Wednesday, May 09, 2018

ராஜதர்மன் என்ற நாடீஜங்கன்! - சாந்திபர்வம் பகுதி – 169

Rajdharma alias Nadijangha! | Shanti-Parva-Section-169 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 39)


பதிவின் சுருக்கம் : வேடனான இருந்த கௌதமன் என்ற பிராமணன், பெருங்கடலை நோக்கிச் சென்றது; வழியில் அவன் கண்ட அற்புதங்கள்; காட்டுக்கு மத்தியில் ஓரிடத்தில் ஓர் அழகிய ஆலமரத்தைக் கண்டது; அதன் அடியில் உறங்கியது; ராஜதர்மன் என்ற பெயரைக் கொண்ட நாரை அங்கே வந்தது; தன் வசிப்பிடத்தில் விருந்தினராக அன்றிரவு தங்குமாறு கௌதமனைக் கேட்டுக் கொண்ட தெய்வீக நாரை...


Rajdharma alias Nadijangha! | Shanti-Parva-Section-169 | Mahabharata In Tamil
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாராதா, அந்த இரவு கடந்து, அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் அந்த வீட்டை விட்டைச் சென்றதும், தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வந்த கௌதமன், கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.(1) வழியில் அவன் கடற்பயணங்களை மேற்கொள்ளும் சில வணிகர்களைக் கண்டான். அவன் {பிராமணன்} அந்த வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(2) ஓ! மன்னா, அந்தப் பெரிய கூட்டம் ஒரு மலை பள்ளத்தாக்கைக் கடக்கும்போது ஒரு மதங்கொண்ட யானையால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) எவ்வாறோ பேராபத்தில் இருந்து தப்பிய அந்தப் பிராமணன் {கௌதமன்}, எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கி ஓடினான்.(4) {வணிகக்) கூட்டத்திடம் இருந்து பிரிந்து அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு வந்த அவன், ஒரு கிம்புருஷனைப் போலக் காட்டில் தனியொருவனாகத் திரியத் தொடங்கினான்[1].(5)


[1] "கிம்புருஷன் என்பது பாதி மனிதன், பாதிக் குதிரையைக் கொண்ட உயிரினமாகும். உடல் குதிரையைப் போன்றும், முகம் மனிதனைப் போன்றுமிருக்கும் என்று நம்பப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இறுதியாகப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் சாலையை அடைந்த அவன், இனிமை நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்ததுமான ஒரு தெய்வீகக் காட்டை அடையும் வரை பயணித்தான்.(6) வருடம் முழுவதும் மலர்களாலும், கனிகளாலும் பூத்துக் குலுங்கும் மாமரங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. (சொர்க்கத்தின்) நந்தனத் தோப்புகளுக்கு ஒப்பான அதில், யக்ஷர்களும், கின்னரர்களும் வசித்து வந்தனர்.(7) சாலங்கள், பனைமரங்கள், தமாலங்கள் {வெள்வேல் மரங்கள்}, {அரசு, ஆல், அகில்}, கரும் கற்றாழைகள், பெரும் சந்தன மரங்கள் ஆகியவற்றால் அஃது {அந்தக் காடு} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(8) இனிமைநிறைந்த அந்த மேட்டுச் சமவெளியில் பல்வேறு வகைகளிலான மணங்களுடன் கூடிய நறுமணப் பொருட்களைக் கண்டான், முதன்மையான இனங்களைச் சேர்ந்த பறவைகளின் இனிய மெல்லிசைகளையும் கேட்டான்.(9) பாருண்டங்கள்[2] என்றழைக்கப்படுபவையும், மனித முகங்களுக்கு ஒப்பான முகங்களைக் கொண்டவையும், புலிங்கங்கள்[3] என்று அழைக்கப்படுபவையும், மலைப்பகுதிகள் மற்றும் கடற்பகுதிகளைச் சேர்ந்த சிறகு படைத்த பிற காற்றுவாசிகள் {பறவைகள்} அங்கே இனிமையான அதிர்குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தன.(10)

[2] இறைச்சி உண்ணக்கூடியதும், இரு தலைகளைக் கொண்டதுமான ஒரு தொன்ம காலப் பறவையாகும் இந்தப் பாருண்டம் என்றும்,

[3] புலிங்கங்கள் என்பன பிணந்தின்னும் பறவைகள், அவை இறைச்சி உண்ணும் பிற விலங்குகளின் வாயில் சிக்கியிருக்கும் இறைச்சித் துண்டுகளை எடுத்து உண்பவை என்றும் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் தெரிவிக்கிறார்.

இயற்கை இசைக்கலைஞர்களான இந்த இனிமை நிறைந்த அழகான இசையைக் கேட்டுக் கொண்டே கௌதமன் அந்தக் காட்டின் வழியே சென்றான்.(11) ஓ! மன்னா, அப்படிச் செல்லும் வழியில் அவன், தங்க மணல்களால் மறைக்கப்பட்டதும், அழகில் சொர்க்கத்திற்கே இணையானதுமான சமதளம் கொண்டதுமான ஓர் இனிமையான இடத்தைக் கண்டான்.(12) அந்த நிலத்தில், கோளவடிவமான உச்சியைக் கொண்டதும், பெரியதுமான ஓர் அழகிய ஆல மரத்தைக் கண்டான். தாய்மரத்தோடு தொடர்ந்து சென்ற பல கிளைகளைக் கொண்ட ஆலமரமானது, அழகிலும், வடிவத்திலும் சமவெளியில் அமைக்கப்பட்ட ஒரு குடையைப் போலத் தெரிந்தது.(13) அந்த மகத்தான மரத்தின் கீழிருந்த இடமானது, பெரும் நறுமணமிக்கச் சந்தன நீரால் நனைக்கப்பட்டிருந்தது. பேரழகைக் கொண்டதும், சுற்றிலும் இனிமையான மலர்களால் சூழப்பட்டதுமான அந்த இடம், பெரும்பாட்டனின் சபையைப் போலவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.(14) மலர்ந்திருக்கும் மரங்கள் நிறைந்ததும், புனிதமானதும், தேவர்களின் வசிப்படத்தைப் போலத் தெரிந்ததுமான அந்த அழகான, ஒப்பற்ற இடத்தைக் கண்ட கௌதமன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(15)

அங்கே வந்த அவன், மிகவும் நிறைவான இதயத்துடன் கீழே அமர்ந்தான். ஓ! குந்தியின் மகனே, அங்கே அவன் அமர்ந்திருந்தபோது, வனப்பும், மங்கலமும் மிக்க ஓர் இனிய தென்றலானது, ஓ! ஏகாதிபதி, பல்வேறு வகை மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடியும், கௌதமனின் அங்கங்களுக்குக் குளிர்வூட்டியபடியும், தெய்வீக இன்பத்தில் அவனை நிறைத்தபடியும் அங்கே வீசத் தொடங்கியது.(16,17) நறுமணமிக்கத் தென்றலால் தாலாட்டப்பட்ட அந்தப் பிராமணன், புத்துணர்வை அடைந்தான், மேலும், அவன் உணர்ந்த இன்பத்தின் விளைவால் அவன் விரைவில் உறக்கத்திலும் வீழ்ந்தான். அதே வேளையில் சூரியன் அஸ்த மலைகளுக்குப் பின்னால் மறைந்தான்.(18) அந்த ஒளிக்கோளானவன், மேற்கிலிருக்கும் தன் அறைகளுக்குள் நுழைந்து, மாலை சந்தி ஏற்பட்ட போது, தன் இனத்தில் முதன்மையான ஒரு பறவையானவன், பிரம்மனின் உலகங்களில் இருந்து தன் இல்லமான அந்த இடத்திற்குத் திரும்பினான்.(19) நாடீஜங்கன் என்ற பெயரைக் கொண்ட அவன், அது படைப்பாளனின் {பிரம்மனின்} அன்புக்குரிய நண்பனாக இருந்தான். பெரும் ஞானம் கொண்டவனும், (தவசி) கசியபரின் மகனுமான அவன், நாரைகளின் இளவரசனாக இருந்தான்.(20) மேலும் அவன், பூமியில் ராஜதர்மன் என்ற பெயரில் பரந்து அறியப்பட்டிருந்தான். உண்மையில், அவன் பூமியில் புகழிலும், ஞானத்திலும் அனைவரையும் விஞ்சியவனாக இருந்தான். தெய்வீக கன்னிகையின் மகனும், பேரழகும், கல்வியும் கொண்டவனான அவன், காந்தியில் ஒரு தேவனுக்கு ஒப்பானவனாக இருந்தான்.(21) சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அவன் அணிந்திருந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தெய்வீகப் பெண்ணின் பிள்ளை அழகில் சுடர்விடுபவனாகத் தெரிந்தான்.(22) அந்த இடத்திற்கு வந்த பறவையைக் கண்ட கௌதமன் ஆச்சரியத்தால் நிறைந்தான். பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அந்தப் பிராமணன், அவனைக் கொல்ல விரும்பி அந்தப் பறவையானவன் மீது தன் கண்களைச் செலுத்தத் தொடங்கினான்.(23)

ராஜதர்மன் {என்ற அந்த நாரையானவன்}, "ஓ! பிராமணரே, உமக்கு நல்வரவு. நான் கொண்ட நற்பேற்றினாலேயே இன்று நீர் என் வசிப்பிடத்திற்கு வரப் பெற்றேன். சூரியன் மறைந்துவிட்டான். மாலை சந்தியும் வந்துவிட்டது.(24) என் வசிப்பிடத்திற்கு வந்திருக்கும் நீர், இன்று என் அன்புக்குரிய சிறந்த விருந்தினராக இருக்கப் போகிறீர். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படியான என் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு, நாளை காலையில் நீர் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்" என்றான்.(25)

சாந்திபர்வம் பகுதி – 169ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்