Tuesday, May 01, 2018

இலவமும் வாயுவும்! - சாந்திபர்வம் பகுதி – 156

The Kapok and the wind god! | Shanti-Parva-Section-156 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 26)


பதிவின் சுருக்கம் : இலவ மரத்தின் வார்த்தைகளை வாயுத் தேவனிடம் தெரிவித்த நாரதர்; கோபமடைந்த வாயு, அந்த இலவமரத்தைத் தான் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொல்லி, இனி அதற்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப்போவதாகச் சொன்னது; வாயுவை எவ்வாறு சமாளிப்பது என்று மனத்திற்குள் திட்டம்போட்ட இலவமரம்...


The Kapok and the wind god! | Shanti-Parva-Section-156 | Mahabharata In Tamil

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சால்மலியிடம் {அந்த இலவ மரத்திடம்} இவ்வாறு சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான நாரதர், காற்று தேவனைக் குறித்துச் சால்மலி சொன்னதனைத்தையும் அவனிடம் {வாயுவிடம்} சொன்னார்.(1)


நாரதர் {வாயுதேவனிடம்}, "இமயத்தின் சாரலில், கிளைகளாலும், இலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சால்மலி {இலவ மரம்} இருக்கிறது. அதன் வேர்கள் பூமிக்குள் ஆழமாக நீண்டு விரிந்து செல்கின்றன, அதன் கிளைகள் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கின்றன. ஓ! காற்று தேவா {வாயு தேவா}, அந்த மரம் உன்னை அவமதிக்கிறது.(2) உன்னைக் குறித்து நிந்தனை நிறைந்த வார்த்தைகள் பலவற்றை அது பேசுகிறது. ஓ! காற்றே, நீ கேட்குமாறு, நான் அதைத் திரும்பச் சொல்வது முறையாகாது.(3) ஓ! காற்றே, படைக்கப்பட்ட பொருட்கள் யாவிலும் நீ முதன்மையானவன் என்பதை நான் அறிவேன். நீ மிக மேன்மையானவன் என்பதையும், மிகப் பெரும் வலிமைமிக்கவன் என்பதையும், கோபத்தில் நீ அந்தகனுக்கு நிகரானவன் என்பதையும் நான் அறிவேன்" என்றார் {நாரதர்}".(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட காற்று தேவன், அந்தச் சால்மலியிடம் சென்று, அதனிடம் சினத்துடன் பின்வருமாறு பேசினான்.(5)

காற்று தேவன் {இலவமரத்திடம்}, "ஓ! சால்மலி, நாரதரின் முன்பு நீ என்னை இழிவாகப் பேசியிருக்கிறாய். நான் காற்று தேவன் என்பதை அறிவாயாக. நான் என் பலத்தையும், வலிமையையும் உனக்கு நிச்சயம் காட்டுவேன்.(6) நான் உன்னை நன்கறிவேன். நீ எனக்கு அந்நியன் இல்லை. பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த உலகைப் படைப்பதில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிலகாலம் உனக்குக் கீழே ஓய்ந்திருந்தார்.(7) இந்நிகழ்வின் விளைவாலேயே நான் இதுவரை உனக்குக் கருணை காட்டி வந்தேன். ஓ! மரங்களில் இழிந்தவனே, இதன் காரணமாகவே நீ தீங்குக்கு உள்ளாகாமல் இருக்கிறாயேயன்றி, உன் சொந்த வலிமையின் விளைவாலல்ல.(8) அவமரியாதைக்குரிய பொருளாக என்னை நீ அற்பமாகக் கருதுகிறாய். நீ மீண்டும் என்னை அவமதிக்காத வகையில் நான் உனக்கு என்னை வெளிப்படுத்துகிறேன்" என்றான் {வாயு}".(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டதும், ஏளனமாகச் சிரித்த அந்தச் சால்மலி, "ஓ! காற்று தேவா, நீ என்னிடம் கோபமாக இருக்கிறாய். என்னைப் பொறுத்துக்கொள்ளாதே, உன் வலிமையின் எல்லையைக் காட்டுவாயாக.(10) உன் கோபமனைத்தையும் என் மீது கக்குவாயாக. நீ கோபவசப்படுவதால் எனக்கு நீ என்ன செய்துவிடுவாய்? உன் வலிமையானது (தருவிக்கப்படுவதற்குப் பதிலாக) உனக்குச் சொந்தமானதாக இருந்தாலும் கூட, நான் உன்னிடம் அச்சம் கொள்ள மாட்டேன். நான் விலையில் உன்னை விட மேன்மையானவன் ஆவேன். உன்னைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.(11) நுண்ணறிவில் பலமிக்கவர்களே உண்மையில் பலவான்களாவர். மறுபுறம், உடல் பலத்தை மட்டுமே கொண்டவர்கள் பலவான்களாகக் கருதப்படுவதில்லை" என்றது.(12)

இவ்வாறு சொல்லப்பட்ட காற்று தேவன் {இலவ மரத்திடம்}, "நாளை நான் உன் பலத்தைச் சோதிக்கிறேன்" என்று சொன்னான். அதன் பிறகு இரவு வந்தது.(13) காற்றின் பலத்தையும், தன் பலத்தின் எல்லையையும் மனத்தால் தீர்மானித்த அந்தச் சால்மலி, தன் பலம் அந்தத் தேவனைவிடக் குறைவானதே என்பதைக் கண்டு, தனக்குள்ளேயே,(14) "நாரதரிடம் நான் சொன்னதனைத்தும் பொய்யே. நான் நிச்சயமாகக் காற்றைவிடப் பலம் குறைந்தவனே. உண்மையில், அவன் தன் பலத்தில் வலிமையாகவே இருக்கிறான்.(15) நாரதர் சொன்னதைப் போல, காற்றானவன் {வாயு தேவன்} எப்போதும் வலிமைமிக்கவனே. வேறு மரங்களை விட நான் பலவீனமானவன் என்பதில் ஐயமில்லை.(16) ஆனால் நுண்ணறிவில் எனக்கு எந்த மரமும் நிகரானதில்லை. எனவே, காற்றிடம் இருந்து எழும் இந்த அச்சத்தை என் நுண்ணறிவைச் சார்ந்து கவனித்துக் கொள்வேன்.(17) காட்டில் உள்ள பிற மரங்கள் அனைத்தும், இதே வகை நுண்ணறிவைச் சார்ந்திருந்தால், காற்று தேவன் கோபமடைந்தாலும் கூட அதிலிருந்து எந்தத் தீங்கும் நிச்சயம் நேராது.(18) எனினும், அவை அனைத்தும் அறிவற்றவையாக இருக்கின்றன, எனவே, காற்றுத் தங்களை அசைப்பதிலும், கிழிப்பதிலும் ஏன்? எவ்வாறு? வெல்கிறது என்பதை நான் அறிவதை போல அவற்றால் அறிய முடியவில்லை" என்று நினைக்கத் தொடங்கியது" {என்றார் பீஷ்மர்}.(19)

சாந்திபர்வம் பகுதி – 156ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன்