Friday, May 11, 2018

கௌதமகதி! - சாந்திபர்வம் பகுதி – 172

The end of Gautama! | Shanti-Parva-Section-172 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 42)


பதிவின் சுருக்கம் : திட்டம்போட்டபடியே ராஜதர்மனைக் கொன்று, இறைச்சியை வறுத்து பயண வழிக்கான உணவாக எடுத்துச் சென்ற கௌதமன்; ராஜதர்மனைக் காணாது வருந்திய விருபாக்ஷன்; ராஜதர்மனின் கதியை உணர்ந்து கௌதமனைத் துரத்திப் பிடித்த ராட்சசர்கள்; கௌதமனை உண்ண மறுத்த ராட்சசர்கள்; அவனைத் துண்டுகளாக வெட்டி கள்வர்களுக்குக் கொடுத்தது; நன்றியற்றவனின் இறைச்சியை உண்ண மறுத்த தன்னின உன்னிகள்...


The end of Gautama! | Shanti-Parva-Section-172 | Mahabharata In Tamil
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தப் பறவைகளின் இளவரசன் {நாரையான ராஜதர்மன்}, அங்கே அந்த ஆலமரத்தடியில் தன் விருந்தினனின் பாதுகாப்புக்காகச் சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட பெரும் நெருப்பை மூட்டி வைத்திருந்தான்[1].(1) மறுபுறத்தில் அந்தப் பறவையானவன் நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தான். நன்றியற்றவனும் தீய ஆன்மா கொண்டவனுமான அந்த இழிந்தவன் {கௌதமன்}, விருந்தோம்பி உறங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கொல்லத் தயாரானான்.(2) நம்பிக்கைநிறைந்த அந்தப் பறவையைச் சுடர்மிக்க நெருப்பின் துணையுடன் கொன்று, தான் செய்தது ஒரு பாவம் என்பதை ஒருபோதும் நினைக்காமல் அவனைக் கொன்றதும் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(3) இறகுகளை உரித்தெடுத்து அவன், அந்த நெருப்பிலேயே இறைச்சியை வறுத்தான். பிறகு தான் கொண்டு வந்த தங்கத்தோடு சேர்த்து அதையும் எடுத்துக் கொண்ட அந்தப் பிராமணன் அந்த இடத்தில் இருந்து வேகமாக ஓடினான்.(4)


[1] "அக்னி அல்லது நெருப்பு என்று சொல்லப்படும் தேவன், வாயுவை (காற்று தேவனை) தன் சாரதியாகக் கொண்டவனாவான். இந்த நாள்வரையில், இந்தியாவிலுள்ள பயணிகள் அனைவரும் காட்டிலோ, குடியிருப்புகள் இல்லாத இடங்களிலோ இரவைக் கழிக்க நேரும்போது, பெரும் நெருப்பை மூட்டிவிடுகிறார்கள். அத்தகைய நெருப்புகள் காட்டு வலங்குகளை அச்சுறுத்துவதில் வெல்கின்றன. உண்மையில், பசியுடன் திரியும் புலிகள் கூட, சுடர்மிக்க நெருப்பு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அணுகுவதில்லை" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

அடுத்த நாள், ராட்சச மன்னன் விருபாக்ஷன் தன் மகனிடம், "ஐயோ, ஓ! மகனே, நான் இன்று பறவைகளில் சிறந்த ராஜதர்மனைக் காணவில்லை.(5) ஒவ்வொரு நாள் காலையும் அவன் பெரும்பாட்டனை {பிரம்மனைத்} துதிப்பதற்காகப் பிரம்மலோகம் செல்வான். திரும்பும்போது, என்னைச் சந்திக்காமல் ஒருபோதும் அவன் சென்றதில்லை.(6) அவன் என் வசிப்பிடத்திற்கு வராமலேயே இரண்டு காலைகளும், இரண்டு இரவுகளும் கடந்துவிட்டன. எனவே, என் மனம் அமைதியடையவில்லை. என் நண்பனைக் குறித்து விசாரிக்க வேண்டும். இங்கே வந்த கௌதமன், வேத கல்வியற்றவனும், பிராமணக் காந்தியில்லாதவனுமாவான். அவன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான். அந்த இழிந்த பிராமணன் ராஜதர்மனைக் கொன்றுவிட்டான் என நான் பெரிதும் அஞ்சுகிறேன்.(8) தீய நடைமுறைகளையும், தீ அறிவும் கொண்ட அவனை, அவன் வெளிப்படுத்திய குறிப்புகளின் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். கருணையற்றவனும், கொடூரனும், கடுமுகம் கொண்டவனும், தீயவனுமான அந்த மனிதர்களில் இழிந்தவன் ஒரு கள்வனைப் போன்றவனாவான். அந்தக் கௌதமன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். இந்தக் காரணத்தால் என் இதயம் மிகவும் கவலை கொள்கொள்கிறது.(9) எனவே ஓ! மகனே, பெரும் வேகத்துடன் ராஜதர்மனின் வசிப்பிடத்திற்குச் சென்று, தூய ஆன்மா கொண்ட அந்தப் பறவையானவன் இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை உறுதி செய்வாயாக. தாமதிக்காதே" என்றான்{விருபாக்ஷன்}.(10)

இவ்வாறு தன் தந்தையால் சொல்லப்பட்ட அந்த இளவரசன், பிற ராட்சசர்களின் துணையுடன் அங்கிருந்து பெரும் வேகத்தில் சென்றான். அந்த ஆலமரத்தடியை அடைந்த அவன், ராஜதர்மனின் எஞ்சிய பாகங்களைக் கண்டான்.(11) நுண்ணறிவுமிக்க ராட்சசர்களின் மன்னனுடைய மகன் துயரத்தால் வெகுவாக அழுது, கௌதமனைப் பிடிப்பதற்காகத் தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி வெகு வேகமாக ஓடினான்.(12) வெகு தொலைவிற்குச் செல்லும் முன்பே ராட்சசர்கள் அந்தப் பிராமணனைப் பிடித்து, இறகுகள், எலும்புகள் மற்றும் கால்களற்ற ராஜதர்மனின் உடலைக் கண்டார்கள்.(13) சிறைபிடிக்கப்பட்டவனைக் கூட்டிக் கொண்டு பெரும் வேகத்தோடு மேருவ்ரஜத்திற்குத் திரும்பி அந்த ராட்சசர்கள், ராஜதர்மனின் சிதைந்த உடலையும், நன்றியற்றவனும், இழிந்த பாவியுமான கௌதமனையும் மன்னனுக்குக் காட்டினார்கள்.(14) தன் நண்பனின் எஞ்சிய {உடல்} பாகங்களைக் கண்ட மன்னன், தன் அமைச்சர்கள் மற்றும் புரோஹிதருடன் சேர்ந்து உரக்க அழத் தொடங்கினான். உண்மையில், அவனுடைய வசிப்பிடத்தில் கேட்கப்பட்ட ஓலம் பேரொலிமிக்கதாக இருந்தது.(15,16)

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ராட்சச மன்னனின் மொத்த நகரமும் துயரத்தில் ஆழ்ந்தது. அப்போது மன்னன் தன் மகனிடம், "இந்த இழிந்த பாவி கொல்லப்பட வேண்டும். இங்கே இருக்கும் ராட்சசர்கள் இவனது இறைச்சியை மகிழ்ச்சியாக உண்ணட்டும்.(17) பாவச் செயல்கள், பாவம் நிறைந்த பழக்கவழக்கங்கள், பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், பாவத்திற்குப் பழக்கப்பட்டவனுமான இந்த இழிந்தவன் உங்களால் கொல்லப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்றான்.(18)

ராட்சச மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பயங்கர ஆற்றலைக் கொண்டவர்களான ராட்சசர்கள் பலர், அந்தப் பாவியின் இறைச்சியை உண்பதில் தங்களுக்குள்ள விருப்பமின்மையைத் தெரிவித்தனர்.(19) உண்மையில் அந்த இரவு உலாவிகள் தங்கள் மன்னனிடம், "இந்த இழிந்த மனிதனை கள்வர்களுக்குக் கொடுத்துவிடுவீராக" என்றனர்.(20) மேலும் அவர்கள் தங்கள் மன்னனுக்குத் தலைவனங்கி, "பாவம் நிறைந்த இந்த இழிந்தவனை எங்களுக்கு உணவாகக் கொடுப்பது உமக்குத் தகாது" என்றனர்.(21)

மன்னன் அவர்களிடம், "அப்படியே ஆகட்டும். இந்த நன்றியற்ற அற்பனை, தாமதமில்லாமல் கள்வர்களுக்குக் கொடுப்பீராக" என்றான்.(22)

இவ்வாறு சொல்லப்பட்டவர்களும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் தரித்தவர்களுமான அந்த ராட்சசர்கள் அந்த இழிந்த அற்பனை துண்டுகளாக வெட்டி அவற்றைக் கள்வர்களுக்குக் கொடுத்தனர்.(23) எனினும், அந்தக் கள்வர்களும், அந்த இழிந்த மனிதனின் இறைச்சியை உண்ண மறுத்துவிட்டனர். தன்னின உன்னிகளாக {மனித இறைச்சி உண்பவர்களாக} இருந்தாலும் அவர்கள் {அந்தக் கள்வர்கள்}, அந்த நன்றியற்ற மனிதனை உண்ணவில்லை.(24) ஓ! மன்னா, பிராமணனைக் கொன்றவன், மதுபானம் பருகியவன், களவாடியவன், நோன்பில் இருந்து விழுந்தவன் ஆகியோருக்கும் பாவக்கழிப்பு உண்டு, ஆனால் ஒரு நன்றியற்றவனுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(25) எந்தக் கொடூரமான மனிதன், ஒரு நண்பனுக்குத் தீங்கிழைத்து, நன்றியற்றவனாகிறானோ, அந்தத் தீயவனைத் தன்னின உன்னிகளோ, பிணந்தின்னிப் புழுக்களோ கூட உண்பதில்லை" என்றார் {பீஷ்மர்}.(26)


சாந்திபர்வம் பகுதி – 172ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்