Friday, May 11, 2018

நல்லோர் இயல்பு! - சாந்திபர்வம் பகுதி – 173

The nature of the wise! | Shanti-Parva-Section-173 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 43)


பதிவின் சுருக்கம் : ஈமச்சிதை வளர்த்து தன் நண்பனுக்குரிய இறுதி சடங்குகளைச் செய்த விருபாக்ஷன்; வானத்தில் தோன்றிய சுரபி; அமுதப் பொழிவால் உயிர்பெற்ற ராஜதர்மன்; கௌதமனை உயிர்மீட்க வேண்டியது; நரகத்தில் மூழ்கிய கௌதமன்...


The nature of the wise! | Shanti-Parva-Section-173 | Mahabharata In Tamil
The nature of the wise! | Shanti-Parva-Section-173 | Mahabharata In Tamil
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறகு அந்த ராட்சச மன்னன் {விருபாக்ஷன்}, அந்த நாரைகளின் இளவரசனுக்காக {ராஜதர்மனுக்காக} ஓர் ஈமச்சிதையை ஏற்படுத்தி, தங்கம், ரத்தினங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றால் அஃதை அலங்கரித்தான்.(1) அந்தப் பறவைகளின் இளவரசனுடன் {ராஜதர்மனுடன்} கூடிய அதற்கு {அந்தச் சிதைக்கு} நெருப்பிட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்களின் தலைவன் {விருபாக்ஷன்}, விதிப்படி தன் நண்பனுக்குச் {ராஜதர்மனுக்குச்} செய்ய வேண்டிய ஈமக்கடனக்குரிய சடங்குகளைச் செய்தான்.(2) அந்த நேரத்தில், தக்ஷனின் மகளான மங்கலமான {பசுவான} சுரபி தேவி அந்தச் சிதை அமைக்கப்பட்ட இடத்திற்கு மேலே வானத்தில் தோன்றினாள். அவளுடைய மார்புகள் பால் நிறைந்தவையாக இருந்தன {அவளுடைய மடி பால் நிறைந்ததாக இருந்தது}[1].(3) ஓ! பாவமற்ற ஏகாதிபதி, அவளுடைய வாயிலிருந்து பாலுடன் கலந்த நுரையானது ராஜதர்மனின் ஈமச்சிதையில் விழுந்தது.(4) அதன் மூலம் அந்த நாரைகளின் இளவரசன் {ராஜதர்மன்} மீண்டும் உயிர்பெற்றான். அவன் எழுந்து, ராட்சசர்களின் மன்னனான தன் நண்பன் விருபாக்ஷனிடம் சென்றான்[2].(5)


[1] "சுரபி என்பவள் தவசி தக்ஷனுக்குப் பிறந்த தெய்வீகப் பசுவாவாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் சுரபியைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் சுரபியைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தாலும், மடிநிறைந்த பால் குறித்த வர்ணனை ஏதும் இல்லை.

[2] கும்பகோணம் பதிப்பில், "கொக்குகளுக்கு அரசனான (அந்தக்) கொக்கானது தேவனான இந்திரனுடைய வசனத்தால் அந்த இந்திரனாலேயே அமிருதத்தால் நனைக்கப்பட்டுத் திரும்பவும் உயிருள்ளதாகச் செய்யப்பட்டது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கங்குலியின் பதிப்பில் உள்ளதைப் போலவே சுரபியின் வாயிலிருந்து பாய்ந்த பால் மற்றும் நுரையின் மூலம் ராஜதர்மன் உயிர்த்தெழுந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் தேவர்களின் தலைவனே {இந்திரனே} விருபாக்ஷனின் நகரத்திற்கு வந்தான். ராட்சச மன்னனிடம் பேசிய இந்திரன், "நற்பேற்றாலேயே நீ இந்த நாரைகளின் இளவரசனுடைய உயிரை மீட்டாய்" என்றான்.(6) பிறகு தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மனுக்குப் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} சாபம் கிடைத்த பழங்கதையை விருபாக்ஷனுக்குச் சொன்னான்.(7) மன்னனிடம் {விருபாக்ஷனிடம்} பேசிய அவன் {இந்திரன்}, "ஓ! ஏகாதிபதி {விருபாக்ஷனே}, ஒரு காலத்தில் இந்த நாரைகளின் இளவரசன், பிரம்மலோகத்தில் (இவனது வரவு எதிர்பார்க்கப்பட்டபோது) வரவில்லை. கோபமடைந்த பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த நாரைகளின் இளவரசனிடம்,(8) "இன்று இந்த அற்ப நாரை என் சபைக்கு வராததால், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் (பூமியை விட்டு அகலும் வகையில்) விரைவில் இறப்பான்"[3] என்றார்.(9) பெரும்பாட்டனின் இந்த வார்த்தைகளின் விளைவாலேயே, நாரைகளின் இளவரசன், கௌதமனால் கொல்லப்பட்டாலும், அமுதத்தில் உடல் நனைந்ததன் மூலம் மீண்டும் உயிரை அடைந்தான்" என்றான் {இந்திரன்}.(10)

[3] கும்பகோணம் பதிப்பில், "நீ என்னுடைய இச்சபையை எப்பொழுதும் பார்க்க வராமலிருக்கிற காரணத்தால் தர்மஸ்வபாவமுள்ள பரமாத்மாவை அறிந்ததுமான கொக்காகப் பிறக்கப்போகிறாய். பாபகார்யத்தைச் செய்கிறவனும் வேடச்சேரியிலிருப்பவனும், நன்றிகெட்டவனும், சூத்திர மடந்தைக்குப் பதியுமான ஒரு பிராம்மணன் ஒருஸமயம் உன்னுடைய இருப்பிடத்திற்கு வருவான். அவன் எப்பொழுது (உன்னைக்) கொல்வானோ அப்பொழுது உனக்கு விடுதலை வரும்" என்று இருக்கிறது.

இந்திரன் அமைதியானதும், தேவர்களின் தலைவனை வணங்கிய ராஜதர்மன், "ஓ! தேவர்களில் முதல்வனே, உன் இதயம் எனக்கு அருள்தர விரும்பினால், என் அன்புக்குரிய நண்பன் கௌதமன் உயிர் பெற்று எழட்டும்" என்று கேட்டான்.(11)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன் {இந்திரன்}, அந்தப் பிராமணனான கௌதமன் மீது அமுதத்தைத் தெளித்து, அவனை உயிரோடு மீட்டெடுத்தான்.(12) அந்த நாரைகளின் இளவரசன், (ராட்சச மன்னன் கொடுத்த) தங்கச் சுமையை இன்னும் தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்த கௌதமனை ஆரத்தழுவிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(13) பிறகு, நாரைகளின் இளவரசனான அந்த ராஜதர்மன், பாவச்செயல்களைச் செய்த கௌதமனை, அவன் வைத்திருந்த செல்வத்தோடு அனுப்பிவைத்து தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(14) (அடுத்த நாள்) உரிய நேரத்தில் அந்தப் பறவையானவன் பெரும்பாட்டனின் {பிரம்ம} உலகத்திற்குச் சென்றான். பின்னவன் {பிரம்மன்} ஒரு விருந்தினருக்குக் காட்டப்பட வேண்டிய கவனத்தோடு அந்த உயர் ஆன்மப் பறவையைக் கௌரவித்தான்.(15) கௌதமனும், வேடர்களின் கிராமத்தில் இருந்த தன் இல்லத்துக்குத் திரும்பி, தன் சூத்திர மனைவியிடம் பாவம்நிறைந்த பல பிள்ளைகளைப் பெற்றான்.(16) சில வருடங்களுக்குள், தான் மறுமணம் செய்து கொண்ட தன் மனைவியிடம் பல பிள்ளைகளைப் பெற்ற அந்த நன்றியற்ற பாவி, பல வருடங்களுக்குப் பயங்கர நரகத்தில் மூழ்குவான் எனத் தேவர்களால் பெரும் சாபமிடப்பட்டது.(17)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவை யாவும் முன்பு ஒரு சமயம் நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே இந்த முக்கியமான கதையின் சம்பவங்களை நினைவுகூர்ந்து அனைத்து விபரங்களையும் நான் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன்.(18) நன்றியற்றவனால் எவ்வாறு புகழடையமுடியும்? நன்றியற்றவன் நம்பத்தகாதவனாவான். நன்றியற்ற ஒருவனால் ஒருபோதும் தப்ப முடியாது.(19) எந்த மனிதனும் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது. எவன் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பானோ, அவன் நீடித்த, நிலைத்த பயங்கர நரகத்தில் மூழ்குவான்.(20) அனைவரும் நன்றிநிறைந்தவர்களாக இருக்க வேண்டும், அனைவரும் தன் நண்பர்களுக்கு நன்மையை நாட வேண்டும். ஒரு நண்பனிடம் இருந்து அனைத்தையும் அடையலாம். நண்பர்களின் மூலம் கௌரவங்களை அடையலாம்.(21) நண்பர்களின் விளைவால் ஒருவன் பல்வேறு இன்பநுகர் பொருட்களை அனுபவிக்கலாம். நண்பர்களுடைய முயற்சியின் மூலம் ஒருவன் பல்வேறு வகை ஆபத்துகள் மற்றும் துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஞானமுள்ள ஒருவன் தன் நண்பர்களைச் சிறந்த கவனத்துடன் கௌரவிப்பான்.(22)

நன்றியற்ற, வெட்கங்கெட்ட, பாவம் நிறைந்த அற்பன், ஞானியரால் புறக்கணிக்கப்படுவான். நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், தன் குலத்தில் இழிந்தவனாவான். அத்தகைய பாவம் நிறைந்த அற்பன் மனிதர்களிலேயே தீயவன் ஆவான்.(23) ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நன்றியின்மையால் களங்கப்பட்டவனும், தன் நண்பனுக்குத் தீங்கிழைப்பவனுமான பாவம் நிறைந்த ஓர் இழிந்தவனின் பண்புகளை இவ்வாறே நான் உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" என்றார் {பீஷ்மர்}".(24)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, உயர் ஆன்ம பீஷ்மரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு யுதிஷ்டிரன் பெரும் நிறைவடைந்தான்".(25)

ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம் முற்றிற்று

சாந்தி பர்வம் - பாகம் 1 முற்றிற்று

சாந்திபர்வம் பகுதி – 173ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்