Friday, May 04, 2018

வாய்மை! - சாந்திபர்வம் பகுதி – 162

Truth! | Shanti-Parva-Section-162 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 32)


பதிவின் சுருக்கம் : வாய்மையின் பெருமைகளையும், பதிமூன்று வகை உண்மைகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...


Truth! | Shanti-Parva-Section-162 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பிராமணர்கள், முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் வாய்மையின் கடமையை {சத்தியத்தைத் தர்மமென்று} மெச்சுகிறார்கள். நான் வாய்மையை {சத்தியத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, அது குறித்து என்னிடம் உரையாடுவீராக. ஓ! மன்னா, வாய்மையின் குறியீடுகள் என்ன? அஃது எவ்வாறு அடையப்பட முடியும்? வாய்மையைப் பயில்வதால் ஈட்டப்படுவதென்ன? அஃதை எவ்வாறு ஈட்ட முடியும்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நால்வகையினரின் கடமைகளில் குழப்பம் ஏற்படுவது ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. வாய்மை என்று அழைக்கப்படுவது, இந்த நான்கு வகைகளிலும் கலப்படமில்லாத தூய நிலையில் எப்போதும் இருக்கிறது.(3) நல்லோரிடம் வாய்மையானது எப்போதும் ஒரு கடமையாகவே இருக்கிறது. உண்மையில், வாய்மை ஒரு நித்திய கடமையாகும். ஒருவன் வாய்மையை மதிப்புடன் வணங்க வேண்டும். வாய்மையே (அனைத்திற்கும்) உயர்ந்த புகலிடமாக இருக்கிறது.(4) வாய்மையே கடமை {தர்மம்}; வாய்மையே தவம்; வாய்மையே யோகம்; வாய்மையே அழிவில்லா பிரம்மம். வாய்மையானது உயர்ந்த வகையைச் சேர்ந்த ஒரு வேள்வியாகச் சொல்லப்படுகிறது. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(5) நான் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வாய்மையின் வடிவங்களையும், அதன் முறைப்படியான வரிசையிலான குறியீடுகளையும் சொல்லப் போகிறேன்.(6)

வாய்மையை எவ்வாறு அடையலாம் என்பது குறித்தும் கேட்பது உனக்குத் தகும். ஓ! பாரதா, இவ்வுலகில் வாய்மையானது பதிமூன்று {13} வகைகளில் இருக்கிறது.(7) பாகுபாடின்மை, தற்கட்டுப்பாடு, {வன்மமின்மை [நல்லெண்ணம்]}, மன்னிக்கும்தன்மை, பணிவு, பொறை {தாங்கும் ஆற்றல்}, நற்பண்பு,(8) துறவு, தியானம், கண்ணியம், உறுதி, கருணை, தீங்கிழையாமை ஆகியன வாய்மையின் வடிவங்களாகும்[1]. ஓ! பெரும் ஏகாதிபதி, இவையே வாய்மையின் பதிமூன்று வடிவங்களாகும்.(9) வாய்மையானது, நிலையானதாகவும், அழிவில்லாததாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது. பிற அறங்களை எதிர்க்காத நடைமுறைகளின் மூலம் அஃது அடையப்படலாம் {எந்த தர்மத்திற்கும் விரோதமில்லாதது வாய்மை}. யோகத்தின் மூலமும் அஃது அடையப்படலம்.(10)

[1] கங்குலியில் 12 வகைகளே சொல்லப்பட்டிருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், "பாரத, எல்லா உலகங்களிலும் ஸத்யம் பதிமூன்று விதமாக அடையப்படுகிறது. அரசஸ்ரேஷ்டனே, உண்மை, ஸமதை, தமம், அமாத்ஸர்யம், க்ஷமை, லஜ்ஜை, திதிக்ஷை, அனஸூயை, த்யாகம், த்யானம், ஆர்யத்தன்மை, த்ருதி, எப்பொழுதும் தயை, அஹிம்ஸை என்று ஸத்யத்தின் உருவங்கள் பதின்மூன்றாகும்; ஸந்தேகமில்லை" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் 14 கூறப்படுகின்றன. ஸத்யமும், உண்மையும் ஒன்றெனக் கொண்டால் 13 ஆகும். பிபேக்திப்ராயின் பதிப்பில், "அனைத்து உலகங்களிலும், பதிமூன்று வகை உண்மைகள் இருக்கின்றன. பாகுபாடின்மையும், தற்கட்டுப்பாடும் உண்மை என்பதில் ஐயமில்லை. வன்மமின்மை, மன்னிக்கும்தன்மை, பணிவு, பொறுமை, பொறாமையின்மை, துறவு, தியானம், ஞானம், உறுதி, தொடர் பற்று மற்றும் தீங்கிழையாமை ஆகியவையும் அதிலடங்கும். இதில் சரியாக 13 குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விருப்பும் வெறுப்பும், காமமும் கோபமும் அழிவடையும்போது, எந்தப் பண்பின் விளைவால் ஒருவன் தனக்கும், தன் எதிரிக்கும் இடையிலும், தனக்கான நன்மைக்கும், தனக்கான தீமைக்கும் இடையில் மாற்றமில்லாத கண்ணுடன் காண இயன்றவனாகிறோனோ அதுவே பாகுபாடின்மை {ஸமதை} என்று அழைக்கப்படுகிறது.(11) அடுத்தவரின் பொருட்களை ஒருபோதும் விரும்பாமை, ஈர்ப்பு, பொறுமை, தன்னிடம் பிறர் கொள்ளும் அச்சங்களைத் தணிக்கும் வல்லமை, நோயிடம் எதிர்ப்புணர்வு[2] ஆகியவை அடங்கியதே தற்கட்டுப்பாடாகும் {தமமாகும்}. அறிவின் முலம் இஃதை {தற்கட்டுப்பாட்டை} அடையலாம்.(12) ஈகை பயில்வதில் அர்ப்பணிப்பு, அன்னைத்துக் கடமைகளையும் நோற்றல் ஆகியவை நல்லெண்ணம் {வன்மமின்மை / அமார்ஸர்யம்} என்று ஞானமுள்ளோரால் கருதப்படுகிறது. வாய்மையில் இடையறாத அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் ஒருவன் உலகளாவிய நல்லெண்ணத்தை {வன்மமின்மையை} அடைகிறான்.(13) மன்னிக்கும் மற்றும் மன்னிக்காத தன்மைகளைப் பொறுத்த வரையில், எந்தப் பண்பின் மூலம் மதிக்கத்தக்க நல்லவன் ஒருவன், ஏற்புடையதையும், ஏற்பில்லாததையும் தாங்கிக் கொள்வானோ, அதுவே மன்னிக்கும் தன்மை {க்ஷமை} என்று சொல்லப்படுகிறது. இந்த அறம் {மன்னிக்கும் தன்மை}, மெய் நடைமுறையின் மூலம் நன்கு அடையப்படுகிறது.(14) எந்த அறத்தின் விளைவால், ஒரு நுண்ணறிவு மிக்க மனதன், மனத்திலும், பேச்சிலும் அடக்கமுள்ளவனாக, பல நற்செயல்களைச் செய்து, பிறரின் நிந்தனையை ஒருபோதும் ஈட்டுவதில்லையோ அதுவே பணிவு {லஜ்ஜை} என்றழைக்கப்படுகிறது. அற உதவியின் மூலம் இஃது அடையப்படும்.(15)

[2] கங்குலியில் "நோயிடம் எதிர்ப்புணர்வு" என்றிருப்பது, கும்பகோணம் பதிப்பில் "கோபத்தை அடக்குவது" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பிலும் "கோபத்தைத் தணித்தல்" என்றிருக்கிறது.

அறத்திற்காகவும், பொருளுக்காவும் எந்த அறம் மன்னிக்கச் செய்யுமோ அதுவே பொறை {தாங்கும் ஆற்றல் / திதிக்ஷை} என்று அழைக்கப்படுகிறது. இது மன்னிக்கும் தன்மையின் ஒரு வடிவமே ஆகும். இது பொறுமையினால் அடையப்படுகிறது, இது மக்களைத் தன்னோடு இணைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.(16) பற்றுகளையும், உலகம் சார்ந்த போருட்கள் அனைத்தையும் கைவிடுவது துறவு {த்யாகம்} என்றழைக்கப்படுகிறது. ஒருவன் கோபம் மற்றும் வன்மத்தை விலக்காமல் ஒருபோதும் துறவை அடைய முடியாது.(17) எந்த அறத்தின் விளைவால் ஒருவன் விழிப்புடனும், கவனத்துடனும் அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்வானோ, அது நற்பண்பு {ஆர்யத்தன்மை} என்றழைக்கப்படுகிறது. இதற்குக் குறிப்பிட்ட வடிவமேதும் கிடையாது, தன்னலப் பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் இஃது அடங்கியிருக்கிறது.(18) எந்த அறத்தின் மூலம் ஒருவன் மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் மாற்றமில்லாதவனாக இருக்கிறானோ, அது மனோவுறுதி {த்ருதி} என்று அழைக்கப்படுகிறது. எந்த ஞானி தன் நன்மையை விரும்புவானோ, அவன் எப்போதும் இந்த அறத்தைப் பயில்வான் {மனோவுறுதியுடனிருப்பான்}.(19) ஒருவன் எப்போதும், மன்னிக்கும் தன்மையைப் பயில்பவனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்க வேண்டும். எந்த ஞானி, இன்பம், அச்சம், கோபம் ஆகியவைற்றைக் கைவிடுவதில் வெல்கிறானோ அவன் மனோவுறுதியை அடைவதில் வெல்கிறான்.(20) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில் எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் தீங்கிழையாமை {அஹிம்ஸை} மற்றும் அன்பு {கருணை / தயை}, கொடை ஆகியவையே நல்லோரின் அழிவில்லாக் கடமைகளாக இருக்கின்றன[3].(21)

[3] கும்பகோணம் பதிப்பில், "செய்கையாலும், மனத்தாலும், வாக்காலும் எல்லாப் பிராணிகளிடத்திலும் அனுக்கிரஹமும், தானமும் அஹிம்ஸ்யாகும் என்றிருக்கிறது. இதுவே சாதுக்களின் ஸனாதனமான தர்மம். பாரத, ஸத்யமென்னும் ஒரே லக்ஷணமுள்ள வெவ்வேறான இந்தப் பதிமூன்று ஸ்வரூபங்களும் ஸத்யத்தையே அடுத்திருக்கின்றன; ஸத்யத்தையே பெருமைப்படுத்துகின்றன" என்றிருக்கிறது.

வெளிப்படையாக இந்தப் பதிமூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாகத் தெரிந்தாலும், அவை வாய்மை {சத்தியம்} என்ற ஒன்றாகவே இருக்கின்றன. ஓ! பாரதா, இவை அனைத்தும் வாய்மையை ஆதரித்து, அதற்கு வலுவூட்டுகின்றன.(22) ஓ! ஏகாதிபதி, வாய்மையின் தகுதிகளை {சத்தியத்தின் புண்ணியங்களைத்} தீர்ப்பது இயலாததாகும். இந்தக் காரணங்களுக்காகவே பிராமணர்களும், பித்ருக்களும், தேவர்களும் வாய்மையைப் போற்றுகின்றனர்.(23) வாய்மையை {சத்தியத்தை} விட உயர்ந்த கடமையேதும் கிடையாது, பொய்மையைவிடப் பயங்கரப் பாவம் வேறேதும் கிடையாது. உண்மையில், அறத்தின் அடித்தளமாகவே வாய்மை இருக்கிறது. இதன் காரணமாக ஒருபோதும் எவனும் வாய்மையை அழிக்கக்கூடாது.(24) வாய்மையில் இருந்தே, தானங்களும், வேள்விக் கொடைகளும், மூன்று வகை அக்னிஹோத்திரங்களும், வேதங்களும், அறத்திற்கு வழிவகுக்கும் அனைத்தும் எழுகின்றன.(25) ஒரு காலத்தில் ஆயிரம் குதிரை வேள்விகளைத் தராசின் ஒரு தட்டிலும், வாய்மையை மறுதட்டிலும் வைத்த போது, ஆயிரம் குதிரை வேள்விகளை விட வாய்மையே கனமிக்கத்தாக இருந்தது" என்றார் {பீஷ்மர்}.(26)

சாந்திபர்வம் பகுதி – 162ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்