாக்கிறான். இதன் காரணமாகத் தான் நீ எண்ணற்றக் கிளைகளைக் கொண்டவனாக இருப்பினும், இன்னும் இலைகளுடனும், மலர்களுடனும் அருளப்பட்டிருக்கிறாய்.(16)

ஓ! காட்டின் ஏகாதிபதியே {இலவ மரமே}, ஓ! குழந்தாய், இந்த இறகு படைத்த உயிரினங்கள், மகிழ்ச்சியால் நிறைந்து உன் கொப்புகளிலும், கிளைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த உன் பசுமை இனிமையானதாக இருக்கிறது.(17) நீ பூத்துக் குலுங்கும் பருவத்தில், உன் கிளைகளில் வசிக்கும் இவை மென்மையாகப் பாடும்போது தோன்றும் இனிய இசை தனியாகக் கேட்கிறது.(18) ஓ! சால்மலி {இலவ மரமே}, தங்கள் இனங்களின் ரத்தினங்களான இந்த யானைகள், வியர்வையில் குளித்து, (மகிழ்ச்சிப்) பிளிறல்களில் ஈடுபட்டு, உன்னை அணுகி, இங்கே மகிழ்ச்சியைக் கண்டடைகின்றன.(19) அதேபோலக் காடுகளில் வசிக்கும் பிற இனத்தைச் சேர்ந்த பல்வறு விலங்குகளும், உன்னை அலங்கரிப்பதில் பங்காற்றுகின்றன. ஓ மரமே, உண்மையில் அனைத்து வகை உயிரினங்களும் உள்ள மேரு மலைகளைப் போலவே நீயும் மிக அழகாகத் தெரிகிறாய்.(20) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களாலும், தவங்களில் ஈடுபடும் பிறராலும், தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யதிகளாலும் நீ நாடப்படுவதால், இந்த உன் பகுதி சொர்க்கத்திற்கு ஒப்பாக இருக்கிறதென நான் நினைக்கிறேன்" என்றார் {நாரதர்}.(21)

சாந்திபர்வம் பகுதி – 154ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்