Monday, April 30, 2018

இலவத்தின் விபரீத எண்ணம்! - சாந்திபர்வம் பகுதி – 155

The perverse thought of the Kapok! | Shanti-Parva-Section-155 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 25)


பதிவின் சுருக்கம் : இலவ மரத்தின் கிளைகள் ஏதும் ஒடியாமல் இருப்பதைக் கண்ட நாரதர், அதற்கும், வாயு தேவனுக்கும் இடையில் உள்ள நட்பைக் குறித்து வினவுதல்; அதற்கு அந்த இலவ மரம் தானே வாயுவை விட பலவான் என்றது; இலவம் வாயுவை இகழ்ந்ததை வாயுவிடம் சொல்லப்போகவதாகச் சொன்ன நாரதர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna
on his death bed of arrows_ Shanti Parva-155
நாரதர், "ஓ! சால்மலி {இலவ மரமே}, பயங்கரமானவனும், தடுக்கப்பட முடியாதவனுமான காற்று தேவன் {வாயு}, நட்பினாலோ, நல்லுறவினாலோ எப்போதும் உன்னைப் பாதுகாக்கிறான் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. "நான் உன்னவன்" என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவும் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ! சால்மலி, (எங்களுக்குத்தெரியாத) ஏதோ காரணத்தால், அல்லது காரணங்களால் காற்று உன்னைப் பாதுகாப்பதாலேயே நீ உன் கிளைகள், கொப்புகள் மற்றும் இலைகள் அனைத்துடன் இங்கே நிற்கிறாய் என்பதில் ஐயமில்லை" என்றார் {நாரதர்{.(4)


சால்மலி {அந்த இலவ மரம் நாரதரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, காற்றானவன் {வாயே தேவன்} என் நண்பனோ, தோழனோ, நலன் விரும்பியோ கிடையாது. உண்மையில் அவன், என்னைப் பாதுகாத்து ஆணையிடும் அளவுக்குப் பெரியவனும் அல்ல.(5) ஓ! நாரதரே, என் கடும் சக்தியும், வலிமையும் காற்றைவிடப் பெரியவையாகும். உண்மையில், காற்றின் பலமானது, என் பலத்தில் பதினெட்டில் ஒரு பாகத்துக்கு மட்டுமே ஒப்பாகும்.(6) காற்றானவன் சீற்றத்துடன் மரங்கள், மலைகள் மற்றுப் பிற பொருட்களைக் கிழித்துக் கொண்டு வரும்போதும், நான் என் பலத்தை வெளிப்படுத்தி அஃதை அடக்குகிறேன்.(7) உண்மையில், பல பொருட்களை உடைக்கும் காற்றானவன் மீண்டும் மீண்டும் என்னால் முறிக்கப்பட்டிருக்கிறான். ஓ! தெய்வீக முனிவரே, இந்தக் காரணத்தினால் நான் அவன் கோபத்துடன் வரும்போதும் அஞ்சுவதில்லை" என்றது {இலவ மரம்}.(8)

நாரதர், "ஓ! சால்மலி, உன்னுடைய உள்ளுணர்வு முற்றாகப் பிறழ்ந்திருப்பதாக {விபரீதமானதாகத்} தெரிகிறது. இதில் எந்த ஐயமுமில்லை. காற்றின் பலத்துக்கு இணையானதாகப் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் கிடையாது.(9) இந்திரனோ, யமனோ, வைஸ்ரவணனோ {குபேரனோ}, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ கூடக் காற்று தேவனின் {வாயுவின்} வலிமைக்கு இணையானவர்கள் இல்லை. எனவே, வெறும் மரமான உன்னைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(10) ஓ! சால்மலி, இவ்வுலகின் எந்த உயிரினமும், எந்தச் செயலைச் செய்தாலும், உயிரை அளிப்பவனான காற்று தேவனே அனைத்து வேளைகளிலும் அந்தச் செயலின் காரணமாக இருக்கிறான்.(11) அந்தத் தேவன் முறைமையுடன் முயலும்போது, அவன் அனைத்து உயிரினங்களையும் எளிதாக வாழ வகைச் செய்கிறான். எனினும், அவன் முறையில்லாமல் முயன்றால், உலக உயிரினங்களுக்குப் பேரிடரே விளையும்.(12) வழிபாட்டுக்குத் தகுந்தவனும், அண்டத்தின் உயிரினங்களில் முதன்மையானவனுமான காற்று தேவனை வழிபடாமல் இருக்க உன்னைத் தூண்டுவது, உன் அறிவின் பலவீனமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?(13) உண்மையில் நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஓ! சால்மலி, உன் நுண்ணறிவானது, கோபத்தாலும், பிற தீய ஆசைகளாலும் குழப்பப்பட்டிருப்பதால் நீ பொய்மைகளை மட்டுமே பேசுகிறாய்.(14)

இத்தகைய பேச்சுகளில் நீ ஈடுபடுவதில் நான் நிச்சயம் உன்னிடம் கோபமே அடைகிறேன்.(15) நீ சொன்ன இந்த இழிவான வார்த்தைகள் அனைத்தையும் நானே காற்றுத் தேவனிடம் தெரிவிக்கப் போகிறேன்.(16) ஓ! சால்மலி {இலவ மரமே}, ஓ! தீய புத்தியைக் கொண்டவனே, உன்னைவிடப் பலமிக்கவையான சந்தனங்கள் {சந்தன மரங்கள்}, சியந்தனங்கள், சாலங்கள், சரளங்கள், தேவதாரங்கள், வேதாசங்கள் {நீர்நொச்சி மரங்கள்}, தன்வனங்கள் மற்றும் நல்லான்மாக்களைக் கொண்ட பல மரங்கள் ஒருபோதும் காற்றுக்கு எதிராக இத்தகைய வசைமாரிகளைச் சொன்னதில்லை.(17) அவை அனைத்தும், காற்றின் வலிமையையும், தாங்கள் ஒவ்வொருவரும் கொண்ட பலத்தையும் அறியும். இந்தக் காரணங்களுக்காக அந்த முதன்மையான மரங்கள், அந்தத் தேவனைப் பொறுத்தவரையில் தங்கள் தலைகளை வணங்குகின்றன.(18) எனினும், மடமையால் நீ காற்றின் எல்லையற்ற வலிமையை அறியவில்லை. எனவே, (நீ அவனைக்குறித்து இகழ்ந்ததைச்சொல்வதற்காகச்} நான் அந்தத் தேவனின் முன்னிலைக்குச் செல்லப்போகிறேன்" என்றார் {நாரதர்}.(19)

சாந்திபர்வம் பகுதி – 155ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்