Monday, May 21, 2018

சல்லிய, சௌப்திக, ஸ்திரீ பர்வங்களும், சாந்தி பர்வம்-பாகம் 1-ம் - கிண்டிலில்


ஆதிபர்வம்

ஆதிபர்வத்தில் பௌசியம், பௌலோமம், ஆஸ்தீகம், அதிவப்ணாவதரணம்,(86) சம்பவம், அரக்கு மாளிகை எரியூட்டல் , ஹிடிம்பன் வதம் , அசுரர்கள் பகன் மற்றும் சித்ரரதன் வதம் , திரௌபதி சுயம்வரம்,(87) அதைத்தொடர்ந்து அவள் திருமணத்தை முன்னிட்டு நடக்கும் போர் , ,(88) அர்ஜுனன் நாடுகடந்து செல்தல் , சுபத்திரை அபகரிப்பு , பரிசு மற்றும் சீர்வரிசை , காண்டவ வனம் எரிந்துபோதல் ,(89) அசுர சிற்பி மயனுடனான சந்திப்பு ஆகியன இருக்கின்றன.

கங்குலியின் இந்த மொழிபெயர்ப்பில் ஆதிபர்வத்தில் மட்டும் மொத்தம் 236 பகுதிகளும் 8531 ஸ்லோகங்களும் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “இருநூற்றிருபத்தேழு அத்தியாயங்களும், அவற்றில் எண்ணாயிரத்து தொண்ணெண்பத்து நான்கு ஸ்லோகங்களும் சொல்லப்பட்டன” என்றிருக்கிறது.

கிண்டிலில் வாங்க:  https://www.amazon.com/dp/B079R8SK5V

கர்ண பர்வம்

கர்ண பர்வத்தில், (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)

கர்ண பர்வத்தில், (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)

கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B0787FGV18

சல்லிய பர்வம்

பெரும் போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்துவிட்ட நிலையில், மத்ர மன்னன் சல்லியன் படையின் தலைவனாகிறான்.(278) தேர்வீரர்களுக்கிடையில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் மோதல்கள் இங்கே விளக்கப்படுகின்றன.(279) பெரும் சல்லியன், நீதிமானான யுதிஷ்டிரனின் கையில் வீழ்கிறான். இந்தப் பர்வத்தில்தான் சகாதேவனின் கையால் சகுனி மரணத்தைத் தழுவுகிறான்.(280) பேரழிவுக்குப்பின்னர் சில துருப்புகளே எஞ்சியிருக்கும் நிலையில் தடாகத்திற்குச் சென்ற துரியோதனன், அந்த நீர் நிலைக்குள் ஓர் அறையை உண்டாக்கிக் கொண்டு அங்கே சிறிது நேரம் படுத்துக் கிடக்கிறான்.(281) வேடர்களிடம் இருந்து பீமனுக்கு இந்தச் செய்தி கிடைப்பது உரைக்கப்படுகிறது; நுண்ணறிவு கொண்ட யுதிஷ்டிரனுடைய அவமதிப்பான பேச்சுகளால் தூண்டப்பட்டு, அந்த அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நீர்நிலையில் இருந்து துரியோதனன் வெளிவருவது. அதன் பிறகு பீம துரியோதன கதாயுதப் போர்;(282,283) இத்தகு மோதல் நடந்து கொண்டிருக்கும்போது பலராமன் வருகை; சரஸ்வதி நதியின் புனிதத்தன்மை விவரிக்கப்படுகிறது;(284) கதாமோதல் தொடர்வது; போரில் தன் கதாயுதத்தால் பீமன் துரியோதனனின் தொடைகள் முறிப்பது. இவை அனைத்தும் இந்த அற்புதமான ஒன்பதாவது பர்வத்தில் விளக்கப்படுகின்றன.(285,286) மொத்தம் ஐம்பத்து ஒன்பது பகுதிகளில்[11] மூவாயிரத்து இருநூற்று இருபது பாடல்களில் கௌரவர்களின் புகழைப் பரப்புபவரான பெரும் வியாசர் இவற்றை விவரிக்கிறார்.(287,288)

[11] கங்குலியில் சல்லிய பர்வத்தில் 65 பகுதிகளும் 3503 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B07D5H9PVT

சௌப்திக, ஸ்திரீ பர்வங்கள்

சௌப்திக பர்வத்தில், பெரிய வீரர்களான கிருதவர்மன், கிருபர், துரோண மைந்தன் ஆகியோர், தொடை உடைந்து இரத்தத்தில் நனைந்து கிடக்கும் துரியோதனனைக் காண்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட அசுவத்தாமன் கோபங்கொண்டு சபதமேற்கிறான்.(289-292) பிறகு மூவரும் துரியோதனனை விட்டுவிட்டு கதிர் அடங்கும் வேளையில் கானகத்துக்குள் நுழைகின்றனர்.(293) ஓர் ஆந்தை பல காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்வதைக் கண்ட அஸ்வத்தாமன், தன் தந்தையைக் கொன்ற பாஞ்சாலர்களை உறங்கிக் கொண்டிருக்கும்போது பழி வாங்குவது என்று தீர்மானிக்கிறான்.(295) பாசறையின் வாசலில் பயங்கரமான ஓர் இராட்சசன் காவல்.(296) ருத்திரனை வழிபட்டு அவனைக் குளிர்விக்கும் அஸ்வத்தாம்.(297)

இரவு வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திரௌபதி மைந்தர்களும், திருஷ்டத்யும்னனுடன் கூடிய பாஞ்சாலர்களும் உறங்கிக் கொண்டிருக்கும்போது கொல்கிறான். பாண்டவர்களையும், சாத்யகியையும் தவிர்த்து மற்ற அனைவரும் இறக்கின்றனர். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி தப்பியவர்களிடம்,(298-300) உறங்கிக் கொண்டிருக்கும்போது துரோணர் மகனால் பாஞ்சாலர்கள் கொல்லப்பட்டதைத் திருஷ்டத்யும்னனின் தேரோட்டி சொல்கிறான். பிள்ளைகள், தமையன், தந்தை ஆகியோரின் பிரிவால் துயருற்ற திரௌபதி உண்ணாதிருந்து சாக முடிவு செய்து, தனது கணவர்களின் முன்னால் அமர்கிறாள். திரௌபதியின் வார்த்தைகளில் இரக்கமடைந்த பீமசேனன், அவளை நிறைவு செய்ய எண்ணி, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஆயுதாசானின் மகனைத் தேடுகிறான்.(301-303) பீமசேனன் மீதிருக்கும் பயத்தாலும், விதியின் வசத்தாலும் அசுவத்தாமன் பாண்டவர்கள் அனைவரையும் அழிக்கும்படி, தெய்வீகக் கணையொன்றை ஏவுகிறான்;(304) கிருஷ்ணன் அசுவத்தாமனின் வார்த்தைகளைக் கேட்டு அதைச் செயலிழக்க வைக்கிறான்.(305) துவைபாயனரும் , கிருஷ்ணனும் அசுவத்தாமனுக்குச் சாபம் கொடுக்கின்றனர். அஸ்வத்தாமனும் பதிலுக்குச் சாபமிடுகிறான்.(306) அஸ்வத்தாமனின் தலையில் இருக்கும் நகையொன்றை அறுத்தெடுத்து, துயரத்தில் இருக்கும் திரௌபதிக்கு அதைப் பரிசளிக்கின்றனர் பாண்டவர்கள்.(307) இப்படியே சௌப்திகம் என்று அழைக்கப்படும் இந்தப் பத்தாவது பர்வம் உரைக்கப்படுகிறது. மொத்தம் பதினெட்டு பகுதிகளில்[12] எண்ணூற்று எழுபது பாடல்களில் சௌப்திக பர்வத்தை விவரிக்கிறார் பெரும் வியாசர்.(308,309) இந்தப் பர்வத்தில் சௌப்திக மற்றும் ஐஷிக பர்வங்கள் பெருமுனிவரால் சேர்க்கப்பட்டிருக்கிறது.

[12] கங்குலியில் சௌப்திக பர்வத்தில் 18 பகுதிகளும் 791 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

ஸ்திரீ பர்வத்தில், மைந்தர்களின் பிரிவால் துயருற்றிருந்த திருதராஷ்டிரன் இரும்புச் சிலையைப் பீமன் எனக் கருதி இறுகப் பற்றித் தூள் தூளாக்குகிறான். விதுரன் அவனது கோபத்தை அமைதிப்படுத்தி, உலகப்பற்றை விடச்சொல்லி அறிவுறுத்துகிறான்.(311-313) திருதராஷ்டிரன் தனது இல்லத்தில் உள்ள பெண்மணிகளை அழைத்துக் கொண்டு, போர் நடந்த இடத்திற்குச் செல்கிறான்.(314) கொல்லப்பட்ட வீரர்களுடைய மனைவியரின் ஓலங்கள் சொல்லப்படுகின்றன. காந்தாரியும் திருதராஷ்டிரனும் நினைவிழப்பது.(315) தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைகள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பதை க்ஷத்திரியப் பெண்மணிகள் காண்கின்றனர்.(316) காந்தாரிக்கு கிருஷ்ணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்வது.(317) இறந்த மன்னர்களின் சடலங்களுக்கு, யுதிஷ்டிரன் உரிய இறுதிச்சடங்குகளைச் செய்வது.(318) கமுக்கத்தில் தனக்கு மகனாய் பிறந்த கர்ணனை அங்கீகரிக்கும் குந்தியின் கதை.(319) இவையாவும் பெரும் முனிவரான வியாசரால் இந்தப் பதினோராவது பர்வத்தில் விளக்கப்படுகிறது.(320) உணர்வுள்ள நெஞ்சங்களில் கவலையையும், கண்ணீரையும் வர வைக்கும் பர்வம் இது. மொத்தம் இருபத்து ஏழு பகுதிகளில்[13] எழுநூற்று எழுபத்தைந்து பாடல்களில் இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(321,322)

[13] கங்குலியில் ஸ்திரீ பர்வத்தில் 27 பகுதிகளும் 803 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

மொத்தமாக சௌப்திக ஸ்திரீ பர்வங்களில் 45 பகுதிகளும் 1594 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B07D5KTSZL

சாந்திபர்வம் - பாகம் 1

முழுமஹாபாரதத்தில் பனிரெண்டாவதாகப் பர்வமாக வரும் சாந்தி பர்வம், புரிதலை அதிகரிக்க வல்லதாக இருக்கிறது. தன் தந்தைமார், சகோதரர்கள், மகன்கள், தாய்மாமன்கள், மற்றும் சம்பந்திகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் மனத்தளர்ச்சி இதில் விளக்கப்படுகிறது. இந்தப் பர்வத்தில், அறிவை விரும்பும் மன்னர்களுக்குத் தகுந்த பல்வேறு கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் இருந்து எவ்வாறு விளக்குகிறார் என்பது சொல்லப்பட்டுள்ளது; ஆபத்துக் காலங்களுக்கு உகந்த கடமைகளையும், காலம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் முழுமையாக விளக்குகிறது இந்தப் பர்வம்.(323-325) இதைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதன் அரசதர்மம் குறித்த முழுமையான அறிவை அடைகிறான்.

சாந்தி பர்வம் முதல் பாகத்தில் ராஜதர்மம் மற்றும் ஆபத்தர்மம் ஆகிய இரு உபபர்வங்களும், அவற்றில் 173 பகுதிகளும், 6332 ஸ்லோங்களும் இருக்கின்றன.

கிண்டிலில் வாங்க: https://www.amazon.com/dp/B07D6D974Q

முழுமஹாபாரதம்


கிண்டில் மின்புத்தகங்களை வாங்குவதும் படிப்பதும் எவ்வாறு?

மஹாபாரதம் சம்பந்தமான
கிண்டில் மின்புத்தகங்களை (Kindle E-books)
விலைக்கு வாங்க

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்