Thursday, May 10, 2018

ராட்சச மன்னன் விருபாக்ஷன்! - சாந்திபர்வம் பகுதி – 170

The Rakshasa king Virupaksha! | Shanti-Parva-Section-170 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 40)


பதிவின் சுருக்கம் : கௌதமனுக்கு உண்ண மீன்களும், படுக்க மென்மையான படுக்கையும் கொடுத்த ராஜதர்மன் என்ற நாரை; செல்வமீட்டும் வழியைச் சொன்ன ராஜதர்மன்; ராட்சச மன்னன் விருபாக்ஷனைக் காணச் சென்ற கௌதமன்; செல்வச்செழிப்பில் இருந்த மேருவ்ரஜ நகரத்தைக் கண்ட கௌதமன்...


The Rakshasa king Virupaksha! | Shanti-Parva-Section-170 | Mahabharata In Tamil
The Rakshasa king Virupaksha! | Shanti-Parva-Section-170 | Mahabharata In Tamil
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமன், ஆச்சரியத்தால் நிறைந்தான். அதேநேரத்தில் பெரும் ஆவலை உணர்ந்த அவன், ராஜதர்மனிடம் {நாரையிடம்} இருந்து பார்வை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.(1)


ராஜதர்மன் {என்ற நாரையானவன்}, "ஓ! பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக்ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமக்கு நல்வரவு" என்றான்".

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி விருந்தோம்பலை அளித்த அந்த நாரையானவன், சுற்றிலும் கிடந்த சால மலர்களால் ஒரு சிறந்த படுக்கையை அமைத்துக் கொடுத்தான். மேலும் அவன், பாகீரதியின் ஆழமான நீரில் இருந்து பிடிக்கப்பட்ட பல பெரிய மீன்களையும் அவனுக்குக் கொடுத்தான்.(4) உண்மையில், அந்தக் கசியபரின் மகன் {நாரையான ராஜதர்மன்}, தன் விருந்தினனான கௌதமன் ஏற்றுக் கொள்வதற்காகச் சுடர்மிக்க நெருப்பையும், குறிப்பிட்ட பெரிய மீன்களையும் கொடுத்தான்.(5) அந்தப் பிராமணன் உண்டு, நிறைவடைந்த பிறகு, தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்தப் பறவையானவன், களைப்பு நீங்க தன் சிறகுகளால் அவனுக்கு விசிறத் தொடங்கினான்.(6)

தன் விருந்தினன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட அவன் {ராஜதர்மன்}, அவனது குடிவழி குறித்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் {கௌதமன்}, "நான் கௌதமன் என்ற பெயரால் அறியப்படும் ஒரு பிராமணனாவேன்" என்றான் சொல்லி அமைதியடைந்தான்.(7)

அந்தப் பறவையானவன், இலைகளாலும், நறுமணமிக்க மலர்கள் பலவற்றாலுமான மென்மையான படுக்கையைத் தன் விருந்தினனுக்குக் கொடுத்தான். கௌதமன் அதில் தன்னைக் கிடத்திக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(8) கௌதமன் அவ்வாறு தன்னைக் கிடத்திக் கொண்ட போது, கடமைகளின் அறிவில் யமனுக்கு ஒப்பானவனான கசியபரின் நானலமிக்க மகன் {ராஜதர்மன்}, அவன் அங்கே வந்ததற்கான காரணத்தைக் குறித்துக் கேட்டான்.(9)

கௌதமன் {நாரையிடம்}, "ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, நான் ஏழ்மைமிக்கவன். செல்வம் ஈட்டுவதற்காக நான் கடலுக்குச் செல்ல விரும்புகிறேன்" என்று பதிலுரைத்தான்.(10)

கசியபரின் மகன் உற்சாகமாக, "நீர் கவலையேதும் கொள்வது உமக்குத் தகாது. ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் வெற்றியடைந்து, உடைமைகளுடன் இல்லம் திரும்புவீர்.(11) மரபுரிமை, நற்பேறு அல்லது தேவர்களின் உதவி மூலமான திடீர் உடைமையீட்டல், உழைப்பு, நண்பர்களின் உதவி, அல்லது அன்பு ஆகிய நான்கு வழிமுறைகளின் மூலம் ஒருவன் செல்வத்தை ஈட்டலாம் என்று தவசி பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார்.(12) நான் உமது நண்பனாகியிருக்கிறேன். நான் உம்மிடம் நல்லெண்ணங்களை வளர்க்கிறேன். எனவே, நீர் செல்வமடைவதில் வெல்லும் வழியில் நான் முயற்சி செய்வேன்" என்றான் {நாரையான ராஜதர்மன்}.(13)

தன் விருந்தினன் படுக்கையிலிருநு உற்சாகமாக எழுவதைக் கண்ட அந்தப் பறவையானவன், அவனிடம் {கௌதமனிடம்}, "ஓ! இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அவனிடம் செல்வீராக. என் வேண்டுகோளால் துண்டப்படும் அந்தத் தலைவன், நீர் விரும்பும் அளவுக்குச் செல்வத்தை உமக்குக் கொடுப்பான்" என்றான்.(16)

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமன், வழியில் அமுதம் போன்ற இனிமையான கனிகளை நிறைவாக உண்டு கொண்டே அந்த இடத்திற்கு உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.(17) சாலை நெடுகிலும் வளர்ந்திருந்த சந்தனம், அகில், இலவங்க மரங்களைக் கண்டு, அவற்றின் புத்துணர்வு மிக்க நிழல்களை அனுபவித்தபடியே அந்தப் பிராமணன் விரைவாகச் சென்றான்.(18) பிறகு அவன் {கௌதமன்} மேருவ்ரஜம் என்ற பெயரில் அறியப்பட்ட நகரத்தை அடைந்தான். அது கற்களால் செய்யப்பட்ட பெரிய கட்டட முகப்புகளையும், அதே பொருளாலான {கற்களாலான} உயர்ந்த சுவர்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் அஃது அகழியால் சூழப்பட்டிருந்தது, மேலும் மதில்களில் பெரிய பாறைத் துண்டுகள் மற்றும் பல்வேறு வகைகளிலான இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன.(19) ஓ! மன்னா, தன் நண்பனால் (நாரையால்) தன்னிடம் விருந்தினனாக அனுப்பப்பட்டவன் அவன் என்பதைப் பெரும் நுண்ணறிவு கொண்ட ராட்சசத் தலைவன் {விருபாக்ஷன்} விரைவில் அறிந்து கொண்டான். அந்தத் தலைவன் கௌதமனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.(20)

அப்போது, ஓ! யுதிஷ்டிரா, அந்த ராட்சசர்களின் மன்னன், தன் பணியாட்களிடம், "வாயிலில் இருந்து கௌதமர் இங்கே விரைவில் கொண்டுவரப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டான். மன்னனின் ஆணையின் பேரில், பருந்துகளைப் போல வேகமிக்கக் குறிப்பிட்ட மனிதர்கள், தங்கள் ஆட்சியாளனின் அற்புத அரண்மனையில் இருந்து வெளியே வந்து, கௌதமன் இருந்த வாயிலுக்குச் சென்றனர்.(22)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த அரசத் தூதுவர்கள், அந்தப் பிராமணனிடம், "விரைவாக வாரும், மன்னன் உம்மைக் காண விரும்புகிறார்.(23) விருபாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட பெரும் துணிவுமிக்க ராட்சசர்களின் மன்னனைக் குறித்து நீர் கேள்விப்பட்டிருப்பீர். அவரே உன்னை உடனடியாகக் காண விரும்புகிறார். தாமதிக்காதீர், விரைவாக வாரும்" என்று சொன்னார்கள்.(24)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், ஆச்சரியத்தால் தன் களைப்பை மறந்து அந்தத் தூதுவர்களுடன் ஓடினான். அந்த நகரின் பெருஞ்செழிப்பைக் கண்ட அவன் {கௌதமன்} ஆச்சரியத்தால் நிறைந்தான்.(25) ராட்சசர்களின் மன்னனைப் பார்க்க வேண்டி, தூதுவர்களின் துணையுடன் அம்மன்னனின் அரண்மனைக்குள் விரைவாக நுழைந்தான்" {என்றார் பீஷ்மர்}.(26)

சாந்திபர்வம் பகுதி – 170ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்