Friday, May 04, 2018

கொடூரன்! - சாந்திபர்வம் பகுதி – 164

A malevolent person! | Shanti-Parva-Section-164 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 34)


பதிவின் சுருக்கம் : கொடூரர்களின் இயல்புகளையும், குறியீடுகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...


A malevolent person! | Shanti-Parva-Section-164 | Mahabharata In Tamil

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நல்லோரை நான் கண்டதன் விளைவால் நல்லுறவு என்ன என்பதை நான் அறிவேன். இருப்பினும், ஓ! பாரதரே, தீங்கு செய்பவரையோ {கொடூரர்களையோ}, அவர்களது செயல்களின் இயல்பையோ நான் அறிந்ததில்லை.(1) உண்மையில் கொடூரச் செயல்களைச் செய்யும் தீய மனிதர்களை, முட்கள், குழிகள் மற்றும் நெருப்பைத் தவிர்ப்பது போல மக்கள் தவிர்க்கிறார்கள்.(2) ஓ! பாரதரே, தீங்கு செய்பவன் {கொடூரன்}, இம்மை மற்றம் மறுமை ஆகிய இரண்டிலும் (துன்பத்தில்) எரிவான் என்பது நிச்சயம் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஓ! குருகுலத்தவரே, உண்மையில் அத்தகையவர்களின் செயல்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(3)


[1] கும்பகோணம் பதிப்பில், "க்ரூரனாயிருப்பவன் இவ்வுலகிலும், இறந்தபின்னும் நிச்சயமாக எரிக்கப்படுகிறான். ஓ கௌரவ்யரே, ஆகையால், அந்த க்ரூரனுடைய நிச்சயமான தர்மத்தை நீர் சொல்ல வேண்டும்" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீமை விளைவிப்போர் {குரூரர்கள்} எப்போதும் தீய செயல்களைச் செய்பவர்களாகவும், அவற்றைச் செய்வதற்குத் தடுக்கப்பட முடியாத உணர்வைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பிறரைப் பழித்து, அவதூறு செய்வதில் ஈடுபடுவார்கள். தங்களுக்கு உரியவை கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவதாகத் தங்களை எப்போதும் கருதிக் கொள்வார்கள்.(4)

கொடூரன், தன் ஈகைச் செயல்களைத் தானே தற்பெருமை பேசுவான். அவன் மிக இழிந்தவனாவான். அவன் வஞ்சனை நிறைந்தவனாகவும், தந்திரம் நிரம்பியவனாகவும் இருப்பான். பிறருக்கு உரியவற்றை அவன் ஒருபோதும் கொடுக்கமாட்டான். அவன் ஆணவம் கொண்டவனாக இருப்பான். அவன் தீய தோழமையுடன் சேர்ந்து எப்போதும் தற்பெருமை நிறைந்தவனாக இருப்பான்[2].(5)

[2] கும்பகோணம் பதிப்பில், "தான் கொடுத்ததைப் புகழ்ந்து பேசுகிறவனும், த்வேஷத்தைச் செய்கிறவனும், இகழ்ந்த கார்யங்களைச் செய்கிறவனும், ஸ்நேஹத்தைக் காண்பித்து வஞ்சிப்பவனும் (ஸாமர்த்திமிருந்தும்) வெளிக்கு ஏழைத்தனத்தைக் கொண்டாடுகிறவனுமாக இருப்பான்" என்றிருக்கிறது.

தான் சந்திக்கும் அனைவரையும் ஐயுற்று, அவர்களிடம் அச்சமடைபவனாக இருப்பான். அவன் மூட புத்தி கொண்டவனாக இருப்பான். அவன் கஞ்சத்தனத்துடன் இருப்பான். அவன் தன் உதவியாளர்களைப் புகழ்வான். காடுகளில் ஓய்ந்திருக்கும் துறவிகள் அனைவரிடமும் இயல்புக்கு மாறான பகைமையையும், வெறுப்பையும் வளர்ப்பான்.(6)

அவன் பிறருக்குத் தீங்கிழைத்து மகிழ்வான். அவன், பிறரின் தகுதிகளையும், குற்றங்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் முற்றான அலட்சியத்துடன் இருப்பான். அவன் பொய்மை நிறைந்தவனாக இருப்பான். அவன் நிறைவில்லாதவனாக இருப்பான். அவன் ஆதீத பேராசையுடையவனாக எப்போதும் கொடூரச் செயல்களையே செய்வான்.(7)

அத்தகைய மனிதன், பிறர் அனைவரையும் தன்னைப் போலவே {கொடூரர்களாக} நினைத்துக் கொண்டு, ஒருவரையும் ஒருபோதும் நம்பாமல், அறம் சார்ந்தவர்களையும், சாதனையாளர்களையும் ஒரு பூச்சியைப் போல மதிப்பான்.(8)

அத்தகைய மனிதன் {கொடூரன்}, பிற மக்கள் மீது சாட்டப்படும் குற்றங்கள் ஐயுறத்தக்க அளவில் இல்லையெனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அறிவித்துக் கொண்டே இருப்பான். எனினும், அத்தகைய குற்றங்களில் தானே களங்கமுடையவனாக இருப்பினும், அவற்றில் இருந்து தான் அறுவடை செய்யும் பயன்களின் காரணமாக, அவற்றைக் குறித்துச் சிறிதும் குறிப்பிடாமல் இருப்பான்.(9)

தனக்கு நன்மை செய்தவனை, புத்திசாலித்தனத்துடன் வஞ்சித்து அவனை ஏமாளியாகக் கருதுவான். நன்மை செய்தவனுக்கு எந்தக் காலத்திலாவது எந்தக் கொடையாவது கொடுத்திருந்தால் அவன் வருத்தத்தால் நிறைவான்.(10)

விருப்பம் நிறைந்த கண்களுடன் மனிதர்கள் நின்று கொண்டிருந்தாலும் கூடத் தனிமையில் அமைதியாக உண்ணத்தக்கவற்றையும், பானங்களையும், பிறவகை உணவுகளையும் உண்பவனைக் கொடூரனெனவும், தீயோனெனவும் அறிவாயாக.(11)

மறுபுறம், எவன் {உணவின்} முதல் பகுதியைப் பிராமணர்களுக்குக் காணிக்கையளித்து, எஞ்சியவற்றை நண்பர்கள், சொந்தங்கள் ஆகியவர்களுடன் பகிர்ந்து உண்கிறானோ, அவன் மறுமையில் பேரின்ப நிலையையும், இம்மையில் முடிவிலா மகிழ்ச்சியையும் அடைவான்.(12)

ஓ! பாரதர்களின் தலைவா, நான் இப்போது தீய மற்றும் கொடூர மனிதனின் குறியீடுகளைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன். அத்தகையவன் எப்போதும் ஞானியால் தவிர்க்கப்பட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(13)

சாந்திபர்வம் பகுதி – 164ல் உள்ள சுலோகங்கள் : 13

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்